Posts

Showing posts from December, 2006

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

Image
அன்பு வலைப்பூ நன்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! இந்த புத்தாண்டில் புது மனிதனாய் பல வெற்றிகளும், வளங்களும் பெற்று பெருமகிழ்ச்சியோடு வரவேற்க என் வாழ்த்துக்கள்!!! இந்த புத்தாண்டு இனம், மதம், மொழி என எல்லா தடைகளையும் தாண்டி சிறந்த ஒரு புத்தாண்டாய் வரவேற்ப்போம்!!! மானுடமும், நல்லிணக்கமும் சிறக்கும் சிறந்த ஒரு புத்தாண்டாய் எதிர்ப்பார்த்து.... வாழ்த்துக்களுடன், நா ஜெயசங்கர்

சதாம் ஹுசேனின் இறுதி நிமிடங்கள்! - வீடியோ

சதாம் ஹுசேனின் இறுதி நிமிடங்கள்! வீடியோவில் பார்க்க மிக கொடுமையாக உள்ளது: இன்று காலை இந்திய நேரம் 8:30 மணிக்கு சதாம் தூக்கிலிடப்பட்டார். வழக்கமாக தூக்கிலிடப்படுகிறவர்களுக்கு தான் முகம் மறைக்கப்பட்டிருக்கும். இங்கு அது வேறு வகையில். தூக்கில் போட வருபவர்கள் முகமூடியில் வந்தது, சதாமின் மேல் உள்ள பயத்தை காண்பிக்கிறது. இங்கே பார்க்கவும் கைபேசியில் பதிவு செய்த வீடியோ பார்க்க(Un Edited) ........ நிச்சயம் ஒரு திறமையான எதிராளியை அமெரிக்கா இழந்துவிட்டது!!! ******************************************** We The Peopleலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

சில்லுன்னு ஒரு கலாசாரக் கொலை!

Image
கடந்த சில நாட்களாலின் சில்லுன்னு ஒரு ஜோடின்னு ஒரு விஜய் டி.வி நிகழ்ச்சியை இரண்டு, மூன்று முறை பார்க்க நேர்ந்தது. அந்த நிகழ்ச்சி நம் சமுதாயத்தை, கலாச்சாரதை எப்படி பாதிக்கும் என்று தெரியாமலா ஒளிபரப்புகிறார்கள்? இல்லை தெரிந்தே ஒழியட்டும் நம் கலாச்சாரம்ன்னு ஒளிபரப்புறாங்களான்னு தெரியலை? அதை பார்த்ததுக்கு அப்புறம் இனி இந்த மாதிரி நிகழ்ச்சியை பார்க்கக்கூடாதுன்னு முடிவு எடுத்துட்டேன்னா பார்த்துக்கோங்க!!! யாரோ ரெண்டு பேர் சில்லுன்னு ஜோடியாமாம்.. ஹூம்!! என்ன கொடுமைடா சாமி. அந்த ஜோடில பொண்ணுக்கு வயசு 26 அப்புறம் பையனுக்கு வயசு 40. அது ஒரு மேட்டரே கிடையாது. சரி அவர்கள் காதல் விவகாரம் எப்படி ஸ்டார்ட் ஆச்சுன்னு ஒரு விளக்கம் கொடுத்தாரு பாருங்க நம்ம ஹீரோ! அந்த பொண்ணு இவரோட சித்தப்பா விட்டுல தங்கி (Paying Guest) இருந்ததாம், இவர் அவங்க சித்தப்பா ஊருக்கு போறதை சாக்கா வச்சு, அவரை ரெயில்வே ஸ்டேஷனில் விட்டுவிட்டு இந்த புள்ளய சனி கிழமை டான்ஸ் பார்ட்டிக்கு போலாமான்னு கேட்டாராம், அவங்களும் சரின்னு போயிட்டு வந்தாங்களாம். அது கூட விடுங்க. என்ன கொடுமைடா இது??: அந்த நிகழ்ச்சியை நடத்துற மமதி சாரி கேட்க்கும் சில கே...

இந்தியாவின் சிற்பிக்கு இன்று நினைவு நாள்

Image
இந்தியாவின் இரும்பு மனிதன் என்று இந்திய வரலாறு சொல்லும் சர்தார் வல்லப்பாய் பட்டேலின் நினைவு நாள், இன்று!!! சுமார் 600 சமஸ்தானங்களா இருந்த இந்தியவை, ஒற்றை ஆளாய் நின்று, ஒன்றுபட்ட இந்தியா ஆகிய பெருமை இவரை மட்டுமே சேரும். இந்திய சுதந்திரத்துக்கு முன்பே இவர் துவங்கிய ஒன்றுபட்ட இந்தியா கனவே இன்று நாம் காணும் சுதந்திர இந்தியா!!! இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஆகவேண்டியவரும் இவரே, காந்தியின் வேண்டுகோளுக்கு இனங்கி தனக்கு கிடைக்க வேண்டிய பிரதமர் பதவியை நேருவுக்கு விட்டுக்கொடுத்தார். இந்தியாவின் முதல் துணை பிரதமராக இவர் பணியாற்றினார். இவர் உள்துறை மற்றும் தகவல் தொலைதொடர்பு துறைகளை கவனித்துவந்தார். இவருடைய் முயற்சியாலேயே டாக்டர் அம்பேத்கார் இந்தியாவின் அரசியல் சாசனம் வடிவமைப்பு குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிட தகுந்தது. இவர் டிசம்பர் 15, 1950ல் தனது 75வது வயதில் மாரடைப்பால் காலமானார். இன்றைய இந்தியாவின் சிற்பி என்ற முறையிலும், சுதந்திர இந்தியாவை காண இவர் செய்த தியாகத்தையும் இன்று நினைவு கூறுகிறேன். நான் மதிக்கும் சுதந்திர போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர். நாளைய இந்தியா இவ...