இந்தியாவின் சிற்பிக்கு இன்று நினைவு நாள்

இந்தியாவின் இரும்பு மனிதன் என்று இந்திய வரலாறு சொல்லும் சர்தார் வல்லப்பாய் பட்டேலின் நினைவு நாள், இன்று!!!

சுமார் 600 சமஸ்தானங்களா இருந்த இந்தியவை, ஒற்றை ஆளாய் நின்று, ஒன்றுபட்ட இந்தியா ஆகிய பெருமை இவரை மட்டுமே சேரும். இந்திய சுதந்திரத்துக்கு முன்பே இவர் துவங்கிய ஒன்றுபட்ட இந்தியா கனவே இன்று நாம் காணும் சுதந்திர இந்தியா!!!

இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஆகவேண்டியவரும் இவரே, காந்தியின் வேண்டுகோளுக்கு இனங்கி தனக்கு கிடைக்க வேண்டிய பிரதமர் பதவியை நேருவுக்கு விட்டுக்கொடுத்தார். இந்தியாவின் முதல் துணை பிரதமராக இவர் பணியாற்றினார். இவர் உள்துறை மற்றும் தகவல் தொலைதொடர்பு துறைகளை கவனித்துவந்தார். இவருடைய் முயற்சியாலேயே டாக்டர் அம்பேத்கார் இந்தியாவின் அரசியல் சாசனம் வடிவமைப்பு குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிட தகுந்தது.

இவர் டிசம்பர் 15, 1950ல் தனது 75வது வயதில் மாரடைப்பால் காலமானார். இன்றைய இந்தியாவின் சிற்பி என்ற முறையிலும், சுதந்திர இந்தியாவை காண இவர் செய்த தியாகத்தையும் இன்று நினைவு கூறுகிறேன். நான் மதிக்கும் சுதந்திர போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர். நாளைய இந்தியா இவரை மறக்காமல் இருக்குமா??

Comments

ENNAR said…
நற்செய்தி
இவரால் மிரட்டப்படாமல் எதிர்க்காமல் தானே முன்வந்து தனது சமஸ்த்தானத்தை ஒப்படைத்தவர் புதுக்கோட்டை மன்னர்
வஜ்ரா said…
Architecht of Modern India என்று சொல்லலாம். இந்தியா கூட ஓகே.

//
ாளைய இந்தியா இவரை மறக்காமல் இருக்குமா??
//

நாமெல்லாம் இருக்கும் போது இவரை மறக்கடிக்க யாராலும் முடியாது!
We The People said…
//இவரால் மிரட்டப்படாமல் எதிர்க்காமல் தானே முன்வந்து தனது சமஸ்த்தானத்தை ஒப்படைத்தவர் புதுக்கோட்டை மன்னர்//

நன்றி என்னார். மிரட்டப்படாமல் கொஞ்சம் ஓவர் தான் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை கொஞ்சம் அழுத்திச்சொன்னார் அவ்வளவு தான் ;)
Anonymous said…
ஞாபகபடுத்தியதற்கு நன்றி...
We The People said…
//Architecht of Modern India என்று சொல்லலாம். இந்தியா கூட ஓகே.//

அப்படி சொல்லமுடியாது வஜ்ரா ஏன் என்றால் அன்று அவர் செதுக்கிய இந்தியாவில் ஜம்மு& கஷ்மீரம் இந்தியாவில் இருந்தது! இன்று 40% சதவீதம் பாகிஸ்தானிடமும், 20% சீனவிடம் இருக்கு என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் Modern India என்று சொல்லவில்லை.
Anonymous said…
He is the Fascist

yes he had told a press meet whcih is against Democratic movements

Moolaguru for Ramagopalan
We The People said…
அனானி ஐயா,

எந்த காரணத்துக்காக அவரை Fascist என்று அழைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா??

//Moolaguru for Ramagopalan //

டூ மச் அனானி. இதற்கான ஆதாரம் இருக்கா?
Anonymous said…
நாமெல்லாம் இருக்கும் போது இவரை மறக்கடிக்க யாராலும் முடியாது!
வஜ்ரா said…
மஹாத்மா தன் மா பெரும் தவறைச் செய்யாமல் இருந்திருந்தால்?அவர் பிரதமராயிருந்தால் ? இந்தியா எப்படி இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

கஷ்மீர் என்றவுடன் சில நாட்கள் முன்பு பாகிஸ்தான் தன் கஷ்மீர் நிலையை சற்றே மாற்றிக் கொண்டுள்ளது. இனி கஷ்மீர் ஹமாரா ஹை என்று பாக்கீஸ் சொல்லமாட்டார்களாம்.

அப்ப அக்சாய் சின் ஐ சீனாவுக்கு எடுத்து தாரை வார்த்தது என்ன ஊறான் வூட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே வா ? என்று இன்னும் நேரு வழி வந்த இந்திய காங்கீஸ் மற்றும் காம்மீஸ் கேட்கவில்லை.
We The People said…
//மஹாத்மா தன் மா பெரும் தவறைச் செய்யாமல் இருந்திருந்தால்?அவர் பிரதமராயிருந்தால் ? இந்தியா எப்படி இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.//

எனக்கும் இந்த ஆதங்கம் இருக்கு வஜ்ரா. நிச்சயமாய் நல்ல மக்கள் நலம் நாடும் அரசாக இருந்திருக்கும் என்று எனக்கு தோன்றுவதுண்டு.
Anonymous said…
From aasath


During the Thelungana peasent struggle against Nizam, he told that the above mentioned words.

Kashmir peoples will decide their Future. Don't try the daughter of Zhunahath to your prostetute.

So your view , Patel view also the great Ramagopalan view is same but different Vessels.

-aasath
SP.VR. SUBBIAH said…
சிற்பியை நினைத்தீர் சிறப்பாகப் பதிவிட்டீர்
சொற்றமிழால் அருஞ் சுவையோடு - உற்ற
நற்றமிழர், பதிவர்கள்,கொடை மழைகள்
பெறும்பயன் பதிவில் அதுவே!

SP.VR.சுப்பையா
We The People said…
ஆசத்,

//So your view , Patel view also the great Ramagopalan view is same but different Vessels.//

நாட்டை துண்டாக்க நினைப்பவன் தியாகியா தோன்றும் சிலருக்கு, நாட்டை ஒன்றாகியவன் ராமகோபலனாக தான் காணப்படுவான். அது உங்கள் பார்வையின் குற்றம்.

Atleast you had a courtesy to say Ramagopalan view in a different vessel. Thanx for that.

1948ல் அவர் சொன்ன வார்த்தைகள்:

"There is a cry that I am against Muslims. But I am their true friend. I cannot beat about the bush. I cannot dissemble. Let no one try to have his two feet in two different boats. Let every one choose one boat. Let us all, who belong to India, swim or sink together."

இறுதியா நான் இந்த பதிவில் நான் சொல்வது:

"I cannot speak anything but the truth. I cannot turn back on my duty, just to please some one."

மேலே உள்ளது என் வார்த்தைகள் அல்ல அதுவும் சர்தாரின் வார்த்தைகள். இன்று என்க்கும் பொருந்துகிறது. இதை தான் நானும் சொல்ல நினைக்கிறேன். இதற்காக என்னையும் ராமகோபாலன் என்று சொன்னால் அதுவும் உங்கள் பார்வையின் கோளாறு தான் ஆசாத்
We The People said…
வாத்தியார் ஐயாவுக்கு நன்றி.

கவிதைக்கும் நன்றி.

//சிற்பியை நினைத்தீர் //

இவரின்றி இந்தியா இல்லை என்று இருக்கும் போது எப்படி மறப்பது. மறக்க நான் என்ன அரசியல்வாதியா??

இன்று இந்திய அரசை நடத்தும் அரசியல்வாதிகள் அவரை மறந்தனர்! அவர் நினைவு நாள் கொண்டாடப்படவில்லை, அவர் வேண்டும் என்று மறந்தனரா? இல்லை அதுவும் ஒரு compromise Strategyஆ என்று தெரியவில்லை :((((((((

வரும் நாளில் மக்களிடமிருந்து இவர் மறக்கடிக்ப்படுவார்கள் என்றே தோண்றுகிறது.
ஜெய்,

உண்மையைச் சொல்லப் போனால், உள்துறை அமைச்சரான படேலால் முடிவெடுக்கப் படவேண்டிய காஷ்மீர் விஷயத்தைச் சுயநலமாக நேரு மிக நேர்மையானவன் என வரலாறு சொல்லவேண்டும் என்கிற எண்ணத்தினால் ஐநாவுக்கு பஞ்சாயத்துக்கு காஷ்மீரை எடுத்துச் சென்றார்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ரஜபுத்திர அரசனின் கருணையால் அன்றைய பண்டைய இந்தியா இசுலாமியப் படையெடுப்பினால் பல நூறு ஆண்டுகள் அவதியுற்றது!

அறுபதாண்டுகள் முன்பாக படேலின் விட்டுக்கொடுத்தலால் நேருவினால் உருவான பிரச்சினையான காஷ்மீரின் வழியாக இன்னொருமுறை இந்தியா இசுலாமிய வன்முறைக்கு இன்று ஆளாகி அவதியுறுகிறது!

படேலின் தீரம், அவரது அழுத்தமான செயல்பாட்டுத்தன்மை இவைகளுடன் கூடிய தலைமையே இந்தியாவை வலிவான நாடாக உலக அரங்கில் பொருத்தமான அங்கீகாரத்துடன் இருக்கும்படி மெருகேற்றும்!

சர்தார் படேலை நினைவுகூர்வது மிக மிக அவசியமானது! ஒருங்கிணைந்த இந்தியா வலிவான இந்தியாவிற்கான அடித்தளம் அமைத்த பெருமை வல்லபபாய் படேலையே சேரும்!
Anonymous said…
சிற்பி என்ற வார்த்தை மிகவும் பொருத்தமானது. தேவையான பாகங்களை அழகாக உருவாக்கும் சிற்பி, தனக்கு அனாவசியம் என்று தோன்றும் பகுதிகளை உளி வைத்து அடித்து நசுக்கி, கொன்றுவிடுகிறான்

இன்றைக்கும் மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், காஷ்மீர், என்று இந்தச் சிற்பியின் உளியால் நசுக்கப்பட்ட மக்கள் எத்தனை? எத்தனை?!!! உண்மையான ஜனநாயக ஆட்சி மலர்ந்திருக்க வேண்டிய இந்தியாவில் இப்படியான சில புகழ் விரும்பிகளால் பொய்யான ஜனநாடகம் உண்டாகிவிட்டது.

மணிப்பூரில் மனோரமாக்களும், காஷ்மீரத்தில் தீவிரவாதிகளும், நாடெங்கிலும் கடை விரித்திருக்கும் நக்ஸலைட்களும் இருக்கும்வரை இது போன்ற "சிற்பிகளை" யாரும் மறக்க முடியாது..
We The People said…
அனானி,

காஷ்மீர் தீவிரவாதம் இன்று தழைத்து கொண்டிக்கிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம் நேருவும் அவரின் கஷ்மீர் கொள்கையும் தான். அன்று உள்துறை அமைச்சர் பதவில் இருந்த சர்தாரை கஷ்மீரை தவிர மற்ற சமஸ்தான இனைப்புகளை மட்டும் பார்க்க செய்தது நேருவின் குற்றமே அன்றி பட்டேலின் குற்றம் இல்லை.

பொது வாழ்வில் வந்தவர்களுக்கு சொல்லடி விழத்தான் செய்யும்.

//இன்றைக்கும் மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், காஷ்மீர், என்று இந்தச் சிற்பியின் உளியால் நசுக்கப்பட்ட மக்கள் எத்தனை? எத்தனை?!!! உண்மையான ஜனநாயக ஆட்சி மலர்ந்திருக்க வேண்டிய இந்தியாவில் இப்படியான சில புகழ் விரும்பிகளால் பொய்யான ஜனநாடகம் உண்டாகிவிட்டது.//

இதற்கெல்லாம் பதில் இந்த பதிவில் சொல்ல மாட்டேன். சொன்னாலும் உங்களுக்கெல்லாம் புரிய போவதும் இல்லை. சோ நோ கமெண்ட்ஸ்!!!

அவர் நினைவு நாள் நினைவுகூறலே இந்த பதிவு.
Anonymous said…
A word from the same year at Secundrabad "Beyond the death of last communist, we (Military) can't leave from This Samasathanam" -Patel , 1948

Kashmir problem:
They don't want India as well as Pakistan. They have need individuality.

So-called indian Unity hadn't derived by peaceful approach of Patel. He and Sidhbavan Barbanaas wanted the Aganta Bharatha which starts from Afhan to Miyanmar.

Seven sistor problem had not raised by him only. It is due to the nature of our Indian State and the AAlum Varkkam and Bharbanneeyam.

Naxalism: Don't speak about this without the morality of Naxalbhari.

It is the symbol of the Red Star of Forthcoming NEW DEMOCRATIC REVOLUTION at INDIA

aasath
HSRA
Anonymous said…
//
It is the symbol of the Red Star of Forthcoming NEW DEMOCRATIC REVOLUTION at INDIA
//

BOOOOOOOOOOOOOOOWWWWAAAAAAAA!!!!!!

கேக்குறதுக்கே வாந்தி வருதுய்யா...
We The People said…
ஆசாத்

//It is the symbol of the Red Star of Forthcoming NEW DEMOCRATIC REVOLUTION at INDIA//

யாருங்க அந்த ரிவல்யுஷனிஸ்ட்? அது என்னங்க ரெட் ஸ்டார், அஜித்தை சொல்லலையே ;)

ரொம்ப ஓவரா ஃபீல் பண்ணறீங்க போல!! அது என்னங்க அந்த HSRA ?
Anonymous said…
i am assath

Dear Deafs please hear it!

would Anybody understand that New Democratic Revolution. ... Explain pls

HSRA -

"Hindhsthan Socialist Republic Association"-Chief-commander is Chandrasekara aasath, Active members are Bagath Singh, Sugadev, Rajaguru, PK Duth, .... etc

Do know this history on 1930s of India. Bagath became a Highest leader in peoples as Gandhi.

Read our nations' History and listen the lesson to fight against USA for its' Recolonization (like British colonization)

Learn from history of india as well as IT software.

-aasath
HSRA
We The People said…
ஆசாத்,

ஹோ! Hindustan Socialist Republican Association சந்திரசேகர ஆசாதா நீங்க??

நீங்க இங்க உயிரோட இருந்துமா இந்த நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கல...

இப்பவும் அந்த அமைப்பு இருக்கா? எங்க இருக்கு? என்ன செய்யுது? பகத்சிங்,சுக்தேவ், ராஜகுரு போன்ற சுயநலமில்லா ஒரு தலைவன் அந்த அமைப்புல இருக்காரா? நக்கலா கேட்கல சார். உண்மையா கேட்கிறேன்.

//Do know this history on 1930s of India. Bagath became a Highest leader in peoples as Gandhi.//

I still have highest regards to bagath singh than gandhi and I stand by it. I know the real history!! which was not taught in schools!!!
We The People said…
அனானி மற்றும் ஆசாத் உங்கள் கடைசி பின்னூட்டங்கள் இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாதால் அவை நிறுத்தப்பட்டுள்ளது.