Posts

Showing posts with the label நட்சத்திரம்

ஸ்டார் தடாலடி போட்டி!

Image
மகா ஜனங்களே! Gpost கௌதம்ஜீயின் 'அடுத்த தடாலடி எப்போ?' என விசாரித்துப்பார்தால் ரிஸ்ல்ட் ஒன்றும் இல்லை, சரி நம்மளே ஒன்னு வைப்போம் என்று இறங்கிவிட்டேன்! இதோ நான் தரும் அடுத்த தடாலடிப் போட்டி! இந்த புகைப்படத்தில் உள்ளது யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்! ஆகவே தோழர்களே.. போட்டிக்கான இறுதி நாள்: 07.02.2007, சனிக்கிழமை கெடு நேரம்: காலை பத்து மணி (இந்திய நேரப்படி) நேரம் முடிந்துவிட்டும் உங்களை காக்க வைத்தமைக்கு மன்னியுங்க ப்ளீஸ்! சரியான பதில் : திருமதி. சோனியா காந்தி சரியான பதில் சொன்ன அனைவருக்கும் என் இதயத்தில் ஒரு ஏக்கர் இடம்! ஜாலியா குடிவாங்க ;) என் இன்றைய மற்றொரு பதிவான ஏன் இந்த சாதி வெறி! பதிவை படிச்சீங்க!! அட ஆமாம் அவங்களை மாதிரியே இருக்காங்கபா!!! ஏதாவது சொந்தமா இருக்குமோ??!!! இந்த படத்தில் உள்ளது ரீவ்ஸ் என்று எல்லாரும் சொல்லிட்டாங்க! ஆனா பாருங்க அப்படியே நம்ம திருமதி .சோனியா சின்ன வயசுல இருந்தா மாதிரியே இருக்காங்க! எப்படின்னு ஒரு போட்டி வைக்கலாமா?? ;)

என்னை தெரியுமா?

என்னையும் நட்சத்திரமாக் தேர்ந்தெடுத்து என்னை ஆச்சர்யப்படுத்திய தமிழ்மணத்துக்கு நன்றி சொல்லி முதலில் என்னை பற்றிய சிறு குறிப்புடன் என் பதிவுகளை துவங்குவோம் என்று நினைத்தேன் :) பெயர்: ஜெயசங்கர் நா வயது: 34 படிப்பு: பொறியியல் பட்டம் தொழில்: மென்பொருள் ஏற்றுமதி ஏன் வலைப்பதிவு: நான் பொதுவா அரசியல் சார்ந்து எழுதுவதாக எல்லாரும் சொன்னாலும், நான் மக்கள் பிரச்சனை சார்ந்து எழுதுகிறேன்னு என்பதே உண்மை. அரசியல் சாக்கடை ஆனதால், மக்கள் படும் அவதிகளை சொல்லும் பதிவே என் பதிவுகள், மக்கள் விழிப்புணர்வு பதிவுகள், ஏமாற்றுக்காரர்களை அடையாளம் காட்ட எழுத துவங்கினேன். என்னை தேசிய ஜல்லி அடிப்பவன் என்று பலர் சொல்லறாங்க! ஆமாம் என்று பெருமையா சொல்லிக்கிறேன். ஏன்னென்றால் நான் முதலில் இந்தியன், அப்புறம் தான் மற்றவைகள்...இதை ஜல்லி என்று சொல்பவர்கள் சொல்லட்டும், அது அவர்களின் சுதந்திரம் :) என் தலைவன்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். நேதாஜி இல்லாம் இந்தியா சுதந்திரம் பெற்றிருக்க முடியாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். அவர் சுத்ந்திர போராட்ட தியாகத்துக்கு இணை யாரும் கிடையாது என்று நிச்சயமாக நம்புகிறேன். நேதாஜி தான் என்னை பொ...