கலைஞர் கடிதமும் விலைவாசி உயர்வும்
முரசொலியில் முதல்வரின் நேற்றைய சேதி பயங்கரமா சிரிப்பை தான் வரவைத்தது! வெங்காயம் விலையும், தக்காளி விலையும் கடுமையாக குறைந்துவிட்டதாம், மக்கள் சந்தோஷ கடலில் தத்தளிக்கிறார்களாம் :))))) அது கொடநாடு எஸ்டேட்டில் இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லைன்னு சொல்லியிருக்காரு! (அங்க அந்த அம்மா என்ன தான் செய்யறாங்களோ! ஒன்னியும் பிரியில! எதிர்கட்சி தலைவருக்கு ரெஸ்டு தவிர வேற வேலையே இருக்காதோ! அது வேற விசயம்!) மற்ற எல்லா காய்கறிகளில் விலையும் பன்மடங்கு உயர்ந்துவிட்டது! அது நம் முதல்வருக்கு தெரியவில்லை!! என்ன சொல்லவரார் குறைந்த விலையில் கிடைக்கும் வெங்காயம் + தக்காளியை மட்டும் வைத்து ஜாலியா இருங்க! மற்ற காய்கறிகள் எங்களை மாதிரி காசு இருக்கிறவங்க சாப்பிடுவது என்பதை தெரிந்து கொள்ளுங்க என்றா??