இந்தியா அடுத்த மைல்கல்லை தாண்டியது!
இந்தியவின் ISRO அடுத்த ஒரு சாதனையை செய்து, மேலும் ஒரு மைல் கல்லை இன்று தாண்டியது! இந்திய வானியல் அறிவியல் ஆராய்ச்சி கழகதின் PSLV-C7 பத்தாவது பயனம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து டிஸ்கவரி போன்ற பல முறை உபயோகிக்கப்படும் ஒரு விண்கலம் நம் இந்தியாவிடமும் இருக்கிறது என்ற பெருமையை நமக்கு வாங்கி தந்துள்ளது ISRO. இந்த முறை மற்றும் ஒரு சிறப்பு அம்சம், நான்கு செயற்கை கோள்களை இது எடுத்து சென்று விண்ணில் தத்தம் பாதையில் பொருத்திவரும் என்பதே சிறப்பு. அமெரிக்கா, ரஷ்யா போன்ற சில நாடுகளுக்கு அடுத்த நிலையை இஸ்ரோ பிடித்துள்ளது! இது தாங்கி சென்ற நான்கு செயற்கை கோள்கள்: CARTOSAT-2 - இந்தியாவின் நகர்ப்புற மற்றும் ஊரக உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சிக்கும், GIS வசதிக்காவும் தயாரிக்கப்பட்டுள்ளது. SRE-1 - Metallurgical சோதனை மற்றும் Biomimetic சோதனைகளுக்காகவும். இந்தோனேஷியாவின் LAPAN-TUBSAT அர்ஜென்டினாவின் PEHUENSAT-1 என்ற நான்கு செயற்கைகோள்களை தாங்கி சென்று, அனைத்து செயற்கை கோள்களையும் அதனுடைய பாதையில் வெற்றிகரமாக சேர்த்து சாதனை கண்டுள்ளது. இந்த வெற்றி நம் இந்தியாவை ஆசிய நாடுகளின் விண்வெளி ஆ...