40 ஆயிரம் குடும்பத்தை வாழவைக்கும் மத்திய அமைச்சர்!

நேற்று அந்த செய்தியை டி.வியில் பார்த்தபோது இப்படியும் ஒரு அமைச்சர் இருப்பாரான்னு எனக்கு ஆச்சர்யமா போச்சு!!! நல்லா பண்ணுங்க சாமிங்களா! ரெம்ப நல்லா இருப்பீங்க!!!

"என் குடும்பம் நடத்தும் நிறுவனங்களின் 40 ஆயிரம் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோலிய அமைச்சரிடம் எறிவாவு தரச்சொல்லி கோரிக்கையை வைத்தேன்" - டி.ஆர்.பாலு.

பாராளமன்றத்தில் தைரியமா இந்த விசயத்தை சொல்லறாரு??!! நம் பின்பலத்தில் வாழும் மைனாரிட்டி அரசு நம்மை ஒன்னும் செய்யமுடியாது என்ற தைரியம் தானே??



எப்பதான் நீங்க 100 கோடி மக்களின் நலன்களை நினைப்பீர்கள்??

Comments

ஒருத்தன் தேங்காய் திருட தென்னை மரத்தில் ஏறினான்.
ஏறும் போது, தோட்டக்காரன் பார்த்துவிட்டான்.

தோட்டக்காரன்: டேய், மரத்துல என்னடா பண்ணுற?
திருடன்: மரத்துல புல்லு புடுங்க போனேன்.
தோட்டக்காரன்: மரத்துல ஏதுடா புல்லு?
திருடன்: கரக்ட்டு, அதான் கீழ இறங்கிட்டேன்.

இந்த கதை மாதிரி இருக்கு, பாலு சொல்லும் காரணம்.
இது தொடர்பாக என்னுடைய பதிவைப பாருங்கள்.