நம்ம பகுத்தறிவு ஜீவி லக்கிலுக் இவ்வளவு சூப்பரா திரைகதை அமைப்பார்ன்னு நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. சுவனப்பிரியன் என்னும் ம.உ.கண்மணி கொடுத்த ஒரு ஒன் லைன்னை (One Line) கதையை செம அசத்தலா திரைகதை அமைத்து. பாக்கியராஜ், மணிரத்னம் ஆகியவரை விட ஒரு சிறந்த திரைகதையாளனா அசத்தியிருக்காரு . ராம் கோபால் வர்மா ரேஞ்சுக்கு ஒரு சிறந்த திவிரவாத சினிமா எடுக்கலாம். அவர் சொல்லாராரு அப்சலை தூக்குல போடுன்னு சொன்னா தேசபக்தி ஜல்லியாம். தூக்குல போடாதன்னு சொன்னா பகுத்தறிவாமா!!! இது! இவருக்கு தேசபக்தி ஜல்லியா தெரியுது!! லக்கிலுகின் கண்டுபிடிப்புகள்: பாராளமன்றம் தாக்க இந்தியாவே சதி செய்தது! அதற்கு அப்சலை அவருக்கே தெரியாம உபயோகிச்சிடாங்களாம். இந்தியா நீதிமன்றங்கள்(Sessions Courts, High Court, Supreme Court வரை) பொய்வழக்குன்னு தெரிஞ்சும் அப்சலுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்காம்! அப்சல் ஒரு பாவம் இந்திய குடிமகனாம்! கதையின் கரு: அப்சல் குரு நல்லவனா இருந்தா எப்படி இருக்கும் என்று எண்ணியதன் விழைவு. கதைக்கு Referrence : அப்சலின் மனைவி எழுதியதாக சொல்லப்படும் கடிதம் என்று சுவனப்ரியன் எழுதிய பதிவு (லக்கிலுக் Googleல த...
நேற்று இரவு 9 மணிக்கு விஜய் டி.வியில் நீயா ? நானா? என்ற ஒரு டாக் ஷோவில், மருத்துவ மாணவர்கள் ஒரு வருட கட்டாய கிராமபுற சேவையை எதிர்த்து பலமாக குரல் எழுப்பினர், ஆனால் அந்த பலம் டாக்டர் அன்புமணி அவர்கள் வந்த பிறகு காற்றில் பறந்தது! நிகழ்ச்சியை பார்த்த பிறகு டாக்டர் அன்புமணியை பாராட்டவே தோண்றியது. அந்த நிகழ்ச்சியை பார்த்தில் எனக்கு கிடைத்த தகவல்கள்! அரசு கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருடம் வெறும் 4000 முதல் 6000 வரையே செலவு செய்கிறார்கள்! அதே மருத்துவ படிப்புக்கு தனியார் கல்லூரிகள் 4 முதல் 6 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது! அரசு பெரும் செலவு செய்து (சுமார் 10 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு மாணவருக்கும் செலவு!) அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு ஒரே ஒரு வருடமாவது சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது! நிரந்தர வேலையை கொடுத்தால் கிராமப்புர சேவை செய்வதாக கூறிய இவர்களின் வாதம் ஒரு சப்பை கட்டாகவே எனக்கு தோண்றியது! இவர்களை எதிர்த்து சில புள்ளிவிவரங்களுடன் வந்த சில டாக்டர்கள், தாங்கள் ஏன் கிராமப்புறங்களில் வேலை செய்யவில்லை/ முன்வரவில்லை என்று சொல்ல முடியா...
நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்த தமிழ் வலைப்பதிவர் பட்டறையில் என்னை கவர்ந்த விசயங்களை இங்கே பட்டியலிட விரும்புகிறேன்... வினையூக்கியும் மற்றும் ஜெயாவும் பட்டறைக்கு ஏற்பாடுகள் நடந்த முதல் நாள் மாலையும் சரி பட்டறை தினத்தன்றும் சரி அயராத உழைப்பை தங்கள் பங்கிற்கு கொடுத்தார்கள், துடிப்புடன் காலை முதல் மாலை வரை ஆர்வமாக கற்றுக்கொள்ள வந்த பார்வையாளர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்த விசயம் என்னை அசர வைத்தது!!! என்ன எனர்ஜி அவருக்குக்கு! ஒரு நிமிடம் கூட சலிக்காம ஆர்வமா எல்லோருடைய சந்தேகங்களையும் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவருக்கு என் முதல் சபாஷ்! அடுத்தது விக்கி, மா.சி & பொன்ஸ்: இது தான் முதல் பட்டறை, அனுபவம் இல்லாத காரணத்தால் ஒரு குறையும் வந்துவிடக்கூடாது என்று இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் சிறப்பான பலனை தந்தது என்பது 100% உண்மை. பல பட்டறைகள் நடந்த்திய அனுபவம் வாய்ந்தவர்கள் நடத்தியது போல சிறப்பாக கலை கட்டியது பட்டறை. இவர்கள் முயற்சியும் உழைப்பையும் பாராட்டியே ஆகவேண்டும்! பாலாபாய் பம்பரமா சுழன்று கொண்டேயிருந்தார், CD வாங்கிவருவது முதல் உணவு ஏற்பாடுக...
Comments
:)
Friends
Tamil Eelam
Friends
Tamil Eelam