நான் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டேன்!

தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான திரு.கருணாநிதியின் அறிக்கை:

இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து 23-4-2009 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
***********************
ஐயா, தெரியாமா தான் கேட்கிறேன், இதை யாருடைய கண் துடைக்க நடக்கிறது? எதற்காக இந்த நாடகம். இது மத்திய அரசை எதிர்த்தானால், அந்த மத்திய அரசில் நீங்கள் யார்? அதே மத்திய மந்திரிசபையில் பங்கு கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன தார்மீக பொறுப்பு இருக்கிறது இந்த பந்த் நடத்த?? தாயநிதி மாறனுக்கு ஐ.டி துறை மந்திரி பதவியும், டி.ஆர்.பாலுவுக்கு கப்பல் போக்குவரத்து துறையும் தரும் வரை நான் இந்த ஆட்சியில் பங்கெடுக்க மாட்டோம் என்று சொல்ல முடிந்த உங்களுக்கு, ஈழமக்களுக்கு ஒரு நிறந்தர தீர்வு தந்தால் ஒழிய ஆட்சியில் பங்கெடுக்க முடியாது என்று தர்ணா செய்ய முடியாமல் போனது சரியாக தோண்றுகிறதா??

பந்த், மனித சங்கிலி போராட்டம், உண்ணாவிரதம், எம்.பிக்கள் ராஜினாமா, பேரணி என எந்தனை நாடகம் அரங்கேரியது, அதனால் என்ன நடந்தது? தமிழக மக்கள் அவதியுற்றர்களே ஒழிய, ஒரு ______ம் நடக்கவில்லை! இப்பொழுது அழைக்கப்படும் பந்தாலும் ஒன்று முடிவாகப்போவது இல்லை, தமிழக மக்கள் அவதியுறுவதை தவிர!!!

இத்தனை நாளாய் நடத்திய நாடகம் போதும்! இந்த பந்த்க்கு என் எதிர்ப்புக்கள் இங்கு பதிவு செய்யப்படுகிறது!

பி.கு:

இதற்கு முன்பே இது போன்ற பந்த் அரசு பொறுப்பிலிருந்து அறிவித்ததற்காக நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் என்ன எதிர்ப்பார்த்து இந்த பந்த் எனற சங்கதியை முழங்குகிறார் என்பது சந்தேகத்திற்கு உரியது! அனேகமாக அவர் தன் அரசை நீதிமன்றம் கண்டித்தாலும் பதவியை பொருட்படுத்தாமல் பந்த் நடத்தினோம் ஈழத்தமிழர்களுக்காக என்று எடுத்துக்காட்ட செய்கிறார் என்றால், அது காலம் கடந்த காமெடியே என்பதை அறியாமல் செய்கிறார் என்றே சொல்லமுடியும்.

Comments

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இந்த மாதிரி ஏமாற்று வேலையும் இருக்கும்... நம் நாட்டில் படித்த ஏமாளிகள் அதிகம்..
ben said…
you are also part of the same hypocrisy my friend. the hypocrisy that is called india which is brutal in its quest for power and dominance. the indian govt. is responsible for each life that is being lost in Eelam and iam sure u will come up with some concocted saying regarding this but this is the fact. just remember that the people are beyond any nation or language. the nation should exist to serve the people and not the other way around. with events unfolding all i can do is cry and also curse those who call themselves indians shamelessly after all these atrocities. sorry could not keep it within myself. hope u would publish this comment.
ben said…
you are also part of the same hypocrisy my friend. the hypocrisy that is called india which is brutal in its quest for power and dominance. the indian govt. is responsible for each life that is being lost in Eelam and iam sure u will come up with some concocted saying regarding this but this is the fact. just remember that the people are beyond any nation or language. the nation should exist to serve the people and not the other way around. with events unfolding all i can do is cry and also curse those who call themselves indians shamelessly after all these atrocities. sorry could not keep it within myself. hope u would publish this comment.
We The People said…
Ben,

Hypocrisy is with Leaders and its not fault of India or its people, who you have selected is doing all these nonsense and none other... and you people still ready to vote this hypocrites. No people of India is interested in killing our own blood in Eelam but my leader from Tamilnadu dont mind killings in Srilanka just for sake of their political position and power!! Am i right? so who is the hypocrite?

Vote is a weapon to show wat we think and none use it for that and thats people fault they select fools and selfish idiots to power and blame India ... When people vote for cash, for caste or religion then this is wat u get in return... vote sensibly...
நாடகம் விடும் நேரம் தான் உச்ச காட்சி நடக்குதம்மா....
இன்னும் என்னவெல்லாம் கூத்து பண்ண போகிறாரோ இந்த தமிழின தலைவர்! இதுக்கு இரண்டு ஜால்ராக்கள் வேறு, கொடுமையடா சாமி !
கலைஞர்களும் கவிதாயினிகளும் நாடகம் ஆடுவதும், சிரிப்பதும், சீறுவதும், அழுவதும் அலறுவதும் வழு அல. கால வகை.
Anonymous said…
த‌மிழ‌னுக்கு க‌ருணாநிதி ஒரு ம‌யிரும் செய்ய‌ பொவ‌தில்லை ,
குடும்ப‌த்தை பார்ப‌து ஒன்ரே அவ‌ர் வேலை.
பின் குறிப்பு சூப்பர்...பாஸ்
இதை படிக்கும்போது எனக்கு ஒரு அறிவிலி என்ற சொம்பின் பெயர் நினைவுக்கு வருகிறது. அது இப்பொழுது எழுதுவதில்லை(யாம்). இதைக்கூட பாராட்டி ஏதாவது உளறியிருக்கும்.
அறிவிலி அரசியல்வியாதி போதையில் உளறியதில் லாபங்களும் நஷ்டங்களும் உள்ளன. எனது பதிவில் அவற்றைப் பற்றிப் பதிவு செய்துள்ளேன்:


http://thamizhththendral.blog.co.in/2009/04/23/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/
Anonymous said…
நீங்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடாததால் பந்த் பிசுபிசுத்து போய்விட்டது. வழக்கம்போல பேருந்துகள் ஓடியது. சாலைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகம். லீவ் போட்டவர்களெல்லாம் கூட நேற்று லீவை கேன்சல் செய்துவிட்டு வந்து வேலை பார்த்தார்கள்.

நன்றி.
Anonymous said…
நீங்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடாததால் பந்த் பிசுபிசுத்து போய்விட்டது. வழக்கம்போல பேருந்துகள் ஓடியது. சாலைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகம். லீவ் போட்டவர்களெல்லாம் கூட நேற்று லீவை கேன்சல் செய்துவிட்டு வந்து வேலை பார்த்தார்கள்.

நன்றி.
We The People said…
//நீங்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடாததால் பந்த் பிசுபிசுத்து போய்விட்டது. வழக்கம்போல பேருந்துகள் ஓடியது. சாலைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகம். லீவ் போட்டவர்களெல்லாம் கூட நேற்று லீவை கேன்சல் செய்துவிட்டு வந்து வேலை பார்த்தார்கள்.//

நான் அப்பிடி எல்லாம் நடக்கும்ன்னு சொல்லவே இல்லையே!

அப்புறம் பஸ் ஏன் ஓடலன்னு மக்களுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும் எதுக்கு இந்த படம்....

:)))

பி.கு: ஆளும் கட்சி பந்த் அழைக்கும் போது கடை திறந்துவைத்தால் என்ன நடக்கும் என்று எல்லா கடைக்காரனுக்கும் தெரியும்.