இந்தியாவின் இரும்பு மனிதன் என்று இந்திய வரலாறு சொல்லும் சர்தார் வல்லப்பாய் பட்டேலின் நினைவு நாள், இன்று!!! சுமார் 600 சமஸ்தானங்களா இருந்த இந்தியவை, ஒற்றை ஆளாய் நின்று, ஒன்றுபட்ட இந்தியா ஆகிய பெருமை இவரை மட்டுமே சேரும். இந்திய சுதந்திரத்துக்கு முன்பே இவர் துவங்கிய ஒன்றுபட்ட இந்தியா கனவே இன்று நாம் காணும் சுதந்திர இந்தியா!!! இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஆகவேண்டியவரும் இவரே, காந்தியின் வேண்டுகோளுக்கு இனங்கி தனக்கு கிடைக்க வேண்டிய பிரதமர் பதவியை நேருவுக்கு விட்டுக்கொடுத்தார். இந்தியாவின் முதல் துணை பிரதமராக இவர் பணியாற்றினார். இவர் உள்துறை மற்றும் தகவல் தொலைதொடர்பு துறைகளை கவனித்துவந்தார். இவருடைய் முயற்சியாலேயே டாக்டர் அம்பேத்கார் இந்தியாவின் அரசியல் சாசனம் வடிவமைப்பு குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிட தகுந்தது. இவர் டிசம்பர் 15, 1950ல் தனது 75வது வயதில் மாரடைப்பால் காலமானார். இன்றைய இந்தியாவின் சிற்பி என்ற முறையிலும், சுதந்திர இந்தியாவை காண இவர் செய்த தியாகத்தையும் இன்று நினைவு கூறுகிறேன். நான் மதிக்கும் சுதந்திர போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர். நாளைய இந்தியா இவ...