Posts

Showing posts with the label அரசியல்

நாம் முதல் அடி எடுத்து வைக்கலாமா??!!

அரசியல் ஒரு சாக்காடா உண்மைதான்! யார் அதை சரி செய்வது... யாராவது ஒரு ஆள் முதல் அடி எடுத்து வைக்கணும்... மாற்று வேணும் உண்மை தான்! Come on lets find someway and do something!

நடிகர் விஜய் புது கட்சி :(

Image
நம்ம தமிழ்நாட்டுக்கு இன்னொரு வருங்கால முதல்வரும் கிடைச்சுட்டாருடே!!! நடிகர் விஜய் கட்சி துவங்க போகிறாராம் :( வருகிற ஜூன் 22ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் இதற்கான அறிவிப்பு வருமாம்... இந்த கொடுமைய எங்க போய் சொல்ல???!!! இருக்கறது ஒரு முதல்வர் சீட்டு அதுக்கு எத்தினி ஆளுங்க கெளம்பிட்டாங்க!!! 1. விஜயகாந்த் 2. சரத்குமார் 3. விஜய் Where to go and tell this story :))))) (டமில்லா மாத்திக்கங்கப்பா!!) நன்றி : தெனாலி.காம் விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும் .

நான் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டேன்!

Image
தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான திரு.கருணாநிதியின் அறிக்கை: இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து 23-4-2009 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். *********************** ஐயா, தெரியாமா தான் கேட்கிறேன், இதை யாருடைய கண் துடைக்க நடக்கிறது? எதற்காக இந்த நாடகம். இது மத்திய அரசை எதிர்த்தானால், அந்த மத்திய அரசில் நீங்கள் யார்? அதே மத்திய மந்திரிசபையில் பங்கு கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன தார்மீக பொறுப்பு இருக்கிறது இந்த பந்த் நடத்த?? தாயநிதி மாறனுக்கு ஐ.டி துறை மந்திரி பதவியும், டி.ஆர்.பாலுவுக்கு கப்பல் போக்குவரத்து துறையும் தரும் வரை நான் இந...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!

நேற்றைய பல்டிக்கு பின் தானே கேள்வி தானே பதில் பேட்டி ஒன்றை தந்தார் முதல்வர் திரு.கருணாநிதி அவர்கள், அதில் இப்படி ஒரு கேள்வியும் பதிலும் இருந்தது! //கே: பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதா? ப: இது ஜெயலலிதாவை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. அவர்தான் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து அவரை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர். அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிலர் ஜெயலலிதாவின் அடிவருடி களாக மாறி அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளார்கள். // சரி ஏன் அந்த கேள்வியை ஜெவிடம் மட்டும் கேட்க வேண்டும், நேற்று அப்ஷேக் மானு சிங்வி - காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் ஜெ சொன்னதையே தான் சொல்கிறார் இங்கே சொடுக்கவும் , வீடியோ இங்கே ... இன்னும் சொல்லப்போனால் ஜெ சொல்வதை கூட பெரிய விசயமாக எடுக்கத் தேவை இல்லை! ஏன் என்றால் அவர் தேசிய ஆட்சி பொறுப்புக்கு வர போவதில்லை! காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி , இந்தியாவின் ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய கட்சி என்னும் போது அது சொல்வதே முக்கிய விவாதமாக எடுத்திருக்க வேண்டும் திரு. கருணாநிதி!! // அவர்தான் பிரபாகரனை கைது செய்து இந்திய...

மரண அரசியல் - செல்வி.ஜெயலலிதா!

கடந்த வாரம் தடுப்பூசி இட்ட நான்கு குழந்தைகள் மரணத்தை தழுவின, அந்த மரணங்கள் தவிர்கப்பட்டிருக்களாமோ இல்லையோ! தெரியவில்லை, அதற்கு என்ன காரணம், மருந்தா? குளிரூட்டு பெட்டியில் பாதுக்காக்காததா? என்ற காரணங்களே வெளிவராத நிலையில், தமிழக அரசு தான் தரகுறைவான மருந்துகளை வாங்கி குழந்தைகளை கொண்றது போன்று ஒரு கேவலமான அரசியல் செய்வது என்ற கொடூர வேலையை செய்யும் செல்வி. ஜெயலலிதா, அதை தினமும் சொல்லிக்கொண்டிருக்கும் ஜெயா டி.வி மற்றும் மக்கள் டி.விக்கு என் கண்டனங்கள்! இது தொடர்பான சில விசயங்கள்: 1. இந்த மருந்து தமிழக அரசு வாங்கி வினியோபிப்பதல்ல! மந்திய அரசு மொத்தமாக வாங்கி, இந்தியாவில் உள்ள அத்துனை மாநிலங்களுக்கும் வினியோக்கிறது! 2. மத்திய அரசு தான் சோதனை அடிப்படையில் Human Biologicals Institute ( HBI ) நிறுவனத்தின மிருந்து இந்த மருந்துகளை வாங்கியுள்ளது! வழக்கமாக வாங்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடூடிடமும் ( Serum Institute of India) வாங்கியுள்ளது! 3. இதில் HBIயிடம் வாங்கிய மருந்துகள் ஒரு டோஸ்க்கு ரூ 7/- விலை அதாவது ரூபாய் ஒன்று சீரம் இன்ஸ்டிடூடின் தடுப்பு மருந்து(ரூபாய் 8/-) விலையைவிட குறைவானவை! 4. இறந...

40 ஆயிரம் குடும்பத்தை வாழவைக்கும் மத்திய அமைச்சர்!

Image
நேற்று அந்த செய்தியை டி.வியில் பார்த்தபோது இப்படியும் ஒரு அமைச்சர் இருப்பாரான்னு எனக்கு ஆச்சர்யமா போச்சு!!! நல்லா பண்ணுங்க சாமிங்களா! ரெம்ப நல்லா இருப்பீங்க!!! "என் குடும்பம் நடத்தும் நிறுவனங்களின் 40 ஆயிரம் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோலிய அமைச்சரிடம் எறிவாவு தரச்சொல்லி கோரிக்கையை வைத்தேன்" - டி.ஆர்.பாலு. பாராளமன்றத்தில் தைரியமா இந்த விசயத்தை சொல்லறாரு??!! நம் பின்பலத்தில் வாழும் மைனாரிட்டி அரசு நம்மை ஒன்னும் செய்யமுடியாது என்ற தைரியம் தானே?? எப்பதான் நீங்க 100 கோடி மக்களின் நலன்களை நினைப்பீர்கள்??

முதல்வர் அடக்கி வைத்த பெண்குலம்?!

" ஆறுவது சினம் - படித்து அடங்கிவிடுமா பெண்குலம்? " என்று பொங்கி ஏழுதியிருக்கும் நம் முதல்வர், என்ன சொல்லவறாருன்னு கொஞ்சம் சொல்லுங்க, என்னவோ ஜனாதிபதி பதிவுக்கு முதல் முறையா பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பது போல ஒரு மாயை க்ரீயேட் செய்யறாரு! ரொம்ப ஓவர் தான் முதல்வரே! இதற்கு முந்தய ஜனாதிபதி தேர்தலில் கேப்டன் லட்சுமி நின்ற போது முதல்வருக்கு இந்த கவிதை ஏன் வரவில்லை!! அப்ப மட்டும் "ஆறுவது சினம் - படித்து அடங்கிவிடட்டும் பெண்குலம் என்று இருந்து விட்டுவிட்டாரா?? கேப்டன் லட்சுமி கட்சி சார்ந்த ஒரு வேட்பாளராக கருதமுடியாது! அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்! பல முறை இந்திய சுதந்திரத்துக்காக சுபாஷ் சந்திர போஸோடு இணைந்து போராடியவர்! சுந்திர போராட்டத்தில் பல வருடங்கள் சிறை சென்றவர். இப்படி பட்ட ஒரு பெண்குலத்தை ஏன் அன்று திரு.கருணாநிதி ஆதரிக்கவில்லை?? இன்று நம் முதல்வர் ஆதரிக்கும் பிரதீபா பாட்டீல் வெறும் ஒரு காங்கிரஸ் பிரமுகர், காங்கிரஸில் இணைந்தால 1962 காங்கிரஸ் எம்.எல்.ஏவாக அரசியலுக்கு வந்தவர்; பெரிய சாதனைகள் ஒன்று இல்லை சொல்வதற்கு! காங்கிரஸ் கட்சியால் கவர்னர் பதிவி கிடைத்து ராஜஸ்...

ஜெ. வை ஆதரிக்கும் உடன்பிறப்புக்கள்!!!

என்ன ஆச்சர்யம் லக்கி போன்ற உடன்பிறப்புக்கள் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்களாமாம் சாமியோ! இன்று போலீஸ் எரிக்கப்பட்ட விவகாரத்தில் ஜெ.வை கைது செய்ய மாட்டாஙகளாம்! சாரி கைது செய்யசொல்லமாட்டாங்களாம்!!!! நாங்கள் கொஞ்சமாவது சிந்திக்க கூடியவர்கள். எவனோ ஒரு பைத்தியக்கார ஜெ. அபிமானி செய்த காரியத்துக்காக ஜெயலலிதாவை கைது செய்ய கோரமாட்டோம். - லக்கிலுக் ;) அப்ப அன்று தர்மபுரி கேஸ்ல ஏன் ஜெ.வை கோத்துவிட்டீங்க? தினகரனில் 3 கொலைகள் நடக்கவில்லை என்றால் இந்த உடன்பிறப்பு இப்படித்தான் சிந்திப்பாரா?? இந்த அழகிரியால பாவம் உடன்பிறப்புக்கள் ஜெ.வை ஆதரித்து பதிவு போட வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டிருக்காங்க! உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு! (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்!!!) இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் தன் பலத்தை காட்ட அப்பாவி மக்களை கொலை செய்யறாங்க! பி.கு: பைத்தியகாரனுகளை எல்லாம் கட்சியில் சேர்த்த தலைவருக்கு ஒரு பங்கு இந்த கொலைகளில் உண்டு! அதுவும் எம்.எல்.ஏ பதவி வரை கொடுத்த தலைவருக்கு நிச்சயம் இந்த கொலைக்கு பங்கு உண்டு என்பது என் வாதம்!

திருத்தமுடியாதுடா உங்களை!!!

ஜெயலலிதா மது அருந்தியதாக இரட்டை அர்த்தத்தில் முதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டது, கொட நாடு எஸ்டேட்டில் சோதனை நடந்தது ஆகியவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று காலை முதல் பேராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய அதிமுக எம்எல்ஏ கைது! ஆடுங்கடா ஆடுங்க... ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை. அரசியல்வாதிகள் கையில் பணமும், அதிகாரமும் இருக்கு என்றால் எத்தனை பேரை வேண்டுமானாலும் கொளுத்திப்போட்டு என்ஜாய் பண்ணலாம்! அன்று அவர்கள் தினகரன் கருத்துக்கணிப்பு போட்டப்போ, அழகிரி & கோ கலாநிதி மாறனையோ! தயாநிதி மாறனையோ அடிக்கவில்லை, கொல்லவில்லை! இன்று இவர்கள் சொன்னவரை ஒன்னும் செய்யவில்லை! எந்த நாயாவது சொன்னவனையோ அல்லது செய்தவனையோ கொல்லறீங்களாடா? பாவம் உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களையும், காவல் காக்கும் காவலர்களும் தான் கிடச்சாங்களாடா? திரும்ப அடிக்கமாட்டாங்க என்ற தைரியம்! மக்களை விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை காலம் வேண்டிவரும் ?? இந்த பாவமலைகள் இந்தியாவை விட்டொழிக்க!!

கோலாக்கலும், பூச்சிமருந்தும் அரசியல்வாதிகளும்!

Image
இதுவரைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கோக் மற்றும் பெப்சியின் மீது பூச்சி மருந்து படிமம் இருப்பதாக புகார் வந்தது! முதலில் 2003 ஆகஸ்டில் அறிவியல் மற்றும் சுற்றுப்புறசூழல் மையம், இந்தியாவில் தயாராகும் கோக், பெப்சி போன்ற 12 வகை குளிர்பாணங்களில் பூச்சிமருந்து படிமம் உள்ளதாக அறிக்கை வெளியிட்டு ஒரு கலக்கு கலக்குச்சு! பெப்சியின் குளிர்பாணங்கள் அனுமதிக்கப்பட்ட( 0.0005 mg/l ) பூச்சிமருந்து அளவுகளைவிட 36 மடங்கு அதிகமாக ( 0.0180 mg/litre ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது! கோக் நிறுவன குளிர்பாணங்களில் சுமார் முப்பது மடங்கு அதிகமாக ( 0.0150 mg/litre ) இருந்தது! அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாங்கிய அதே நிறுவனங்களின் குளிர்பாணங்களில் ஒரு மில்லிகிராம் கூட பூச்சிமருந்து படிமம் இல்லை என்ற உபரி தகவலும் அந்த அறிக்கையிலிருந்தது. உடனே நம்ம அரசியல்வாதிகள் என்னவோ மக்கள் நலம் காப்பவர்கள் போல தினமும் ஒவ்வொறு கட்சியிலிருந்தும் ஒரு ஆள் மினிமம் இந்த நிறுவனங்களை திட்டி அறிக்கை விட்டார்கள்! முக்கியமா நம்ம கம்யூனிஸ்டுகள்! அரசு அதை தடை செய்ய வேண்டும் என்று கூப்பாடுயிட்டார்கள்! அந்த நிறுவனங்கள் முன் தர்னா செய்தார்கள்! அற...