என்னையும் நட்சத்திரமாக் தேர்ந்தெடுத்து என்னை ஆச்சர்யப்படுத்திய தமிழ்மணத்துக்கு நன்றி சொல்லி முதலில் என்னை பற்றிய சிறு குறிப்புடன் என் பதிவுகளை துவங்குவோம் என்று நினைத்தேன் :) பெயர்: ஜெயசங்கர் நா வயது: 34 படிப்பு: பொறியியல் பட்டம் தொழில்: மென்பொருள் ஏற்றுமதி ஏன் வலைப்பதிவு: நான் பொதுவா அரசியல் சார்ந்து எழுதுவதாக எல்லாரும் சொன்னாலும், நான் மக்கள் பிரச்சனை சார்ந்து எழுதுகிறேன்னு என்பதே உண்மை. அரசியல் சாக்கடை ஆனதால், மக்கள் படும் அவதிகளை சொல்லும் பதிவே என் பதிவுகள், மக்கள் விழிப்புணர்வு பதிவுகள், ஏமாற்றுக்காரர்களை அடையாளம் காட்ட எழுத துவங்கினேன். என்னை தேசிய ஜல்லி அடிப்பவன் என்று பலர் சொல்லறாங்க! ஆமாம் என்று பெருமையா சொல்லிக்கிறேன். ஏன்னென்றால் நான் முதலில் இந்தியன், அப்புறம் தான் மற்றவைகள்...இதை ஜல்லி என்று சொல்பவர்கள் சொல்லட்டும், அது அவர்களின் சுதந்திரம் :) என் தலைவன்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். நேதாஜி இல்லாம் இந்தியா சுதந்திரம் பெற்றிருக்க முடியாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். அவர் சுத்ந்திர போராட்ட தியாகத்துக்கு இணை யாரும் கிடையாது என்று நிச்சயமாக நம்புகிறேன். நேதாஜி தான் என்னை பொ...