வலைப்பதிவர் பட்டறை - வீடியோ காட்சிகள்!!!


தமிழ் வலைப்பதிவர் பட்டறை வீடியோ காட்சிகள். பொன்ஸ்க்கு நல்ல கவரேஜ் கிடைச்சிருக்கு!!!
நன்றி:IBNLive.com

Comments

தலைவா..
__/\___

பாகச பதிவுக்கு அப்புறம் பொகச தொடங்குறாப்புல தெரியுதே!
பட்டறைக்குறித்தான முதல் ஒளி/ஒலிப்படப்பதிவு, நன்றி!
பட்டறைக்குறித்தான முதல் ஒளி/ஒலிப்படப்பதிவு, நன்றி!
We The People said…
//பாகச பதிவுக்கு அப்புறம் பொகச தொடங்குறாப்புல தெரியுதே!//

தொடங்கனுமா??
We The People said…
சிபி குசும்பனை எப்படியாவது கரெக்ட் பண்ணி பா.க.சவில் இணைத்துவிடுங்க ;)

ரொம்ப ஓவரா பேசினா பாலாபாயை மொக்கை பதிவு எழுத சொல்லிடுவோம்ன்னு பயபடுத்தி பாருங்க!!!
//தொடங்கனுமா??//

என்ன இனிமேதான் தொடங்கணுமா?

நான்தான பொ.க.ச வின் பொருளாளரே!
//சிபி குசும்பனை எப்படியாவது கரெக்ட் பண்ணி பா.க.சவில் இணைத்துவிடுங்க ;)
//

அவரு ஏற்கனவே பா.க.ச வின் உறுப்பினர்தான ஜெய்!

ரத்தத்துல பேர் எழுதி உறுப்பினர் அட்டை கேட்டு பதிவு போட்டாரே பார்க்கலையா நீங்க!
//ரொம்ப ஓவரா பேசினா பாலாபாயை மொக்கை பதிவு எழுத சொல்லிடுவோம்ன்னு பயபடுத்தி பாருங்க!!! //

"அடக் கடவுளே! அப்போ இவ்ளோ நாள் பாலாபாய் எழுதினதெல்லாம் மொக்கை இல்லையா?"ன்னு அதிர்ச்சியோட பொன்ஸ் கேக்குறாங்க!
We The People said…
குசும்பன் ஏற்கனவே உறுப்பினர்ன்னு தான் தெரியுமே!

அதெல்லாம் சரி, இப்ப தான் தனியா போகறேன் பிரிஞ்சுட்டாரே அதனால சொன்னேன் ;)

இன்னொரு மொக்கை பதிவு எழுத சொல்லிடுவோம்ன்னு சொல்லவந்தேன்
We The People said…
இன்னைக்கு ஐ.பி.என் லைவ்வில் எங்க பார்ட்த்தாலும் பொன்ஸ் படம்!
Senthilkumar said…
தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி

எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக்கமா?
அல்லது தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் கூடி கருத்து பரிமாறி கொள்வது இதன் நோக்கமா?

தமிழில் அதிகம் blogs வருவதன் மூலம், தமிழ் வளர்ந்து விட போகிறதா?

ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு எதாவது செய்யலாமே?
அதற்கு உங்கள் பட்டறை எந்த வகையிலாவது உதவுமா?
தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் கூட படிக்க முடியாமல் தவிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பிற்கு உதவுமா?

எனக்கு தெரிந்து ஒரு குழு, சென்னையில் உள்ள சேரி வாழ் குழந்தைகளுக்கு, எந்த விளம்பரமும் இன்றி மாலை வேளைகளில்,
படிப்பு சொல்லித் தருகிறார்கள்.

நீங்கள் பங்கெடுத்த பட்டறை, நீங்க செலவு செய்து உருவாக்கிய பட்டறை என்று மட்டும் உங்கள் போக்கில் இருந்திருந்தால், எனது கருத்தை நான் இவ்வாறு முன் வைத்திருக்க மாட்டேன்.

ஆனால் பட்டறை நடத்தியதை பெரிய சாதனையாகவும், தமிழ் வளர்ச்சிக்காகான அடிக்கலை நாட்டியதை போலவும்,
தமிழில் blog வைத்திருப்பவர்கள் புத்திசாலிகள் மற்றும் உயர்ந்தவர்களை போலவும்,
அவ்வாறு இல்லாதவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் அல்லது சாதரண மனிதர்களை போன்று சித்தரிக்கும்
சில பதிவுகளை காண நேர்ந்ததால் தோன்றிய கருத்துக்கள் தான் இவை.

மேலும் நான் கடந்து வந்த சில பதிவுகள் தங்களுடைய புத்திசாலித்தனத்தை காண்பிப்பதற்காகவும்,
ஒரு தரப்பினரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்களை தாக்குவதற்காகவோ உருவாக்கியுள்ளனரே தவிர
தமிழ் வளர்ச்சி என்பதர்கான எந்த வித அறிகுறியும் தெரியவில்லை.

உண்மையில் இந்த பட்டறையின் நோக்கமென்ன?

இது என் கருத்து மட்டுமே... பதிலை பற்றிய எதிர்பார்ப்புடன்...............................

..............தமிழ் தெரிந்தவன்........................
ஜெய்,

மேற்கண்ட பின்னூட்டத்தை மேலோட்டமா பார்க்கும்போது கோபம் வந்தாலும், இதையே ஒரு ஆக்கப் பூர்வமா நமக்கு முன்னால் வைக்கப் பட்ட கேள்வியா கருதி விவாதித்து பொறுமையா பதில் சொல்லலாம்னு நினைக்கிறேன்.

முதல்ல அந்த நண்பருக்கு தமிழ் வலைப்பதிவுகளின் நோக்கம், இது வரை வலைப் பதிவர்கள் செய்திருக்கிற/செய்து கொண்டிருக்குற நல்ல காரியங்கள் பத்தி தெரிஞ்சிருக்க நியாயம் இல்லைன்னு நினைக்கிறேன்.

அதைப் பத்தியும் கொஞ்சம் விவரமா சொல்லலாம்னு நினைக்கிறேன்.
We The People said…
உண்மை சிபி,

அதற்கான பதிலை தான் எழுதிவருகிறேன். கொஞ்சம் நேரத்தில் போட்டுவிடுகிறேன். உங்கள் பங்கிற்கு ஏதாவது தோன்றினால் எழுதவும்
நாமக்கல் சிபி கூறுவதை நான் வழிமொழிகின்றேன்........
செந்தில்குமார் தனது சொந்தப்பெயரில் வந்து கேட்டால்
அவருக்கு உரிய விளக்கம் அளிப்பது நம் கடமை
//உண்மை சிபி,

அதற்கான பதிலை தான் எழுதிவருகிறேன். கொஞ்சம் நேரத்தில் போட்டுவிடுகிறேன். உங்கள் பங்கிற்கு ஏதாவது தோன்றினால் எழுதவும்//

என்னோட பதிவில் முதலில் பட்டறை அனுபவத்தைப் பத்தியும், அப்புறம் கடைசியா இந்தக் கேள்விக்கான என்னோட பதிலையும் எழுதறேன் ஜெய்! இன்னிக்கு நைட் அதான் என்னோட பிளான்!
செந்தில் குமார்,

புதிதாக உருவாகியிருக்கும் தொழில் நுட்பங்கள் பரவலாக மக்களைப் போய்ச் சேர்ந்தால், அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு அந்த நுட்பங்கள் உதவும் என்று நம்புகிறோம்.

கணினிப் பயன்பாடு, இணையம், வலைப்பதிவுகள் ஒவ்வொன்றும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பல கட்டுகளை உடைத்துக் கொண்டிருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் செல்பேசிகள் ஏற்படுத்திய சமூகத் தாக்கங்களை நினைத்துப் பாருங்கள்.

அதே போல பலருடனும் தொடர்பு கொள்ள உதவும் இணைய நுட்பங்களை மொழித் தடைகளை உடைத்து ஒவ்வொரு தமிழருக்கும் போய்ச் சேர்க்க வேண்டும் என்பதுதான் இந்தப் பட்டறையின் நோக்கம்.

அதிகமாக திசைதிருப்பல்கள் இல்லாமல் அந்தத் திசையில் நகர முடிந்திருக்கிறது என்பது பட்டறையின் வெற்றி. இதே போல அறிவு பரப்புதல் கிராமம் கிராமமாக நடந்து மக்களுக்கு கதவுகள் திறக்க வேண்டும். கடைக்கோடி தமிழனுக்கும் வசதிகள் போய்ச் சேர வேண்டும் என்ற கனவை நனவாக்கத் தேவைப்படும் பல முயற்சிகளின் ஒரு துளி முயற்சி இது.

இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. இப்போது எல்லோரும் பெருமைப் பட்டுக் கொள்வது தன்னார்வலர்களாக உழைத்து பலரும் பங்கேற்று ஒரு நிகழ்வை நடத்த முடிந்தது பற்றி. இதைப் பின்பற்றி
இன்னும் நிகழ்ச்சிகள் நடக்க இந்த வெளிச்சம் போடுதல் உதவும் என்று ஒரு ஆசை.

அன்புடன்,

மா சிவகுமார்

பிகு : பட்டறை குறித்த எல்லா இடுகைகளிலும் உங்கள் பின்னூட்டத்தை போட்டிருக்கிறீர்கள். கண் பட்டு விடக் கூடாது என்று செய்தது போல இருக்கிறது :-) நன்றி!
Anonymous said…
tamil blog-kku engleesh pathirikkaikky engleesh-la petti koduthireenga.. :-)

yen, oru tamil channel koodava coverage-kku kediakkale?
SP.VR. SUBBIAH said…
//பாகச பதிவுக்கு அப்புறம் பொகச தொடங்குறாப்புல தெரியுதே!//
தொடங்கனுமா???//

ஆமாம் சாமிங்களா! எதையாவது செஞ்சு வேறு பக்கமா போங்க சாமிங்களா!

அந்த ராமேசுவரம் கொண்ட நல்ல மனிதரை உங்க காலாய்ப்புலே இருந்து விட்டிடுங்க சாமிங்களா!

கோடிப் புண்ணியமா இருக்கும்!
We The People said…
ஐயா தமிழ்தெரிந்தவரே!

இந்த பட்டறை தமிழ் பட்டறையல்ல! தமிழ் வலைப்பதிவர் பட்டறை.. அதாவது யாரவது இணையத்தில் தங்கள் எண்ணங்களை பதிய விரும்பினால் (எங்களை போல), அவர்களுக்கு அதை எப்படி செய்யவேண்டும் என்று தெரியாமல் இருக்குமேயானால் நான் இந்த பட்டறைகள் மூலம் சொல்லித்தர வாய்ப்பு கொடுக்கிறோம்!

இதனால் நல்ல பயன்கள் வருங்கால சமுதாயத்துக்கு வரும் என்ற மேலான எண்ணமே இதை முன்வைப்பதற்கான காரணம்! இந்த வலைப்பூக்கள் எனக்கு தெரிந்தே சிலரின் சாதி குறித்த தவறான அனுகுமுறையை மாற்றியிருக்கிறது! இந்த வலைப்பதிவுகள் விரைவில் ஒரு சிறந்த மாற்று ஊடகமாக வரும், அன்று உங்களால் மக்கள் மனதையும், அவர்கள் தேவையையும் கண்டறியமுடியும்.

நீங்க சொல்லும் சமூக சேவை நாங்களும் திட்டமிட்டது தான், இன்றைய நிலையில் வலையின் மூலம் சிலர் அதை நேர்த்தியாகவும் செய்துவருகிறார்கள், உதாரணத்திற்கு செந்தழல் ரவி வேலைவாய்ப்புக்களுக்கு தேடுஜாப்ஸ் என்ற ஒரு வலைப்பூ நாடத்திவருகிறார், அவரால் பலர் பயனடைகிறார்கள்... இதுபோல் ஏழை மாணவ/மாணவியர்களுக்கு படிப்பு செலவு என பல விசயங்கள் இந்த வலைப்பூ நண்பர்களால் செய்யப்படுகிறது!

நீங்க சொல்லும் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் இருப்பவர்களுக்கும் ஏதாவது செய்யவேண்டும் என்றால் நாமும் ஒரு பெரிய ஊடகமாக வந்தால் மற்றவர்கள்/அரசியல்வாதிகள் செய்யாததை சிறப்பாக செய்யமுடியும் என்பது தின்னம்!
We The People said…
//ஆனால் பட்டறை நடத்தியதை பெரிய சாதனையாகவும், தமிழ் வளர்ச்சிக்காகான அடிக்கலை நாட்டியதை போலவும்,//

இன்றைய நிலையில் நிச்சயம் சாதனை தான், இன்று நாங்கள் விதைத்த விதை நாளை தான் கதிரை வெளிக்காட்டும், இன்று இதில் புல் தான் வளரும் என்று நினைக்காமல் பகுத்தறிவது நல்லது! இன்றைய காலகட்டத்தின் என் போன்ற மென்பொறி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு தமிழ் எழுத்துக்கள் நாள்பட மறந்தே போகலாம், தமிழை திரும்ப எழுதவும், நம் எண்ணங்களை வெளிக்கொண்டுவரும் ஒரு ஊடகமாக இந்த வலைப்பூ உதவுகிறது, அவ்வகையில் இது நாள் தமிழ் வளர்ச்சிக்கு வாய்க்கால் என்பது என் எண்ணம், நீங்க என்ன நினைக்கிறீங்க??

ஒன்று கூடி நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்ற வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள் :) நீங்களும் வாங்க ஒன்று கூடுவோம், நம் சமூகத்தை முன்னேற்றுவோம்!!!
We The People said…
//tamil blog-kku engleesh pathirikkaikky engleesh-la petti koduthireenga.. :-)

yen, oru tamil channel koodava coverage-kku kediakkale?//

அனானி ஐயா, நாங்க தமிழ்/ஆங்கிலம் என்று எல்லா பத்திரிக்கைக்கும் அழைப்பு விடுத்தோம்! ஜெயா டி.வி தமிழில் பேட்டியை எடுத்து சென்றுள்ளது, அடுத்த திங்கள் காலை 7:30 மணிக்கு நிகழ்ச்சி வரலாம்!

ஆங்கில ஊடகத்திற்கு ஆங்கில பேட்டி கொடுத்தது தப்பில்லை :)
//இந்த வலைப்பூக்கள் எனக்கு தெரிந்தே சிலரின் சாதி குறித்த தவறான அனுகுமுறையை மாற்றியிருக்கிறது! //

திருநங்கைகள் மீதான பலபேருடைய (நான் உட்பட) பார்வையையும், எண்ணங்களையும் மாற்றி நம்மைப் போல நம்முள் ஒருவர்தான் என்ற அங்கீகாரத்தையும் கொடுக்க வைத்திருப்பது இந்த தமிழ் வலைப் பதிவுதான். எனக்குத் தெரிந்து பிற ஊடங்களால் இவ்வளவு வலிமையாகச் செய்து முடித்திருக்க சாத்தியமா என்பது சந்தேகமே?

ஏனெனில் வலைப் பதிவு என்னும் ஊடகத்தில் நாமும் பங்கு பெறுகிறோம்! ஆனால் பிற ஊடகங்களில் நமது பங்களிப்பு வாசிப்பு மட்டுமே!

அதனால்தான் வலைப் பூக்களுக்கான வலிமை அதிகம் என்கிறேன்!
//புதிதாக உருவாகியிருக்கும் தொழில் நுட்பங்கள் பரவலாக
மக்களைப் போய்ச் சேர்ந்தால், அவர்களின் வாழ்க்கை
மேம்பாட்டுக்கு அந்த நுட்பங்கள் உதவும் என்று நம்புகிறோம்.//

சந்தேகம் என்ன? இப்பப் பாருங்க, நண்பர் செந்தில் குமாரின் ஒரேஒரு பின்னூட்டம்
தொழில்நுட்பம் காரணம்தானே , காப்பி & பேஸ்ட்டா எல்லாருடைய
பதிவுக்கும் போய்க்கிட்டு இருக்கு:-)
//இந்த பட்டறை தமிழ் பட்டறையல்ல! தமிழ் வலைப்பதிவர் பட்டறை.. அதாவது யாரவது இணையத்தில் தங்கள் எண்ணங்களை பதிய விரும்பினால் (எங்களை போல), அவர்களுக்கு அதை எப்படி செய்யவேண்டும் என்று தெரியாமல் இருக்குமேயானால் நான் இந்த பட்டறைகள் மூலம் சொல்லித்தர வாய்ப்பு கொடுக்கிறோம்!//

தலை!

கல்யாணம் நடத்துறது கஷ்டம். ஆனாலும் சாப்பாடு சரியில்லை, ரசத்துலே உப்பில்லேன்னு சோறு துன்னவன் சொல்லுறது ரொம்ப ஈஸி.

நம்ம தமிழ் தெரிந்தவர் கல்யாணமும் நடத்தவில்லை. கல்யாணத்தில் கலந்துகொண்டு சோறும் துன்னவில்லை. குன்ஸாக எங்கேயோ உட்கார்ந்துகொண்டு கல்யாணத்தை பற்றி கேள்விப்பட்டு சாப்பாடு சரியில்லையாமே? தாலிக்கு மஞ்சள் கம்மியா இருந்திச்சாமே? என்று கேள்வி கேட்கிறார். நீங்களும் மெனக்கெட்டு பதில் சொல்லுகிறீர்கள். என்ன கொடுமை சாமி இது?
We The People said…
லக்கி,

தமிழ்தெரிந்தவரும் நம்மில் ஒரு அங்கம், அவருடைய கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும், ஏன்னென்றால் இது பொதுவாக பலரிடம் காசு வாங்கி நடத்திய ஒரு பட்டறை, இது போன்ற ஒரு நிகழ்வினை பற்றி பல கேள்விகள் வரத்தான் செய்யும், நம் விளக்கம் தர கடமைப்பட்டிருக்கிறோம்! அவர் வரவில்லை, வந்தார் என்பது இங்கு தேவையற்ற விசயம், கேள்விகளுக்கு நாம் பதில் சொல்வது கடமை என்ற நிலையில் தான் இந்த பதில்களை நான் சொன்னேன்.

நம்மிடம் வரிப்பணம் வாங்கி அரசாங்க செலவு செய்யும் போது நாம் என்ன செய்தது அரசு, அதை ஏன் செய்யல, இதை ஏன் செய்யல என்று கேட்கிறோம்,அது போல தான் பொது பணத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு யார் கேள்வி கேட்பினும் பதில் சொல்லவேண்டியது நம் கடமை! :)

என் நோக்கத்திற்காக கேட்கிறார் என்பது முக்கியம் அல்ல! பதில் தரவேண்டியது தான் நமக்கு கடமை :)

சோ நோ டென்ஷன், மக்களே ரிலாக்ஸ் ப்ளீஸ்!!!
//tamil blog-kku engleesh pathirikkaikky engleesh-la petti koduthireenga.. :-)

yen, oru tamil channel koodava coverage-kku kediakkale?//

யாரும் வரலியே தல... பெரிய மனசு பண்ணி நீங்களே அனுப்பி இருந்திருக்கலாம்ல..
//தமிழ்தெரிந்தவரும் நம்மில் ஒரு அங்கம், //

இங்கே தான் நான் மாறுபடுறேன். தமிழ் மீதும் தமிழ் சமூகம் மீதும் இவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கும் தமிழ் தெரிந்தவன் என்னத்தை செய்து கிழித்திருக்கிறார்னு அவர் புரொபைலை ஓபன் பண்ண ட்ரை பண்ணா....

புரொபைல் ஓபனே ஆவல.. அது ஒரு போலி புரொபைலுங்க... சும்மா இதுமாதிரி கமெண்டு போட்டு எல்லார் மீதும் சேறு வாரி இறைக்கவே செந்தில்குமார்னு ஒரு ஐடியை ஓபன் பண்ணி எல்லாப் பதிவிலும் ஒரு கமெண்டு போட்டுக்கிட்டு வர்றாரு...

விமர்சனத்தை வைப்பவனிடம் நேர்மை இருக்கவேண்டும். தன் முகத்தை காட்ட வேண்டிய துணிச்சல் இருக்கவேண்டும். முக்காடு போட்டுக்கொண்டு வந்து முனகக்கூடாது.
Anonymous said…
//விமர்சனத்தை வைப்பவனிடம் நேர்மை இருக்கவேண்டும். தன் முகத்தை காட்ட வேண்டிய துணிச்சல் இருக்கவேண்டும். முக்காடு போட்டுக்கொண்டு வந்து முனகக்கூடாது.//
itha yaaru solranga parunga, ivar photove nethikki than veliya vanthathu, athukulla aramichitaru thala. ithelaam romba overba!!
//itha yaaru solranga parunga, ivar photove nethikki than veliya vanthathu, athukulla aramichitaru thala. ithelaam romba overba!!//

வெண்ணை.. அதை கூட அனானியா சொல்லுற பாரு :-)

இதற்கு முன்பாக சென்னையில் நடந்த அனைத்து சந்திப்புகளிலும் என் ஒரிஜினல் முகத்தை காட்டியே கலந்துகொண்டிருக்கிறேன். உன்னை மாதிரி அனானியா மூஞ்சை மூடிக்கிட்டு வாயிலேயே ஏரோப்ளேன் ஓட்டுனதில்லை!
We The People said…
லக்கி கொஞ்சம் பதட்டப்படாமல், தேவையில்லா வார்த்தைகளை பயன்படுத்தாமல் நல்லது!

அனானி லக்கி இதற்கு முன்னும் முகம் காட்டியிருக்கிறார், அதை நீங்க பார்க்கவில்லை போல!

முகம் காட்டிவருவது! காட்டாமல் இருப்பது அவர் அவர் விருப்பம்! கருத்துக்கள் மட்டும் மோதட்டுமே! ப்ளீஸ்!!
காய்த்த மரத்துல கல்லடி படதான் செய்யும் .
Anonymous said…
Just wanted to inform I found the following in சல்மா அயூப்'s latest blog.

http://jayaraman.wordpress.com/

எச்சரிக்கை!! தேசத்துரோகிகளின் இன்டர்நெட் கூடாரம் தமிழ்மணம்