லக்கிலுக்கும் - நீதிமன்ற அவமதிப்பும்

நம்ம பகுத்தறிவு ஜீவி லக்கிலுக் இவ்வளவு சூப்பரா திரைகதை அமைப்பார்ன்னு நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. சுவனப்பிரியன் என்னும் ம.உ.கண்மணி கொடுத்த ஒரு ஒன் லைன்னை (One Line) கதையை செம அசத்தலா திரைகதை அமைத்து. பாக்கியராஜ், மணிரத்னம் ஆகியவரை விட ஒரு சிறந்த திரைகதையாளனா அசத்தியிருக்காரு. ராம் கோபால் வர்மா ரேஞ்சுக்கு ஒரு சிறந்த திவிரவாத சினிமா எடுக்கலாம்.

அவர் சொல்லாராரு அப்சலை தூக்குல போடுன்னு சொன்னா தேசபக்தி ஜல்லியாம். தூக்குல போடாதன்னு சொன்னா பகுத்தறிவாமா!!!

இது! இவருக்கு தேசபக்தி ஜல்லியா தெரியுது!!

லக்கிலுகின் கண்டுபிடிப்புகள்:

பாராளமன்றம் தாக்க இந்தியாவே சதி செய்தது! அதற்கு அப்சலை அவருக்கே தெரியாம உபயோகிச்சிடாங்களாம். இந்தியா நீதிமன்றங்கள்(Sessions Courts, High Court, Supreme Court வரை) பொய்வழக்குன்னு தெரிஞ்சும் அப்சலுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்காம்! அப்சல் ஒரு பாவம் இந்திய குடிமகனாம்!

கதையின் கரு: அப்சல் குரு நல்லவனா இருந்தா எப்படி இருக்கும் என்று எண்ணியதன் விழைவு.

கதைக்கு Referrence: அப்சலின் மனைவி எழுதியதாக சொல்லப்படும் கடிதம் என்று சுவனப்ரியன் எழுதிய பதிவு (லக்கிலுக் Googleல தேடினேன்னு சும்மா அள்ளிவிடுறாரு!!) விடுங்க விடுங்க இப்பவெல்லாம் விளம்பரத்துக்கு தானே மதிப்பு, உண்மைக்கு அல்லவே!!!

லக்கி லுக்கின் கதையும் - சில அலசல் & கேள்விகள்:

//டெல்லியில் மருத்துவம் படித்தார். 15 ஆண்டுகளுக்கு முன்னால் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு JKLF (ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி) இயக்கத்தில் இணைந்தார். தீவிரவாதப் பயிற்சிக்காக பாகிஸ்தானுக்கு சென்றவர் அங்கே 2 மாதம் தங்கியிருந்திருக்கிறார்//

பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெறுவது என்பது அரசியல் ஆர்வமா??

//திருந்திய பின்பே அப்சலுக்கு சத்திய சோதனை நேர்ந்தது. காஷ்மீரில் மனம் திருந்திய தீவிரவாதிகளுக்கு அரசு வேலை கிடைக்காது. //

சரனடைந்த தீவிரவாதிகளுக்கு சுமார் ரூ 1.5 லட்சம் Fixed Deposit + ரூ இரண்டாயிரம் பிரதி மாதம் வழங்கப்படுகிறது. ஆதாரம் ட்ரிபூன் இந்தியா. அரசு வேலை மட்டும் தான் வேண்டுமா??!!

//அந்த மிருகத்தின் பணவெறியைத் தணிக்க முடியவில்லை. தன் மனைவியின் நகையை விற்று பணத்தைக் கொடுத்திருக்கிறார். அப்ஸல் புதியதாக வாங்கிய இரு சக்கர வாகனத்தைக் கூட அந்த மிருகம் இரக்கமில்லாமல் பிடுங்கியிருக்கிறது.//

அத்துணையும் அந்த பாதுகாப்பு படை DSP வாங்கிவிட்டால் எப்படி டெல்லி வந்து பொழப்பை நடத்தினார், எப்படி லாப்டாப்(Laptop), கார் வாங்கினார் !!! தாங்க முடியாத பிரச்சனை வரும்போது ஏன் கோர்ட்டுக்கோ அல்லது போலீஸிடமோ ஏன் போய் புகார் செய்யவில்லை!!

//இடம் மாறப்போவதை அறிந்த திராவிந்தர் சிங் அவரை அழைத்து தனக்கு வேண்டிய ஒருவரையும் டெல்லிக்கு உடன் அழைத்துச் செல்லவேண்டும் என மிரட்டியிருக்கிறார். திராவிந்தர் சிங்குக்குக்கு வேண்டிய ஒருவர் தான் முகம்மது. நாடாளுமன்றத் தாக்குதலின் மூளை.//

அப்ப இந்திய அரசே பாராளமன்றத்தை தாக்குவதற்காக முகமதை அனுப்பினார்கள்ன்னு சொல்லறீங்களா?? இல்ல J&K அரசு அனுப்பினாங்கன்னு சொல்லறீங்க?? இல்ல அந்த பாதுகாப்பு படை DSPக்கு தீவிரவாத தொடர்பா??

//இந்த நேரத்தில் அப்ஸலும், காஷ்மீர் அதிரடிப்படை டி.எஸ்.பி. திராவிந்தர் சிங்கும் பலமுறை மொபைல் போனில் பேசியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.//

ஏன் இந்த போனில் பேசிய ஆதரத்தை எடுத்துக்காட்டமுடியுமே. ஏன் அவருடைய வக்கீல் எந்த கோர்டிலும் எடுத்துச்சொல்லவில்லை!!!?? அதிரடியா எழுதினால பாதுகாப்பு படை அதிரடிபடையா மாறாது லக்கிலுக்.

//மனம் விரும்பி அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக எந்த சாட்சியமும் இல்லை. அவர் அழைத்து வந்த முகமது நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபடப்போகிறார் என்று அப்ஸலுக்கு தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.//

எதுக்காக தன் பெயரில் பாராளமன்ற தாக்குதலுக்கு உபயோகப்படுத்திய காரை(DL-03 CJ-1527, purchased by Afzal from Lovely Motors in Karol Bagh, Delhi) வாங்கினார், தெரிய வாய்ப்பே இல்லாமலா கரெக்டா தாக்குதல் துவங்கும் போதும், முடிந்தவுடனும் அப்சல் தன்னுடைய மொபைல்(9811489429) முகமதுக்கு(9810693456) போன் செய்தார் ?? தாக்குதலுக்கு முன் அப்சல் முகமதுக்கு ஏன் பல முறை போன் செய்தார், போதாகுறைக்கு சரியாக ஒரு நிமிடத்துக்கு முன் தாக்குதலில் ஈடுப்பட்ட ஒரு தீவிரவாதி அப்சலுக்கு போன் செய்திருக்கிறார், அதே போல் அப்சலும் அந்த தீவிரவாதியை தன் செல்போனிலிருந்து அழைத்திருக்கிறார்!!! சும்மா டைம் பாஸ்க்கு கால் பண்ணியிருப்பரோ??!! நீதி மன்றத்தில் அவர் இதற்கெல்லாம் பதில் (உண்மையை) சொல்லமுடியாததால் தான் அவருக்கு தூக்கு.

//அந்த மொபைல் போனின் சிம்கார்டே (மொபைல் எண் 9811489429) டிசம்பர் 4ல் தான் வாங்கப்பட்டிருக்கிறது. அதற்கான பில்லும் அப்ஸலின் வசம் இருக்கிறது//

அந்த பில் ஏன் கோர்டில் காண்பிக்கவில்லை!!!?? போன் கால் செய்தற்கான ஆதாரம் சம்மந்தப்பட்ட தனியார் செல் நிறுவனம் தந்தது!!! அவர்களும் பொய் சொல்லறாங்களா? உங்க கதைப்படி அப்சலும் அவர் மனைவியும் மட்டும் தான் உண்மையை சொல்லறவங்க!!! காமெடிக்கு ஒரு அளவுக்கு இருக்கட்டும் லக்கிலுக்.

//அந்த பூச்சுற்றலையும் சந்தோஷமாக நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.//

லக்கி, நீதி மன்றம் ஒன்னும் நீங்க சொல்லறாமாதிரி கோமாளிகள் அல்ல! எல்லா ஆதாரங்களும் அலசி ஆராய்ந்து தான் இந்த முடிவை எடுத்தது. நான் சொல்லறது தவறு என்று நினைத்தான் RTI மூலம் ஆதாரம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்! மூளை சலவை செய்த தீவிரவாதிமாதிரி பேசாதீங்க லக்கி.

//நீதிமன்றத்தில் அப்ஸலின் சார்பாக வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதுமாதிரி நேரத்தில் நீதிமன்றமே குற்றவாளிக்கு ஒரு வக்கீலை நியமிப்பது வழக்கம். அந்த நடைமுறை அப்ஸலின் வழக்கில் மட்டும் மீறப்பட்டது ஏனோ?//

தவறான வாதம் எல்லா கோர்ட்டிலும் அவருக்கு வாதாட வக்கீல் இருந்தார்கள். அப்சல் தரப்பு சொல்லும் வாதம் ராம் ஜெத் மலானி மாதிரி நல்ல கிரிமினல் ... சாரி கிரிமினல் லாயர் கிடைக்கவில்லை என்பது. கீழ் மட்ட கோர்டில் 8 வக்கீல்களை இவர் வாதாட அழைத்தார் ஆனால் யாரும் வாதாடவரவில்லை (சாட்சிகள் எல்லாம் இவருக்கு எதிரா பலமா இருக்கு என்பதால்!!) ... ஆனாலும் ஒரு வக்கீல் நிச்சயமாய் வாதாடினார் என்பது உண்மை!! பின்னர் உயர் நீதி மன்றத்தில் Colin Gonsalves அப்சலுக்குகாக வாதாடினார், Colin Gonsalves நன்றாக வாதாடியதாக் பாராட்டி ராம் ஜெத் மலானி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதி மன்றத்தில் காமினி ஜெய்ஸ்வால் என்ற வக்கீல் வாதாடினார்கள். இந்தனை பேர் முயற்சி செய்தும் நீதி மன்றம் அவரை துக்கிலிட வேண்டும் என்று சொல்கிறது என்றால் அதில் உள்ள உண்மையை பாருங்க சார்?!! சும்ம கோமாளித்தனமா பதிவு போடாதீங்க.

இன்னும் காமெடி என்ன வென்றால் உச்ச நீதி மன்றத்தில் வாதாடிய காமினி ஜெய்ஸ்வால் வாதாடி தோற்றப்பின் சொன்னது இது

“We are not against the verdict, we just find the sentence too harsh,”

அப்படின்ன என்ன அவர் செய்தது தவறுதான், ஆனால் தூக்கில் போடாதீங்க!!!

//தன்னுடைய மொபைல் எண்ணுக்கு காஷ்மீர் மாநில போலிஸ் அதிகாரிகள் பேசியிருக்கிறார்கள் என்று நீதிமன்றத்திலும், போலிஸ் விசாரணையிலும் அப்ஸல் கூறியிருக்கிறார். அதுகுறித்து போலிசார் எந்த விசாரணையும் நடத்தாது ஏன்? விரும்பத்தகாத உண்மைகள் ஏதாகினும் வெளிவந்துவிடப் போகிறது என்பதாலா?//

ஆதாரம் இருப்பின் நிரூப்பிக்கப்பட்டுருக்குமே! சும்ம கட்டுக்கதை மச்சி!!! இங்கு கோர்ட் சர்வாதிகளால் நடத்தப்படுவது இல்லை. 5 நீதிபதிகள் அலசி எடுத்து, ஆராய்ந்து குற்றம் நிரூப்பிக்கப்படுகிறது!! ஆதாரங்கள் நிரூப்பிக்க அனனவருக்கு அவகாசம் கொடுக்கப்படுகிறது.

//அப்சலுக்கு மரணதண்டனை வழங்கிய நீதிமன்றம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மரணதண்டனை விதிக்கிறோம் என்று தீர்ப்பு எழுதியிருக்கிறது.//

இது 100% தவறான கருத்து.

“Circumstances established beyond reasonable doubt that Afzal was a party to the conspiracy and had played an active part in the various acts done in furtherance of the conspiracy”

இந்தியாவின் Constitutional Infrastructure , அதன் முக்கியத்துவம் கருத்தில் கொண்டே மரண தண்டனை வழங்கப்பட்டது.

//ஒருவேளை நான் மரணமடையவேண்டும் என்று இறைவன் விரும்பினால், இறைவனின் தீர்ப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்" என்கிறார் அப்ஸல்.//

தியாகி அப்சல் இப்ப மட்டும் இறைவனின் தீர்ப்பை வேண்டாம் என்கிறாரோ?

//அப்ஸல் இஸ்லாமியர் என்பதால் அவரை தூக்கில் போடவேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. தீவிரவாதத்தை அடக்க இதுதான் சிறந்தவழி என்பது அவர்கள் எண்ணம். தாங்கள் "தேசபக்தி கொண்டவர்கள்" என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்வதை மட்டும் செய்யாத சில தேசியவியாதிகளும் இவர்களோடு சேர்ந்து ஜால்ரா அடித்து வருகின்றனர்.//

தீவிரவாதிகளுக்கு ஜல்லி அடிப்பது மட்டும் நல்லதா!!!! ஹிந்துத்வாவாதி எதற்காக கொடிப்புடிக்கிறார்கள் என்றும் தெரியும். J&K முதலமைச்சர் ஓட்டுக்காக தீர்ப்பை எதிர்க்கிறார் என்றும் தெரியும். அது அவர்கள் விருப்பம்.

ஆனால் ஒரு இந்தியன் என்ற முறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் ஏனெனில் இது போன்ற செயல்களால் நாட்டின் இறையாண்மையில் கைவைத்தால் உயிர் மிஞ்சாது என்று தெரிந்து கொண்டால் தீவிரவாத்தின் தீவிரம் அடங்கும். இது உங்களுக்கு ஜால்ரா என்றால் அதை உங்கள் தேசியப்பற்றை அழகாக எடுத்துச் சொல்கிறது.

பொட்டி பழசு:

அப்சலின் மகன்//இடையில் அப்ஸலின் மரணதண்டனைத் தீர்ப்பால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் அவரது ஏழு வயது மகனும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான் என்பது ஒரு சோகமான பெட்டிச் செய்தி.//

இது அடுத்த ஜனாதிபதியின் கருனையை பெற ஏவப்பட்ட அஸ்திரமாகத்தான் எனக்கு தெறிகிறது. ஒரு சராசரி ஏழு வயது சிறுவனுக்கு தற்கொலை என்றால் என்ன வென்று தெரிவதே பெரியவிசயம், அப்பறம் தானே தற்கொலை முயற்சி.

பி.கு: இந்தியாவின் நீதிமன்றத்தை கேலிகூத்தாக்க இது போன்ற தீவிரவாத ஆதரவாளர்கள் சூப்பர் ஜல்லி அடிக்கலாம், ஆனால் இந்த அறிவுஜீவிகளுக்கு நான் கேட்கும் ஒரே கேள்வி, அப்சலுக்கு ஆயுள் தண்டனை தந்தால், மீண்டும் ஒரு இந்திய விமான IC814 கடத்தல் + 100 பயனிகள் தலைக்கு பதில் அப்சலின் விடுதலை என கோரிக்கை வாராது என்று உங்களால் அடித்து சொல்லமுடியுமா??

Comments

அப்ப இந்திய அரசே பாராளமன்றத்தை தாக்குவதற்காக முகமதை அனுப்பினார்கள்ன்னு சொல்லறீங்களா?? இல்ல J&K அரசு அனுப்பினாங்கன்னு சொல்லறீங்க?? இல்ல அந்த பாதுகாப்பு படை DSPக்கு தீவிரவாத தொடர்பா??

அட, நாங்க 9/11பத்தி எந்தமாதிரி கதையை படமா எடுத்தோமோ அதே கதையை ரீமேக் செய்யறோம். ஒரு கதை நல்லா ஓடினா, அதுக்கு மார்க்கெட் வேல்யூ இருக்குன்னுதானே அர்த்தம்? அந்த கதையை படமா எடுக்கிறது என்ன தப்பு?

9/11ஐ நடத்தியதே அமெரிக்காதான் என்பது ஒரிஜினல் படத்தோட கதை. அதே கதையை கொஞ்சம் உல்ட்டாவாக போட்டு, பாராளுமன்ற தாக்குதலே இந்திய அரஸாங்கம் செய்த ஏமாற்றுவேலை என்று சொல்லுகிறோம்.

உங்களுக்கு பிடிக்கலை என்றால் படம் பார்க்காதீர்கள். ஆனால் இந்தப் படம் மதச்சார்பற்ற தியேட்டரில் என்றென்றும் ஓடும். தியேட்டர் ஓனர்களுக்குத் தேவையானதை நாங்க செய்து கொடுக்கிறோம்.
//ஒரு சராசரி ஏழு வயது சிறுவனுக்கு தற்கொலை என்றால் என்ன வென்று தெரிவதே பெரியவிசயம், அப்பறம் தானே தற்கொலை முயற்சி.
//
5 வயதில் தற்கொலை முயற்சி செய்த ஒரு ஆள் இருக்காருங்க...
We The People said…
//அட, லக்கிலுக் எல்லாம் நெனச்சு வேல மெனக்கெட்டு பதில் எல்லாம் சொல்லிகிட்டு இருக்கீங்க.//

அவருக்காக அல்ல அனானி அவர் விதைக்கும் விஷ செடியை அழிக்கவில்லை என்றால் நாளை தமிழ்நாடும் ஒரு J&Kவாக மாற இது போன்ற பதிவுகள் உரமாக மாறும். உண்மை என்னவென்று அவர் பதிவை பார்த்து, அது உண்மை என்று நினைக்கும் ஒவ்வொரு வலைப்பதிவு வாசகனுக்கும் உண்மையை புரிய வைக்கவே.
We The People said…
//5 வயதில் தற்கொலை முயற்சி செய்த ஒரு ஆள் இருக்காருங்க...//

குழலி யாருங்க அது!!

எத்தனை 5 வயசு??
Anonymous said…
தலீவா,
இது ஒன்னும் எங்க தலைக்கு புதுசு இல்ல..கொஞ்ச நாளைக்கு முன்னால் ஒரு பெண் பதிவாளர் பதிவிலே கூட அவங்கதான் ஒரு பின்னூட்டம் இட்டுருக்காங்கன்னு சொல்லி கடைசில மூக்கு உடைபட்டது எல்லோருக்கும் தெரியும்..

நாங்க எல்லாம் திராவிட பரம்பரை..அப்படித்தான்..இந்த பரம்பரைல அடி வாங்கரதும் குடுக்கரதும் சகஜம் வே..நீங்க எல்லாரும் நல்லவன் சொன்னீங்கனா நாங்க கெட்டவன்னு சொல்லுவோம்..கெட்டவன்னு சொன்னீங்கன்னா நல்லவன்னு சொல்லுவோம்..'பெரிய' பரம்பரையா..ஊருக்கெல்லாம் ஒருவனுக்கு ஒருத்தின்னு சொல்லுவோம்..நாங்க மட்டும் அதிகாரபூர்வமா குறைஞ்ச்து ரெண்டு வச்சுக்குவோம்..அது சாகப் போற வயசானாலும்..அது எல்லாம் பகுத்தறிவு..உங்கள மாதிரி ஆட்கள் கேள்வி எல்லாம் கேட்க கூடாது..மீறி கேட்டீன்ங்க .இருக்கவே இருக்கு..ஆரிய வந்தேறிகள்..இந்து தீவிரவாதி..
இதையும் மீறி என்னுடன் வாதம் செய்ய வந்தீங்க..ஒரு நிமிஷம்..திரு கவனப்பிரியன்..இவர் கிட்ட கேட்டு இந்து மததிலிருக்க அத்தனை வேதம்,அப்புறம் இந்த தேவாரம்,திருவாசம்,அப்புறம் இந்து மதம் சம்பந்த்ப்பட்ட நூல்கள் எந்த மொழில இருந்தாலும் அண்ணன் உடனே எடுத்து அது குர் ஆன் ல யிருந்து எடுத்தது சொல்லுவாரு..எப்படியா இவ்வளவையும் கரைச்சி குடிச்சுராக்காருன்னு கேட்க கூடாது..நாங்க சொல்லற தாமாசு(மன்னிச்சுக்கோங்க உண்மையச் சொல்லிட்டேன்) எல்லாம் அனுபவிக்கனும்..உதாரணத்திற்கு
/இஸ்லாத்துக்கு எந்த மத சர்டிபிகேட்டும் தேவையில்லை. இன்னும் சில வருடங்களில் அமெரிக்காவும், ஐரோப்பாவில் பல நாடுகளும் இஸ்லாமிய குடியரசாக மாறும் காட்சியை நானும் நீங்களும் பார்க்கத்தான் போகிறோம்./
அப்புறம் கடைசியா ஒண்ணு..
இனிமே இந்த மாதிரி பதிவு போடும் போது குறிப்பா இந்த வேதம் சம்பந்தபட்ட மேட்டர் வரும் போது சும்மா அங்கங்கே 1:2,2:3 இப்படி குத்து மதிப்பா போடனும் அப்பத்தானே ஒரு கரைச்சி குடிச்ச effect வரும்..அப்புறம் இதை படிச்சுட்டு தங்கமணி ,சாரு போன்ற வேத வித்துக்கள் வாந்தி எடுத்தால் அதுக்கு காரணம்..மீண்டும் முதல் பத்தியிலிருந்து படிக்கவும்..
Anonymous said…
ஒரு தற்கொலை முயற்சிக்கு சட்டம் வளைகிறது எனில் , அது தொடர்கதை ஆகிவிடும்.
Why அப்சல் ஒரு தீவிரவாதி ?

Just wanted to know your perception

Thanks and Regards,
Asuran
Anonymous said…
மிக நன்றாக அலசி இருக்கிறீர்கள்...குழலி போன்றவர்களுக்கு "" ஒரு 5 வயது குழந்தை தற்கொலைக்கு முயற்ச்சி பண்ணியிருக்கிறது """ என்று பின்னூட்டுவது தவிர வேறு மறுப்பில்லாததலிருந்தே தெரிகிறது சரியான அலசல்தான் என்று...லக்கி எழுதியதன் நோக்கம்தான் தெளிவாக அவரே சொல்லி விட்டரே..நாலு பேரு படிச்சு பின்னூட்டம் போடணும் அதனாலதான்னு...

குழலிக்கு ஒரு கேள்வி.....5 வயசு குழந்தை எதுக்குண்ணா தற்கொலைக்கு முயற்சி பண்ணுச்சு...உங்க பதிவு ஏதாவது படிச்சு பாத்துருக்குமோ ???
Anonymous said…
Why அப்சல் ஒரு தீவிரவாதி ?

அப்சல் is a தீவிரவாதி because he put குண்டு in பாராளுமன்றம்.

Why மனிதனேயம் only applies to தீவிரவாதி's like அப்சல் and not to other people like தனஞ்சை சாட்டர்ஜீ ?
priya said…
very well written article.Nice work we the people.
//ஒரு 5 வயது குழந்தை தற்கொலைக்கு முயற்ச்சி பண்ணியிருக்கிறது """ என்று பின்னூட்டுவது தவிர வேறு மறுப்பில்லாததலிருந்தே தெரிகிறது //
யாரு சொன்னது மறுப்பில்லையென்று, அதான் எழுத வேண்டியதையெல்லாம் எழுதியாச்சி,மேலும் தேசபக்தி பீறிட்டு ஊற்றிக்கொண்டிருக்கும் ஜெய் மாதிரி ஆட்கள் அந்த தேச பக்தியை மற்றவர்கள் மீதும் அடித்து கண்ணை மூடவைக்கும் போது இங்கே பேசி ஒரு புண்ணியமும் இல்லை அதான்...

//குழலிக்கு ஒரு கேள்வி.....5 வயசு குழந்தை எதுக்குண்ணா தற்கொலைக்கு முயற்சி பண்ணுச்சு...//
வீட்டில அடிப்பாங்கன்னு தான், ஆளு யாருன்னு தெரியனுமென்றால் தனி மடல் அனுப்புங்க சொல்றேன்...
//
//உங்க பதிவு ஏதாவது படிச்சு பாத்துருக்குமோ ???
//
என் பதிவை படித்து பலரும் உயிரோடு இருக்கிறார்களே :-)
LuckyLook,Kuzhali,Muthu etc have
no time to read the judgment or
understand the issue.They are
happy with recycling lies and
adding their imagination to that.
Such bloggers get enough support
in tamil blogs because many
bloggers are too biased to
see the reality.You and I
can quote from judgment and
give other references.They
wont even bother to read them
and will repeat the same
cock and bull stories.
Poonga likes such stories
and promotes them.
//அதிலிருந்து தனி வன்னிய நாடு கிடைத்தால் தான் உங்கள் தேசப்பற்று வருமா?//
வாழ்க ஜெய், மீண்டும் மீண்டும் என்னை சாதிய அடையாளத்தில் அடக்க முயலும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்....
We The People said…
குழலி,

//மேலும் தேசபக்தி பீறிட்டு ஊற்றிக்கொண்டிருக்கும் ஜெய் மாதிரி ஆட்கள் அந்த தேச பக்தியை மற்றவர்கள் மீதும் அடித்து கண்ணை மூடவைக்கும் போது இங்கே பேசி ஒரு புண்ணியமும் இல்லை அதான்...//

தேசபக்தியே கண்மூடித்தனம் என்று சொல்லும் குழலி உங்களை போன்றவர்களின் Hidden agenda தனி தமிழ்நாடுதான் என்பது தெரியும்! நாளை தனி தமிழ்நாடு கேட்டு பெற்றுவிட்டாலாவது நாட்டுப்பற்று வருமா?? இல்லை அதிலிருந்து தனி வட மாவட்டங்களை கொண்ட நாடு கிடைத்தாலாவது உங்களுக்கு தேசப்பற்று வருமா? இல்லை இன்னும் மாவட்ட வாரியா நாடு பிரிந்தால் வருமா??

இது போன்ற பிரிவினைவாத சக்தியை வேரோடு அழிப்பது தான் என் தேசப்பற்று.

அது போகட்டும் தாராசிங் தூக்கு தண்டனை கொடுக்கும் போது உங்கள் பதிவு எப்படி இருந்தது. அதற்க்கும் உங்கள் விளக்கம் இது போன்ற சப்பை கட்டாக தான் இருக்குமா??

ஒரு இந்தியனாக என் வாதம் அது(தாராசிங்) ஒரு Rarest of Rare case, இந்தியவின் மதநல்லினக்கத்தை அழிக்க நினைப்பது, இதுவும்(அப்சல்) Rarest of Rare case இந்தியவின் இறையான்மையை அழிக்க நினைப்பது. இரண்டுக்கு தூக்கு தண்டனை சரியே!
//அது போகட்டும் தாராசிங் தூக்கு தண்டனை கொடுக்கும் போது உங்கள் பதிவு எப்படி இருந்தது. //
அப்சலை நான் பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபடவில்லை என்று சொல்லவில்லையே, என்னை பொறுத்தவரை அவன் நேரடியாக அல்லது மறைமுகமாக பங்கேற்றிருப்பான் என்பதை பற்றியெல்லாம் கவலையில்லை, மேலும் அப்சல் நிரபராதி என்றெல்லாம் பேசவேயில்லை, நீங்கள் அப்சல் தீவிரவாதி என்பதோடு நிற்கின்றீர், என்பதிவு அதைத் தாண்டி ஏன் அப்சல் தீவிரவாதி(தேசபக்தர்களுக்கு தீவிரவாதி) ஆனான் என்பதற்கான மாற்றுப்பார்வை, இதை உங்களால் பார்ப்பது முடியாது தான், ஏனெனில் உங்கள் கண்களை மறைத்திருப்பது தேச பக்தி.... கொஞ்சம் என் பதிவை படித்துவிட்டு நீங்கள் பேசலாம், அதே மாதிரி எதற்கெடுத்தாலும் சாதிய அடைப்பில் என்னை அடைக்கும் முயற்சியையும் நீங்கள் முயற்சித்தால் கைவிடமுடியும், அதை விடுத்து எதற்கெடுத்தாலும் சாதிய அடையாளத்தில் அடைப்பதும் விமர்சிப்பவர்களின் பதிவை அரைகுறையாக படித்து குற்றம் சாட்டுவதும் தொடருமானால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
We The People said…
//மீண்டும் மீண்டும் என்னை சாதிய அடையாளத்தில் அடக்க முயலும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.... //

சரி மன்னித்துவிடுங்கள்,விடுங்க அதை எடுத்துவிட்டேன் ஆனால் மறைக்காம சொல்லுங்க, எப்ப தான் உங்களுக்கு தேசிய உணர்வு வரும்??
//நாளை தனி தமிழ்நாடு கேட்டு பெற்றுவிட்டாலாவது நாட்டுப்பற்று வருமா?? இல்லை அதிலிருந்து தனி வட மாவட்டங்களை கொண்ட நாடு கிடைத்தாலாவது உங்களுக்கு தேசப்பற்று வருமா? இல்லை இன்னும் மாவட்ட வாரியா நாடு பிரிந்தால் வருமா??
//
ஏன் இந்தியா என்று பிரிந்தீர்கள், அப்படியே இலங்கை, பர்மா, கீழைநாடுகள் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மாநிலங்களாக இருக்க வேண்டியது தானே?
We The People said…
//ஏன் இந்தியா என்று பிரிந்தீர்கள், அப்படியே இலங்கை, பர்மா, கீழைநாடுகள் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மாநிலங்களாக இருக்க வேண்டியது தானே?//

இது என் கேள்விக்கு பதிலாகாது!!! என் கேள்வி மீண்டும்

நாளை தனி தமிழ்நாடு கேட்டு பெற்றுவிட்டாலாவது நாட்டுப்பற்று வருமா?? இல்லை அதிலிருந்து தனி வட மாவட்டங்களை கொண்ட நாடு கிடைத்தாலாவது உங்களுக்கு தேசப்பற்று வருமா? இல்லை இன்னும் மாவட்ட வாரியா நாடு பிரிந்தால் வருமா??


மறைக்காம சொல்லுங்க, எப்ப தான் உங்களுக்கு தேசிய உணர்வு வரும்??
//எப்ப தான் உங்களுக்கு தேசிய உணர்வு வரும்??
//
தேசபக்தி என்றால் என்ன என்று சொல்லுங்கள் முதலில், அதாவது எந்த இனக்குழு எப்படி அழிந்து போனாலும் சரி, எந்த மொழியின் மீது பெரும்பான்மை மொழி ஆதிக்கம் செலுத்தினாலும் சரி, எவன் கலாச்சாரத்தை எவன் அழித்தாலும் சரி, இந்தியன் என்று சொல்லிக்கொண்டே பம்பாயில் தமிழனை(தமிழன் என்பதற்காக) அடிடா என்றும், பெங்களூரிலே அடிடா என்றும், பீகாரி காரனை பம்பாயில் அடிடா ஆனால் எல்லாம் இந்தியா? இப்படியான போலி தேசியத்தை தான் நீங்கள் தேசப்பற்று என்றால் சத்தியமாக எனக்கு தேசப்பற்று வராது வராது வரவே வராது.
தருமி said…
a well written retaliation. geat. thanks for clearing any trace of dounts from my mind.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரஜையாக இல்லாமல் போக உங்களை தூண்டியது எது? சூரியன் மறையாத சாம்ராஜ்யத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற வேண்டுமென எது தூண்டியது? முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்...
//ஏன் இந்தியா என்று பிரிந்தீர்கள், அப்படியே இலங்கை, பர்மா, கீழைநாடுகள் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மாநிலங்களாக இருக்க வேண்டியது தானே?//

இந்தியா பிரிந்து கொண்டு வரவில்லை அவர்கள் பிரித்துக் கொண்டு போனார்கள். பிரியாமல் இருந்திருந்தால் எல்லாருக்கும் நன்மை விளைந்திருக்கும்.

பாகிஸ்தான் பங்களாதேஷ்களை ஏன் மறந்தீர்கள்.

பிரிந்த இந்த நாடுகளை விட இந்தியா சுபிட்சமாகதான் இருக்கிறது. பிரிந்தவர்கள் தான் ப்ரசனை தருகிறார்கள்
இனி தேசப்பற்று பற்றி பேசுவதற்கு முன் தேசபக்தி என்றால் என்ன என்று சொல்லுங்கள், முதலில் தேசபக்தியை வரையறுங்கள் பிறகு பேசலாம் எதுவென்றாலும்...

இதற்கான வரையறையை சொல்லாமல் நீங்கள் என்ன பேசினாலும் நான் இதற்கான வரையறை உங்களிடமிருந்து வரும்வரை நான் பேசத்தயாரில்லை.
We The People said…
//இப்படியான போலி தேசியத்தை தான் நீங்கள் தேசப்பற்று என்றால் சத்தியமாக எனக்கு தேசப்பற்று வராது வராது வரவே வராது.//

ஒரு வாதத்துக்காக Accepted. அதுக்கு அப்புறம் சண்டைப்போட்டு தனி தமிழ்நாடு வாங்கிட்டீங்கன்னு வச்சுக்குங்க, அட்லீஸ்ட் தனி தமிழ் நாடு மேலயாவது வருமா? இல்ல அப்பவும் வட மாவட்டக்காரங்களை மதுரைல ஓதைக்கராங்க? கன்னியாகுமரில ஓதைக்கறாங்க? எப்படிங்க தேசப்பற்றுவரும்னு கேட்ப்பீங்களா?? இது எங்க வரைக்கும் போகும்ன்னு நினைக்குறீங்க!!??
Anonymous said…
குழலி / Kuzhali said...

//////என் பதிவை படித்து பலரும் உயிரோடு இருக்கிறார்களே :-) ///////

அதுதான் குழலி எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது :)
சீனு said…
//லக்கி எழுதியதன் நோக்கம்தான் தெளிவாக அவரே சொல்லி விட்டரே..நாலு பேரு படிச்சு பின்னூட்டம் போடணும் அதனாலதான்னு...//
"அண்ணே ஒரு விளம்பரம்" அப்படியா?

போற போக்க பாத்தா, தரம் சிங்கை கூட விடுதலை செய்ய சொல்லி ஒரு கருணை மனு போட்டிருக்கலாம் போலிருக்கு இவங்க பன்னுற காமெடிய பாத்து.
Anonymous said…
டேய் மச்சான்களா எல்லாவனும் ஓடிவங்கடா. இன்னைக்கு குழலி மாட்டிகிட்டார்டா.....
Anonymous said…
//இதற்கான வரையறையை சொல்லாமல் நீங்கள் என்ன பேசினாலும் நான் இதற்கான வரையறை உங்களிடமிருந்து வரும்வரை நான் பேசத்தயாரில்லை//

என்ன குழலி சரக்கு தீர்ந்து போச்சா...
இப்படி ஜகா வாங்குற... ஜெய் டெஃப்னிஷன் கொடுத்தா அதுல இருந்து ஆரம்பிக்கலாம்னு நினைக்கிரியா?? நல்ல பொழப்பு தான் போ...
Anonymous said…
//அப்புறம் சண்டைப்போட்டு தனி தமிழ்நாடு வாங்கிட்டீங்கன்னு வச்சுக்குங்க, அட்லீஸ்ட் தனி தமிழ் நாடு மேலயாவது வருமா? இல்ல அப்பவும் வட மாவட்டக்காரங்களை மதுரைல ஓதைக்கராங்க? கன்னியாகுமரில ஓதைக்கறாங்க? எப்படிங்க தேசப்பற்றுவரும்னு கேட்ப்பீங்களா?? இது எங்க வரைக்கும் போகும்ன்னு நினைக்குறீங்க!!??
//

இது ஒரு நல்ல கேள்வி.. இதற்கு குழலி பதில் சொல்லியே ஆகவேண்டும்...

//பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரஜையாக இல்லாமல் போக உங்களை தூண்டியது எது? சூரியன் மறையாத சாம்ராஜ்யத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற வேண்டுமென எது தூண்டியது? முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்... //
பள்ளி கூடத்திற்கு ஒழுங்கா போனதில்லையா??? எலிசெபத் ராணி முடிவு பண்றதுதான் இந்திய மக்களுக்கு கிடைக்கும் என்ற நிலையை மாற்ற தான் ....

இப்போ, நம்மாளு, (வட நாட்டான் கூட இல்லை.. தயாநிதி மாறனும், அன்புமணியும்) நினச்சா மொத்த இந்தியாவிற்கே நினச்சத செய்ய முடியுது.. இதுக்குதான் சுதந்திரம் வாங்குனோம்...

இப்போ கேள்விக்கு பதில் சொல்லு...
ஓகை said…
லக்கிலுக்கின் பதிவுக்கு ஆதாரபூர்வமாக பதில் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு திசை திருப்பும் நோக்கில் போடப்பட்ட பின்னூட்டத்தில் சுலபமாக திசை மாறிவிட்டீர்கள். பதிவின் நோக்கமும் ஆழமும் நீர்த்துப் போக ஏன் விடுகிறீர்கள்?

பதிவுக்கு தொடர்பில்லாததை விட்டு விடுங்கள். உங்கள் ஆதாரங்களுக்கு மறுப்பு ஏதும் இதுவரை யாரும் இங்கு தரவில்லை என்பதே இங்கு பேசப் பட வேண்டிய ஒன்று.

இல்லையா?
//ஒரு வாதத்துக்காக Accepted. அதுக்கு அப்புறம் சண்டைப்போட்டு தனி தமிழ்நாடு வாங்கிட்டீங்கன்னு வச்சுக்குங்க, அட்லீஸ்ட் தனி தமிழ் நாடு மேலயாவது வருமா? இல்ல அப்பவும் வட மாவட்டக்காரங்களை மதுரைல ஓதைக்கராங்க? கன்னியாகுமரில ஓதைக்கறாங்க? எப்படிங்க தேசப்பற்றுவரும்னு கேட்ப்பீங்களா?? இது எங்க வரைக்கும் போகும்ன்னு நினைக்குறீங்க!!??
//
பிரிட்டிஷ்காரன் உதைத்ததை வாங்கிக்கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் குடிமகனாக இருக்க வேண்டியது தானே? என்னத்துக்கு முதல் இந்திய சுதந்திரபோர், லொட்டு லொசுக்கு எல்லாம்?

அது சரி ஜெய் முதலில் உங்கள் வரையறையில் தேசம் என்றால் என்ன? தேசப்பற்று என்றால் என்ன? அதை முதலில் என்போன்றவர்களுக்கு வரையறுங்கள், விளக்குங்கள் பிறகு பேசிக்கொள்ளலாம் மற்றதை.
We The People said…
குழலி,

நான் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்க ப்ளீஸ். என் கேள்விக்கான பதிலை இன்னும் நீங்க சொல்லவில்லை என்பதை குறிப்பிடவிரும்புகிறேன்.

என் கேள்வி மீண்டும்

//நாளை தனி தமிழ்நாடு கேட்டு பெற்றுவிட்டாலாவது நாட்டுப்பற்று வருமா?? இல்லை அதிலிருந்து தனி வட மாவட்டங்களை கொண்ட நாடு கிடைத்தாலாவது உங்களுக்கு தேசப்பற்று வருமா? இல்லை இன்னும் மாவட்ட வாரியா நாடு பிரிந்தால் வருமா??


மறைக்காம சொல்லுங்க, எப்ப தான் உங்களுக்கு தேசிய உணர்வு வரும்?? //

முதல்ல உங்க பதில் அடுத்து என் பார்வையில் தேசப்பற்று சொல்லப்படும்.
//லக்கி, நீதி மன்றம் ஒன்னும் நீங்க சொல்லறாமாதிரி கோமாளிகள் அல்ல!//

ஜெய் அண்ணாத்தே குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு அரஸ்ட் வாரண்ட் கொடுத்த நீதிமன்றம் கோமாளிகள் கூடாரம் இல்ல.... கதாநாயன்களின் பாசறை :-))))))
//முதல்ல உங்க பதில் அடுத்து என் பார்வையில் தேசப்பற்று சொல்லப்படும். //
நீங்கள் தேசப்பற்று என்பது எனக்கு அபத்தமாக தெரியலாம், அதேபோல என்னுடையது உங்களுக்கு அபத்தமாக தெரியலாம், ஆதலால் முதலில் தேசப்பற்று எது என்பதை நீங்கள் வரையறுங்கள், அதிலிருந்து பேசலாம், அதை விடுத்து நீங்கள் ஒரு முனையிலிருந்து பேச நான் வேறு முனையில் இருக்க, இருவருக்கும் ஒரு பொதுப்புரிதல் வர முதலில் சொல்லுங்கள் எதை நீங்கள் தேசப்பற்று என்கிறீர்கள் என்பதை
Anonymous said…
//நீங்கள் தேசப்பற்று என்பது எனக்கு அபத்தமாக தெரியலாம், அதேபோல என்னுடையது உங்களுக்கு அபத்தமாக தெரியலாம், ஆதலால் முதலில் தேசப்பற்று எது என்பதை நீங்கள் வரையறுங்கள், அதிலிருந்து பேசலாம், அதை விடுத்து நீங்கள் ஒரு முனையிலிருந்து பேச நான் வேறு முனையில் இருக்க, இருவருக்கும் ஒரு பொதுப்புரிதல் வர முதலில் சொல்லுங்கள் எதை நீங்கள் தேசப்பற்று என்கிறீர்கள் என்பதை//

கீறல் விழுந்த ரெக்கார்டு....
Anonymous said…
ஏங்க கொளளி,
நீங்க ளக்கிளுக்கோட அல்லக்கையா? டாபிக்க டைவர்ட்டு பண்ரீங்க??
நீங்க வேணா ஒங்க ஊர தனி நாடா பிரிச்சு அதுக்கு ராசாவா இருங்க..என்ன இப்ப???
We The People said…
//குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு அரஸ்ட் வாரண்ட் கொடுத்த நீதிமன்றம் கோமாளிகள் கூடாரம் இல்ல.... கதாநாயன்களின் பாசறை :-))))))//

ஒரு மாவாட்ட நீதிபதி ரூ.40 ஆயிரம் வாங்கிட்டு போட்ட வாரண்ட் போட்டதுக்கு தான் இன்று அவரு ஜெயிலில் சட்டினி ஆயிட்டு இருக்காரு!! ஆனால் அப்சல் விசயத்தில் செஸன்ஸ் முதல் உச்ச நீதிமன்றம் வரை எல்லா நீதிபதிகளும் காசு வாங்கிட்டாங்கன்னு சொல்லவறீங்களா?? ஒரு தனி மனிதன் செய்த தவறு உச்ச நீதிமன்ற நீதிபதிகளை Compare செய்யறது அபத்தம். அப்ப செல் போன் கால் ரெக்கார்ட், அப்சல் வாங்கிய கார் எல்லாம் கட்டுக்கதைகளா? அப்சலே தப்பு செய்யலன்னு சொல்லவில்லை. அவர் தூக்கு வேண்டாம் ஆயுள் தண்டனையா மற்றுங்கள்ன்னு தான் கருணை மனு தான் கொடுத்து இருக்கிறாரு! நீங்க புது புது கதையை கொஞ்சம் நிறுத்துங்க லக்கி.
Anonymous said…
///அது சரி ஜெய் முதலில் உங்கள் வரையறையில் தேசம் என்றால் என்ன? தேசப்பற்று என்றால் என்ன? ///

குழலி, இது டென் மார்க் கொஸ்டின். இதுக்கு நான் பதில் சொல்லமாட்டேன்.

நான் ஒரு மார்க் கொஸ்டினுக்கு தான் ஆன்ஸர் செய்வேன்.

ஏற்கனவே பிராக்டிகல் மார்க் இருக்கு. போப்பா.
We The People said…
குழலி,

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. காலையில் கொஞ்சம் வேலை பழு கூடுதல ஒரு 1 மணி நேரம் பொறுத்துக்கோங்க, இதோ வரேன்!
ரியோ said…
//தேசபக்தி என்றால் என்ன என்று சொல்லுங்கள் முதலில், அதாவது எந்த இனக்குழு எப்படி அழிந்து போனாலும் சரி, எந்த மொழியின் மீது பெரும்பான்மை மொழி ஆதிக்கம் செலுத்தினாலும் சரி, எவன் கலாச்சாரத்தை எவன் அழித்தாலும் சரி, இந்தியன் என்று சொல்லிக்கொண்டே பம்பாயில் தமிழனை(தமிழன் என்பதற்காக) அடிடா என்றும், பெங்களூரிலே அடிடா என்றும், பீகாரி காரனை பம்பாயில் அடிடா ஆனால் எல்லாம் இந்தியா? இப்படியான போலி தேசியத்தை தான் நீங்கள் தேசப்பற்று என்றால் சத்தியமாக எனக்கு தேசப்பற்று வராது வராது வரவே வராது.//

நாம் உள்ளுக்குள் அடித்துக்கொள்வது இருக்கட்டும், முதலில் வெளியே இருந்து ஒருவன் நம்மை அடிக்கிறான், அவனை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டாமா? புல்லுருவி போல இடையில் நீங்கள் அவன் பக்க நியாயங்களை பார்ப்பது ஏன்?

நாளை பம்பாய்க்காரர்கள் தமிழர்களை அடித்தால் அப்போது தமிழர்கள் ஒன்று படுவோம். அல்லது அப்போதும் நீங்கள் அவன் பக்க நியாயங்களைத்தான் பேசிக்கொண்டிருப்பீர்களா??
Anonymous said…
//நீங்க புது புது கதையை கொஞ்சம் நிறுத்துங்க லக்கி.//

கதை, திரக்கதை எழுதுவது எங்களது தார்மீக உரிமை. அதை இந்த வந்தேறிகள் சாதிபேசி, வர்ணாஸ்சிரமம் பேசி அழிக்கபார்க்கின்றனர். அதை எந்த ஒரு திராவிடனும் அனுமதிக்கமாட்டான்.
மிகவும் அவசியமான பதிவு. தமிழ் மணத்தில் நடந்து கொண்டிருக்கும் தீவிரவாத ஆதரவு பதிவுகள் சுய விளம்பரத்தை மட்டுமே கருத்தில் கொண்டவை. அவற்றை ஆதாரத்துடன் மறுதலிக்கும் இத்தகைய பதிவுகள் சம நோக்குடைவர்களிடையே தெளிவு ஏற்படுத்தும். தொடரட்டும் இந்த பணி.
ரியோ said…
//தேசபக்தி என்றால் என்ன என்று சொல்லுங்கள் முதலில்//
இதுதான் தேசப்பற்று. முதலில் நம் குழுவுக்கு ஆதரவாக இல்லாமல் எதிர்க்குழுவுக்கு ஆதரவாக இருப்பதற்குப் பெயர்தான் துரோகம், களைச்செடி, புல்லுருவி என்பன
இந்தியாவுக்கு ஆபத்து என்றால் இந்தியனாக பற்றைக்காட்டுவோம்.
தமிழனுக்கு ஆபத்தென்றால், தமிழனக் தமிழ்ப்பற்றைக் காட்டுவோம்.
இப்போ நீங்கள் காட்டுவது என்ன பற்று?
ரியோ உங்கள் தேசப்பற்று வரையறைக்கு நன்றி, மற்றவர்களிடமிருந்தும் தேசப்பற்று வரையறைகளுக்காக காத்திருக்கின்றேன்...

//நாம் உள்ளுக்குள் அடித்துக்கொள்வது இருக்கட்டும், முதலில் வெளியே இருந்து ஒருவன் நம்மை அடிக்கிறான், அவனை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டாமா?//
அப்சல் இந்திய குடியுரிமை பெற்றவர்தானே? ஒரு சந்தேகத்துக்கு கேட்டேன், அவர் வெளியாள் இல்லையே? அப்போ அவர் வெளியிலிருந்து அடிக்கவில்லையே, உள்ளிருந்து தானே அடித்திருக்கிறார்? இல்லை அப்சல் என்ற முஸ்லீம் பெயர் கேட்டவுடன் வெளியாள் என்று முடிவு செய்துவிட்டீர்களா? ஒரு வேளை இந்திய குடியுரிமை பெற்ற முஸ்லீம்கள் எல்லாம் வெளியாளா உங்கள் பார்வையில்?
We The People நல்ல பதிவு,
என்னுடை சில ஐயங்களைத் தெளிவுபடுத்தியது.
நிறைய பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதால் எண்ணிக்கையை கூட்ட ஒரு பின்னூட்டம்

:-)))))))))))))))
ஒரு வேளை கேப்டன் விஜயகாந்த் தான் ரியோ என்ற பெயரில் இங்கே கமெண்டு போடுகிறாரா?
இந்திய தேசப்பற்று = ஜல்லியடிப்பு தேசபக்திகஞ்சா பேக்டரிகள் = ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்துத்வா இயக்கங்கள்.

பகுத்தறிவு வேலை செய்கிறது!
பகுத்தறிவுப் பகலவன்கள் பாசறையில் குத்திய அரசியல் திரா'விட'ப் பெத்தடினால் உண்மை எது என்பது அவசியமற்றது. அவர்களுக்கு எது நல்லது அதுவே உண்மை!

பின்னூட்டம் தான் பிரதானம் என்று சுயமாய்ச் சுனாமியாய் சுழன்றடித்துச் சிலாக்கியாமாக பார்க்கிறது போதவில்லை என்பதால் கருத்துப்பிழையோடு போட்ட பதிவைப் படித்து உண்மைகளை நிறுவும் இந்தப் பதிவு அவசியமானதே!

வாழ்த்துக்கள் ஜெய்.
//இருவருக்கும் ஒரு பொதுப்புரிதல் வர முதலில் சொல்லுங்கள் எதை நீங்கள் தேசப்பற்று என்கிறீர்கள் என்பதை//

"தேசம்,தேசப்பற்று என்பதெல்லாம் போலி"...இதெல்லாம் மேடையில் பேச நன்றாக இருக்கும்..இதை வைத்துக்கொண்டு தினப்படி வாழமுடியுமா?வேண்டுமானால் நக்சலைட் ஆகலாம்..இரு இனத்திற்குள், இரு மாநிலங்களுக்குள் ஒற்றுமை இல்லையென்றாலும் சகித்துக் கொண்டுதான் வாழ வேண்டும்..தமிழ்நாட்டிற்கும் அதன் எல்லா அண்டை மாநிலங்களுக்கும் ஜீவாதாரப் ப்ரச்னைகள் உள்ளன..அதற்காக பிரிந்து ஓடிவிட்டால் எல்லாம் தீர்ந்து விடுமா?

இவருக்குத் தேவை தத்துவ விளக்கம்..குழலி அவர்களே..தேச வரையறைகளை விடுங்கள்..எந்த இரு மனிதனுக்கும் இடையிலாவது வாழ்க்கை முழுவதும் ஏற்றத்தாழ்வுகளற்ற சுமூக உறவு சாத்தியமா? உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையில் எந்தப் பூசலும் இல்லாத உறவு சாத்தியமா? சில நேரங்களில் நீங்கள் வருந்துவதுபோல அவர்களும், அவர்கள் வருந்துவது போல நீங்களும் நடப்பதே இல்லையா? ஒருவரை ஒருவர் வாழ்வின் சில கணங்களாவது சகித்துக் கொண்டு வாழ முற்படுவதில்லையா?ஏன் அவ்வாறு வாழவேண்டும்? பொருந்தாத உறவுகளை நாம் உடனே முறித்துக்கொண்டு சுதந்திரமாக வாழலாமே?

அப்படியானால் ஒவ்வொரு மனிதனும் இங்கு தனித்தீவாகவே வாழமுடியும்..உங்கள் வெற்று வாதத்தின் கடைசி புள்ளி இதுதான்..குடும்பத்தின் சூப்பர்செட் தானே சமூகம்??

ஆனால் சகித்துக்கொண்டு நரகத்தில் வாழ வேண்டியதில்லை..பிரிந்துவிடலாம்..காஷ்மீர் நிலைமை அப்படியல்ல..அங்கு பெரும்பாலான ப்ரச்னை மதவெறி,பொறாமை,கொழுப்பெடுத்த பாகிஸ்தான் அனுப்பும் ஜிகாதி ஆடுகள், மற்றும் அவன் இஸ்லாமியன் என்பதற்காக அவனை அரவணைத்து அவனை தீவிரவாதம் செய்ய அனுமதிக்கும்/துணைபோகும் மூளைச்சலவை செய்யப்பட்ட சில,பல முஸ்லீம்கள் (அப்சல் போல)..அவனைத் தண்டித்தல் அவசியம்..

மற்றபடி யோசியுங்கள்...காஷ்மீரின் இன்றைய நிலைக்கு இந்திய அரசா காரணம்?அரசு அரசியல் காரணங்களுக்காவது அவர்களை எவ்வளவோ அரவணைத்துப் போகிறது...மற்றபடி எல்லைக்கு அப்பால்/உள்ளே உள்ள மதவெறி பிடித்த முஸ்லிம்களே அதன் இன்றைய இழிநிலைக்குக் காரணம்..கொழுப்பெடுத்தவன் நம் நாட்டின் எல்லைப்பரப்பை/வளங்களை பிரித்தெடுத்துப் போக ஏன் அனுமதிக்க வேண்டும்?அவன் அங்கு காலகாலமாக வாழ்ந்தவன் அவனுக்கு உரிமை உண்டு என்றால், காஷ்மீரில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட, கொன்று குவிக்கப்பட்ட லட்சக்கணக்கான இந்துக்கள்?அவன் அங்கு வாழ இன்றும் விரும்புகிறானே? திமிரெடுத்த தீவிரவாதிக்காக நாட்டைக்கூட பிரிக்கலாம் என்று சொல்லும் உங்களில் எந்த நாதியாவது உள்ளதா அவர்களைப் பற்றிப் பேச?
Anonymous said…
//எவனோ ஒரு பன்னாடை நாதியத்துப்போய் போட்டுக்கினு இருக்க பின்னூட்டங்களை எல்லாம் வெளியிட்டுக்கினிருக்கீங்க//
அப்ப ஒங்க பதிவுகள்ள அடுத்தவய்ங்கள நக்கல் வுட்டு பின்னூட்டம் போடுங்களே..அதையும் ஒன்னுந்தெரியாதமாரி நீங்களும் அனுமதிப்பீங்களே..அதெல்லாம் எதுங்க?..ஒங்களுக்குத் தெரிஞ்ச நாதியுள்ள பன்னாடைகளா??!!

ஹி..ஹி..சும்மா தெரிஞ்சிக்கலாம்னுதான்...
Anonymous said…
//ஒரு வேளை கேப்டன் விஜயகாந்த் தான் ரியோ என்ற பெயரில் இங்கே கமெண்டு போடுகிறாரா?//

ஒருவேளை "பிளாஸ்லைட்பேக்கர் தாயாநிதிதான"் luckylookஆ கமெண்டு போடுகிறாரா?
Anonymous said…
மேற்கண்ட 2 அனானி கமெண்டுகளைப் போட்ட அண்ணன் ஜெய்சங்கர் வாழ்க
Anonymous said…
//மேற்கண்ட 2 அனானி கமெண்டுகளைப் போட்ட அண்ணன் ஜெய்சங்கர் வாழ்க//

யேவ் லூக்ல அடிக்குறத கோசம்த(அண்ணன் ஜெய்சங்கர் வாழ்க) இங்க வந்து பழக்கதோசத்துல போடாதியா..
ரியோ said…
//அப்சல் இந்திய குடியுரிமை பெற்றவர்தானே? ஒரு சந்தேகத்துக்கு கேட்டேன், அவர் வெளியாள் இல்லையே? அப்போ அவர் வெளியிலிருந்து அடிக்கவில்லையே, உள்ளிருந்து தானே அடித்திருக்கிறார்? இல்லை அப்சல் என்ற முஸ்லீம் பெயர் கேட்டவுடன் வெளியாள் என்று முடிவு செய்துவிட்டீர்களா? ஒரு வேளை இந்திய குடியுரிமை பெற்ற முஸ்லீம்கள் எல்லாம் வெளியாளா உங்கள் பார்வையில்?//

நம் எதிரி வெளிநாட்டில் மட்டும் இருக்க மாட்டான். அப்சல் போன்ற வெளிநாட்டு கைக்கூலிகளும் நமக்கு எதிர்கள்தான். பாராளுமன்றத்தை தாக்குபவர்கள் உஙக்ள் நண்பனா?
இதில் ஏன் மதத்தை இழுக்கிறீர்கள்?

//ஒரு வேளை கேப்டன் விஜயகாந்த் தான் ரியோ என்ற பெயரில் இங்கே கமெண்டு போடுகிறாரா? //
அப்சல் பிரச்சனையில் விஜயகாந்த் எங்கிருந்து வந்தார்? கள்ள ஓட்டுக்கு எதிராக அதிமுக வுடன் சேர்ந்து போராடியதால் அவர் மீதும் கோபமா லக்கி? :-)
Anonymous said…
இப்படி சொல்லி இருக்கும் சனியன் எங்கிருந்தாலும் வாழ்க...5 நிமிடம் தொடர்ந்து சிரிக்க வைத்துவிட்டது...

சனியனா? அது ஒங்க தல போலியார்..அவர்தான் புடிச்சார்னா ஏழரை வருஷம் ..வுடவே மாட்டார்...
We The People said…
இந்த பதிவு லக்கிலுக்கை தாக்க அல்ல அவர் எடுத்து வைக்கும் வாதங்களும் கதைகளும் தவறு என்று எடுத்து சொல்லத்தான். இங்கு தனி மனித தாக்குதல்கள் தவிர்ப்பது நல்லது! அது போன்ற பின்னூட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

//மேற்கண்ட 2 அனானி கமெண்டுகளைப் போட்ட அண்ணன் ஜெய்சங்கர் வாழ்க //

நான் அரசியல்வாதியும் அல்ல, அரசியல் கட்சியும் நடத்தவில்லை, அதனால் எனக்கு லாரியில் ஆட்களை கொண்டுவந்து பின்னூட்டம் இட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு தவறான கருத்தும், உண்மைக்கு மாறான பதிவுகள் வரும் போது, அது தவறு என்று சுட்டிக்காட்டவே இந்த பதிவு.

மேலே உள்ள பின்னூட்டங்களில் ஏதேனும் தனி மனித தாக்குதல் உள்ளதாக யார் நினைத்தாலும் எனக்கு மின்னஞ்சல் செயாலாம். அதனை எடுக்க நான் தயார்.
/**********************************
மீண்டும் ஒரு இந்திய விமான IC814 கடத்தல் + 100 பயனிகள் தலைக்கு பதில் அப்சலின் விடுதலை என கோரிக்கை வாராது என்று உங்களால் அடித்து சொல்லமுடியுமா??
**********************************/

சரியான கேள்வி,
மனிதாபிமானம் பேசி விளம்பரம் தேடுபவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்.
//மீண்டும் ஒரு இந்திய விமான IC814 கடத்தல் + 100 பயனிகள் தலைக்கு பதில் அப்சலின் விடுதலை என கோரிக்கை வாராது என்று உங்களால் அடித்து சொல்லமுடியுமா??//

அப்சலை தூக்கில் போட்டு விட்டால் மட்டும் மீண்டும் ஒரு விமானம் கடத்தப்படாது என்று உங்களால் அடித்து சொல்ல முடியுமா?

தேசிய ஜல்லிகளின் காமெடி தாங்கலப்பா...... :-)))))))
//நான் அரசியல்வாதியும் அல்ல, அரசியல் கட்சியும் நடத்தவில்லை, அதனால் எனக்கு லாரியில் ஆட்களை கொண்டுவந்து பின்னூட்டம் இட வேண்டிய அவசியம் இல்லை.//

அப்படிங்களாண்ணா.... காலையிலே போட்டீங்களே மூட்டை மூட்டையாய் கமெண்டு... அதெல்லாம் உங்களுக்கு அவசியமேயில்லாம யாராவது போட்டுட்டாங்களாண்ணா....

எதுக்கு சார் எப்ப பார்த்தாலும் நல்லவன் வேஷமே போடுறீங்க. உங்க ஒரிஜினல் கேரக்டர் என்னவோ அதை காமிச்சுட்டு போங்களேன்.... :-))))
Anonymous said…
//அப்சலை தூக்கில் போட்டு விட்டால் மட்டும் மீண்டும் ஒரு விமானம் கடத்தப்படாது என்று உங்களால் அடித்து சொல்ல முடியுமா?//

சரியான கேள்வி,
தேசியம் பேசி விளம்பரம் தேடுபவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்.
We The People said…
//அப்சலை தூக்கில் போட்டு விட்டால் மட்டும் மீண்டும் ஒரு விமானம் கடத்தப்படாது என்று உங்களால் அடித்து சொல்ல முடியுமா?//

அனால் அப்சலுக்காக கடத்தப்பட மாட்டாது என்பது நிச்சயம் தானே லக்கி!

//தேசிய ஜல்லிகளின் காமெடி தாங்கலப்பா...... :-)))))))//

உங்களுக்கு தேசியம் ஜல்லியடியாத்தான் தெரியுது. அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்.

தூங்குபவனை எழுப்பலாம்; தூங்கற மாதிரி நடிப்பவனை எழுப்புவது கஷ்டம் தான் லக்கி.
Anonymous said…
//அப்சலை தூக்கில் போட்டு விட்டால் மட்டும் மீண்டும் ஒரு விமானம் கடத்தப்படாது என்று உங்களால் அடித்து சொல்ல முடியுமா?//

சரி..ஒங்க ரேஞ்சுக்கு எறங்கிற வேண்டியதுதான்..நேத்து எங்க ஏரியாவுல ஒரு திருடன் மாட்டிக்கிட்டான்..அவன ஒத,ஒதன்னு ஒதச்சு போலீஸ் லாக்கப்-ல போட்டாங்க..அவன ஒதக்கிறதுனாலயோ, ஜெயில்ல போடுரதுனாலயோ, திருட்டு நிக்கப்போறதில்ல..அவன அப்டியே உட்டுருவமா? ஒளறலுக்கு ஒரு அளவே இல்லையாப்பா :):):):)
We The People said…
//அப்படிங்களாண்ணா.... காலையிலே போட்டீங்களே மூட்டை மூட்டையாய் கமெண்டு... அதெல்லாம் உங்களுக்கு அவசியமேயில்லாம யாராவது போட்டுட்டாங்களாண்ணா....//

என் சவால்! நான் ஒரே ஒரு அனானியா இந்த பதிவில் பின்னூட்டம் போட்டதாக நிரூபித்தால் (ஏதோ புலிக்குட்டி சோதனை, பூனைக்குட்டி சோதனைன்னு சொல்லறாங்களே அதை வைத்து பார்த்து சொல்லுங்க), நான் பதிவு போடுவதையும், போட்ட பதிவுகளையும் எடுத்துவிடுகிறேன்.
Anonymous said…
//அப்படிங்களாண்ணா.... காலையிலே போட்டீங்களே மூட்டை மூட்டையாய் கமெண்டு... அதெல்லாம் உங்களுக்கு அவசியமேயில்லாம யாராவது போட்டுட்டாங்களாண்ணா....//

அண்ணே..நம்ம சங்கத்துல இருந்து கூலிக்கு இன்னைக்கி யாரும் போகலண்ணெ..இது உண்மையான அனானிக..

அனானி கூலி.
Anonymous said…
//என் சவால்! நான் ஒரே ஒரு அனானியா இந்த பதிவில் பின்னூட்டம் போட்டதாக நிரூபித்தால் (ஏதோ புலிக்குட்டி சோதனை, பூனைக்குட்டி சோதனைன்னு சொல்லறாங்களே அதை வைத்து பார்த்து சொல்லுங்க), நான் பதிவு போடுவதையும், போட்ட பதிவுகளையும் எடுத்துவிடுகிறேன்.//

பாழாப்போன Bloggerல அந்த மாதிரி நிரூபிக்க முடியாதுங்கறதால தானே சவால் உடறீங்க. இந்த ஆட்டம் ஆடறீங்க.
Anonymous said…
//சரி..ஒங்க ரேஞ்சுக்கு எறங்கிற வேண்டியதுதான்..நேத்து எங்க ஏரியாவுல ஒரு திருடன் மாட்டிக்கிட்டான்..அவன ஒத,ஒதன்னு ஒதச்சு போலீஸ் லாக்கப்-ல போட்டாங்க..அவன ஒதக்கிறதுனாலயோ, ஜெயில்ல போடுரதுனாலயோ, திருட்டு நிக்கப்போறதில்ல..அவன அப்டியே உட்டுருவமா? //

அவனை அப்படியே உடாம தூக்குல போட்டுருவோம் :-)))))


உளறதுன்னு ஆரம்பிச்சாச்சி... அடிச்சி ஆடுங்க...
அசுரன்:
Why அப்சல் ஒரு தீவிரவாதி ?

An Reply:
அப்சல் is a தீவிரவாதி because he put குண்டு in பாராளுமன்றம்.


அசுரன்:
Then what is the difference between Bhagat sing and அப்சல்?


****
Mind you, I didn't say whether I support அப்சல் or not. So, don't rush to conclusions.

அசுரன்
Anonymous said…
காசுக்கேத்த தோச..இது எப்டின்னா:
திருட்டுக்கு அடி,ஒத..மர்டர்,ரேப்புக்கு ஆயுள்..குண்டுவச்சு மக்கள கொன்னா,பாராளுமன்றத்துல பூந்து அட்டாக் பண்ணி நாட்டையே கேலிக்கூத்தாக்குனா தூக்கு...புரியுதுங்களா?

ஒளறலுக்கு பதில் சொல்லுறதுன்னு ஆச்சி..வா நைனா பாத்துருவோம்..
Anonymous said…
//தேசிய ஜல்லிகளின் காமெடி தாங்கலப்பா...... :-)))))))//

இவனுங்க முற்போக்குகொள்கை ஜல்லியவிடவா?...

கடவுளே கிடையாதாம்.. ஆனா ஓட்டுக்கு அடிக்குற ஜல்லி....


அய்யா சாமிங்களா எனக்கு் எந்த கடவுளும், மதம் மேலயும் நம்பிக்கைகிடையாதுயா.
அப்புறம் இது ஒரு உண்மையான் அனானி போட்ட கமென்ட் ரொம்ப சந்தேகமுனா மெல நான் போட்ட கமென்டையும் mailid தருகிறேன்.
Anonymous said…
இவனுங்க தலைவனுங்க ஓட்டுக்கு அடிக்கிற ஜல்லியும்,எடுக்கிற பிச்சையும் இருக்கே..அப்பப்பா..மங்களமா துண்டு போட்டுக்குவான்..ஆனா சாமி கும்புடுறதில்லேம்பான்..இவன் பொண்டாட்டி சாமி கும்புட்டா ஒண்ணும் சொல்ல சொல்லமாட்டான்..
கட்சிக்காரன் குங்குமம் வச்சா "கழகத்தின் கறைகளில் ஒன்று" அப்டிம்பான்..ஸ்பெசல் அய்ட்டம் "மதச்சார்பற்ற" ஜல்லி..முஸ்லிம்க ரம்ஜான் நோம்பு திறக்கறப்போ நைசா கூட்டத்துக்குள்ள பூந்து குல்லா போட்டுகிட்டு, கைல நோம்புக் கஞ்சிய வச்சுகிட்டு என்னமோ பரம்பர "பாய்" மாதிரி போஸ் குடுப்பான்..இந்த ஜல்லிக்கூட்டம்தான் இப்போ மரணதண்டன ஜல்லி அடிக்கக் கெளம்பி இருக்குதுக...
We The People said…
குழலி,

தேசியம் என் பார்வையில்:

ஒற்றுமையாய் இந்தியா என்னும் ஒரு குடைக்கு கீழே மத, இன, மொழி பாகுபாடின்றி வாழ நினைப்பதே தேசியம்! இந்த கூட்டமைப்பை அழிக்க நினைப்பவன் எவனாக இருந்தாலும், அவன் இந்தியன் என்ன Labelலில் இருந்தாலும் ஒழிப்பதே என் தேசப்பற்று.

நான் படித்து, உணர்ந்து பின்பற்றுவது:

ஒன்றுபட்டால உண்டு வாழ்வு; ஓற்றுமை நீங்கின் அனைவர்க்கும் சாவு.

இந்த கூட்டமைப்பு இல்லாம போனதால் தான் அன்று ஆங்கிலேயன் நம்மை எளிதாக, கொஞ்சம் கொஞ்சமா நம்ம இந்தியாவை பிடிச்சாங்க.
Anonymous said…
எதிர்க்கோஷ்டி தாக்குப்புடிக்க முடியாம எஸ்கேப் ஆயிருச்சி..ஆனாலும் ஒரு தம் புடிச்சு இழுத்தம்னா நூறு போட்றலாம்..விட்றாதீய நல்ல சான்சு..

எழுவத்திமூணு.
Anonymous said…
முற்போக்குகொள்கைகாரனுங்க புறமுதிகிட்டு ஓடிட்டானுங்க. எனக்கு என்னமோ திரும்பி வரமாட்டானுங்கதான் தோனுது.
Anonymous said…
//"Terrorist Dont have Caste, Religion & Citizenship"//

wrong
"Terrorist Nerer have Caste, Religion & Citizenship"
"Terrorist Dont leave other Religion & Citizenship"
Anonymous said…
///முற்போக்குகொள்கைகாரனுங்க புறமுதிகிட்டு ஓடிட்டானுங்க. எனக்கு என்னமோ திரும்பி வரமாட்டானுங்கதான் தோனுது. ///

முற்போக்கு கொள்ளை என்று மாற்றவும்.
Anonymous said…
இப்போது தொப்புளில் பம்பரம் விட்டவர் திராவிடராகிவிட்டார். அவர் தமிழ் என்று முழுதாக ஒருமுறை சொன்னால் அவருக்கு தான் ஓட்டு.
Anonymous said…
//படித்து தெறிந்து கொள்ளுங்கள்//

நீங்கள் முதலில் எழுதுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த றி, தெறித்து ஓடும்போது போடுவது.
வாதம் செய்தால் விடை கிடைக்கும்,
விதண்டா வாதம் செய்தால். . . . .

இவர்களிடம் பேசிப் பயனில்லை. . . .


நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களை மட்டும் கணக்கில் கொள்ளக் கூடாது, நடந்த தாக்குதலில் பிரதமரோ, ஜனாதிபதியோ மரணம்டைந்திருந்தால். இவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்.

அப்துல் கலாம் போன்ற ஒருவரை இழந்திருந்தால் . . . .
Anonymous said…
//அப்துல் கலாம் போன்ற ஒருவரை இழந்திருந்தால் . . . .//

என்னங்க.. ஏற்கனவே எஸ்கேப் ஆயிட்டாங்க..நீங்க வேற சீரியசான கேள்வியா கேட்டு பீதிய கெளப்புறீங்க..
We The People said…
//அப்சல் இந்திய குடியுரிமை பெற்றவர்தானே? ஒரு சந்தேகத்துக்கு கேட்டேன், அவர் வெளியாள் இல்லையே? அப்போ அவர் வெளியிலிருந்து அடிக்கவில்லையே, உள்ளிருந்து தானே அடித்திருக்கிறார்? இல்லை அப்சல் என்ற முஸ்லீம் பெயர் கேட்டவுடன் வெளியாள் என்று முடிவு செய்துவிட்டீர்களா? ஒரு வேளை இந்திய குடியுரிமை பெற்ற முஸ்லீம்கள் எல்லாம் வெளியாளா உங்கள் பார்வையில்?//

அப்சல் என்னைக்கு உண்டவீட்டுக்கு தீயது நினைத்து தீவிரவாத பயிற்சிக்கு பாகிஸ்தான் போனானோ அன்று அவன் இந்தியன் என்ற Labelல இழந்துவிட்டான் குழலி. J&K நான் போர்ரெடுத்தோ, Infilter செய்தோ ஆக்கிரமிக்கவில்லை! J&K பாகிஸ்தானின் அராஜங்கள் தாளமுடியாமல் தன்னை இந்தியவுடன் இணைந்து கொண்டது. இந்த சுட்டியை படித்து தெரிந்து கொள்ளுங்கள். அதுவும் ஒரு சாதரண மாநிலமாக அல்லாமல் State with Maximum Autonomy and Special Status.

"Terrorist Dont have Caste, Religion & Citizenship
Anonymous said…
//ராஜ் said...

புதுச்சுவடி என்பவரின் பின்னூட்டம் அர்த்தமுள்ளது.

பாதுகாப்புப் படை வீரர்களைப் போல உடை அணிந்து, பாதுகாப்புப் படை வாகனத்தில் தீவிரவாதிகள் வந்தாக அன்றைய அரசு கூறியது. உடைகளையும் வாகனங்களையும் வழங்கியோர் சட்டத்தின் பிடியில் சிக்கினரா? அவர்கள் யார்? என்ன தண்டனை பெற்றனர்?

தேசிய ஜல்லியை ஒட்டு மொத்த குத்தகை வைத்திருக்கும் ரவி முதல் சீனு வரை (இடையில் 'ஜெய்' என்று கத்துபவர்கள் உட்பட) இதற்கு முதலில் பதில் சொல்லிவிட்டால் அப்ஸல் விவகாரமும் தெளிவாகிவிடும். //
இப்படி ஒருத்தரு லக்கிலூக் பதிவுல பின்னூட்டம் இட்டிருக்கிறார்.

அவருக்கு தெரியா வண்டி யாரு வாங்கி குடுத்ததுனு கோர்ட்டுல சொன்னது. அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறாரா?
Anonymous said…
விவாதத்திற்குரிய அதே சமயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல பதிவு

//5 வயதில் தற்கொலை முயற்சி செய்த ஒரு ஆள் இருக்காருங்க...//

யாரு குழலியா?

சாவு என்றால் என்ன என்றே தெரியாத வயதிலேயேவா?

திமுக பூத் ஏஜென்ட் (Taமில் காவலன்) லக்கிக்கெல்லாம் புரியவைக்க இந்த பதிவு போதுமா என்று தெரியவில்லை.
வஜ்ரா said…
//
அவர் தமிழ் என்று முழுதாக ஒருமுறை சொன்னால் அவருக்கு தான் ஓட்டு.
//

இந்த மாதிரி தமிழ் ன்னு முழுசா சொன்னவன், முக்காவாசி சொன்னவனுக்கெல்லா ஓட்டு குத்தித் தான் 40 வருஷமா நாறிகிட்டு இருக்கு...திராவிட அரசியல் என்ற பெயரில்.
வஜ்ரா said…
//
அப்துல் கலாம் போன்ற ஒருவரை இழந்திருந்தால் . . . .
//

ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களை தூக்கில் போட்டே ஆகவேண்டும் என்று சொன்ன The Hindu அப்சலை தூக்கில் போடக்கூடாது என்கிறது. தனித் தமிழ்நாடு தவறு என்று உணர்ந்த Hindu நாளிதள் எப்போது தனி கஷ்மீர் தவறு என்று உணருமோ? அதற்கு நாம் ஒரு அப்துல் கலாமை இழக்கவேண்டுமா? அல்லது The Hindu வை ஒதுக்கிவிடலாமா?

(இதை தமிழ்சசியும் சுட்டியுள்ளார் அவர் தூக்கு தண்டனை பதிவில்)

இன்றய கம்யூனிஸ்டுகளும், Separatist அமைப்பின் தலைவர்களும் பெட்ரோ டாலருக்கு என்னவேண்டுமென்றாலும் சொல்லக் கூடிய "Rent a cause celebrity" அருந்ததி ராய் போன்றவர்களின் மூளையின் அடிப்படையில் இயங்குவது, முதலில் அவர்கள் "போராடும்" மக்களுக்கே நல்லதல்ல. அப்புறம் மிகக் கேவலமாக இருக்கிறது.

I think we can rent a commie to tell what we want to tell. Throw a freaking bone they will come wagging the tails. Look at our own communists, They do PR work for Chinese companies. Want Afzal guru released unconditionally and given a pack of chicken biryani and an A/C car and a safe passage to Islamabad with Z grade security. So, that the person responsible for killing the "masses" for whome these "proletariats" are fighting for, can live a happy and peaceful life which he somuch deserves than the "massses".

இதில் தேசீயம் என்றால் என்ன, அதைச்சொன்னால் தான் என்னால் வேறு சொல்ல முடியும் என்று தேஞ்சு போன ரிக்கார்டாக ரெடிமேட் ஆன்சர் ஒண்ணு. ஆயிரம் பேர் ஆயிரம் விதமா ஆயிரம் தடவை அந்த ஆளுக்கு தேசீயம் என்றால் என்ன என்று விளக்கியிருப்பார்கள். இன்னும் வெளங்கல்லன்னா மூளைக்குபதிலா களிமண்தான் அந்த இடத்தில் இருப்பதாக எண்ணத்தோன்றும்.

ஜெய்,

தனிப்பட்ட கேள்வி, லக்கி லுக் சொல்றதுல எல்லா உண்மை இருக்கு, பொய் இருக்குன்னு பதிவு போட்டுச் சொல்லணுமா... அவரு எத்தப் படிக்கணுமோ அத வுட்டுபோட்டு கற்பனை குதிரையை கண்படி ஓட்டித் திரியுறாரு... இதுக்கெல்லாம் வெளக்கம் கொடுத்து கொடுத்து கீ போர்டு தேயுறது தான் மிச்சம்...
We The People said…
வஜ்ரா,

//இதுக்கெல்லாம் வெளக்கம் கொடுத்து கொடுத்து கீ போர்டு தேயுறது தான் மிச்சம்... //

இதற்கான பதில் நான் பின்னூட்டமாக இட்டுள்ளேன்.

என் வாதம் சரி என்று சொன்னவர்களுக்கு, என்னுடன் தவறு என்று வாதிட்டவர்களுக்கு நன்றி.

குழலி ஏன் திரும்ப வரவேயில்லை என்று புரியவில்லை??!!! என் வாதம் சரி என்று ஏற்றுக்கொண்டார் என்று தான் தோன்றுகிறது :)))))))
//குழலி ஏன் திரும்ப வரவேயில்லை என்று புரியவில்லை??!!!
//
சொல்லி சில மணிநேரங்கள் தானே ஆகின்றது, ஏனென்றால் இதையும் விட குழலிக்கு வேறு முக்கிய வேலை இருக்கலாம் அல்லவா?

//தேசியம் என் பார்வையில்:

ஒற்றுமையாய் இந்தியா என்னும் ஒரு குடைக்கு கீழே மத, இன, மொழி பாகுபாடின்றி வாழ நினைப்பதே தேசியம்!//
அதாவது நினைக்கிறது மட்டும் தான் தேசியமா?

சரி நீங்க நினைக்கிற மாதிரியா இருக்கு இந்திய தேசியம், நெஞ்சைத்தொட்டு சொல்லுங்க...

உங்களுக்கு நினைப்பு மட்டும் போதும் போல... சரி உங்க நினைப்புக்கு மாறாக இருக்கிற இந்திய தேசியத்தை என்ன செய்யலாம்...

சே... உங்ககிட்ட கேட்டேன் பாருங்க அது தான் நீங்க ஏற்கனவே சொல்லிட்டிங்களே.... இங்கே இலங்கைக்கானது தானே இந்தியாவிற்கும், அந்த பின்னூட்டம் இங்கே மற்றவர்கள் பார்வைக்கும், ஈழம் பற்றிய ஒரு கவிதைக்கு நீங்கள் எழுதியது
////

உன் உதிரமும்
உயிரை உலுக்குதேடா
//

இதற்கு முடிவில்லை குழலி.

இருவரையும் ஒன்று சேர்க்க பாலமில்லை. அவர்களுக்கு கூட்டாய் வாழ எண்ணமும் இல்லை.

இது ஒரு இனத்தின் அழிவிலே தான் அடங்கும் என்றே என்க்கு தோன்றுகிறது!

இது ரத்தவெறி யுகம்!!!
//
அதாவது கூட்டமைப்பிலே அடங்கி ஒடுங்கி வாழ்வெதென்றால் வாழ் இல்லையென்றால் ஒரு இனம் அழிந்து அடங்கட்டும் ஆனால் பிரிந்து மட்டும் வாழமுடியாது, என்ன எழவுங்க இது?

சரி நேராவே கேட்குறேன் நீங்க நினைப்பது மாதிரியான இந்தியா என்னும் ஒரு குடைக்கு கீழே மத, இன, மொழி பாகுபாடின்றி தான் இந்திய தேசியம் இருக்கின்றதா? அப்படியில்லாத இந்தியாவில் என்ன செய்யலாம், ஈழத்துக்கு சொன்னிங்களே அந்த மாதிரி ஏதாவது ஒரு இனத்தின் அழிவில் தான் முடியும் என்று நினைக்கிறீர்களா?

அப்புறம் ஆன்னா ஊன்னா இந்திய ஊடகங்களில் வலைப்பக்கங்களிலிருந்து ஆதாரங்களை அள்ளிதெளிக்கின்றீர், இது எப்படித்தெரியுமா? பெரியார்தாசன் ஒரு பேச்சில் கிண்டலடித்திருப்பார், ஒரு கிறுத்துவர்அவரிடம் பிரசங்கம் செய்தபோது பெரியார்தாசன் அவரிடம் இதை எப்படி நம்புவது என்று கேட்டாராம் அதான் பைபிள்ல போட்டிருக்கேன்னாராம், சரி பைபிளை எப்படி நம்புறது அப்படின்னதுக்கு சொன்னாராம், பைபிள் தான் எல்லாம், அதனால் பைபிளை நம்பு அப்படின்னாராம்... அது போல ஆன்னா ஊன்னா இந்திய ஊடக காஷ்மீரக்கட்டுகதைகளை அள்ளிவிட்டுகொண்டிக்காதீர், கூகிளில் தேடினால் எத்தனையோ கிடைக்கின்றது, இந்தியா காஷ்மீர பிரச்சினையில் செய்த அய்யோக்கியத்தனங்கள் உட்பட, நீங்களும் அந்த கிறுத்தவர் போல, அவருக்கு பைபிள் என்றால் உங்களுக்கு இந்திய ஊடகங்கள்... முதலில் கண்மூடித்தனமான இந்திய பற்றை கொஞ்ச நேரம் தள்ளிவைத்துவிட்டு யோசியுங்கள், இல்லையென்றால் உங்களின் இந்திய பைபிளையே கட்டிக்கொண்டு இருங்கள்...
Anonymous said…
//அதாவது கூட்டமைப்பிலே அடங்கி ஒடுங்கி வாழ்வெதென்றால் வாழ் இல்லையென்றால் ஒரு இனம் அழிந்து அடங்கட்டும் ஆனால் பிரிந்து மட்டும் வாழமுடியாது, என்ன எழவுங்க இது?//

ஒற்றுமை என்பதை தாங்கள் இவ்வாறாக எடுத்துக்கொண்டால் அது தங்களின் மடத்தனம்.

தங்களுக்கு சரியாக புரியும்படி சொல்வதினில்
கூட இருந்து குழி பறிக்காதே.
நெஞ்சில் குத்து, ஆனால் முதுகில் குத்தாதே.
உங்களின் இந்த பதிவில் உள்ள பல அபத்தங்களை எழுத தற்போது நேரமில்லை,. உங்கள் வாதங்களில் உள்ள ஒரு சில ஓட்டைகள் இங்கே...மற்றவை நேரம் கிடைக்கும் போது

//தாங்க முடியாத பிரச்சனை வரும்போது ஏன் கோர்ட்டுக்கோ அல்லது போலீஸிடமோ ஏன் போய் புகார் செய்யவில்லை!!
//
சென்னையில் உள்ளாட்சி தேர்தலில் அடிவாங்கியவர்கள் ஏன் சாலைமறியல் செய்தனர், போலிசிடம் தகராறு செய்தனர்? புகார் கொடுத்துவிட்டு இருக்க வேண்டியது தானே? இத்தனை பெரிய கட்சியே போலிசிடம் ஒன்னும் செய்யமுடியவில்லையாம்

//எதுக்காக தன் பெயரில் பாராளமன்ற தாக்குதலுக்கு உபயோகப்படுத்திய காரை(DL-03 CJ-1527, purchased by Afzal from Lovely Motors in Karol Bagh, Delhi) வாங்கினார், //
பாராளுமன்றத்தை தாக்குவதற்கு எந்த லூசாவது தானே தன் பெயரில் கார்வாங்கித்தருவானா? சும்மா திரைப்படத்தில் கூட காரை திருடிக்கொண்டு வந்து கடத்துவது என்று காண்பிக்கும்போது பெரிய திட்டம் போட்டு அதன் பின் பாரளுமன்றத் தாக்குதலுக்கு மட்டும் தன் பெயரில் வாங்கிய காரை தர்றாராம்,,, அந்தளவுக்கு அப்சல் என்ன பப்பாவா? கேட்கும்போதே உங்களுக்கு கேணத்தனமா தெரியலை?

//தாக்குதலுக்கு முன் அப்சல் முகமதுக்கு ஏன் பல முறை போன் செய்தார், போதாகுறைக்கு சரியாக ஒரு நிமிடத்துக்கு முன் தாக்குதலில் ஈடுப்பட்ட ஒரு தீவிரவாதி அப்சலுக்கு போன் செய்திருக்கிறார், அதே போல் அப்சலும் அந்த தீவிரவாதியை தன் செல்போனிலிருந்து அழைத்திருக்கிறார்!!! சும்மா டைம் பாஸ்க்கு கால் பண்ணியிருப்பரோ??!!//
எல்லா ஆதாரங்களையும் விட்டுட்டுதான் செய்வாங்க பாராளுமன்றத்தை தாக்கும் அளவிற்கு கிரிமினல்ங்க, ஏன் தெரியாதா கடைசியாக எந்த எண்ணை கூப்பிட்டார்கள் என்று பார்ப்பார்கள் என்று? மாறன் அப்படினு ஒருத்தர் தமிழர் விடுதலைப்படை தலைவர், அதான் கன்னட ராஜ்குமார் கடத்தல் மூளை, அவரை சுற்றி வளைத்து பிடித்த போது முதலில் அவர் உடைத்தது சிம்கார்டை தான்.

இப்போதும் சொல்கிறேன் மேலே நான் இதை சொன்னதால் அப்சலுக்கு இதில் தொடர்பில்லை என்று ஆணித்தரமாகவெல்லாம் சொல்ல வரவில்லை, ஆனால் கேக்குறவன் கேணப்பயலா இருந்தா என்ற அளவிற்கு இருக்கும் இந்த வாதங்களையெல்லாம் படிச்ச சிரிப்பு தான் வருது...
ரியோ said…
குழலி,
காஷ்மீர் விஷயத்தில் இந்தியா தவறு செய்கிறது. எனவே நாளை டெல்லி மார்க்கெட் குண்டு வெடிப்பையும், மும்பை ரயில் குண்டு வெடிப்பையும் நிகழ்த்தியது என்று ஒரு காஷ்மீர் தீவிரவாதி குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டாலும், அவனுக்கு தண்டனையை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவிப்பீர்கள் அல்லவா?
We The People said…
//சரி நீங்க நினைக்கிற மாதிரியா இருக்கு இந்திய தேசியம், நெஞ்சைத்தொட்டு சொல்லுங்க...//

குழலி ஒரு 20 பேர் இருக்கும் கூட்டு குடும்பத்துலயே ஆயிரத்து எட்டு பிரச்சனைகள் வருது. 100 கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டில சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதை நாம் தான் சரி செய்யனும். அதுக்கு தனி குடிதனம் போனா வேலைக்கு ஆகுமா?? If you do your are back to ground Zero! அங்க இருந்து திரும்ப வளரனும், அதுக்குள்ள மாவட்ட பிரச்சனைகள் வளரும், ஒரு காலமும் நாம் வளரமுடியாது!! அது சரி, தெரியாமா கேட்கிறேன், இலங்கையில் உள்ள மாதிரி பிரச்சனையா இங்க இருக்கு குழலி?? ஒரே மதம் இரு பிரிவு இருக்கற பாகிஸ்தானில் எவ்வளவு பிரச்சனைகள்?

//இருவரையும் ஒன்று சேர்க்க பாலமில்லை. அவர்களுக்கு கூட்டாய் வாழ எண்ணமும் இல்லை.

இது ஒரு இனத்தின் அழிவிலே தான் அடங்கும் என்றே என்க்கு தோன்றுகிறது!//

இதையே தான் இப்பவும் சொல்லறேன். நம்மக்குள்ளயே கலந்து பேசி தீர்க்காவிட்டால், அதற்காக ஆயுதம் எடுத்தால் ஏதோ ஒரு இனம் அழிந்தே தீரும். அழிந்தால் யாருக்கு லாபம்?

//அதாவது கூட்டமைப்பிலே அடங்கி ஒடுங்கி வாழ்வெதென்றால் வாழ் இல்லையென்றால் ஒரு இனம் அழிந்து அடங்கட்டும் ஆனால் பிரிந்து மட்டும் வாழமுடியாது, என்ன எழவுங்க இது?
//

இன்னைக்கு அடங்கி ஒடிங்கியா வாழறீங்க குழலி??!! ஓவரா திங்க் பண்ணறீங்க போல! இன்று தமிழன் நினைப்பது தான் இந்தியாவின் சட்டம்! தமிழன் நினைத்தால் இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்ற நிலைதான் உள்ளது!! இதை மறுக்க முடியாது என்று நினைக்கிறேன். ஒரு தமிழனுக்கு கிடைக்கும் மதிப்பு மற்ற மாநிலத்தாருக்கு கிடைக்குதா குழலி??!!

காஷ்மீர் ஆதாரங்கள் நான் கொடுத்தது ஒரு கஷ்மீரியின் தனித்தளம், எந்த ஊடத்தையும் சுட்டியா தரவில்லை, நல்லா பாருங்க!! அதுவும் இல்லாமல் ஐ.நாவின் போர் நிறுத்த ஓப்பந்தம் பற்றிய சுட்டி கொடுத்தேன். ஐ.நாவின் கருத்தையும் ஓத்துக்கமாட்டீங்களா??

அப்பறம் பெரியார்தாசன், அவர் கடவுள் இல்லைன்னு சொல்லிக்கிட்டு கை Fullஆ ராசிக்கல்லும், ராசிக்கல்லு விக்கறவனுக்கு குடை புடிச்சுக்கிட்டு தினமும் காலையில் ராசிக்கல் போட்டுக்குங்க ரொம்ப நல்லதுன்னு சொல்லிக்கின்னு இருந்தாரு ஒரு மாசத்துக்கு முன்னாடி! அப்ப நீங்களும் அந்த மாதிரி ஒரு பைபிளைத்தான் எடுத்துக்காட்டா எடுத்துக்கிட்டு வாறீங்கன்னு நானும் சொல்லவேண்டி இருக்கும்.
//குழலி ஒரு 20 பேர் இருக்கும் கூட்டு குடும்பத்துலயே ஆயிரத்து எட்டு பிரச்சனைகள் வருது. 100 கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டில சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதை நாம் தான் சரி செய்யனும். அதுக்கு தனி குடிதனம் போனா வேலைக்கு ஆகுமா??//
ஏன் இந்தியா என்ற குடும்பம் பிரிட்டிஷ் குடும்பத்திலிருந்து பிரிந்தது? இப்போ 20 பேர் குடும்பமென்றால் பிரிட்டிஷ் குடும்பம் 40 பேராச்சே?

//இன்னைக்கு அடங்கி ஒடிங்கியா வாழறீங்க குழலி??!! ஓவரா திங்க் பண்ணறீங்க போல! இன்று தமிழன் நினைப்பது தான் இந்தியாவின் சட்டம்! தமிழன் நினைத்தால் இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்ற நிலைதான் உள்ளது!! இதை மறுக்க முடியாது என்று நினைக்கிறேன். ஒரு தமிழனுக்கு கிடைக்கும் மதிப்பு மற்ற மாநிலத்தாருக்கு கிடைக்குதா குழலி??!!
//
ஆகா காஷ்மீரிலிருந்து தமிழ்நாட்டுக்கு தாவியாயாச்சா? அப்போ பெங்களூர்ல கன்னட ராஜ்குமார் செத்தப்ப தமிழங்க பயந்து செத்தாங்களே ஏன்? உடனே பேசி சரிபண்ணனும்னு சொல்லாதிங்க...அது சரி... அப்போ காவிரித்தண்ணியை அனுப்பி வைங்களேன்... பேசிக்கிட்டே தான் இருக்காங்க, உச்சநீதிமன்றம் தீர்ப்பே கொடுத்தது தண்ணி வந்துச்சா,அதுக்கு பதில் ஆயிரம் தமிழர்களின் உயிரற்ற உடல்களும் ஆயிரம் தமிழ்பெண்கள் வன்புணரப்பட்டும் தான் வந்தார்கள், anyway I made my point அதனால் படிக்கிறவங்க முடிவு செய்துக்கிடட்டும்
We The People said…
//ஏன் இந்தியா என்ற குடும்பம் பிரிட்டிஷ் குடும்பத்திலிருந்து பிரிந்தது? இப்போ 20 பேர் குடும்பமென்றால் பிரிட்டிஷ் குடும்பம் 40 பேராச்சே?//

நம்ம வீட்டுல நாம் இருப்பதற்க்கும், வெளிநாட்டுக்காரன் இருக்கறதுக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கீங்க குழலி??!!

//ஆகா காஷ்மீரிலிருந்து தமிழ்நாட்டுக்கு தாவியாயாச்சா?//

உங்கிட்ட நான் கேட்ட கேள்வியே தமிழ்நாட்டை மையமா கொண்டுதானே கேட்டுகிட்டு வந்தேன்? இன்னும் அந்த கேள்விக்கு பதில் சொல்லாம இருக்கீங்க!! எப்பதான் சொல்லுவீங்கன்னு பார்க்கலாம்....

//நாளை தனி தமிழ்நாடு கேட்டு பெற்றுவிட்டாலாவது நாட்டுப்பற்று வருமா?? இல்லை அதிலிருந்து தனி வட மாவட்டங்களை கொண்ட நாடு கிடைத்தாலாவது உங்களுக்கு தேசப்பற்று வருமா? இல்லை இன்னும் மாவட்ட வாரியா நாடு பிரிந்தால் வருமா??


மறைக்காம சொல்லுங்க, எப்ப தான் உங்களுக்கு தேசிய உணர்வு வரும்?? //

//காவிரித்தண்ணியை அனுப்பி வைங்களேன்... பேசிக்கிட்டே தான் இருக்காங்க, உச்சநீதிமன்றம் தீர்ப்பே கொடுத்தது தண்ணி வந்துச்சா,//

அதுக்கு காரணம் நம்மை ஓட்டுப்பொறுக்கிங்க தான்... தமிழ்நாட்டு ஓட்டு வேண்டும் என்றால் இங்க வந்து தண்ணி விடு கத்துவான், கர்நாடகாவில் ஓட்டு வேண்டும் என்றால் அங்க போயி தண்ணிய விடக்கூடாது என்பான். இன்றைய முதல்வர் ஒரு FAX மத்திய அரசுக்கு அடிச்சா போதும் எல்லாவேலையும் நடக்கும், ஆனா அவருக்கு முக்கியம் தன் குடும்ப வளம், தன் பேரன் மத்திய மந்திரியா இருக்கனும் அவ்வளவே!!! கேட்காம இருக்கறது யார்? நம்ம ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த தலைவன் தான் குழலி. கடந்த 7 வருடங்களா மத்தியில் ஒரு முக்கிய தலையா இருந்தும், ஒரு தடவை கூட தட்டிக்கேட்காத தலைவர்கள், மத்திய மந்திரிகள்!! (சரியா? தவறா??)

அழும் பிள்ளைக்குத்தானே சாப்பாடு?? நம்ம தலைவர் அழவில்லை, தண்ணி கிடைக்கல... பதவி இருந்தும் பேசாம இருந்தது ஏன்??
We The People said…
குழலி

//anyway I made my point//

அது என்ன பாயண்ட்ன்னு சொல்லிட்டு போங்க ஒன்னும் புரியல??
We The People said…
அனானிங்களே தனி மனித தாக்குதல் கொண்ட பின்னூட்டம் அனுமதிக்கப்பட மாட்டாது! இங்கு கருத்துக்கள் பரிமாறப்படலாம், வசவுகள் அல்ல... அ.மு.க தலைவரிடம் போடுங்க ஆதரவு கிடைக்கலாம். என் பதிவின் கருத்துக்கு பலம் சேர்க்கும் பின்னூட்டம் அனானியானாலும் பிரசுக்கப்படும்.
Anonymous said…
//
ஐ.நாவின் கருத்தையும் ஓத்துக்கமாட்டீங்களா??
//

ஐ நா என்றால் ஐந்து நாய்கள் சபை ... அந்த நாய்ங்க சொல்றதல்லாம் எப்புடி கேப்பாய்ங்க?
வஜ்ரா said…
"அது என்ன பாயண்ட்ன்னு சொல்லிட்டு போங்க ஒன்னும் புரியல??"

ஜெய்,

அவரு என்ன சொல்றாருன்னா....தேசீயம் என்பதை நாம் கிருத்தவ விவிலியம் சொல்லும் மதம் போல் கடைபிடிக்கிறோமாம்....

எதைக் கேட்டாலும் இந்திய ஊடகங்களிலிருந்து Proof கொடுப்பது கிருத்துவன், விவிலியத்திலிருந்து Quote கொடுப்பது மாதிரி இருக்காம்...இந்திய தேசீய மதத்தை இறக்கி வைத்துவிட்டு நாம் பேசவேண்டும்.

இது தான் பாயிண்டு! இதுக்கு வெளக்கம் கேக்குறாரு..

எப்பவும் ஒரு பிரச்சனைக்கு நேர் பார்வை ஒன்றும், மறுப்பு பார்வை என்று இரண்டு இருப்பது தெரிந்ததே, கோணல் பார்வை என்று ஒன்று உள்ளது அதன் படி பார்க்கவேண்டும் என்று வர்புருத்துபவரிடம் பேசிப் பிரயோசனமில்லை.
Anonymous said…
//இன்று தமிழன் நினைப்பது தான் இந்தியாவின் சட்டம்!
தமிழன் நினைத்தால் இந்தியாவில் என்ன வேண்டுமானாலும்
செய்யமுடியும் என்ற நிலைதான் உள்ளது!! இதை
மறுக்க முடியாது என்று நினைக்கிறேன். ஒரு
தமிழனுக்கு கிடைக்கும் மதிப்பு மற்ற மாநிலத்தாருக்கு
கிடைக்குதா குழலி??!!//

நல்ல கேள்வி wtp. இன்று ஏன் தமிழன் பேச்சை இந்தியா
கேக்குது? தேசிய ஜால்ரா, குடுமிப்புடி கட்சிகளுக்கு தமிழ்நாட்டு
மக்கள் ஓட்டு போட்டா இப்படி ஒரு படையே தமிழ்நாட்டிலிருந்து
மந்திரி ஆகுமா?

காங்கிரஸ் மற்ற பெரிய மாநிலங்களில் பலமிழந்துவிட்டது. அதனால்
லோக்கல் கட்சிகளின் கை ஓங்கி இருக்கு.காங்கிரஸ் இந்தி beltல
பலமா இருந்தா தமிழ்நாட்டு கட்சிகளை புழு போல மதிக்கும்.
//அழும் பிள்ளைக்குத்தானே சாப்பாடு?? நம்ம தலைவர் அழவில்லை, தண்ணி கிடைக்கல... பதவி இருந்தும் பேசாம இருந்தது ஏன்??
//
நியாயமாக சேரவேண்டியதைக்கூட அரசியல் மிரட்டல்கள் செய்துதான் பெறவேண்டுமோ இந்திய தேசியத்தில், அரசியல் மிரட்டல்கள் செய்ய முடிந்தவர்கள் செய்கிறார்கள் அரசியல் மிரட்டல்கள் செய்ய முடியாதவர்கள் ஆயுதங்களை தூக்குகிறார்கள்.

//கடந்த 7 வருடங்களா மத்தியில் ஒரு முக்கிய தலையா இருந்தும், ஒரு தடவை கூட தட்டிக்கேட்காத தலைவர்கள், மத்திய மந்திரிகள்!! (சரியா? தவறா??)
//
அதிகபட்சமாக ராஜினாமா தான் செய்ய முடியும், இப்போது கூட்டணி ஆட்சியிருப்பதால் சொல்கிறீர்கள், சிறிது ஆண்டுகளுக்கு முன் மத்தியில் தனிக்கட்சி ஆட்சி இருந்ததே அப்போது என்ன செய்யமுடிந்தது, அதிகபட்சமாக வாழப்பாடி ராமமூர்த்தி தன் பதவியை ராஜினாமா செய்தாரே அவ்வளவுதான் செய்யமுடியும்.

மத்திய ஆட்சியில் பிடிமானம் இல்லாத காஷ்மீர் கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?
நேற்று போட்ட பின்னூட்டம், அப்சல் கார் மற்றும் செல்போன் தொடர்பான பின்னூட்டத்துக்கு ஒன்னும் பதிலை காணாமே?
Anonymous said…
//பாராளுமன்றத்தை தாக்குவதற்கு எந்த லூசாவது தானே தன் பெயரில் கார்வாங்கித்தருவானா? சும்மா திரைப்படத்தில் கூட காரை திருடிக்கொண்டு வந்து கடத்துவது என்று காண்பிக்கும்போது பெரிய திட்டம் போட்டு அதன் பின் பாரளுமன்றத் தாக்குதலுக்கு மட்டும் தன் பெயரில் வாங்கிய காரை தர்றாராம்,,, அந்தளவுக்கு அப்சல் என்ன பப்பாவா? கேட்கும்போதே உங்களுக்கு கேணத்தனமா தெரியலை?//

ஆஹா குழலி நீங்க அவருக்கு லாயரா ஆஜர் ஆகியிருக்கலாம். என்ன பண்ண இப்படி பாயின்ட் எடுக்க தெரியாத ஒரு முட்டாள் அவருக்கு கிடைச்சுட்டுராரு. எது எப்படி அனாலும் தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
We The People said…
//"//தாங்க முடியாத பிரச்சனை வரும்போது ஏன் கோர்ட்டுக்கோ அல்லது போலீஸிடமோ ஏன் போய் புகார் செய்யவில்லை!!//"

சென்னையில் உள்ளாட்சி தேர்தலில் அடிவாங்கியவர்கள் ஏன் சாலைமறியல் செய்தனர், போலிசிடம் தகராறு செய்தனர்? புகார் கொடுத்துவிட்டு இருக்க வேண்டியது தானே? இத்தனை பெரிய கட்சியே போலிசிடம் ஒன்னும் செய்யமுடியவில்லையாம்//

அதை தான் நானும் கேட்கிறேன்? அப்படி ஒரு அராஜகம் நடக்கும் போது அப்சல் ஏன் ஒரு எதிர்ப்பும் சொல்லாமல் இருந்தாரு? அங்கு இருக்கும் இன்றைய ஆதரவாளர்களாக களத்தில் குதிக்கும் தலைவர்களான ஜம்மு & காஷ்மீர் விடுதலை முன்ணனியின் தலைவரான யாசின் மாலிகிடம் ஒரு தடவை சொல்லியிருந்த போதுமே (இப்படி ஒரு வாய்ப்பை தேடிக்கிட்டு இருக்கும் அவர்கள் சும்ம இருந்திருப்பாங்க!!!), ஒரு போலீஸ் புகார் கூட கொடுக்கல என்பது தான் என் வாதமே!!!

//பாராளுமன்றத்தை தாக்குவதற்கு எந்த லூசாவது தானே தன் பெயரில் கார்வாங்கித்தருவானா? சும்மா திரைப்படத்தில் கூட காரை திருடிக்கொண்டு வந்து கடத்துவது என்று காண்பிக்கும்போது பெரிய திட்டம் போட்டு அதன் பின் பாரளுமன்றத் தாக்குதலுக்கு மட்டும் தன் பெயரில் வாங்கிய காரை தர்றாராம்,,, அந்தளவுக்கு அப்சல் என்ன பப்பாவா? கேட்கும்போதே உங்களுக்கு கேணத்தனமா தெரியலை?//

குழலி எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் தான் நடத்த போகும் தாக்குதல் தோல்வியடையாது என்ற உயர்ந்த சிந்தனையோடு தான் நடத்துகிறார்கள், ஏதோ ஒன்றோ இரண்டிலோதான் இப்படி தோல்வியடைந்து வந்த வாகணங்கள் பறிமுதல் ஆகுது. சொந்த வண்டி வெச்சாலே டெல்லியில் ஆயிரம் ப்ராபளம் வரும் இது போன்ற தாக்குதலுக்கு, திருட்டு வண்டியெல்லாம் வச்சு பாராளமன்ற செக்போஸ்டை அவர்களால் கடந்து போக முடியாது என்ற ஒரு சாமான்ய முளை உபயோகிப்பே சொந்த வண்டி உபயோகிக்க தூண்டியிருக்கும். அப்பறம் As per Indian Transport authorities rules to Own a Car in india need to be bought by Indian Citizen with Application with Signature proof; அந்த கார் அவர் வாங்கவில்லை என்றால் ரொம்ப சிம்பிளா RC Bookகின் கையெழுத்து ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கமுடியும். அதையெல்லாம் ஒரு Common sense உள்ளவனே யோசிக்க முடியற விசயம்!! (உண்மையா? இல்லையா??), இப்படி எல்லாம் வாதாடாமலா இருந்திருப்பார் அப்சலின் வக்கீல்? உண்மை கொஞ்சமாவது இருக்குமேயானால் Benifit of doubt would have gone to Afzal not to Govt or Police(Correcta??), ஆனால் தீர்ப்பு "Circumstances established beyond reasonable doubt that Afzal was a party to the conspiracy and had played an active part in the various acts done in furtherance of the conspiracy" அப்படினா அப்லால் தான் குற்றவாளி அல்ல என்ற சிறு சந்தேகம் கூட உண்டாக்கமுடியவில்லை என்பதே உண்மை.

//எல்லா ஆதாரங்களையும் விட்டுட்டுதான் செய்வாங்க பாராளுமன்றத்தை தாக்கும் அளவிற்கு கிரிமினல்ங்க, ஏன் தெரியாதா கடைசியாக எந்த எண்ணை கூப்பிட்டார்கள் என்று பார்ப்பார்கள் என்று? மாறன் அப்படினு ஒருத்தர் தமிழர் விடுதலைப்படை தலைவர், அதான் கன்னட ராஜ்குமார் கடத்தல் மூளை, அவரை சுற்றி வளைத்து பிடித்த போது முதலில் அவர் உடைத்தது சிம்கார்டை தான். //

என்னங்க நீங்களே கேள்வியும் கேட்டு பதிலுக்கு ஒரு பாயண்டும் சொல்லிதறீங்க.. ரொம்ப நன்றி. மாறனுக்கு அறிவில்லாம செல் உபயோகிச்சா மாதிரி தான் இவர்களும் உபயோகிச்சிருப்பாங்க. அப்பறம் எப்படித்தான் என்ன நடக்குது? ஏதாவது உதவி தேவையான்னு இவர்கள் தகவல் பரிமாறுவார்கள்?? எதைப்பண்ணாலும் போலீஸ் புடிக்கும் என்று தெரியும் தலைவா! தீவிரவாதிகள் மூளை சலவை செய்யப்பட்டு தான் இது போன்ற தாக்குதலுக்கு அனுப்பப்படுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? இதெல்லாம் ஒரு கேள்வியா??

ஒவ்வொரு க்ரைமும்/கிரிமினலும் எங்காவது ஒரு சிறு தடயத்தை தனக்கே தெரியாமல் கண்டிப்பாக விட்டு செல்லும்/செல்வான் என்பது உலக புகழ் பெற்ற புலன்விசாரனை செய்பவர்களின் கூற்று!
Anonymous said…
/நியாயமாக சேரவேண்டியதைக்கூட அரசியல் மிரட்டல்கள் செய்துதான் பெறவேண்டுமோ இந்திய தேசியத்தில், அரசியல் மிரட்டல்கள் செய்ய முடிந்தவர்கள் செய்கிறார்கள் அரசியல் மிரட்டல்கள் செய்ய முடியாதவர்கள் ஆயுதங்களை தூக்குகிறார்கள்./

அவர்கள் ஆயுதங்களை தூக்குவது மரணதண்டனை எதிர்ப்பாளரான உங்களை பொறுத்த வரை மிகவும் தவறு அல்லவா?பிறகு ஏன் அதை ஆதரிக்கிறீர்கள்?

Shameless double standards.

//பாராளுமன்றத்தை தாக்குவதற்கு எந்த லூசாவது தானே தன் பெயரில் கார் வாங்கித் தருவானா? சும்மா திரைப்படத்தில் கூட காரை திருடிக்கொண்டு வந்து கடத்துவது என்று காண்பிக்கும்போது பெரிய திட்டம் போட்டு அதன் பின் பாரளுமன்றத் தாக்குதலுக்கு மட்டும் தன் பெயரில் வாங்கிய காரை தர்றாராம்,,, அந்தளவுக்கு அப்சல் என்ன பப்பாவா? கேட்கும்போதே உங்களுக்கு கேணத்தனமா தெரியலை?//

கார் கண்டிப்பா வாங்க வேண்டும். அதை கண்டிப்பாக ஒரு இந்திய குடிமகன் பெயரில் தான் வாங்க முடியும் எனும்போது அப்சல் மாதிரி அள்ளக்கை அடிவருடிகள் பெயரில் வாங்கினார்கள்.

இதை தவிர்த்து அவர்களுக்கு இருந்த ஒரே வழி கார் திருடுவது.ஆனால் அதில் ரிஸ்க் இருப்பதால் காரை அள்ளக்கையின் பேரில் வாங்கினார்கள். பாராளுமன்றத்தை கைப்பற்றி பணயக்கைதிகளாக எம்பிக்களை பிடித்திருந்தால் அப்சலை எந்த போலிசும் தொட்டிருக்காது. திட்டம் தோல்வி அடைந்ததால் அப்சல் மாட்டிக்கொண்டார்.

காஷ்மிரில் இருந்த அப்சல் டில்லி லவ்லி மோட்டர்சுக்கு வந்து கார் வாங்கவேண்டிய அவசியம் என்ன என்று சொல்ல முடியுமா? அந்த கார் அதன்பின் எப்படி பாராளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகளிடம் போய் சேர்ந்தது என்று சொல்ல முடியுமா?

Any explanations?
தேசபக்த கட்சிக்கு சில கேள்விகள்:

1. அஃப்சல் குண்டு வெடிப்பில் ஈடுபட்டார் என்ற சட்ட விவாதங்கள் நாம் நடத்துவதில் பொருள் இல்லை. உச்ச நீதிமன்றம் வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆதாரங்களின் படிதான் அவர் குற்றவாளி என்று தீர்ப்பாகியிருக்கிறது என்பது ஒரு புறமிருக்க, மொத்த வழக்கும் POTA என்ற சட்டத்தின் அடிப்படையில் நடந்தது என்பதையும் மறந்து விடக் கூடாது.

2. எல்லா மாநிலங்களும் கூடி நடத்துவதுதானே கூட்டாட்சி? எப்படி ஒரு கட்டத்தில் உத்தர் பிரதேசமும், ஒரு கட்டத்தில் தமிழ்நாடும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறோம்?

3. பல தேசிய இன மக்கள் ஒன்று சேர்ந்து ஒரே நாடாக உருவாவது பல வகைகளில் பலனைத் தரும் என்பதற்கு இந்திய யூனியன் ஒரு எடுத்துக்காட்டு. அப்படி முற்றிலுமாக சேர்ந்த பிறகு பிரிந்து செல்ல முயற்சிப்பது பல கோணங்களில் ஏற்றுக் கொள்ள முடியாதுதான்.

ஆனால், காஷ்மீர் இந்திய யூனியனுடன் இணைந்தது சில சிறப்பு நிபந்தனைகளின் அடிப்படையில், அப்படி இருக்கையில், காஷ்மீர் சுதந்திரப் போராட்டம் என்று நடத்த உரிமை இல்லையா? இந்தியாவுக்கு பிரிட்டிஷார் வெளிநாட்டினர் என்றால், காஷ்மீரிகளுக்கு தில்லி ஆட்சியாளர்கள் வெளிநாட்டினர் இல்லையா?

3. அப்படி காஷ்மீரிகளுக்கு மனக்குறைகள் இருந்தால் அதை அமைதியான வழியில் மட்டும்தான் வெளிப்படுத்த வேண்டுமா? (ஆம், என்பது என் கருத்து). ஆனால், பகத் சிங்கின் தீவிரவாத நடவடிக்கைகளை போற்றும் இந்திய தேசியவாதிகள், ஏன் அஃப்சலின் நடவடிக்கைகளைப் பழிக்க வேண்டும்?

4. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பகத்சிங்கை தூக்கில் போட்டது போலத்தான் இந்திய அரசமைப்பும் நடக்க வேண்டுமா?
அப்படி தூக்கில் போடுவதுதான் சரி என்று காஷ்மீரி மிதவாதத் தலைவர் யாராவது வாதிட்டால் அவருக்கு என்ன பட்டம் கிடைக்கும்?

5. பகத் சிங் துப்பாக்கிக் குதிரையை இழுத்த விரல்களுக்கு சொந்தமானவர். அஃப்சல் பயங்கரச் செயலைச் செய்தவர்களுக்கு உதவி செய்ததாக மட்டுமே குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அந்த நீதியில் திலகர் முதலான பல தீவிரவாதத் தலைவர்கள் அஃப்சலின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அப்படிப் பார்க்கையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சட்டங்கள் இன்றைய இந்தியக் குடியரசின் சட்டங்களை விடப் பல மடங்கு சிறந்தவை. (POTA இப்போது இல்லை என்பது நமது நாட்டின் அரசியலமைப்பு மாட்சிமையின் சிறப்பு).

அன்புடன்,

மா சிவகுமார்
We The People said…
அனானி,

//காஷ்மிரில் இருந்த அப்சல் டில்லி லவ்லி மோட்டர்சுக்கு வந்து கார் வாங்கவேண்டிய அவசியம் என்ன என்று சொல்ல முடியுமா? அந்த கார் அதன்பின் எப்படி பாராளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகளிடம் போய் சேர்ந்தது என்று சொல்ல முடியுமா?

Any explanations?//

காஷ்மீரிலிருந்து சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் அங்கிருந்து... அதாவது ஒரு மாநிலத்தில் வாங்கிய வண்டி வேறு மாநிலத்தில் ஓட்ட வேண்டும் என்றால் No objection Certificate வேண்டும், வழி நெடுகிலும் சோதனை சாவடிகள் இருக்கும், அத்துனை இடத்திலும் என்ன காரணத்துக்காக டெல்லி செல்கிறோம் என்று சொல்ல வேண்டும், போதாகுறைக்கு பாராளமன்றத்துக்கு உள் போக திட்டமிட்டு காஷ்மீரில் பதிவு செய்யப்பட்ட ஒரு வாகணத்தை எடுத்து சென்றால் அது அதி முட்டாள் தனமானது என்று தீவிரவாதிகளுக்கு தெரியாதா என்ன?? தான் வீடு பிடித்து குடி வைத்த தீவிரவாதிக்கு தான் வாங்கிய காரை கை மாற்றுவது சப்ப மேட்டர் என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
We The People said…
மா.சிவகுமார்,

உங்கள் வாதங்களை பார்த்தேன், படித்தேன், ஆனால் ஒரு முழு காந்தியனாக நினைத்த மா.சிக்கு பிரிவினைவாதம் உள்மனதில் உள்ளதோ என்ற ஒரு சிறு சந்தேகம்(டிஸ்கியும் இருக்கு பார்த்தேன் ;)). இதற்கான பதில்கள் தீபாவளி விடுமுறைக்கு பின் பதியப்படும். வாதங்கள் ஆரோகியமான முடிவை எட்டும் என்று நினைப்போம். ஆனால் இந்த பதிவின் நோக்கம் கடத்தப்பட்டுவிட்டதோ என்ற சிறுசந்தேகம்... ஆனாலும் விவாதங்கள் இங்கு தேவையே என்று தோன்றுகிறது, ஏனெனில் ஒவ்வொரு தீவிரவாத ஜல்லிக்கு பின்னும் ஒரு பிரிவினைவாத சக்தி உள்ளது என்று நிச்சயமாக நினைக்கிறேன்.

அனைத்து தமிழ்மணம், தேன்கூடு வாசகர்/பதிவர் மற்றும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!!
வஜ்ரா said…
//
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பகத்சிங்கை தூக்கில் போட்டது போலத்தான் இந்திய அரசமைப்பும் நடக்க வேண்டுமா?
அப்படி தூக்கில் போடுவதுதான் சரி என்று காஷ்மீரி மிதவாதத் தலைவர் யாராவது வாதிட்டால் அவருக்கு என்ன பட்டம் கிடைக்கும்?
//

மா சி,

பகத் சிங்கை தூக்கில் போடும் போது எந்த முயற்சியும் எடுக்காமல் அது அவர் பாடு என்று இருந்த மகாத்மா காந்திக்கு என்ன பட்டம் கொடுப்போமோ அதே பட்டம் தான் கொடுக்க வேண்டும்...! சரியா?
ஏன் பிரிவினைவாதி என்றால் கெட்ட வார்த்தையா ஜெய்? ஈழத் தமிழரின் போராட்டம், இந்திய சுதந்திரப் போராட்டம் எல்லாமே ஒரு நிலையில் பிரிவினைவாதங்கள்.

பரவலான நன்மை கிடைப்பது நின்று போனால் எந்த அமைப்பும் புனிதப் பசு கிடையாது. 'யாமார்க்கும் குடியல்லோம்' என்னுடைய எல்லைகளில் தலையிடாதது வரை மாநில அரசாகட்டும், மத்திய அரசாகட்டும் ஏற்றுக் கொள்வோம். அந்த எல்லைக்குள் மூக்கு நுழைந்தால் ஒத்துழையாமை என்று நமது ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வது தனிமனித உரிமை.

எல்லாமே சார்புடையவைதான். நாட்டின் பேரால் ஒரு மனிதனை தூக்கில் போட இந்திய தேசத்துக்கு உரிமை இருக்கிறது என்றால், அதே தேசியத்தின் பேரில் நாடாளுமன்றத்தில் குண்டு வைக்கவும் அஃப்சலுக்கு உரிமை இருக்கிறது?

அஃப்சல் பாகிஸ்தானுக்குப் போவது தவறு என்றால், நேதாஜி ஜப்பானுக்கும், ஜெர்மனிக்கும், இத்தாலிக்கும் போனது எதில் சேரும்? (என்னைப் பொறுத்த வரை இரண்டுமே தவறுதான்).

தமக்கு ஏற்றது போல வாதங்களை வளைத்துக் கொள்வதுதான் தேசியவாதம் போன்ற குறுகிய கொள்கைகளின் விளைவு.

அன்புடன்,

மா சிவகுமார்
வஜ்ரா said…
//
நாட்டின் பேரால் ஒரு மனிதனை தூக்கில் போட இந்திய தேசத்துக்கு உரிமை இருக்கிறது என்றால், அதே தேசியத்தின் பேரில் நாடாளுமன்றத்தில் குண்டு வைக்கவும் அஃப்சலுக்கு உரிமை இருக்கிறது?
//

Fundamental mistake... தூக்கு நாட்டின் பெயராலோ ஒரு கொள்கையின் பெயராலோ கொடுக்கப் படவில்லை. கொடுக்கப் பட்டது தண்டனை. அது, தவறு செய்ததற்காக. தேசீயம் என்ற குருகிய வட்டத்தின் பெயராலும் அது கொடுக்கப் படவில்லை.

ஜனநாயகம் என்பது நீதிமன்றம், பாராளுமன்றம் இரண்டு முக்கியத் தூண்களால் நிற்கிறது. அப்ஸல் ஒரு ஜனநாயகத்தின் எதிரி. அவன் பாராளுமன்றம் என்ற ஜனநாயகத்தின் தூணை சிதரடிக்க எண்ணி செய்த செயலை கண்டித்தே ஆகவேண்டும், அதற்கு எந்த சால்ஜாப்பு ஜல்லியும் செல்லாது மா. சி. அவர்களே.

மேலும் தூக்கு தண்டனை மனித நேயத்திற்கு எதிரானது என்பவர்களுக்கு...

பேருந்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி இறப்பதுண்டு. அதற்காக பேருந்தில் யாருன் செல்லக் கூடாது என்பது போலத்தான் உங்கள் சொத்தை வாதமும் உள்ளது. பேருந்தில் விபத்தைத் தடுக்க என்ன வழிகளோ அதை யோசித்துச் செய்ய வேண்டும்...அதாவது தவறான தூக்கு தண்டனை கொடுக்கப் படும் என்று எண்ணுபவர்களுக்குத் தான் இந்த விளக்கமும். தூக்கு தண்டனையே கூடாது என்பவர்கள் மாட்டு வண்டியில் கூடச் செல்லக் கூடாது...ஏன் நடந்து சென்றாலும் விபத்து நேரலாம் ஆகயால் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு எந்த வேலையும் செய்யக் கூடாது.

What you demand in "Inaction" for an unsubstantiated fear of negative effect...in place of Positive Action! which is absolute stupidity and nothine else.
Anonymous said…
http://allaboutpolitics.blogspot.com/2006/10/afzal-ugliness-easy-way-out.html
Anonymous said…
//1. அஃப்சல் குண்டு வெடிப்பில் ஈடுபட்டார் என்ற சட்ட விவாதங்கள் நாம் நடத்துவதில் பொருள் இல்லை. உச்ச நீதிமன்றம் வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆதாரங்களின் படிதான் அவர் குற்றவாளி என்று தீர்ப்பாகியிருக்கிறது என்பது ஒரு புறமிருக்க, மொத்த வழக்கும் PஓTஆ என்ற சட்டத்தின் அடிப்படையில் நடந்தது என்பதையும் மறந்து விடக் கூடாது. //

அப்சல் பொடாவின் அடிப்படையில் தண்டிக்கப்படவில்லை,.

//2. எல்லா மாநிலங்களும் கூடி நடத்துவதுதானே கூட்டாட்சி? எப்படி ஒரு கட்டத்தில் உத்தர் பிரதேசமும், ஒரு கட்டத்தில் தமிழ்நாடும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறோம்?//

புத்திசாலித்தனமா ஓட்டு போடுவது தமிழனுக்கு வாடிக்கை. அதனால் அவ்வப்போது ஆதிக்கம் செலுத்துகிறான்.

//ஆனால், காஷ்மீர் இந்திய யூனியனுடன் இணைந்தது சில சிறப்பு நிபந்தனைகளின் அடிப்படையில், அப்படி இருக்கையில், காஷ்மீர் சுதந்திரப் போராட்டம் என்று நடத்த உரிமை இல்லையா? இந்தியாவுக்கு பிரிட்டிஷார் வெளிநாட்டினர் என்றால், காஷ்மீரிகளுக்கு தில்லி ஆட்சியாளர்கள் வெளிநாட்டினர் இல்லையா? //

உளறல். முடக்குவாதம்.

தில்லியில் ஆட்சி செலுத்துவது காஷ்மிர் மக்களின் பிரதிநிதிகளான தேசியமாநாட்டு கட்சியும், காங்கிரச் எம்பிக்களும் தான். அவர்கள் காஷ்மிர் மக்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவன் பிரதிநிதி தில்லியில் ஆட்சி செலுத்தும்போது எப்படி தில்லி அன்னிய நாடு ஆகும்?

கர்மம், கர்மம்...இப்படியும் ஒரு லூசுத்தனமான வாதம்.

//3. அப்படி காஷ்மீரிகளுக்கு மனக்குறைகள் இருந்தால் அதை அமைதியான வழியில் மட்டும்தான் வெளிப்படுத்த வேண்டுமா? (ஆம், என்பது என் கருத்து). ஆனால், பகத் சிங்கின் தீவிரவாத நடவடிக்கைகளை போற்றும் இந்திய தேசியவாதிகள், ஏன் அஃப்சலின் நடவடிக்கைகளைப் பழிக்க வேண்டும்?//

பகத்சிங் யாரையும் கொல்லவில்லை. இந்த அப்சல் மூதேவி 6 பேரை கொன்றது. கொலைகாரனை கட்டிபிடித்து முத்தமா கொடுப்பார்கள்?செருப்பால் தான் அடிப்பார்கள்.

//அப்படி தூக்கில் போடுவதுதான் சரி என்று காஷ்மீரி மிதவாதத் தலைவர் யாராவது வாதிட்டால் அவருக்கு என்ன பட்டம் கிடைக்கும்? //

அவனுமா முட்டாளா இருப்பான்?அவன் வெவரமா அப்சலுக்கு தான் ஆதரவு கொடுப்பான்.
Anonymous said…
//எல்லாமே சார்புடையவைதான். நாட்டின் பேரால் ஒரு மனிதனை தூக்கில் போட இந்திய தேசத்துக்கு உரிமை இருக்கிறது என்றால், அதே தேசியத்தின் பேரில் நாடாளுமன்றத்தில் குண்டு வைக்கவும் அஃப்சலுக்கு உரிமை இருக்கிறது?//

என்னய்யா உளறல் இது?

போலிஸ்காரனுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமை இருக்கிறது என்றால் பேட்டை பிஸ்தாவுக்கும் உரிமை இருக்கிறது என்கிற மாதிரியான உளறல் இது.

குண்டு வைக்க உரிமை இருக்குன்னு எவன்யா சொன்னான்? ஏன்யா படிச்ச முட்டாளா இருக்குறீரு?
Anonymous said…
//அஃப்சல் பாகிஸ்தானுக்குப் போவது தவறு என்றால், நேதாஜி ஜப்பானுக்கும், ஜெர்மனிக்கும், இத்தாலிக்கும் போனது எதில் சேரும்? (என்னைப் பொறுத்த வரை இரண்டுமே தவறுதான்).//

ஐயோ..ஐயோ

இந்த ஆளு கிட்டருந்து யாராவது என்னை காப்பாத்துங்களேன்.

ஏன்யா நேதாஜி என்ன ரயில்வே ஸ்டேஷன்லயும், பஸ் நிலையத்திலுமா குண்டு வெச்சாரு? நேருக்கு நேரா படைதிரட்டி ஆண்பிள்ளையாய் பிரிட்டிஷ் படைகளுடன் மோதினார். இந்த அப்சல் மூதேவியின் அடியாட்களான லஷ்கரும், ஜெய்ஷும் பஸ்ஸ்டாண்ட், ரயில்வே நிலையம் என அனைத்து இடங்களிலும் குண்டு வைகின்றனர். இதுகளா நேதாஜிக்கு சமம்ங்கறீரு?

இனிமேல் நீரு காந்தி பத்தி எழுதறதை விட ஒசாமா பத்தி எழுதும்.

//தமக்கு ஏற்றது போல வாதங்களை வளைத்துக் கொள்வதுதான் தேசியவாதம் போன்ற குறுகிய கொள்கைகளின் விளைவு.//

ஆமாம்யா..இந்திய தேசியவாதம் குறுகிய கொள்கை. தனிகாஷ்மிர் பரந்த மனப்பான்மையோ?
மா. சிவகுமாரும், குமரன் எண்ணம் அவர்களும் இந்த பிரச்சனையின் அரசியலை ஆய்வு செய்து சரியான கோணத்தில் பார்க்கிறார்கள்.

வேறு யாருக்கும் அந்த வாதங்களில் என்ன இருக்கீறது என்பதை கவனிக்கும் அவகாசம் கூட இன்றி பொறிந்து தள்ளுகிறார்கள்.

We the people - may I have the privilage to know your opinion on these(Ma.Si and Kumaran) people's argument.

Hope 'The People' in your 'We the People' includes kashmiries also.

வாழ்த்துக்கள்

அசுரன்
We The People said…
தேசபக்த கட்சிக்கு சில கேள்விகள்:

தேசபக்தி ஒரு கட்சி அல்ல மா.சிவகுமார். ஒரு கூட்டாட்சியின் மேல் உள்ள பற்று.

//1. அஃப்சல் குண்டு வெடிப்பில் ஈடுபட்டார் என்ற சட்ட விவாதங்கள் நாம் நடத்துவதில் பொருள் இல்லை. உச்ச நீதிமன்றம் வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆதாரங்களின் படிதான் அவர் குற்றவாளி என்று தீர்ப்பாகியிருக்கிறது என்பது ஒரு புறமிருக்க, மொத்த வழக்கும் POTA என்ற சட்டத்தின் அடிப்படையில் நடந்தது என்பதையும் மறந்து விடக் கூடாது. //

உச்ச நீதி மன்றத்தில் POTA சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடக்கவில்லை என்பதே உண்மை. தவறான வாதம்.

//2. எல்லா மாநிலங்களும் கூடி நடத்துவதுதானே கூட்டாட்சி? எப்படி ஒரு கட்டத்தில் உத்தர் பிரதேசமும், ஒரு கட்டத்தில் தமிழ்நாடும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறோம்?//

இது நல்ல கேள்வியே, இந்த விவாதத்துக்கு தொடர்பு இல்லை என்று நினைக்கிறேன்.... எனினும் இதில் விவாதங்கள் செய்து ஜனநாயத்தில் சில மாற்றங்கள் செய்து அனைத்து மாநிலத்துக்கும் சம ஆதிக்கம் வர முயற்சி எடுப்பது நல்லதே.

// 3. பல தேசிய இன மக்கள் ஒன்று சேர்ந்து ஒரே நாடாக உருவாவது பல வகைகளில் பலனைத் தரும் என்பதற்கு இந்திய யூனியன் ஒரு எடுத்துக்காட்டு. அப்படி முற்றிலுமாக சேர்ந்த பிறகு பிரிந்து செல்ல முயற்சிப்பது பல கோணங்களில் ஏற்றுக் கொள்ள முடியாதுதான்.

ஆனால், காஷ்மீர் இந்திய யூனியனுடன் இணைந்தது சில சிறப்பு நிபந்தனைகளின் அடிப்படையில், அப்படி இருக்கையில், காஷ்மீர் சுதந்திரப் போராட்டம் என்று நடத்த உரிமை இல்லையா? இந்தியாவுக்கு பிரிட்டிஷார் வெளிநாட்டினர் என்றால், காஷ்மீரிகளுக்கு தில்லி ஆட்சியாளர்கள் வெளிநாட்டினர் இல்லையா? //

கேள்வியும் பதில் உங்கள் கேள்வியிலேயே இருக்கு. நீங்களே ஏற்றுக் கொள்ளமுடியாது என்று முதலில் சொல்லிவிட்டு பின்னர் என்ன மன தடுமாற்றம். காஷ்மீர் இந்திய யூனியனிடம் இணைந்த பின் (அது சிறப்பு அந்தஸ்த்துடன்) வந்து இணைந்து அதிலிருந்து சில மட்டும் பிரிக்க நினைப்பது தவறு தானே??!! ஆங்கிலேயருடன் நீங்கள் என்ன அடிப்படையில் இந்தியாவை ஒப்பிடுகிறீர்கள்?? ஆங்கிலேயன் நம் நாட்டின் பெருவாரியாரான இடங்களை தான் சேர்த்தப் படையை வைத்து தான் பிடித்தான், ஜம்மு & காஷ்மீரை நாம் படை பலத்தால் இணைக்கவில்லை என்ற அடிப்படை விசயத்தை உங்கள் வாதத்தின் போது மறந்துவிடுகிறீர்கள். ஜம்மு & காஷ்மீரை பாகிஸ்தானியரின் படைகளில் ஆக்கிரமிப்பும் & அராஜகங்களை விரட்டியடிக்க தன்னால் முடியாது என்பதை உணர்ந்த காரணத்துக்காக நம்முடம் வந்து இணைந்தது.

//3. அப்படி காஷ்மீரிகளுக்கு மனக்குறைகள் இருந்தால் அதை அமைதியான வழியில் மட்டும்தான் வெளிப்படுத்த வேண்டுமா? (ஆம், என்பது என் கருத்து). ஆனால், பகத் சிங்கின் தீவிரவாத நடவடிக்கைகளை போற்றும் இந்திய தேசியவாதிகள், ஏன் அஃப்சலின் நடவடிக்கைகளைப் பழிக்க வேண்டும்?//

ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுவது, அண்டைநாட்டின் தூண்டுதலால் போராடுவது ஒன்றாக ஆகுமா? You cant compare Indian Union with British Government. அது அபத்தமாகும். பகத் சிங் தன் எதிர்ப்பை தெரிவிக்க யாரையும் கொல்லவில்லை என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். பகத் சிங் அன்றைய அசெம்பிளியில் குண்டு எடுத்து வீசிது யாரையும் நோக்கி அல்ல!!! He did thrown it in Corridor. None was killed and His motive was not to kill anybody as well. NO ONE WAS KILLED IN THE COUNTRY BOMB THROWING. LeT, JeM, போன்ற தீவிரவாத இயக்கங்கள், பாராளமன்றம் போன்ற இடங்களை எப்பொழுதாவது தான் தாக்குக்கிறது, பெரும்பாலான தாக்குதல்கள் நம்மை (சாதாரண மக்கள்) நோக்கி ஏவப்படுகிறது!!! அது உங்கள் பார்வையில் சுந்தந்திர போராட்டமாகவா தெரியுது?? உங்களில் வீட்டில் வந்து ஒரு தீவிரவாதி பிரிவினைவாத நோக்கத்துடன் இது போல் ஒரு செயலை செய்தால், இது போன்ற வாதங்கள் உங்களிடமிருந்து வருமா?

// 4. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பகத்சிங்கை தூக்கில் போட்டது போலத்தான் இந்திய அரசமைப்பும் நடக்க வேண்டுமா?
அப்படி தூக்கில் போடுவதுதான் சரி என்று காஷ்மீரி மிதவாதத் தலைவர் யாராவது வாதிட்டால் அவருக்கு என்ன பட்டம் கிடைக்கும்? //

சட்டம் தன் வேளையை செய்யும் போது அதை இது போன்ற விதண்டாவாதங்களால் அழிக்கநினைப்பது நாளை நம்மையும் பாதிக்கும் என்று எண்ணுவது நல்லது!!! தூக்கில் போடுவது சரி வாதாடும் காஷ்மீரி மிதவாதத் தலைவர் கஷ்மீர் மற்றும் தேசத்தின் நலனிலும் அக்கறையுள்ளவர் என்று அர்ந்தம். அவர் ஒரு உண்மையான இந்திய காஷ்மீரியாக செல்படுகிறார் என்று அர்த்தம். பாகிஸ்தனின் மூளைச்சலவையால் செயல்படவில்லை என்று நிரூப்பிக்கிறார் என்று அர்த்தம்.

//5. பகத் சிங் துப்பாக்கிக் குதிரையை இழுத்த விரல்களுக்கு சொந்தமானவர். அஃப்சல் பயங்கரச் செயலைச் செய்தவர்களுக்கு உதவி செய்ததாக மட்டுமே குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அந்த நீதியில் திலகர் முதலான பல தீவிரவாதத் தலைவர்கள் அஃப்சலின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். //

சாரி மா.சி. நீங்க அடிப்படை விசயமே தெரியாமா வாதாட வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். அப்சல் இந்திய அரசுக்கும் மக்களுக்கு எதிரான தாக்குதலை டிசைன் செய்தவன், அதுவும் பாகிஸ்தானின் தூண்டுதலால் மற்றும் உதவியால் செய்தது, உதவி செய்தவன் அல்ல!!! அது உச்ச நீதி மன்றம் வரை நிரூபிக்கப்பட்டுள்ளது.
கேள்வி ரொம்ப சுலபம், அதை மறைமுகமாக குமரண் எண்ணம் கேட்கிறார். ஆனால் We the People வோ, அப்சலை நியாயப்படுத்த விளைவதாக தவறாக எண்ணி எதிர்வினை புரிகீறார்.

கொஞ்சம் தெளிவு படுத்திக் கேட்க்கலாம் என்று தோன்றுகிறது.

* அப்சலை தண்டிப்பது நோக்கமா? அல்லது மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பது நோக்கமா?

* இரண்டுக்கும் தொடர்பு உள்ளதா? இருந்தால் அது என்ன?

* அப்படி தொடர்பு இல்லையெனில் தீர்வு என்ன?

* ஜனநாயகம் என்பது என்ன? காஸ்மீரிகளின் மீது இந்திய இறையாண்மையை திணிப்பதா?(I don't like a seperate kashmir. But I can't help it if they don't like. I can do nothing but preach about remain with India).

பதில் கிடைக்குமா? தெரியவில்லை....

அசுரன்
We The People said…
அசுரன் இந்த பதிவே அப்சலை நியாபடுத்துபவர்களை சாடத்தான் போடப்பட்டது! இங்கு அதற்கு எதிராக வரும் வாதங்களைத்தான் நான் வாதிடுகிறேன்.மா.சி கூறும் சில தவறான வாதங்களும்,

ஜம்மு & காஷ்மீரை நமது படை பலத்தால் இணைக்கவில்லை என்ற அடிப்படை விசயத்தை உணர்த்தவும். ஜம்மு & காஷ்மீரை பாகிஸ்தானியரின் படைகளில் ஆக்கிரமிப்பும் & அராஜகங்களை விரட்டியடிக்க தன்னால் முடியாது என்பதை உணர்ந்த காரணத்துக்காக நம்முடம் வந்து இணைந்ததையும் எடுத்துக்கூறினேன் அவ்வளவே.

//* அப்சலை தண்டிப்பது நோக்கமா? அல்லது மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பது நோக்கமா? //

அப்சல் தண்டிப்பற்கும் மக்கள் பிரச்சனைக்கு என்ன சம்பந்தம் அசுரன்?? இது அப்சலுக்கான தண்டனை அல்ல தீவிரவாத்தால் மக்களை கொல்லுபவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை. தவறு செய்தவன் யாராக இருந்தாலும் அவன் தண்டிக்கப்படவேண்டியவன் என்பது என் கூற்று.

மக்கள் பிரச்சனை அறவழியில் போராடப்படவேண்டிய ஒன்று! மக்கள் பிரச்சனைக்கு மக்களை கொல்வது தீர்வாகாது!! குமரன் எண்ணம் சொல்வது போல் காஷ்மீரில் 60 வருடங்களாக பிரச்சனையில்லை. கடந்த 16 வருடங்களாக தான் பிரச்சனை. அதற்கு பின்னால் உள்ளது மக்கள் அல்ல, பாகிஸ்தான்! அவர்களின் தூண்டுதலின் பேரிலேயே இங்கு தீவிரவாதம் பொது மக்களை கொல்கிறது.

//* இரண்டுக்கும் தொடர்பு உள்ளதா? இருந்தால் அது என்ன?//

என்னை பொருத்தவரை இரண்டுக்கும் தொடர்பு இல்லை.

//* அப்படி தொடர்பு இல்லையெனில் தீர்வு என்ன?//

தீர்வு சொல்லற அளவுக்கு நான் என்ன தலைவனா?? இந்த பிரச்சனையில் என் கருத்தைதான் நான் இங்கே பதிகிறேன். தீர்வுகள் 16 வருடங்களாக ஆயிரம் பேர் சேர்ந்து கிடைக்கவில்லை!!??

//* ஜனநாயகம் என்பது என்ன? காஸ்மீரிகளின் மீது இந்திய இறையாண்மையை திணிப்பதா?(I don't like a seperate kashmir. But I can't help it if they don't like. I can do nothing but preach about remain with India).//

ஜம்மு & காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியா இணைந்த பின் இந்தியாவின் இறையாண்மையை காப்பதில் அதற்கும் ஒரு பங்கு உண்டு என்று நினைக்கிறேன். அங்கு வாழும் மக்களுக்கும் அதை மதித்து காப்பதில் பங்கு உண்டு. அவர் தனியாக போக விரும்புகிறார்கள் என்றால் அவர்களுக்கு அதை சொல்ல உரிமை உண்டு, ஆனால் அந்த பேரை சொல்லி மக்களை கொல்ல உரிமையில்லை. அங்கு அடக்குமுறை ஆட்சி நடக்கவில்லை. அவர்கள் விரும்பிய தலைவனே ஆட்சி செய்கிறான். எந்த மாநிலத்துக்கு இல்லாத சுதந்திரம் (Autonomous) ஜம்மு & காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டுள்ளது!!! டெல்லியிலும், மும்பையில் குண்டு வைத்துத்தான் நான் தனிநாடு கேட்ப்பேன் என்றால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கக்கூடாது என்பது என்வாதம்.
முதலில் ஐ.நா. சபையில் காஸ்மீர் குறித்து உள்ள தாவா என்ன என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளவும். அன்றைய இந்து அரசர், பாகிஸ்தானியர்களை விரட்டும் காலம் மட்டுமே இந்திய ராணுவம் அங்கிருக்க வேண்டும் என்று பேசி அனுமதித்து, பிறகு வலுக்கட்டாயமாக அங்கு இந்திய ராணுவம் நிலை கொண்ட பிற்ப்பாடு, refrendum(கருத்துக் கேட்க்கும் தேர்தல்) நடத்துவது என்று ஐ.நாவில் ஒப்புதல் கொடுத்து அதை இன்றுவரை நடத்தாமல் அரஜகமாக ஒரு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது உங்களது ஆளும் வர்க்க இந்தியா.

இதன் விளைவுதான் இன்றும் அங்குள்ள பெரும்பான்மை மக்கள் தனி காஸ்மீர் விரும்புகிறார்கள்(2001 times of India கருத்துக்கணிப்பு - 63%).

இதற்க்கான விலையை எமது ஏழை மக்கள் நித்தம் இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த repercussion வன்முறைகளை சாக்கிட்டு பல மக்கள் விரோத சட்டங்களையும் கொண்டு வந்து இரட்டை தாக்குதலுக்கு வித்திட்டுள்ளது உங்களது ஆளும் வர்க்க இந்தியா?

யார் உங்களது மக்கள்? பாராளுமன்றத்தில் உட்கார்ந்து இந்தியாவை பேரம் பேசி விற்றுக் கொண்டிருப்பவர்களா?

பிரச்சனையின் ஆழம் தெரியாது ஆனால் அப்சலை கொல்வது மட்டும் தீர்வு என்று கூறுவீர்களா?

அப்படியெனில் உங்களது கருத்தை தெரிவிக்கமாலேயே இருப்பதுதான் நல்லது.

ஏனெனில், ஒரு பிரச்சனை பற்றிய முழுமையான பரிணாமத்தை கொடுக்க இயலவில்லையெனில் அது குறித்த் அரைகுறை பரிணாமத்தைக் கொடுத்து கெடுதல் செய்வதை விடுங்கள்.

Mind you, this argument is neither to offend nor to deffend the death sentence of அப்சல். ஆனால் இந்த ஒட்டு மொத்த சம்பவத்தில் எமது மக்களின் பிரச்சனைகளும் ஒட்டு மொத்தமாக சவக் குழி தோண்டி புதைக்கப்படுவது குறித்தும், அதற்க்கு ஜால்ரா தட்டும் அறிவு ஜீவி pseudo nationalistic நடுத்தர வர்க்கத்தை கேள்விக் குள்ளாக்குவதுமே வாதம்.

அப்சலை தூக்கில் போடக் கூடாது என்றவுடன் ஆவேசமாக பதிவிட்ட நீங்கள், அதன் பிரச்சனைகளை ஆராய்ச்சி செய்வது என்று வந்தவுடன், எனக்கென்ன வந்தது என்று பின்வாங்குவதில்('நானெல்லாம் அந்த அளவு அறிவுஜீவி கிடையாது' என்று கூறி) உங்களது நோக்கத்தை நான் ஏன் சந்தேகிக்க கூடாது?

அசுரன்
We The People said…
குமரன் எண்ணம்,

//ஏன்னா அப்சல் முஸ்லீம் முஸ்லீம்கள் எல்லாருமே தவறானவர்கள் இல்லையா?
// இப்படி ஒரு வாதம் நான் வைக்கல நீங்களா முடிபண்ணிக்கிட்டா நான் என்ன செய்யமுடியும். நான் தாராசிங்கையும் தான் தூக்குல போடனும் என்று சொன்னேன். அப்ப அவன் ஹிந்து அதனால தான் அவன தூக்குல போடனுன்னு சொன்னதா அர்தமா?? ஏங்க தேவையில்லாம மதத்தை இழுத்து விட்டு வம்ப இழுக்கறீங்க???

//நீங்க ஜட்ஜா தூக்கில போடுன்னு சொல்லறீங்க? //

ஏங்க தூக்கில போடுன்னு சொன்னது நான் இல்லைங்க குமரன். உச்ச நீதிமன்ற நீதிபதிகள். அதுவே உங்களுக்கு தெரியாதா? நான் உச்ச நீதிமன்றதின் தீர்ப்பை நிறைவேற்றனுன்னு தான் சொல்லறேன்.

ஒருத்தனோட உயிருக்கு இப்படி பேசறீங்க. டெல்லியிலும், மூம்பையிலும் செத்தவங்களும் மனுஷங்தானுங்க.

Soft corner toward extremists will make them more strong and make them get more stems bcoz indian govt is not gonna give them Capital punishment. இன்று அப்சலுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தா? நாளை ஒரு விமான கடத்தல் அவனுக்காக நடக்கும், 100 பயனிகளின் தலைக்கு பதில் அப்சல் Exchange ஆக்கப்படமாட்டான் என்பது என்ன நிச்சயம்?? பல தீவிரவாதிகள் இது போல் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்!! கோபம் கொள்வதை விட்டு விட்டு நல்லா யோசிச்சு பேசுங்க குமரன்.
Anonymous said…
//அசுரன்:
Then what is the difference between Bhagat sing and அப்சல்?
//

அப்சல் is தீவிரவாதி for india.

Bhagat sing was தீவிரவாதி for england.

you should stand for which side?
We The People said…
அசுரன்,

//முதலில் ஐ.நா. சபையில் காஸ்மீர் குறித்து உள்ள தாவா என்ன என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளவும். அன்றைய இந்து அரசர், பாகிஸ்தானியர்களை விரட்டும் காலம் மட்டுமே இந்திய ராணுவம் அங்கிருக்க வேண்டும் என்று பேசி அனுமதித்து//

நீங்க தான் தெரிந்து கொள்ளாமல் சொல்லறீங்க. பாகிஸ்தானின் படையை விரட்டியடிக்க ஐ.நா சபைக்கு போகவில்லை.பாகிஸ்தான் படை விரட்ப்பட இந்தியா அரசு தான் ஐ.நா சென்றது. அனைத்து விசயமும் மேலே உள்ள சுட்டியில் உள்ளது. இன்றும் ஜம்மு & காஷ்மீரின் பெரும் பகுதி பாகிஸ்தானில் தான் உள்ளது. ஐ.நா வின் போர் நிறுத்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் தான் போடப்பட்டது. பாகிஸ்தானும் தன்னிடம் இருக்கும் காஷ்மீரை இந்தியாவிடம் ஓப்படைக்க வேண்டும், அப்படி பாகிஸ்தான் ஒப்படைத்தவுடன் இந்தியா ஓட்டு எடுத்து மக்கள் யாரிடம் இணைந்து கொள்ள ஓட்டுயிடுகிறார்களே அதற்கு இரு நாடுகள் ஓப்புக்கொள்ள வேண்டும் என்பதே அந்த தாவாக்கு ஐ.நா தந்த தீர்ப்பு. இதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அன்று ஏனோ தன்னிடம் உள்ள காஷ்மீரை ஓப்படைக்கவில்லை. அன்று ஓட்டெடுப்பு நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் செய்த அராஜகத்தால் தன்னுடன் இணைய மக்கள் ஓட்டு போடமாட்டார்கள் என்று எண்ணி இருக்கலாம். உண்மை இப்படி இருக்க நீங்க என்ன என்னவோ சொல்லறீங்க. பாகிஸ்தான் முழுமையா காஷ்மீரை விட்டு சென்றால் தான் பொது ஓட்டெடுப்பு நடத்தமுடியும். நீங்க சொல்லும் 63% (டைம்ஸ் ஆப் இந்தியா சர்வே) என்ன சொன்னாங்க என்று தெரியாது. முழு ஓட்டெடுப்பு நடத்தினாலே உண்மையில் மக்கள் என்ன சொல்லறாங்க என்று சொல்லமுடியும். அது போதாதற்கு கடந்த 16 ஆண்டுகளாக சுமார் நான்கு லட்சம் ஜம்மு மக்கள் (கஷ்மீரி பண்டிட்டுகள்) அங்கிருந்து அடித்து வெளியேற்றப்பட்டு டெல்லியில் அகதிகளாக வாழ்கிறார்கள் என்றாவது தனக்கு தன் வீடு திரும்ப கிடைக்கும் என்று. அவர்களும் ஜம்மு & காஷ்மீரின் பூர்வ குடி மக்களே!!! அவர்களும் அந்த ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவேண்டும். இத்தனை விசயம் இருக்கு. ஒரு விசயமும் தெரியாமல் ஏது எல்லாம் தெரிந்தவர் போலவே அசுரம் வாதம் பண்ணறீங்க. This is more complicated than you expect. கொடுத்துள்ள சுட்டிகளை படித்துவிட்டு வாதாட வாங்க நான் ரெடியா இருக்கேன்.
We The People said…
மா.சி,

//ஏன் பிரிவினைவாதி என்றால் கெட்ட வார்த்தையா ஜெய்? ஈழத் தமிழரின் போராட்டம், இந்திய சுதந்திரப் போராட்டம் எல்லாமே ஒரு நிலையில்

பிரிவினைவாதங்கள். //

அப்புறம் பிரிவினைவாதம் நல்ல வார்தையா? ஈழத் தமிழரின் போராட்டம் என்ன, அதன் விசயங்கள் என்ன என்று இந்த பதிவில் ஆராய்வது தேவையில்லை, இந்திய சுதந்திரப்போராட்டம் எப்படி ஒரு பிரிவினைவாதம் என்று விளக்கமுடியுமா? எந்த நிலையில் பிரிவினைவாதம்?? என் வாதங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டமும், இந்தியாவிற்கு எதிரான போராட்டங்களுக்கு உள்ள வித்தியாசங்களை பற்றி. புரியும் என்று நினைக்கிறேன்.

//பரவலான நன்மை கிடைப்பது நின்று போனால் எந்த அமைப்பும் புனிதப் பசு கிடையாது. 'யாமார்க்கும் குடியல்லோம்' என்னுடைய எல்லைகளில்

தலையிடாதது வரை மாநில அரசாகட்டும், மத்திய அரசாகட்டும் ஏற்றுக் கொள்வோம். அந்த எல்லைக்குள் மூக்கு நுழைந்தால் ஒத்துழையாமை

என்று நமது ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வது தனிமனித உரிமை.//

நானும் இதை ஆதரிக்கிறேன். ஆனால் இந்த கருத்துக்கும் இந்த பதிவுக்கு என்ன சம்பந்தம் என்று சொல்லமுடியுமா?? எந்த உரிமை தரப்படவில்லை??

//எல்லாமே சார்புடையவைதான். நாட்டின் பேரால் ஒரு மனிதனை தூக்கில் போட இந்திய தேசத்துக்கு உரிமை இருக்கிறது என்றால், அதே

தேசியத்தின் பேரில் நாடாளுமன்றத்தில் குண்டு வைக்கவும் அஃப்சலுக்கு உரிமை இருக்கிறது?//

சும்மா டைம் பாஸ்க்கு தூக்கில் போடவில்லை மா.சி!! என்ன யோசிக்காம எழுதிட்டீங்களா?? தேசியத்தின் பேரில் உங்க வீட்டில் குண்டு வைக்க உரிமை இருக்கா??? இருந்தா, இதோ வரேன் ::))) ரொம்ப ஓவர் சாமி!!!!


//அஃப்சல் பாகிஸ்தானுக்குப் போவது தவறு என்றால், நேதாஜி ஜப்பானுக்கும், ஜெர்மனிக்கும், இத்தாலிக்கும் போனது எதில் சேரும்? (என்னைப்

பொறுத்த வரை இரண்டுமே தவறுதான்).//

அப்சல் போன்றவர்கள் பாகிஸ்தானுக்கு அவர்களாக போல தலைவா!!! பாகிஸ்தானின் ISI உளவுத்துறை மூளைச்சலவை செய்து கொண்டுபோகுது. நேதாஜி உயிரோட இருந்திருந்தா இன்னைக்கு தூக்கு போட்டு செத்துப்போயிருப்பாரு. அடப்பாவிங்களா நேதாஜி கூட அப்சலை ஒப்பிடற அளவுக்கு வந்திருச்சா?? நேதாஜி தன் நாட்டுக்கு சுதந்திரம் பெருவதற்காக போனதுக்கும் இதுக்குமா உங்களுக்கு வித்தியாசம் தெரியல??!!! நேதாஜி எத்தனை இந்தியனை கொன்றாரு சுதந்திர போராட்டதுக்கு??? என்ன லாஜிக் தலைவா இது???!!!

//தமக்கு ஏற்றது போல வாதங்களை வளைத்துக் கொள்வதுதான் தேசியவாதம் போன்ற குறுகிய கொள்கைகளின் விளைவு.//

இது உங்களுக்கு பொருந்துமா?? தேசியவாதம் குறுகிய கொள்கையா? அப்ப காஷ்மீர் தனி நாடு கேக்கறது தான் பறந்த கொள்கையின் விளைவா??
We can discuss the UNO resolution and other stuffs in detail latter(tommorrow). But to understand the anti india feelings of Kashmiries, protests agianst the sentence of Afsal are enough.

Just tell that Your government has no intention to give a populace solution to kashmiri issue. don't tell that there is no solution at all.

Yes it is true that the entire episode from the beggining have the hue of religion and much more complicated now. And I mention(even in the discussion going on in my blog) the solution that includes Kashmiri pandits too.

If your government can organize Elections for State assemply then What hinders the same government to give a chance for a refrendum?

It needs just a honest approach to solve the people's problem. That ur government never showed(honest) in any of the people's problem.

And If the refrendum goes against our will(including me). The entire episode become the problem of International community.

This political side of the whole incident should be addressed not the Afsal are so people, to solve the ever ending bloodshed of Extremism in India.

Just tell me have you ever addressed this?

Asuran.
We The People said…
Asuran,

Lets discuss the same 2morrow. The intentions of my government in solving the issue is creating room for peace talks with pakistan bcoz that is the root cause for all issues extremism in india. After somany hit backs like Kargil, Mumbai Stockexchange bomb blast, Delhi market bomb blast, mumbai Trains blasting, etc., after all these playing of Pakistan, My govt is still ready to sit on a table to discuss the issues of people to resolve it from the root cause. Anyway i will discuss these things tomorrow in a better manner.

Thanx asuran.
வஜ்ரா, ஜெய்,

என்னுடைய புரிதல்கள் இங்கே.

ஒரு அமைப்பில் சேரும் முறைகள் ஏற்றுக் கொள்ளப்படுபவையாக இருக்க வேண்டும்.
சேர்ந்த பிறகு செய்ய வேண்டிய கடமைகள், கிடைக்கும் உரிமைகள் வரையறுக்கப்படுகின்றன.
அவற்றில் மனத் தாங்கல் இருந்தால் தீர்த்துக் கொள்ளவும் வழி முறைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இந்தியக் குறுநில மன்னர்கள் ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் வந்த முறைகள் சரி என்றும், சரியில்லை என்றும் இரண்டு பக்கமும் வாதிட முடியும். ஒரு மன்னர் தனது குடிமக்களைக் கலந்தாலோசிக்காமலேயே ஒரு கையெழுத்து மூலம் நாட்டை இன்னொரு நாட்டுடன் இணைப்பது செல்லுபடியாகும் என்ற அதே அடிப்படையில்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. அதற்குக் காரணம் பொருளாதாரக் கட்டாயங்கள், படை நிர்ப்பந்தங்கள், வேறு தந்திரங்கள் என்று எது இருந்தாலும் இணைந்தது ஒரே நிகழ்வுதான்.

அந்த நோக்கில் ஆங்கிலேயர்களுக்கு இந்தியப் பகுதிகளை ஆள இருந்த அதே அளவு உரிமைதான் இந்தியக் கூட்டாட்சிக்கு காஷ்மீர் மேல் இருக்கிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் மக்கள் குடியாட்சியை ஏற்றுக் கொண்டு சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும்பான்மை மக்களுக்கு இந்தியாவுடன் ஒன்று சேர்ந்த உணர்வே இல்லை. எப்படி பிரிட்டிஷ் இந்தியாவில் தலைவர்களும் மக்களும் அன்னிய ஆட்சியை எதிர்ப்பது தமது உரிமை என்று நினைத்தார்களோ அதே போலத்தான் காஷ்மீர் பிரிவினைவாதிகளும், அவர்களுக்க ஆதரவளிக்கும் பாகிஸ்தானும் செயல்படுகிறார்கள்.

இந்த எதிர்ப்பைத் தெரிவிப்பதில் பல வழி முறைகள். 'சரியோ, தவறோ நம் மன்னரின் ஒப்புதலின் பேரில் குறிப்பிட்ட ஆட்சிக்குக் கீழ் வாழ்கிறோம். அந்த அமைப்பின் பாதுகாப்பையும் சேவைகளையும் அனுபவிக்கிறோம், அதற்குட்பட்டு நமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும், அந்த அமைப்புக்குள் நம் குறைகளைத் தீர்த்து கொள்ள முயல வேண்டும்' என்று போராடுவது மிதவாதம். இன்றைக்கு இந்திய தேசீய வாதிகளுக்கு தேசீய மாநாட்டுக் கட்சி ஏற்புடையதாக இருக்கிறது. காஷ்மீர் தீவிரவாதிகள் சட்ட விரோதமானவர்கள்.

அதே போலத்தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் மிதவாதம், பகத்சிங் முதலான வன்முறையில் ஈடுபடுபவர்கள் அன்றைய சட்டங்களுக்கு விரோதமானவர்கள் (இன்றைக்கு அஃப்சல் குரு). அஃசல் மீது பாய்ந்த POTA போன்ற ஒரு சிறப்புச் சட்டத்தின் கீழ்தான் பகத்சிங்கும் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் இருக்கும் போது கொலைக் குற்றத்திலும் சேர்க்கப்பட்டார். எதையும் தான் எதிர்க்கப் போவதில்லை என்று பகத்சிங் தேசபக்தியின் பேரில் தண்டனைகளை ஏற்று தியாகியானார்.

நம்மை ஆளுபவர்களை எதிர்க்க ஒத்துழையாமை, சட்ட மறுப்பு என்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி அதற்குக் கிடைக்கும் தண்டனைகளையும் ஏற்றுக் கொள்வது இன்னொரு வழி. இந்த வழியில் தமது செயல்பாடுகளை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு முன்கூட்டியே அறிவித்து தண்டனையை வரவேற்று சிறை புகுவது வழக்கமாக இருந்தது. என்ன செய்தாலும் செய்த செயலுக்குக் கிடைக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு ஆட்சியமைப்பின் கீழ் வசிக்கும் போது அதன் தண்டனைச் சட்டம் மட்டும் தமக்குப் பொருந்தாது என்று பகத் சிங் ஆக இருந்தாலும் சரி, அஃசல் குருவாக இருந்தாலும் சரி, காந்தியாக இருந்தாலும் சரி சொல்ல முடியாது.

இது போராட்டக் காரர்களின் பக்கம். போராட்டத்தை எதிர் கொள்பவர்கள் எப்படி செயல்பட வேண்டும்? பகத் சிங் தூக்கில் போடப் பட்டதால் ஆங்கில அரசு இந்தியாவில் நிலை பெற முடிந்ததா? ஒரு பகத் சிங்கின் வீரம் எத்தனை இளைஞர்களை தட்டி எழுப்பியது? இந்திய கூட்டமைப்பு வலுப்பெற வேண்டும் என்று வேண்டுபவர்கள், 'கண்ணுக்குக் கண்' என்று நிற்காமல், காஷ்மீரின் குறைகளை துணிச்சலுடன் நியாயமாகக் கையாள முன் வர வேண்டும். அஃப்சலை தூக்கில் போடுவது நமக்கு இருக்கும் சட்ட அமைப்பு கொடுத்த தீர்ப்பு, அதை அரசியல் முன்நோக்குடன் கையாண்டு பிரச்சனைக்குத் தீர்வு காண முயல்வது நாட்டுத் தலைமையின் பெருமை.

மரண தண்டனை என்பது அருவெறுக்கத்தக்க வழி என்பதில் ஐயமே இல்லை. ஒவ்வொரு வழக்கைப் பொறுத்து ஒவ்வொருவரின் கருத்து மாறுகிறது.

சுருக்கமாக பகத்சிங்==அஃப்சல் குரு, காஷ்மீரில் இந்திய ஆட்சி==இந்தியாவில் ஆங்கில ஆட்சி. இந்த புரிதலின் அடிப்படையில் அஃப்சல் கொல்லப்பட வேண்டுமா என்று நினைத்துப் பாருங்கள்.

அனானி, நான் என்ன எழுதுகிறேன், எப்படி எழுதுகிறேன் என்று உங்கள் சான்றிதழ்களுக்கு நன்றி. உங்கள் பெயரும் ஊரும் தெரிந்தால் உங்கள் தகுதிகளையும் புரிந்து கொள்வோம்.

அன்புடன்,

மா சிவகுமார்
சில சுட்டிகள்

http://www.kmsnews.org/Kashmir%20News%20Archive/03/News031006-06.htm (அஃப்சலின் வழக்கு விபரங்கள் - வழக்கு நடந்தது POTA நீதி மன்றத்தில், மேல் நீதிமன்றங்கள் அதன் அடிப்படையை ஊர்தி செய்கின்றன)

http://en.wikipedia.org/wiki/Bhagat_Singh - பகத் சிங்கின் விக்கிபீடியா பக்கம். சாண்டர்ஸ் என்பவரைக் கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டி அதை ஏற்றுக் கொண்டு தண்டனை பெறுகிறார்.

அன்புடன்,

மா சிவகுமார்
I am removing the comments given by me. There shd be a proper way of conveying things which i didnt follow, so i feel sorry about some of the words used by me. Also I feel its personal interoception which could make us realise who could be wrong in what aspect not discussions as we all have ego's which are bigger than mt. everest.
Anonymous said…
//என்னுடைய புரிதல்கள் இங்கே. //

என்னுடைய உளறல்கள் இங்கேன்னு சொல்லி இருக்க வேண்டும்.

//ஒரு அமைப்பில் சேரும் முறைகள் ஏற்றுக் கொள்ளப்படுபவையாக இருக்க வேண்டும்.//

யார் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவை இருக்க வேண்டும்? ஒசாமா பின்லேடனா அல்லது முல்லா முகமது ஓமரா?

//இந்தியக் குறுநில மன்னர்கள் ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் வந்த முறைகள் சரி என்றும், சரியில்லை என்றும் இரண்டு பக்கமும் வாதிட முடியும்.//

அப்படி இருக்க நீங்கள் "சரி இல்லை" என்ற பக்கத்தில் மட்டுமே நின்று வாதிடுவது ஏன்?

//ஒரு மன்னர் தனது குடிமக்களைக் கலந்தாலோசிக்காமலேயே ஒரு கையெழுத்து மூலம் நாட்டை இன்னொரு நாட்டுடன் இணைப்பது செல்லுபடியாகும் என்ற அதே அடிப்படையில்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.//

வரலாறு தெரியுமாய்யா உனக்கு? ஷேக் அப்துல்லாவும் தான் அப்போது அந்த இணைப்பை ஆதரித்தார். காஷ்மிர் மக்களின் பிரதிநிதி அவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லையே? படை எடுத்து பாகிஸ்தான்காரன் காஷ்மீர் முழுக்க கொளுத்துகிறான். கருத்து கணிப்பா நடத்திக்கொண்டு இருக்க முடியும் அப்போது?

//அந்த நோக்கில் ஆங்கிலேயர்களுக்கு இந்தியப் பகுதிகளை ஆள இருந்த அதே அளவு உரிமைதான் இந்தியக் கூட்டாட்சிக்கு காஷ்மீர் மேல் இருக்கிறது.//

உளறல் ஆரம்பித்து விட்டது.

கர்சன் பிரபுவை ஓட்டு போட்டா இந்திய தேர்ந்தெடுத்தான்? ஆனால் மன்மோகனுக்கு காஷ்மீர் காரனும் தானேய்யா ஓட்டு போட்டான்?அப்புறம் எப்படிய்யா பிரிட்டன், போர்ச்சுகல்ன்னு உளறுறீங்க?

//காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும்பான்மை மக்களுக்கு இந்தியாவுடன் ஒன்று சேர்ந்த உணர்வே இல்லை.//

யார் சொன்னது இது? நாடி ஜோசியரா இல்லை பர்வேஸ் முஷாரப்பா?

//எப்படி பிரிட்டிஷ் இந்தியாவில் தலைவர்களும் மக்களும் அன்னிய ஆட்சியை எதிர்ப்பது தமது உரிமை என்று நினைத்தார்களோ அதே போலத்தான் காஷ்மீர் பிரிவினைவாதிகளும், அவர்களுக்க ஆதரவளிக்கும் பாகிஸ்தானும் செயல்படுகிறார்கள். //

பிரிவினைவாதி அப்படித்தான்யா நினைப்பான். மக்கள் என்னய்யா நினைக்கறாங்க? நீராகவே கற்பனை பண்ணிட்டு உளறுறீரு, அதனால் கேட்டேன்.

//இன்றைக்கு இந்திய தேசீய வாதிகளுக்கு தேசீய மாநாட்டுக் கட்சி ஏற்புடையதாக இருக்கிறது. காஷ்மீர் தீவிரவாதிகள் சட்ட விரோதமானவர்கள்.//

தீவிரவாதி எல்லாம் சட்ட விரோதிதான்யா. அடுத்து உலகம் உருண்டை என்பீரோ? கர்மம்யா..கர்மம்.

//அதே போலத்தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் மிதவாதம், பகத்சிங் முதலான வன்முறையில் ஈடுபடுபவர்கள் அன்றைய சட்டங்களுக்கு விரோதமானவர்கள் (இன்றைக்கு அஃப்சல் குரு)//

மறுபடியும் மட்டையடியை துவக்கி விட்டீரா? ஜின் சா...ஜின் சா..ஜால்ராவும், சப்ளாகட்டையும் ஒலிக்கும் சத்தம் கேட்குது..கேட்குது.
ஒசாமா பின்லேடன் கூட சட்டத்துக்கு விரோதமானவன் தான். உடனே அவன் பகச்த்சிங்காய்யா?

//என்ன செய்தாலும் செய்த செயலுக்குக் கிடைக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு ஆட்சியமைப்பின் கீழ் வசிக்கும் போது அதன் தண்டனைச் சட்டம் மட்டும் தமக்குப் பொருந்தாது என்று பகத் சிங் ஆக இருந்தாலும் சரி, அஃசல் குருவாக இருந்தாலும் சரி, காந்தியாக இருந்தாலும் சரி சொல்ல முடியாது. //

அப்படி வாங்க வழிக்கு.

//'கண்ணுக்குக் கண்' என்று நிற்காமல், காஷ்மீரின் குறைகளை துணிச்சலுடன் நியாயமாகக் கையாள முன் வர வேண்டும். அஃப்சலை தூக்கில் போடுவது நமக்கு இருக்கும் சட்ட அமைப்பு கொடுத்த தீர்ப்பு, அதை அரசியல் முன்நோக்குடன் கையாண்டு பிரச்சனைக்குத் தீர்வு காண முயல்வது நாட்டுத் தலைமையின் பெருமை.//

அந்த நாயை முச்சந்தியில் கழுவேற்றினால் தான்யா நாட்டுக்கு பெருமை. கூட உன்னை மாதிரி உளறுவாயன்களின் ஓட்டைவாயை பிளாஸ்திரி கொண்டு அடைக்கணும். அதென்னய்யா போட்டோவில் அப்படி ஒரு இளிப்பு?

//மரண தண்டனை என்பது அருவெறுக்கத்தக்க வழி என்பதில் ஐயமே இல்லை. ஒவ்வொரு வழக்கைப் பொறுத்து ஒவ்வொருவரின் கருத்து மாறுகிறது.//

நீ அப்சலுக்கு ஜால்ரா தட்டுவதும் அறுவறுக்கத்தக்க வழி என்பதிலும் ஐயமே இல்லை.

வழக்குக்கு வழக்கு கருத்து மாறுவது சரி. உங்க கருத்து இந்த வழக்கில் ஏன்யா மாறுச்சு?



//அனானி, நான் என்ன எழுதுகிறேன், எப்படி எழுதுகிறேன் என்று உங்கள் சான்றிதழ்களுக்கு நன்றி. உங்கள் பெயரும் ஊரும் தெரிந்தால் உங்கள் தகுதிகளையும் புரிந்து கொள்வோம்.//

என் பேரு: தாண்டவராயன், நம்பர் 6, தோராபோரா மலை குறுக்கு சந்து, ஆப்கானிஸ்தான்.
We The People said…
அனானிகளுக்கு & அதர் ஆப்ஷன் உபயோகிக்கும் நன்பர்களுக்கு,

தயவு செய்து தனி மனித தாக்குதல் இல்லாமல் பின்னூட்டம் இடவும். கருத்து நன்றாக இருந்தும் தனி மனித தாக்குதல் உள்ள காரணத்தால் பல பின்னூட்டங்கள் வெளியிடப்படாமல் போகக்கூடும் என்று எண்ணி பின்னூட்டம் இடவும்.

நன்றி,

ஜெய்
//ஒரு அமைப்பில் சேரும் முறைகள் ஏற்றுக் கொள்ளப்படுபவையாக இருக்க வேண்டும்.//
//யார் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவை இருக்க வேண்டும்? ஒசாமா பின்லேடனா அல்லது முல்லா முகமது ஓமரா?//

அதில் சேரும் பெரும்பான்மை மக்களுக்கு.

//இந்தியக் குறுநில மன்னர்கள் ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் வந்த முறைகள் சரி என்றும், சரியில்லை என்றும் இரண்டு பக்கமும் வாதிட முடியும்.//
//அப்படி இருக்க நீங்கள் "சரி இல்லை" என்ற பக்கத்தில் மட்டுமே நின்று வாதிடுவது ஏன்?//

நான் சரியில்லை என்று வாதிடவில்லையே!

//ஒரு மன்னர் தனது குடிமக்களைக் கலந்தாலோசிக்காமலேயே ஒரு கையெழுத்து மூலம் நாட்டை இன்னொரு நாட்டுடன் இணைப்பது செல்லுபடியாகும் என்ற அதே அடிப்படையில்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.//
//வரலாறு தெரியுமாய்யா உனக்கு? ஷேக் அப்துல்லாவும் தான் அப்போது அந்த இணைப்பை ஆதரித்தார். காஷ்மிர் மக்களின் பிரதிநிதி அவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லையே? படை எடுத்து பாகிஸ்தான்காரன் காஷ்மீர் முழுக்க கொளுத்துகிறான். கருத்து கணிப்பா நடத்திக்கொண்டு இருக்க முடியும் அப்போது?//

ஏன் படை எடுப்பு முடிந்த பிறகு கருத்துக் கணிப்பு நடத்தவில்லை?

//அந்த நோக்கில் ஆங்கிலேயர்களுக்கு இந்தியப் பகுதிகளை ஆள இருந்த அதே அளவு உரிமைதான் இந்தியக் கூட்டாட்சிக்கு காஷ்மீர் மேல் இருக்கிறது.//
//உளறல் ஆரம்பித்து விட்டது.
//கர்சன் பிரபுவை ஓட்டு போட்டா இந்திய தேர்ந்தெடுத்தான்? ஆனால் மன்மோகனுக்கு காஷ்மீர் காரனும் தானேய்யா ஓட்டு போட்டான்?அப்புறம் எப்படிய்யா பிரிட்டன், போர்ச்சுகல்ன்னு உளறுறீங்க?//

மன்மோகன் சிங்குற்கு எத்தனை சதவீத மக்கள் ஓட்டு போட்டார்கள்?

//காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும்பான்மை மக்களுக்கு இந்தியாவுடன் ஒன்று சேர்ந்த உணர்வே இல்லை.//
//யார் சொன்னது இது? நாடி ஜோசியரா இல்லை பர்வேஸ் முஷாரப்பா?//

நடுநிலையாகப் பார்க்கும் ஊடகங்களும் உலக நாடுகளும்.

//எப்படி பிரிட்டிஷ் இந்தியாவில் தலைவர்களும் மக்களும் அன்னிய ஆட்சியை எதிர்ப்பது தமது உரிமை என்று நினைத்தார்களோ அதே போலத்தான் காஷ்மீர் பிரிவினைவாதிகளும், அவர்களுக்க ஆதரவளிக்கும் பாகிஸ்தானும் செயல்படுகிறார்கள். //
//பிரிவினைவாதி அப்படித்தான்யா நினைப்பான். மக்கள் என்னய்யா நினைக்கறாங்க? நீராகவே கற்பனை பண்ணிட்டு உளறுறீரு, அதனால் கேட்டேன்.//

கருத்துக் கணிப்பு நடத்த வேண்டியதுதான்.

//இன்றைக்கு இந்திய தேசீய வாதிகளுக்கு தேசீய மாநாட்டுக் கட்சி ஏற்புடையதாக இருக்கிறது. காஷ்மீர் தீவிரவாதிகள் சட்ட விரோதமானவர்கள்.//
//தீவிரவாதி எல்லாம் சட்ட விரோதிதான்யா. அடுத்து உலகம் உருண்டை என்பீரோ? கர்மம்யா..கர்மம்.//

அப்போ பகத்சிங்கும் சட்டவிரோதிதானே?

//அதே போலத்தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் மிதவாதம், பகத்சிங் முதலான வன்முறையில் ஈடுபடுபவர்கள் அன்றைய சட்டங்களுக்கு விரோதமானவர்கள் (இன்றைக்கு அஃப்சல் குரு)//
//மறுபடியும் மட்டையடியை துவக்கி விட்டீரா? ஜின் சா...ஜின் சா..ஜால்ராவும், சப்ளாகட்டையும் ஒலிக்கும் சத்தம் கேட்குது..கேட்குது. ஒசாமா பின்லேடன் கூட சட்டத்துக்கு விரோதமானவன் தான். உடனே அவன் பகச்த்சிங்காய்யா?//

தனது நம்பிக்கைக்காக வன்முறையை கையில் எடுப்பவர்கள் எல்லோருமே சட்ட விரோதிகள். நமது வசதிக்கேற்ப பகத் சிங் என்றால் ஆதரிப்போம், அஃப்சல் குரு என்றால் எதிர்ப்போம் என்பது எப்படி?

//என்ன செய்தாலும் செய்த செயலுக்குக் கிடைக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு ஆட்சியமைப்பின் கீழ் வசிக்கும் போது அதன் தண்டனைச் சட்டம் மட்டும் தமக்குப் பொருந்தாது என்று பகத் சிங் ஆக இருந்தாலும் சரி, அஃசல் குருவாக இருந்தாலும் சரி, காந்தியாக இருந்தாலும் சரி சொல்ல முடியாது. //
//அப்படி வா வழிக்கு.//
//'கண்ணுக்குக் கண்' என்று நிற்காமல், காஷ்மீரின் குறைகளை துணிச்சலுடன் நியாயமாகக் கையாள முன் வர வேண்டும். அஃப்சலை தூக்கில் போடுவது நமக்கு இருக்கும் சட்ட அமைப்பு கொடுத்த தீர்ப்பு, அதை அரசியல் முன்நோக்குடன் கையாண்டு பிரச்சனைக்குத் தீர்வு காண முயல்வது நாட்டுத் தலைமையின் பெருமை.//
//அந்த நாயை முச்சந்தியில் கழுவேற்றினால் தான்யா நாட்டுக்கு பெருமை. //

அப்படி செய்வதுதான் நாட்டுக்குப் பெருமை என்றால் நாடு நாளைக்கு இல்லாமல் போய் விடும், பிரிடிஷ் சாம்ராஜ்யம் உருத்தெரியாமல் போனது போல.

//கூட உன்னை மாதிரி உளறுவாயன்களின் ஓட்டைவாயை ளாஸ்திரி கொண்டு அடைக்கணும்.//

பிளாஸ்திரி பத்தாது ஐயா, வாய்களும் அதிகம். நீளமும் அதிகம்.

// அதென்னய்யா போட்டோவில் அப்படி ஒரு இளிப்பு? //

சின்ன வயசிலிருந்தே புன்னகை மன்னன் என்று பெயர் எடுத்தவனாக்கும்.

//நீ போட்ட பொருளாதார கட்டுரையை படிக்காம அவனவன் துண்டை காணோம், துணியை காணோம்னு ஓட ஆரம்பிச்சதும் நீ புத்தகம் பரிசு கொடுக்க ஆரம்பிச்சுட்டே. //

பொருளாதாரம் என்றால் கசப்பாகத்தான் இருக்கும். அதற்குத்தான் பதிவு போட ஆரம்பித்தது. யாருக்காவது உதவினால் மகிழ்ச்சிதான்.

//அதெப்படிய்யா கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம இருக்க முடியுது உன்னால?//

வெட்கம் சுரணை எல்லாம் விட்டுப் போய் நாளாயிற்று தாண்டவராயன். இப்போதெல்லாம் சரி என்று படுவதை செய்து கொண்டே போவது, சரி என்று தோன்றுவதை வெட்கமில்லாமல் உரக்கச் சொல்வது என்று முடிவு. The Emperor's New Clothes படித்திருக்கிறீர்களா? யாருக்கு வெட்கமில்லை?

//மரண தண்டனை என்பது அருவெறுக்கத்தக்க வழி என்பதில் ஐயமே இல்லை. ஒவ்வொரு வழக்கைப் பொறுத்து ஒவ்வொருவரின் கருத்து மாறுகிறது.//

//நீ அப்சலுக்கு ஜால்ரா தட்டுவதும் அறுவறுக்கத்தக்க வழி என்பதிலும் ஐயமே இல்லை. வழக்குக்கு வழக்கு கருத்து மாறுவது சரி. உன் கருத்து இந்த வழக்கில் ஏன்யா மாறுச்சு? ஆளைப் பொறுத்து பச்சோந்தி மாதிரி கருத்தை மாற்றிக்கொள்வாய், இல்லையா? //

பகத்சிங்கிற்கு ஒரு பட்டம், அஃப்சலுக்கு ஒரு நீதி என்று நீங்கள்தான் மாறுகிறீர்கள். என்னைப் பொறுத்த வரை நான் சரி என்று நம்புபவதை யாரைப் பொறுத்தும் மாற்றிக் கொள்வதில்லை.

//இதுவும் ஒரு பிழைப்பாய்யா?//

இது பிழைப்பு கிடையாது. பிழைப்புக்கு வேறு வேலை இருக்கிறது.

//அனானி, நான் என்ன எழுதுகிறேன், எப்படி எழுதுகிறேன் என்று உங்கள் சான்றிதழ்களுக்கு நன்றி. உங்கள் பெயரும் ஊரும் தெரிந்தால் உங்கள் தகுதிகளையும் புரிந்து கொள்வோம்.//
//என் பேரு: தாண்டவராயன், நம்பர் 6, தோராபோரா மலை குறுக்கு சந்து, ஆப்கானிஸ்தான்.//

ஆகா, என்ன துணிச்சல், இந்த துணிச்சலை வைத்துக் கொண்டா நாட்டுக்குச் சேவை செய்யப் போகிறீர்கள்?

அன்புடன்,

மா சிவகுமார்
//Asuran,

Lets discuss the same 2morrow. The intentions of my government in solving the issue is creating room for peace talks with pakistan bcoz that is the root cause for all issues extremism in india. After somany hit backs like Kargil, Mumbai Stockexchange bomb blast, Delhi market bomb blast, mumbai Trains blasting, etc., after all these playing of Pakistan, My govt is still ready to sit on a table to discuss the issues of people to resolve it from the root cause. Anyway i will discuss these things tomorrow in a better manner.

Thanx asuran.

///

Your govrenment(Pakishtan as well) intentions from the begining itself is not to solve the issue. But to annex the kashmir with India by any means.

Just go through the history of Kashmir before and after Pseudo independence. And the various ugly politics(Including the topple of Shaik abdullah government - The then prime ministers of Kashmir. and his furthur imprisonment).

There are now well established evidence both from beurocrats and Journalist to ascertain the ugly politics palyed by Nehru and Jinha in the issue of Kashmir.

One side Nehru tried to acheive by his facist methods with the aid of Patel. The other side Jinha did the same with religious facism.

The talk or negotiations should be done with kashmiri people not with a country like pakishtan. Pakishtan is same as India as far as kashmir is concerned. That is to say they have no right to decide the fate of kashmiri. You accept pakishtan as your opponent in the negotiation table only to justify ur injustice activities in kashmir. This is viz a viz true for pakisthan too.

If kashmir issue is one of the breading ground for islam fundamendalism in India, then it is with kashmiri's we should talk to. Not Pakishtan. (The other breading gorunds are Hindhudva politics, Internation imperialistic politics and New global ambitions of Islamic fundamentalism).

If you can secure the well intentions of kashmiris and Indian muslims how come the foreign hand can survive here. Just look at the root cause. But unfortunately(Indeed well intended) you people always practiced to look for scape goats.

அதாவது, இரண்டு பச்ச பொறுக்கிகளும் சேர்ந்து ஒரு குடும்பத்தையே காவளித்தனமா சீரழிச்சிக்கிட்டு இருக்கீங்க, இதுல உங்க பிரச்சனைக்கு உங்களுக்குள்ள நாட்டமை செய்வது எப்படி அந்த குடும்பத்தின் பிரச்சனையை(because of you) தீர்க்கும்.

Just let me know your opinion about why kashmiri Pandits and Muslims never fight at the time great partition that happened in Indian Sub condinent?

Just tell me How come a Hindu king rule the state of majority Muslim population?

Just tell me why the first ever party (I think the name is Kashmiri nationalistic party) supporting seperate kashmir(1950's) had religion in their agenda first then slowly changed to secularistic policies?

How abudullah retained his populace support till the last moment(until his party splits and he was toppled and got imprisoned)?

ஐ.நா. விசயத்தில் அதிகம் பேச ஒன்றும் இல்லை. மன்னர் ஹரிசிங், பாகிஸ்தான் படைகள் விரட்டும் வரை இந்திய ராணுவம் அங்கு இருக்கலாம் என்று ஒத்துக் கொண்டு வந்தது உண்மை. பிறகு இதை இந்தியாவே ஐ.நா வின் சரத்து நம்பர் 3யை காட்டி பஞ்சாயத்து செய்யக் கோரியது. அதில் அமைதி திரும்பிய பிற்ப்பாடு refrendum நடத்துவது என்று முடிவாகியது.

ஆனால் இந்த முழு சம்பவத்திலும் இந்தியாவும் பாகிஸ்தானும் அங்கு செய்த அயோக்கியத்தனங்களை ஏன் யாரும் பேசக் காணோம்? Because it is just like what happened during the preparation phase of second world war. That is British and German's hitlor negotiated to settle the fate of countries captured by hitlor(with out even discussing with the concerned countries). This is called facism. and your government also a facist government by culling the political space for kashmiries. and leading a negotiation entirely removing kashmiries from negotiationn table. Even here, you are not ready to utter a word to support this(democracy for kashmiries to say they want seperate kashmir).

காஸ்மீரின் இந்து முஸ்லீம் பிரச்சனை என்பது பாகிஸ்தான், இந்தியா அரசியலின் விளைவே.

இப்போதைய இந்திய செயல் தந்திரம் நேர்மையானது என்றே ஒரு வாதத்திற்க்கு கொள்வோம். அதன் நோக்கம் ரத்த சகதியை தவிர்ப்பது என்று கொண்டால், அந்த குறைபட்ட தீர்வினால் ஏற்ப்பட்ட ரத்த சகதி முடிவின்றி போய்க் கொண்டே உள்ளதே?

மீண்டும் மீண்டும் ஒரு விசயம் உறுதியாகிறது, உங்களது அரசுக்கு எந்தவொரு நேர்மையான எண்ணங்களும், நோக்கங்களும் கிடையாது. அதன் அதிகபட்ச நோக்கம் பகுதி அளவிலான வல்லரசு கனவு(கிழக்கு பாகிஸ்தான், இலங்கை, சீன எல்லைப் போர் etc).

'We The People' உங்களது சில அடிப்படை பலகீனங்கள் வெளித் தெரிகின்றன, எச்சரிக்கை.

அசுரன்
We The People said…
//நடுநிலையாகப் பார்க்கும் ஊடகங்களும் உலக நாடுகளும்.

கருத்துக் கணிப்பு நடத்த வேண்டியதுதான்.//

ஆயிரம் முறை சொல்லியாயிற்று

உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்க. மேலே அசுரன் கேட்ட இதே கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளேன். ப்ளீஸ் படிச்சுட்டு, அங்க கொடுக்கப்பட்ட சுட்டியையும் படித்துவிட்டு இதை பத்தி விவாதித்தால் நல்ல இருக்கும் என்று நினைக்கிறேன்.

http://www.kmsnews.org/Kashmir%20News%20Archive/03/News031006-06.htm

இது ஒரு பாகிஸ்தானியால் நடத்தப்படும் இணையதளம், அது இஸ்லாமாபாத்திலிருந்து இயங்குகிறது!! அங்கு என்ன எழுதி இருக்குன்னு படிச்சீங்களா? இந்தியாவிடம் இருப்பது Occupied Kashmirராம். அப்ப பாகிஸ்தானிடம் உள்ளது என்ன காஷ்மீர்?? ஒரு பாகிஸ்தானி சொல்லறத நம்பும் அளவுக்கு கூட இந்திய அரசை நம்பவில்லை என்றால் இதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது. பாகிஸ்தானிலிருந்து வரும் ஊடங்கள் உங்களுக்கு நடுநிலை பார்க்கு ஊடங்களா தெரியுது?? அப்ப இந்தியவில் நடக்கும் குண்டுவெடிப்புக்களும் இந்திய அரசு தானாக தனக்கு சொந்த செலவில் வைத்துக்கொள்ளுதுன்னு சொல்லறீங்க!!!

அப்பறம் அப்சலுக்கு முதலில் POTO சட்டத்தின் படிதான் தீர்ப்பு கொடுக்கப்பட்டது! பின்னர் உயர் நீதி மன்றமும் அந்த சட்டதில் தான் வழக்கை விசாரித்தது. அது வரை உண்மை. உச்ச நீதி மன்றத்தில் இந்த வழக்கு POTO சட்டத்தின் கீழ் வழக்கு நடக்கவில்லை(ஏன்னா, அப்ப அந்த சட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது), சாதாரண இந்திய குற்றவிய சட்டத்தின் படியே தீர்ப்பு கொடுக்கப்பட்டது. இதற்கெல்லாம் ஒரு பாகிஸ்தானிய ஊடகத்தை துணைதேட வேண்டுமா??
பாகிஸ்தானி ஊடகம் சொன்னாலும் உண்மை உண்மைதான்.

இந்திய நீதிமன்றங்கள் இயங்குவது இப்படி:

கீழ் நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பு சரியான அடிப்படையில், சரியான முறைகளைப் பின்பற்றி வழங்கப்பட்டது என்று உறுதி செய்வதுதான் மேல் நீதிமன்றங்களின் வேலை. உயர்நீதி மன்றம் வரை POTAவின் கீழ் நடந்த வழக்கு, இந்தியக் குற்றவியல் சட்டத்துக்கு மாறுவது உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நடக்க முடியாது. அப்படிப்பட்ட மாற்றம் மீண்டும் விசாரணை மன்றத்திலிருந்து புறப்பட வேண்டும்.

அதன்படி, உச்ச நீதி மன்றம் உறுதி செய்தது POTA அடிப்படையிலான தீர்ப்பைத்தான். இதற்கு இந்திய ஊடகச் சுட்டி வேண்டுமானால் இங்கே பாருங்கள்.

http://www.rediff.com/news/2006/sep/26parl.htm - விசாரணை நீதி மன்றம் கொடுத்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது.

அன்புடன்,

மா சிவகுமார்
We The People said…
மா.சி,

அதில் எங்கேயும் போடொ பற்றி ஒரு வார்தை கூட இல்லையே தலைவா? அவசரத்துல ஏதாவது சுட்டியை மாற்றி கொடுத்துவிட்டீர்களோ?? நல்லா பாருங்க மா.சி!!!
We The People said…
மா.சி,

இந்தாங்க தி ஹிந்துவில் வந்த உச்ச நீதி மன்ற அப்சல் வழக்கு விவரங்களை கீழ் உள்ள சுட்டியில் பார்க்கவும்.

http://www.hinduonnet.com/fline/fl2218/stories/20050909003503800.htm

பார்த்து விட்டு பதில் சொல்லுங்க.
QUOTE
Afzal's death sentence by the trial court was confirmed by the Delhi High Court and the Supreme Court. The apex court had on August 4, 2005, upheld the death penalty imposed on him by the trial court.
UNQUOTE

Supreme Court just confirms what is pronounced by the trial court (under POTA). You already know that the trial was conducted under POTA. Please do a google search.

anbudan,

Ma sivakumaar
உச்ச நீதிமன்றம் இந்தியக் குற்றவியல் பிரிவின் கீழ்தான் தூக்குத் தண்டனை வழங்கியிருக்கிறது என்று நீங்கள் சொல்வது சரிதான். என்னுடைய புரிதல் தவறு.

அன்புடன்,

மா சிவகுமார்
We The People said…
நன்றி மா.சி,

இதே போல் உங்களின் மற்ற புரிதல்களும் தவறு என்று விரைவில் புரிந்துக்கொள்வீர்கள் என்று எதிர்பார்கிறேன்.
Anonymous said…
////ஒரு அமைப்பில் சேரும் முறைகள் ஏற்றுக் கொள்ளப்படுபவையாக இருக்க வேண்டும்.//
//யார் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவை இருக்க வேண்டும்? ஒசாமா பின்லேடனா அல்லது முல்லா முகமது ஓமரா?//

அதில் சேரும் பெரும்பான்மை மக்களுக்கு.

பெரும்பான்மை மக்கள் ஏற்றுத்தான் காஷ்மிர் இந்தியாவுடன் இணைந்தது. ஷேக் அப்துல்லா அந்த இணைப்பை முழுமனதுடன் வரவேற்றார்.

//நான் சரியில்லை என்று வாதிடவில்லையே!//

வெரிகுட்.

//ஏன் படை எடுப்பு முடிந்த பிறகு கருத்துக் கணிப்பு நடத்தவில்லை?//

கருத்துகணிப்பு நடத்த வேண்டுமென்றால் பாகிஸ்தான் தன் படைகளை ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வாபஸ் பெற்றிருக்க வேண்டும் என ஐநா சொன்னது. ஆனால் பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மிரில் பஞ்சாபியர்களையும், பட்டாணியர்களையும் குடியேற்றியது. தீவிரவாதிகளை அனுப்பி இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டிருக்க கூடிய பண்டிட்டுகளை படுகொலை செய்து காஷ்மிரை விட்டு துரத்தியது.4.5 லட்சம் பண்டிட்டுகள் காஷ்மிரிலிருந்து அகதிகளாக அடித்து விரட்டப்பட்டுள்ளனர். அப்புறம் எப்படி கருத்துகணிப்பு நடத்துவது?

//மன்மோகன் சிங்குற்கு எத்தனை சதவீத மக்கள் ஓட்டு போட்டார்கள்? //

காஷ்மிரில் இன்று ஆள்வதே காங்கிரஸ் கட்சிதான். பெரும்பான்மை மக்கள் ஓட்டு போடாவிட்டால் ஆண்டிருக்க முடியுமா?

//நடுநிலையாகப் பார்க்கும் ஊடகங்களும் உலக நாடுகளும்.//

எது?அல்ஜசீராவும், ஆப்கானிஸ்தானுமா?

எந்த உலகநாடும் இதில் தலையிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டன. அப்புறமும் ஜல்லி ஏன்?

//கருத்துக் கணிப்பு நடத்த வேண்டியதுதான். //

நடத்தணும்னா பாக் ஆகிரமிப்பு காஷ்மிரில் குடியேறிய பஞ்சாபியர், பட்டணியர் வெளியேற வேண்டும். பாக் ஆகிரமிப்பு காஷ்மிர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தீவிரவாதிகள் அனைவரும் சரணடைய வேண்டும். பண்டிட்டுகள் ஊர் திரும்ப வேண்டும். முழு அமைதி நிலவ வேண்டும்.

இதுக்கெல்லாம் தயார்ன்னா ஐநா சொன்னபடி கருத்துகணிப்பு நடத்தலாம்.

//அப்போ பகத்சிங்கும் சட்டவிரோதிதானே?//

பிரிட்டிஷ் சட்டப்படி சட்டவிரோதிதான்யா. ஆனா பிரிட்டிஷ் சட்டம் இந்தியாவை சரிசமமாக நடத்தவில்லை. காலனி அடிமை நாடாக நடத்தியது. அதனால் அதை உடைப்பதில் தப்பில்லை. ஆனா இந்திய சட்டம் காஷ்மிரை அடிமையாக நடத்தாமல் சிறப்பு உரிமைகளை வழங்கி உள்ளது. அதனால பிரிட்டிஷ் சட்டத்தை எதிர்த்தால் தப்பில்லை. ஆனா அம்பேத்காராம் எழுதப்பட்ட இந்திய சட்டத்தை எதிர்த்தா தப்பு

//தனது நம்பிக்கைக்காக வன்முறையை கையில் எடுப்பவர்கள் எல்லோருமே சட்ட விரோதிகள். நமது வசதிக்கேற்ப பகத் சிங் என்றால் ஆதரிப்போம், அஃப்சல் குரு என்றால் எதிர்ப்போம் என்பது எப்படி?//

உங்கள் வீட்டில் காஷ்மிர் தீவிரவாதிகள் குண்டு வைத்தால் எதிர்ப்பீர்களா ஆதரிப்பீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால் நாடாளுமன்றத்தில் குண்டு வைத்து இன்னொரு இந்தியனை கொல்வதை ஆதரிக்கும் நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப உங்கள் வீட்டில் குண்டு வைத்தால் எதிர்ப்பிர்களா, மாட்டீர்களா என தெரிந்துகொள்ள வேண்டாமா?

//
அப்படி செய்வதுதான் நாட்டுக்குப் பெருமை என்றால் நாடு நாளைக்கு இல்லாமல் போய் விடும், பிரிடிஷ் சாம்ராஜ்யம் உருத்தெரியாமல் போனது போல.//

அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நல்லா பழுக்க காய்ச்சின கழுமரத்தில் அவனை ஏற்றணும். அப்போதுதான் எல்லா தீவிரவாதியும் பயப்படுவான்.

//பிளாஸ்திரி பத்தாது ஐயா, வாய்களும் அதிகம். நீளமும் அதிகம்.//

அதெல்லாம் கவலையே பட வேணாம். நாலஞ்சு படிச்ச முட்டாள்களை தவிர எவனும் இம்மாதிரி பேசுவதில்லை. அதிகம் பிளாஸ்திரி தேவையில்லை.

//சின்ன வயசிலிருந்தே புன்னகை மன்னன் என்று பெயர் எடுத்தவனாக்கும்.//

புன்னகை மன்னன்னா இளிச்சவாயன்னு எங்க ஊரில் சொல்லுவாங்க

//பொருளாதாரம் என்றால் கசப்பாகத்தான் இருக்கும். அதற்குத்தான் பதிவு போட ஆரம்பித்தது. யாருக்காவது உதவினால் மகிழ்ச்சிதான். //

அது யாருக்கும் உதவின மாதிரி தெரியலை. படிச்சா ரொம்ப கடுப்பாகுது. நீ இனி பதிவெழுதாத.

//வெட்கம் சுரணை எல்லாம் விட்டுப் போய் நாளாயிற்று தாண்டவராயன். இப்போதெல்லாம் சரி என்று படுவதை செய்து கொண்டே போவது, சரி என்று தோன்றுவதை வெட்கமில்லாமல் உரக்கச் சொல்வது என்று முடிவு. Tகெ ஏம்பெரொர்'ச் ணெந் Cலொதெச் படித்திருக்கிறீர்களா? யாருக்கு வெட்கமில்லை?//

வெட்கம் இல்லை என்பதுதான் ஊருக்கே தெரிந்த விஷயமாச்சே?உங்க கூட்டம் தான்

//பகத்சிங்கிற்கு ஒரு பட்டம், அஃப்சலுக்கு ஒரு நீதி என்று நீங்கள்தான் மாறுகிறீர்கள். என்னைப் பொறுத்த வரை நான் சரி என்று நம்புபவதை யாரைப் பொறுத்தும் மாற்றிக் கொள்வதில்லை.//

தெருவில் திரியும் பன்றியை பகத்சிங் என்றால் என்ன செய்ய?பாகிஸ்தான் காசை பொறுக்கி தின்னும் அப்சல் பன்றியையும், பகத்சிங்கையும் ஒப்பிடும் காமாலை கண்னை நீங்கள் தான் மாற்றிக்கொள்ள வேண்டும்

//இது பிழைப்பு கிடையாது. பிழைப்புக்கு வேறு வேலை இருக்கிறது. //

அந்த வேலையை ஒழுங்கா செய்வது போல் தெரியவில்லை. ஒழுங்கா ஆபிஸ் வேலையை பார்க்கவும்.

//ஆகா, என்ன துணிச்சல், இந்த துணிச்சலை வைத்துக் கொண்டா நாட்டுக்குச் சேவை செய்யப் போகிறீர்கள்?//

ஆமாம். நான் துணிச்சல்காரன் தான். இதில் என்ன சந்தேகம்?
/////

//Asuran,

Lets discuss the same 2morrow. The intentions of my government in solving the issue is creating room for peace talks with pakistan bcoz that is the root cause for all issues extremism in india. After somany hit backs like Kargil, Mumbai Stockexchange bomb blast, Delhi market bomb blast, mumbai Trains blasting, etc., after all these playing of Pakistan, My govt is still ready to sit on a table to discuss the issues of people to resolve it from the root cause. Anyway i will discuss these things tomorrow in a better manner.

Thanx asuran.

///

Your govrenment(Pakishtan as well) intentions from the begining itself is not to solve the issue. But to annex the kashmir with India by any means.

Just go through the history of Kashmir before and after Pseudo independence. And the various ugly politics(Including the topple of Shaik abdullah government - The then prime ministers of Kashmir. and his furthur imprisonment).

There are now well established evidence both from beurocrats and Journalist to ascertain the ugly politics palyed by Nehru and Jinha in the issue of Kashmir.

One side Nehru tried to acheive by his facist methods with the aid of Patel. The other side Jinha did the same with religious facism.

The talk or negotiations should be done with kashmiri people not with a country like pakishtan. Pakishtan is same as India as far as kashmir is concerned. That is to say they have no right to decide the fate of kashmiri. You accept pakishtan as your opponent in the negotiation table only to justify ur injustice activities in kashmir. This is viz a viz true for pakisthan too.

If kashmir issue is one of the breading ground for islam fundamendalism in India, then it is with kashmiri's we should talk to. Not Pakishtan. (The other breading gorunds are Hindhudva politics, Internation imperialistic politics and New global ambitions of Islamic fundamentalism).

If you can secure the well intentions of kashmiris and Indian muslims how come the foreign hand can survive here. Just look at the root cause. But unfortunately(Indeed well intended) you people always practiced to look for scape goats.

அதாவது, இரண்டு பச்ச பொறுக்கிகளும் சேர்ந்து ஒரு குடும்பத்தையே காவளித்தனமா சீரழிச்சிக்கிட்டு இருக்கீங்க, இதுல உங்க பிரச்சனைக்கு உங்களுக்குள்ள நாட்டமை செய்வது எப்படி அந்த குடும்பத்தின் பிரச்சனையை(because of you) தீர்க்கும்.

Just let me know your opinion about why kashmiri Pandits and Muslims never fight at the time great partition that happened in Indian Sub condinent?

Just tell me How come a Hindu king rule the state of majority Muslim population?

Just tell me why the first ever party (I think the name is Kashmiri nationalistic party) supporting seperate kashmir(1950's) had religion in their agenda first then slowly changed to secularistic policies?

How abudullah retained his populace support till the last moment(until his party splits and he was toppled and got imprisoned)?

ஐ.நா. விசயத்தில் அதிகம் பேச ஒன்றும் இல்லை. மன்னர் ஹரிசிங், பாகிஸ்தான் படைகள் விரட்டும் வரை இந்திய ராணுவம் அங்கு இருக்கலாம் என்று ஒத்துக் கொண்டு வந்தது உண்மை. பிறகு இதை இந்தியாவே ஐ.நா வின் சரத்து நம்பர் 3யை காட்டி பஞ்சாயத்து செய்யக் கோரியது. அதில் அமைதி திரும்பிய பிற்ப்பாடு refrendum நடத்துவது என்று முடிவாகியது.

ஆனால் இந்த முழு சம்பவத்திலும் இந்தியாவும் பாகிஸ்தானும் அங்கு செய்த அயோக்கியத்தனங்களை ஏன் யாரும் பேசக் காணோம்? Because it is just like what happened during the preparation phase of second world war. That is British and German's hitlor negotiated to settle the fate of countries captured by hitlor(with out even discussing with the concerned countries). This is called facism. and your government also a facist government by culling the political space for kashmiries. and leading a negotiation entirely removing kashmiries from negotiationn table. Even here, you are not ready to utter a word to support this(democracy for kashmiries to say they want seperate kashmir).

காஸ்மீரின் இந்து முஸ்லீம் பிரச்சனை என்பது பாகிஸ்தான், இந்தியா அரசியலின் விளைவே.

இப்போதைய இந்திய செயல் தந்திரம் நேர்மையானது என்றே ஒரு வாதத்திற்க்கு கொள்வோம். அதன் நோக்கம் ரத்த சகதியை தவிர்ப்பது என்று கொண்டால், அந்த குறைபட்ட தீர்வினால் ஏற்ப்பட்ட ரத்த சகதி முடிவின்றி போய்க் கொண்டே உள்ளதே?

மீண்டும் மீண்டும் ஒரு விசயம் உறுதியாகிறது, உங்களது அரசுக்கு எந்தவொரு நேர்மையான எண்ணங்களும், நோக்கங்களும் கிடையாது. அதன் அதிகபட்ச நோக்கம் பகுதி அளவிலான வல்லரசு கனவு(கிழக்கு பாகிஸ்தான், இலங்கை, சீன எல்லைப் போர் etc).

'We The People' உங்களது சில அடிப்படை பலகீனங்கள் வெளித் தெரிகின்றன, எச்சரிக்கை.

அசுரன்
///////

I don't know why 'We the People' didn't address this part of my argument.

'We the people', சட்டவாதமாக பேசினால்தான் வாதம் செய்வீர்களா? அதாவது நிலவுகின்ற அரசமைப்பு சட்டப்பூர்வமாக எதை செய்தாலும் அதை சரி என்று by default ஏற்றுக் கொண்டு வாதாடினால்தான் வாதம் செய்வீர்களா?

ஏனேனில் என்னுடனான உங்களது வாதத்தை ஐ.நா. சபை குறித்து நான் சொன்ன இரு வரி கருத்து அளவில் குறுக்கி, அதற்க்கு மட்டும் பதில் சொன்னால் போதும் என்பது போல எதிர்வினை புரிந்து நிறுத்திக் கொண்டதும், மற்றைய கருத்துக்களை அப்படியே கிடப்பில் போட்டதாலும் இந்த சந்தேகம் வருகிறது.

அப்ப்டி சட்டவாதம் பேசுபவரிடம் மட்டும்தான் நீங்கள் இங்கு விவாதம் செய்வேன் என்றால் சொல்லுங்கள், இதை வேறு தளத்தில் விவதமாக்கிக் கொள்கிறேன்.

அசுரன்
We The People said…
அசுரன் மற்றும் பாலா இருவர்க்கும்,

தயவு செய்து இது போன்ற தனி மனித தாக்குதல் கொண்ட பின்னூட்டங்களை எடுத்து விடுங்க ப்ளீஸ். என்னங்க இது அப்பு வைக்கறது, குத்தறது கொல்லறதுன்னு... ஆக்கப்பூர்வமா ஏதாவது சொல்லுவீங்கன்னு பார்த்தா இப்படி எழுதிகிட்டு இருக்கீங்க.. உங்க தனிமனித தாக்குதல் உள்ள பின்னூட்டங்களை நீங்களாகவே எடுத்துவிடுங்க ப்ளீஸ்.
bala said…
//அசுரன் மற்றும் பாலா இருவர்க்கும்,

தயவு செய்து இது போன்ற தனி மனித தாக்குதல் கொண்ட பின்னூட்டங்களை எடுத்து விடுங்க//

We the people அய்யா,

தனி மனித தாக்குதல் செய்யலீங்க.
நம்ம வஜ்ரா அய்யா வந்து கம்யூனிஸ்ட்கள் எல்லாரையும் ஒட்டு மொத்தமா மோசமானவங்கன்னு சொன்னார். அப்படி இல்லீங்க ,99.999% மோசமானவங்களா இருந்தாலும் நம்ம அசுரன் அண்ணா தங்கமானவர்னு சொன்னேனுங்க..நம்ம அசுரன் அண்ணா தான் தப்பா புரிந்து கொண்டு வார்த்தையை உட்டுட்டாரு.
போகட்டும்..

பாலா
We The People,

இதை நீங்கள் பாலாவின் பின்னூட்டங்களை பிரசூரிக்கும் முன்பு யோசித்திருக்க வேண்டும்.

எனது பின்னூட்டம் ஒன்றும் அதி முக்கியமானது இல்லை. அதை நீங்களே எடுத்து விடுங்கள்.

பதிவுக்கு சம்பந்தமில்லாத விவாதங்களை உருவாக்கும் பின்னூட்டங்களை கவனமாக கையாள்வது தள சொந்தக்காரரின் பொறுப்பு.

இதை எனது தளத்தில் மிக கவனமாக செய்து வருகிறேன். தவறுதலாக பிரசுரித்து இது போன்ற தேவையற்ற முரன்பாடுகளை உருவாக்கியதற்க்கு நான் மன்னிப்பு கோரவும் தயங்கியதில்லை. அதை நீங்கள் செய்யாமல் எங்கள் இருவரின் மீது குற்றம் சொல்ல முற்ப்படுவதையும் இங்கு சுட்டிக் காட்டுகிறேன்.

**************

மற்றபடி தங்களுக்காக வைத்த கருத்துக்களில் வாதம் செய்ய விரும்புகிறேன்.

வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

அசுரன்.
வஜ்ரா said…
ஜெய்,

There is a 16 page ranting by Ms. Roy in Outlook magazine (which is a total trashy magazine however, thats a discussion for another occasion).

May be you should look in to it and write a detalied response in your blog. The effort will be appreciable. Instead of concetrating of DMK mouth pieces.
We The People said…
அசுரன்,

உங்கள் வாதம் என் பதிவின் நோக்கத்துக்கு தொடர்பு இல்லை என்ற போதிலும், உங்கள் கேள்விக்கு என் கருத்தை நிச்சயமாக தருவேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்.
We the People,

I don't know in what ways you believe my argument is not with in your post's purview.

Because you have argued with Ma.Si and Kuzali about the problem of nationalism, I believed my argument on Nationalism also would get your glimbse.

and Do you think Afsal's case and parliament attack should be discussed with out the core issue - The kashmir?

Then I could say your are willing just to kill afsal, like scape goats and Then furthur I could(I say I could) conclude there is nothing to argue, as you auto cratically stik to your points(Again - I say, I could).

Please clarify.....

Asuran.
ரவி said…
அட விடுங்கப்பா !!!!
Anonymous said…
Glimbse - Glimpse

auto cratically stik - Autocratically stick
We The People said…
Spelling Mistake,

ஏங்க நீங்க வேற, அசுரன் அண்ணே நான் இன்னும் பதில் சொல்லவில்லைன்னு கடுப்புல இருப்பாரு! இதுல வேற அவர் பின்னூட்டத்துல Spelling Mistake கண்டுபிடிச்சு அவரை கடுப்பேத்தாதபா!!!

நன்றி,

ஜெய்
//and Do you think Afsal's case and parliament attack should be discussed with out the core issue - The kashmir? //

We The People,

அப்சல் குறித்த இந்த விவாதத்தை உயிர்ப்பிக்க செய்ய வேண்டிய தேவை நீலகண்டனின் பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டத்திற்க்கு பிறகு ஏற்ப்பட்டுள்ளது.

Please answer this....

குறைந்த பட்சம் நீஙகள் ஜனநாயகத் தன்மையின்றி வாதாட நேர்மையின்றி உங்களது கருத்தில் விடாப் பிடியாக நிற்கிறீர்கள் என்ற கருத்துக்காவது பதில் சொல்லுங்கள்....

அதை விடுத்து அவரது தளத்தில் சென்று ஜல்லியடிப்பீர்கள் எனில் நான் உங்களை நேரடியாக குற்றம் சாட்டும் துரஸ்திருஷ்டவசமான நிலையை எடுக்க வேண்டியிருக்கும்.

இதை வருத்ததுடனே சொல்கிறேன். உங்களை ஒரு நல்ல ஜனநாயக சக்தியாகவே கருதுகிறேன். (எந்த ஒரு முகமூடி நிலைப்பாடுகளும் இன்றி தோன்றுவதை முன்வைத்து வாதிடுபவராக)

அசுரன்
We The People said…
அன்பு அசுரன்!

சில விளக்கங்கள்:

நான் தேடி பிடித்த போது நீலகண்டன் என்பவர் எழுதிய அவமதிக்கப்பட்ட தியாகம்" என்ற பதிவில் நான் ஒரு பின்னூட்டம் எழுதி இருந்தேன். அது கீழே உள்ளது-

//திரும்பக் கொடுக்கப்பட்ட கீர்த்தி சக்கரங்கள்
நம் ஒவ்வொரு இந்தியன் கன்னத்திலும்
கொடுக்கப்பட்ட செருப்படி.//

ரொம்ப சரியா சொன்னீர்கள். கேடு கெட்ட இந்திய அரசியல் ஓட்டுப்பொறுக்கிலால் நம் நாட்டு கீர்த்தி சக்கரம் அவமானப்படுகிறது.

இந்த ஓட்டுப்பொறுக்கிலால் இதை விட வேறொன்று செய்ய முடியாது :((((((((
///////

இதில் என்ன குறை கண்டீர்கள் அசுரன்? அவர் ஒரு ஹிந்துத்வாதி என்பதற்காக நான் என் கருத்துக்கு ஒத்த பதிவில் விமர்சனம் செய்யக்கூடாது என்பது நல்ல கருத்தல்ல, நீலகண்டனின் மற்ற பதிவுகள் பல இருப்பினும் நான் இட்ட பின்னூட்டம் என் கருத்தொத்த பதிவில் மட்டுமே!!!

இன்று என் நிலைபாடு அப்சல் தூக்கு தண்டனை பொருத்தமட்டில் மாற்றம் இல்லை. அவன் தூக்கிலப்படுவேண்டியவன் என்பதில் எனக்கு வேறு மாற்றுக்கருத்து இல்லை. இதை நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம். என் சமுதாயம், என் நாடு, என் மக்கள் என்ற வட்டத்தில் அவன் குற்றவாளி. என் நாட்டின் அத்துனை வழக்காடு மன்றங்களும் அவனை குற்றவாளி என்று தீர்ப்பு எழுதிவிட்டது அப்படியானால் அவர் தூக்கு ஏற்றப்படவேண்டியவனே. அவன் விடும் கட்டுக்கதை நான் நம்ப தயாராய் இல்லை. அவன் திவிரவாதி என்று அவன் அண்ணனே சம்மதிக்கும், இங்கும் மட்டும் அவன் நல்லவனாக சிலருக்கு தெரிவதால், நான் என் நிலைப்பாட்டை மாற்ற முடியாது.

பின்னர் உங்க கேள்விக்கான என் பதில்:

////and Do you think Afsal's case and parliament attack should be discussed with out the core issue - The kashmir? ////

காஷ்மீர் என்ற பிரச்சனை வேறு, அவர் காஷ்மீருக்குள் சண்டை இடட்டும், டெல்லி, பம்பாய், என எல்லா நகரத்தையும், மக்களை அழிப்பதை ஒரு சுதந்திர போராட்டமாக நான் பார்க்கவில்லை.

So Kashmir Issue need to be talked on the table and not with Guns. So Afsal Case is definetely cant be mixed with Kashmir is my stand at this point. And i have my own views based on somany other reliable information which i have it. I will posting it shortly with full perfect version of wats happening there.

காதால் கேட்பதும் பொய் , கண்ணால் பார்ப்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று நம்பும் நான் அதை செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் வெளி வரும் முழு உண்மையும். அதற்கான Ground Works are ON. விரைவில் உங்களை இதே காஷ்மீர விசயத்தில் சந்திப்பேன்.

நன்றி,

நா.ஜெயசங்கர்
நீலகண்டன் தளத்தில் பின்னூட்டமிட்டதை நான் கண்டிக்கவில்லையே? உங்களுக்கு அசுரன் போன்ற இடதுகளைவிட நீலகண்டன் போன்ற வலதுகள் மீது பாசம் அதிகம் என்று பொறாமைப் படவில்லையே?

நீங்க எங்க வேனா பின்னூட்டமிடுங்கள் அதப் பத்தி எனக்கென்னெ கவலையிருக்க முடியும். ஆனால், அப்சல் விசயத்தில் எனது கேள்விகளுக்கு எந்த வினையும் தொடுக்காமல் ஒன்றுமே சொல்லாமல் Inconclusive நிலையிலேயே வைத்திருந்துவிட்டு அங்கு சென்று உங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப் படுத்தும் பொழுது எனக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு போ என்று நான் கேட்க்க உரிமை உள்ளது.

அப்படி பதில் சொல்லவில்லையெனில் உங்கள் நேர்மையை சந்தேகிக்க எனக்கு உரிமை உள்ளது. அவ்வளவுதான் விசயம்.

அந்த அளவில்தான் எனது பின்னூட்டமும் உள்ளது நீங்கதான் உணர்ச்சிவசப்பட்டு எதேதோ நினைத்துக் கொண்டுள்ளீர்கள்.


////
///and Do you think Afsal's case and parliament attack should be discussed with out the core issue - The kashmir? ////

காஷ்மீர் என்ற பிரச்சனை வேறு, அவர் காஷ்மீருக்குள் சண்டை இடட்டும், டெல்லி, பம்பாய், என எல்லா நகரத்தையும், மக்களை அழிப்பதை ஒரு சுதந்திர போராட்டமாக நான் பார்க்கவில்லை.
///////


அப்சலை தூக்கீல் போடுவது டெல்லி பம்பாயில் குண்டு வைத்ததற்க்கா அல்லது பார்ளிமண்டில் குண்டு வைத்ததாற்க்கா?

ஏன் திரிபுவாதம் பேசுகிறீர்கள்?

இந்திய பார்ளிமண்டு அவர்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை மறுக்கும் அடையாளம் எனில் அவர்கள் குண்டு வைத்ததில் என்ன தவறு இருக்க முடியும்?




//என் சமுதாயம், என் நாடு, என் மக்கள் என்ற வட்டத்தில் அவன் குற்றவாளி. என் நாட்டின் அத்துனை வழக்காடு மன்றங்களும் அவனை குற்றவாளி என்று தீர்ப்பு எழுதிவிட்டது அப்படியானால் அவர் தூக்கு ஏற்றப்படவேண்டியவனே//

பிரிட்டிசை எதிர்த்த பகத்சிங் பிரிட்டிஸ் பிரஜை ஒருவனுக்கு எதிரிதான் எனும் அடிப்படையிலான உங்கள் வாதம் சரிதான். நான் இங்கு ஒரு மனிதரிடம் பேசிக் கொண்டிருப்பதாக நினைத்து வாதிட்டு வருகிறேன். We The People ஒரு வேளை குறுகிய தேசிய வெறியர்தானா? அப்சலுக்கும் We the Peopleக்கும் என்ன வித்தியாசம்?

அப்சல் அடக்கப்படும் தேசியத்தை சேர்ந்தவர், We the people அடக்கும் தேசியத்தைச் சேர்ந்தவர்...

அடக்கப்படும் தேசிய இனத்தின் பிரதிநிதி அப்சலுக்கு துக்குதண்டனை சரி என்ற We The Peopleன் அளவுகோல் அடக்கும் தேசிய இனத்திற்க்கு என்ன தண்டனை தரும்? தூக்குத் தண்டனையைவிட பெரிய தண்டனை தர வேண்டுமே?

ஒரு வேளை மனசாட்சிக்கு பதில் சொல்லும் மிகப் பெரிய தண்டனையை தருமோ?(ஜெய்லலிதா - டான்ஸி வழக்கில் அவரது மனச்சாட்சிக்கு பதில் சொல்ல வெண்டும் என்று தீர்ப்பு கூறினார் நீதிபதி).

We the People ஒரு அடக்குமுறையாளரா? என்னாலும் நம்பமுடியவில்லை. உங்களின் மேற் சொன்ன பதிலை எப்படி புரிந்து கொள்வது என்பதில் உதவி செய்தால் எனது தப்பபிப்ராயங்களை களைந்து கொள்வேன்.

எங்கப்பன் எதுத்த வீட்டுல போய் அவர் தம்பிய-எங்க் சித்தப்பாவ அடிச்சதப் பத்தி பேசாதே. ஆனா எங்க சித்தப்பா பையன் பதிலுக்கு எங்கு அப்பாவோட ஃபோட்டாவ உடைச்சத பத்தி மட்டும் பேசு. அதுக்கு அவன தண்டிக்கனும். ஏன்னாக்க எனக்கு என் வீடு, எங்க அப்பாவோட போட்டாதான் முக்கியம்....

இப்படித்தான் பேசுகிறீர்கள் We The People...

பிறகு ஏன் போலியாக சமூக அக்கறை இருப்பது போல வெளி வேசம்....

உங்கள் வழக்காடு மன்றங்களீன் நேர்மைக்கு ஒரேயொரு உதாரணம் இது வரை இந்தியாவில் தலித்துக்களுக்கு எதிராக நடந்த எந்த ஒரு வன்கொடுமைக்கும் உங்கள் நீதிமன்றம் ஒரு மசிரும் பிடுங்கிப் போட்டதில்லை. ஆனால் இதே தலித் மக்களின் வாழ்வாதாரத்தை பரிக்கும் சேரிகள் அழிப்பு, ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஒரிஸ்ஸா உள்ளிட்ட இடங்கள் சுரங்கத்திற்க்கு ஆதரவு என்று நீதிமன்றங்கள் செயல் பட்டுள்ளன....

ஆக, நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதிவிட்டன ஆகவே தலித்துக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது..... இந்தியாவில் சமூக நீதி கொடி கட்டி பறக்கிறது... We The people விசயங்களை வரையறுக்க பயன்படுத்தும் முறைகள் வியப்பை தருகின்றன்.....

நீதிமன்றங்கள் தீர்ப்பு தந்து விட்டனவாம் அதனால் இவரும் ஏற்றுக் கொள்வாராம்... அப்புறாம் எதுக்கு விவாதம்? நீதிமன்ற தீர்ப்புக்கு ஒரு சுட்டி கொடுத்து விட்டு. இதுதான் எனது நிலைப்பாடு என்று பதிவிட வேண்டியதுதானே?

ஒரு வேளை விவாதத்தில் பதில் சொல்ல முடியாத பட்சத்தில் கடைசிப் புகலிடமாக - சிறு பிள்ளைகள் சண்டையிடும் பொழுது செய்வார்க்ளே அது போல- We The Prople இந்த நிலைப்பாடை வைத்திருக்கிறாரா?




////
So Kashmir Issue need to be talked on the table and not with Guns. So Afsal Case is definetely cant be mixed with Kashmir is my stand at this point. And i have my own views based on somany other reliable information which i have it. I will posting it shortly with full perfect version of wats happening there.

காதால் கேட்பதும் பொய் , கண்ணால் பார்ப்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று நம்பும் நான் அதை செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் வெளி வரும் முழு உண்மையும். அதற்கான Ground Works are ON. விரைவில் உங்களை இதே காஷ்மீர விசயத்தில் சந்திப்பேன்.
/////


உங்க ரிலையபிள் இன்பர்மேசனை வைக்க இவ்வளவு நேரமா? அல்லது ஒரு நிலைப்பாடிற்க்கு வந்த பிற்ப்பாடு அதற்க்கு வசதியாக ரிலையபிள் இன்பர்மேசன் தேடுகிறீர்களா?

எனக்கென்னவோ இரண்டாவதைத்தான் நீங்கள் செய்கிறீர்களோ என்று தோன்றுகிறது.... ஏன்னாக்கா குறைந்த பட்சம் தர்க்க ரீதியாகவாவது உங்க நிலைப்பாட்டை காப்பாத்துங்க... அதுக்கு பின்ன ஆதாரங்களை தரலாம். ஆனா அப்படி செய்ய இயலவில்லையெ? உங்க கவலை எங்க வீடு, எங்க போஃட்டோ என்ற குண்டு சட்டியைத் தாண்டி செல்லவில்லை என்பதாக உணர்கிறேன். அதாவது தீர்வைப் பற்றியதல்ல உங்கள் கவலை மாறாக உங்களது சொந்த விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டதே உங்கள் கவலை என்று கருதுகிறேன். ஒருவேளை எனது இந்த கருத்து தவறாக கூட இருக்கலாம்.

உங்களது உள்மனப் புரிதல்களை புரிந்து கொள்ள முயலும் பொழுது அபாயகரமான பல விசயங்கள் வெளி வருகின்றன... மீண்டும் உங்களை எச்சரிக்க கடமைப் பட்டுள்ளேன். அதாவது உங்களை நல்லதொரு ஜனநாயக சக்தியாக இன்னும் கருதுவதால்.

அசுரன்
///தேசியம் என் பார்வையில்:

ஒற்றுமையாய் இந்தியா என்னும் ஒரு குடைக்கு கீழே மத, இன, மொழி பாகுபாடின்றி வாழ நினைப்பதே தேசியம்! இந்த கூட்டமைப்பை அழிக்க நினைப்பவன் எவனாக இருந்தாலும், அவன் இந்தியன் என்ன Labelலில் இருந்தாலும் ஒழிப்பதே என் தேசப்பற்று.
////


மேலே சொன்னது தேசியம் என்பதற்க்கு நீங்க கொடுத்த சொந்த விளக்கம்...

சரி இப்ப இந்தியா என்பதற்க்கு விளக்கம் கொடுப்பீர்க்ளா?

ஒரு வேளை நாளைக்கு இந்தியா என்பது மேற்கே ஈரானில் ஆரம்பித்து கிழக்கே இந்தோனேசியாவில் முடிவது எனவே இங்கெல்லாம் எனது தேசியத்திற்க்கு(இது We the People-ன் சொந்த புரிதல்) எதிராக எவன் வேலை செய்தாலும் என்ன lablelலில் இருந்தாலும் ஒழிப்பேன்... ஆமாம்... இதுதான் தேசப்பற்று...

இப்படிச் சொல்வது அப்த்தமாக இல்லை.....

சரி அமெரிக்காவில் தேசியம் என்பதற்க்கு விளக்கம் என்ன? காஷ்மீரில் என்ன?

எல்லா விசய்த்தையும் நானே சொந்தமா கண்டுபிடிப்பேன் என்பது சரியல்ல. Don't invent the Wheel again... ஏற்கனவே இருக்கும் விசயங்களை படித்து உள்வாங்க்விட்டு அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நமது சிந்தனையை செலவழிப்பது வளர்ச்சிக்கு உதவும்...

அசுரன்
Anonymous said…
வந்துட்டாருயா நம்ம தலைவரு. சார் நீங்க சீனா காலை நக்கி ஒரு பதிவ போடுங்க. அப்புறம் பாருங்க நம்ம தலைவரோட மாற்றத்த.

ஏற்கனவே "பெட்ரோல் விலை போராட்டத்த" பத்தின உங்க பதிவுல தலைவரு வாயை குடுத்துட்டு புண்ணாக்கிட்டு வழக்கமான பதில சொல்லிட்டு நழுவி ஓடிட்டாரு.

ஆமா இத்தனை நாள் கழிச்சு எதுக்கு இந்த பதிவ எட்டி பார்த்தாரு நம்ம தலைவரு?..
///
வந்துட்டாருயா நம்ம தலைவரு. சார் நீங்க சீனா காலை நக்கி ஒரு பதிவ போடுங்க. அப்புறம் பாருங்க நம்ம தலைவரோட மாற்றத்த.

ஏற்கனவே "பெட்ரோல் விலை போராட்டத்த" பத்தின உங்க பதிவுல தலைவரு வாயை குடுத்துட்டு புண்ணாக்கிட்டு வழக்கமான பதில சொல்லிட்டு நழுவி ஓடிட்டாரு.

ஆமா இத்தனை நாள் கழிச்சு எதுக்கு இந்த பதிவ எட்டி பார்த்தாரு நம்ம தலைவரு?..
////


We The People...

மேலேயுள்ளது அனானியின் வார்த்தை அல்லது உங்களுடையதா?......


மேலும் பெட்ரோல் பற்றிய உங்களது பதிவில் நான் என்ன பின்வாங்கினேன் என்று தெரியவில்லை... கொஞ்சம் விளக்கினால் அதை Revisit செய்வதில் எனக்கு பிரச்சனையில்லை... உங்களுக்கு எப்படி?....

அசுரன்
We The People said…
//நீலகண்டன் தளத்தில் பின்னூட்டமிட்டதை நான் கண்டிக்கவில்லையே? உங்களுக்கு அசுரன் போன்ற இடதுகளைவிட நீலகண்டன் போன்ற வலதுகள் மீது பாசம் அதிகம் என்று பொறாமைப் படவில்லையே?//

எனக்கு வலதும் முக்கியமில்லை, இடதும் முக்கியமில்லை. யார் நமக்கு நன்மை செய்கிறார்களோ அது மட்டுமே முக்கியம். என்னை பொருத்தவரை இடதும், வலதும் நன்மை ஒன்றும் செய்யவில்லை என்பதே உண்மை.

//அப்சலை தூக்கீல் போடுவது டெல்லி பம்பாயில் குண்டு வைத்ததற்க்கா அல்லது பார்ளிமண்டில் குண்டு வைத்ததாற்க்கா?

ஏன் திரிபுவாதம் பேசுகிறீர்கள்?

இந்திய பார்ளிமண்டு அவர்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை மறுக்கும் அடையாளம் எனில் அவர்கள் குண்டு வைத்ததில் என்ன தவறு இருக்க முடியும்?//

இது திரிபுவாதம் அல்ல. பாராளமன்ற தாக்குதலிலும் கொல்லப்பட்டவர்களும் மக்களே!! என்ன அவர்கள் பாராளமன்ற பாதுகாப்பு படையில் பணி புரிபவர்கள் என்பதே வித்தியாசம். எனக்கு தெரிந்து அவர்கள் அப்சல் போன்றவர்கள் சுயநிர்ணய உரிமை போராட்டம் செய்வதாக தெரியவில்லை. அவர்கள் பாகிஸ்தானின் சூழ்ச்சிக்கு பலியானவர்களாக தான் எனக்கு புலப்படுகிறார்கள். அங்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று இவர்களாக சுயமாக முடிவு செய்யமுடியாது. அது சரி அல்ல. மக்கள் நினைப்பது வேறு, இவர்கள் செய்வது வேறு என்பதே என் வாதம்.

//பிரிட்டிசை எதிர்த்த பகத்சிங் பிரிட்டிஸ் பிரஜை ஒருவனுக்கு எதிரிதான் எனும் அடிப்படையிலான உங்கள் வாதம் சரிதான். நான் இங்கு ஒரு மனிதரிடம் பேசிக் கொண்டிருப்பதாக நினைத்து வாதிட்டு வருகிறேன். We The People ஒரு வேளை குறுகிய தேசிய வெறியர்தானா? அப்சலுக்கும் We the Peopleக்கும் என்ன வித்தியாசம்?//

ஐயா அசுரன் நீங்க சொல்லறது போல பகத்சிங் யாரையும் கொல்லவில்லை, அசம்பியில் குண்டு வீசி, தானாக சரண் அடைந்து, தன் எதிர்ப்பை காண்பித்தவன், அப்சல் நாள் ஒரு மேனியாய் கதை விடும் ஒரு திவிரவாதியாக தான் அவனே இருக்கிறான், அவன் இந்த தாக்குதலை செய்யவில்லை என்று இன்று சொல்கிறான், அன்று செய்தேன் என்றான், இனி என்ன சொல்லப்போகிறான் என்று தெரியவில்லை!!!???

தேசியம் ஒரு வெறி என்றால், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று சொன்னவனும் தேசிய வெறியனா? நான் சொல்வது பிரிந்து, சுக்கு நூறாக ஒன்றும் இல்லாமல் பாகிஸ்தான், அமெரிக்க போன்ற நாடுகளில் அடிமையாய் வாழ்வதை விட இந்திய தேசத்தின் லேபிலில் வாழ்வது நல்லது என்பது தான் என் பார்வையில் தேசியம். ஊர் ரெண்டுபட்டால் பாகிஸ்தான், சீன, அமெரிக்க கூத்தாடிகளுக்கு தான் கொண்டாட்டம்.

//அப்சலுக்கும் We the Peopleக்கும் என்ன வித்தியாசம்?////

அப்சல் பசு தோல் போர்த்திய பிணம் தின்னும் புலி; நான் பாவம் ஒரு சாதரண இந்திய குடிமகன்; அவனோ அவன் கூட்டத்தினரோ அடித்தால் வாங்கிக்கொள்ளும் நிலையில் உள்ளவன்.

//அடக்கப்படும் தேசிய இனத்தின் பிரதிநிதி அப்சலுக்கு துக்குதண்டனை சரி என்ற We The Peopleன் அளவுகோல் அடக்கும் தேசிய இனத்திற்க்கு என்ன தண்டனை தரும்? தூக்குத் தண்டனையைவிட பெரிய தண்டனை தர வேண்டுமே?//

இது மக்கள் சொல்லவேண்டும். அப்சலோ அவன் சார்ந்த திவிரவாத கூட்டம் சொல்ல முடியாது. மக்களுக்கு தெரியும் எது அடக்குமுறை என்று :) அதை தெரிந்து கொண்டு வருகிறேன் அது வரை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ப்ளீஸ்.

//We the People ஒரு அடக்குமுறையாளரா? என்னாலும் நம்பமுடியவில்லை. உங்களின் மேற் சொன்ன பதிலை எப்படி புரிந்து கொள்வது என்பதில் உதவி செய்தால் எனது தப்பபிப்ராயங்களை களைந்து கொள்வேன்.//

இது பார்வையின் குற்றமே. நான் அடக்குமுறை என்ன செய்தேன்? உங்களுக்குள் அடித்து அமர்த்தப்பட்ட விசயங்களை விட்டு ஒரு மூன்றாவது கண்ணால் பார்த்தால் உண்மை தெரியலாம். நானும் அந்த முயற்சியில் தான் இருக்கிறேன்.

//பிறகு ஏன் போலியாக சமூக அக்கறை இருப்பது போல வெளி வேசம்....//

என்னை பொருத்தவரை வெளி வேஷம் தேவையில்லை. நான் மக்கள் மன்றத்தில் ஓட்டுப்பொறுக்க போகப்போவது இல்லை, என்க்கு கட்சியும் இல்லை, எனக்கு மக்கள் ஓட்டுக்காக பிச்சை எடுக்கத்தேவையும் இல்லை அதனால் எனக்கு வேஷம் தேவையில்லை. நான் எனக்கு எது சரி என்று தோண்றுகிறதோ அதை மட்டும் தான் சொல்கிறேன்.

///உங்கள் வழக்காடு மன்றங்களீன் நேர்மைக்கு ஒரேயொரு உதாரணம் இது வரை இந்தியாவில் தலித்துக்களுக்கு எதிராக நடந்த எந்த ஒரு வன்கொடுமைக்கும் உங்கள் நீதிமன்றம் ஒரு மசிரும் பிடுங்கிப் போட்டதில்லை. ஆனால் இதே தலித் மக்களின் வாழ்வாதாரத்தை பரிக்கும் சேரிகள் அழிப்பு, ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஒரிஸ்ஸா உள்ளிட்ட இடங்கள் சுரங்கத்திற்க்கு ஆதரவு என்று நீதிமன்றங்கள் செயல் பட்டுள்ளன....///

இது இந்த பதிவுக்கு தேவையில்லா வாதம், இதில் வழக்காடு மன்றம் என்ன செய்தது என்ற விசயம், அதை பற்றி ஒரு பதிவு போடும்போது நாம் பேசலாம். அல்லது நீங்க ஒரு பதிவு போடுங்க நான் அங்கு வந்து பேசறேன். :)

////
So Kashmir Issue need to be talked on the table and not with Guns. So Afsal Case is definetely cant be mixed with Kashmir is my stand at this point. And i have my own views based on somany other reliable information which i have it. I will posting it shortly with full perfect version of wats happening there.

காதால் கேட்பதும் பொய் , கண்ணால் பார்ப்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று நம்பும் நான் அதை செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் வெளி வரும் முழு உண்மையும். அதற்கான Ground Works are ON. விரைவில் உங்களை இதே காஷ்மீர விசயத்தில் சந்திப்பேன்.
/////


//உங்க ரிலையபிள் இன்பர்மேசனை வைக்க இவ்வளவு நேரமா? அல்லது ஒரு நிலைப்பாடிற்க்கு வந்த பிற்ப்பாடு அதற்க்கு வசதியாக ரிலையபிள் இன்பர்மேசன் தேடுகிறீர்களா?//

நான் மேலே சொன்னது போல என் மூன்றாவது பரிமானத்தின் பார்வையாக தான் அதை முயற்சிக்கிறேன். விரைவில் வெளியிடுகிறேன். இந்த பதிவுகள் எனது தொழில் சார்ந்த வேலை நேரம் போக எழுதுபவை அதனால் இதற்க்கு எவ்வளவு கால அவகாசம் தேவை என்று இப்போது சொல்லமுடியவில்லை. எனினும் விரைவில் வருவேன் என்று மட்டும் சொல்க்கொள்கிறேன்.

நன்றி,

நா.ஜெயசங்கர்
We The People said…
அசுரன்,

//மேலேயுள்ளது அனானியின் வார்த்தை அல்லது உங்களுடையதா?......//

நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். எனக்கு என் கருத்தை சொல்ல, இந்த தமிழ்மணத்தில் சிலர் செய்வது போல் நான் என் முகம் மறைக்க மாட்டேன். நான் அனானியாக ஒரு நாளும் எழுதியது கிடையாது. எனக்கு எது சரி என பட்டதோ அதை நான் தவறாது என் பெயரில் தான் எழுதுவேன். நம்பினால் நம்புங்கள். அது உண்மையில் ஒரு அனானி எழுதியது.

//மேலும் பெட்ரோல் பற்றிய உங்களது பதிவில் நான் என்ன பின்வாங்கினேன் என்று தெரியவில்லை... கொஞ்சம் விளக்கினால் அதை Revisit செய்வதில் எனக்கு பிரச்சனையில்லை... உங்களுக்கு எப்படி?....//

அந்த பதிவில் என்ன நடந்தது என்று எனக்கு நினைவில்லை. திரும்ப பார்த்து அப்படி ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை. அனானி என்ன சொல்ல விழைந்தார் என்று எனக்கு புரியவில்லை.

நன்றி,

நா.ஜெயசங்கர்
//. பாராளமன்ற தாக்குதலிலும் கொல்லப்பட்டவர்களும் மக்களே!!//

உரிமைக்காக போராடிய ஹோண்டா உழியர்களை அடித்த போலீசும் மக்கள் அடி வாங்கிய தொழிலாளர்களும் மக்கள்!! - We The People-ன் வரைய்றைப்படி...

உரிமைக்காக போராடிய திருனெல்வேலி மாஞ்சோலை தலித்துகளும் மக்கள் அவர்களை ஆற்றுக்குள் தள்ளிய போலிசும் மக்கள் - We The People-ன் வரையறைப்படி..

வீரப்பன் காட்டில் மிகக் கொடூரமாக துன்புறத்தப்பட்டவர்களும் மக்களே - துன்புறுத்திய போலீசும் மக்களே - We The Peopleன் வரைய்றைப்படி...

காஷ்மீரில் காணாமல் போனவர்களும் மக்கள்தான் - காணாம்ல் போக்கடித்த ராணுவத்தினரும் மக்கள்தான்.

அதனால் காணமல் போனவர்களின் கூட்டத்தார் காணாமல் போக்கடித்தவர்களை தாக்கினால் அதை மக்க்ள் மீது தாக்குவதாக கூறுவார் We The people.

இன்னும் அபத்தமாகா ஈராக் போராளிகள் சுட்டு 20 அமெரிக்க மக்கள் இறந்தனர் என்று பதிவு போடுவார் நம்ம We the People.. அதிர்ச்சியாகி விளக்கம் கேட்டால் .. அமெரிக்க ராணுவமும் அமெரிக்க மக்கள்தானே என்று சொல்லி நமது மடத்தனத்தை கேலி செய்வார்....

ஏன் மிகவும் சிரம்பப்படுகிறீர்க்ள் Civilian என்ற வார்த்தையையே ராணுவத்திற்க்கும் வைத்துவிடுவோமே....


மக்க்ள் யார்?

உங்களது சொந்த வரைய்றைதானா?

போலீஸு, ராணுவம் இவையனைத்தும் அரசு இய்ந்திரம் என்பதில் ஒரு அங்கம் அவ்வள்வுதான்... The State Machinary....

அவர்கள் மக்கள் கிடையாது....


அசுரன்
We The People said…
ஐயா அசுரன்,

//சரி இப்ப இந்தியா என்பதற்க்கு விளக்கம் கொடுப்பீர்க்ளா?

ஒரு வேளை நாளைக்கு இந்தியா என்பது மேற்கே ஈரானில் ஆரம்பித்து கிழக்கே இந்தோனேசியாவில் முடிவது எனவே இங்கெல்லாம் எனது தேசியத்திற்க்கு(இது We the People-ன் சொந்த புரிதல்) எதிராக எவன் வேலை செய்தாலும் என்ன lablelலில் இருந்தாலும் ஒழிப்பேன்... ஆமாம்... இதுதான் தேசப்பற்று... //

இந்தியா இன்று உள்ளது 1947 வரையறுக்கப்பட்டது அல்ல, பல பகுதிகள் பல நாடுகள் கூறு போட்டு சாப்பிட்டுவிட்டதன் எச்சமே, 40% காஷ்மீரம் பாகிஸ்தானிடம் உள்ளது, 20% காஷ்மீரம் சீனவிடம் உள்ளது இது போக மிச்சமே இந்தியாவிடம் உள்ளது. அது போல பல மாநிலங்களை பாகிஸ்தான், பங்களாதேசம், சீன அள்ளிக்கொண்டு மிச்சம் உள்ளது மட்டுமே நான் சொல்லும் இந்தியா. இந்தியா மற்ற நாடுகளில் நிலங்களை ஆக்கிரமித்தாக எந்த சரித்திரமும் இல்லை.

//சரி அமெரிக்காவில் தேசியம் என்பதற்க்கு விளக்கம் என்ன? காஷ்மீரில் என்ன?//

அமெரிக்கா தனி நாடு, அங்கு வாழ்பவர்களுக்கு தேசியம் உண்டு, அது நான் என் இந்தியாவை நேசிக்கிறேனோ அது போல தான் அமெரிக்கனும் நேசிப்பான். காஷ்மீரம் இந்தியாவின் ஒரு பகுதி, அங்கு தேசியம் என்பது இந்தியா என்ற கூட்டமைப்பை சார்ந்தே இருக்கும். அங்கு வாழும் தீவிரவாதிகளுக்கு வேண்டுமென்றால் பாகிஸ்தான் அவர்கள் நாடாக தோன்றலாம்.

//எல்லா விசய்த்தையும் நானே சொந்தமா கண்டுபிடிப்பேன் என்பது சரியல்ல. Don't invent the Wheel again... ஏற்கனவே இருக்கும் விசயங்களை படித்து உள்வாங்க்விட்டு அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நமது சிந்தனையை செலவழிப்பது வளர்ச்சிக்கு உதவும்...//

அதை நானும் உங்களுக்கு சொல்லவிரும்புகிறேன். I am not gonna invent anything, i jus gonna collect the facts around kashmir. Could you please wait until i buzz with my new post. நாம் இருவர் படித்து புரிந்த விசயங்கள் வெவ்வேறு தளங்களில் வந்தவையே, உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியாது, எனக்கும் தெரியாது, நீங்க ஏதோ ஒரு நாட்டிலிருந்து காஷ்மீரை பார்க்கிறீர்கள், நான் இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்து பார்க்கிறேன். அந்த மாநிலத்தில் உள்ள உண்மைகள் அங்கு இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும், நான் அங்குள்ள நிலையை ஒரு திவிரவாத இயக்கம் சொல்வதை ஏற்க தயாராய் இல்லை என்பது என் நிலைபாடு. இருவரும் நன்கு ஆராய்ந்து பின்னர் நான் பதியும் பதிவில் துவங்குவோம் கருத்து பரிமாற்றம் என்பது என் கருத்து.

நன்றி,

நா.ஜெயசங்கர்
///
இந்தியா மற்ற நாடுகளில் நிலங்களை ஆக்கிரமித்தாக எந்த சரித்திரமும் இல்லை.

///

அப்படியா?

ஒரு வேளை ஆக்கிரமித்த பகுதியை ராணுவத்தின் உதவியுடன் மாநிலம் என்று பாட புத்தகத்தில் எழுதினால் அது அக்கிரமிப்பு கிடையாது என்று அப்படிச் சொல்கிறீகளா?

அருணாச்சலம், சிக்கிம், காஷ்மீர் இவை நேரடியாக இந்திய ஆக்கிரமித்து சேர்த்த இடம்.

அதுவன்றி பகுதி அளவில் துணை ஏகாதிபத்தியமாக இந்தியா தன்னை இருத்திக் கொள்ள முயற்சிப்பதுதான்(பெரிய தாதாவின் லோக்கல் ரெப்ரசன்டேட்டிவ்) அதனை எதிர்த்து அருகிலுள்ள பிற நாடுகளின் மக்கள் அரசியல் செய்ய வழிவகுக்கிறது;

1) நேபாளத்தின் இந்திய எதிர்ப்பு மனநிலை.
2) பூடானில் இந்தியா செய்து வருவது.
3) சிரிலங்காவின் இனவாத கட்சியான JVP யின் கொள்கை இந்திய ஏகாதிபத்தியத்திற்க்கு எதிராக சிரிலங்கா தேசிய இன உணர்வை பொங்கியெழச் செய்ய விடுதலைப் புலிகள் அவசியம் என்று சொல்கிறது.
4) பகுதி வல்லரசாக தன்னை நிலைநாட்ட தனது படைகளை பிற நாட்டு உள்விவகாரங்களில் தலையிட அனுப்பு போலி தேசிய வெறியை கிள்ப்புவதோடு மட்டுமல்லாம சொந்த செலவில் சூனியமும் வைத்துக் கொள்வது - எ-கா சிரிலங்காவில் அமைதிப் படை...

ஆக்கிரமிப்பு என்று எதை கருதுகிறீர்கள் என்றூ கேள்வி கேட்க்கலாம்.. ஆயினும் அடிப்படை புரிதல் இல்லா பல விசய்ங்கள் இருக்குமிடத்து இந்த கேள்வியை கேட்க்க விரும்பவில்லை.

அப்புறம் சரித்திரம் குறித்துச் சொல்லி அதிலும் சொந்த முயற்சியில் இருக்கும் ஆள்தான் என்று காட்டுகிறீர்கள்...

ராஜராஜ சோழனின் கப்பல் படை கிழக்கே சென்று பிடித்த இடங்கில் கம்போடியா வரை உள்ளது....

சிரிலங்கா பற்றியெல்லாம் சொல்லத் தேவையில்லை,,,

கண்மூடித்தனமான தேசிய உணர்வு உங்களை பிடித்தாட்டுகிறதோ என்று சந்தேகமாக இருக்கீறது....

அது மத அடிப்படைவாதம் போல்வெ மிக ஆபத்தானது. ஹிடலர் கோஸ்டிகளின் சக்தி அங்குதான் ஒழிந்துள்ளது. எச்சரிக்கை...



//, நீங்க ஏதோ ஒரு நாட்டிலிருந்து காஷ்மீரை பார்க்கிறீர்கள், நான் இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்து பார்க்கிறேன். //

இதுவும் சொந்த முடிவு அப்படித்தானே?



//காஷ்மீரம் இந்தியாவின் ஒரு பகுதி, அங்கு தேசியம் என்பது இந்தியா என்ற கூட்டமைப்பை சார்ந்தே இருக்கும். அங்கு வாழும் தீவிரவாதிகளுக்கு வேண்டுமென்றால் பாகிஸ்தான் அவர்கள் நாடாக தோன்றலாம்.
//

இதுவும் சொந்த முடிவு அப்படித்தானே?

உங்களது விருப்பங்களைப் பற்றி/ எனது விருப்பங்களைப் பற்றி யாருக்கு என்ன கவலை. இன்னும் சொன்னால் மேலேயுள்ளதுதான் எனது விருப்பமும் கூட. ஆனால் என்ன செய்ய இந்திய அரசு இதை நிறைவேற்றும் வகையில் செயலாற்றுவதில்லை... அதை சுட்டிக் காட்டி நான் விமர்சிக்கிறேன். நீங்களோ தேசப் பற்றையும் பிற தேசியங்களின் சுய நிர்ணய உரிமையையும், ஒரு தேசத்தை ஆளும் ஆட்களையும்/அவர்களின் நிலைப்பாடுகளையும் ஒன்றாக போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள். அதனாலேயே என்னை வேறு நாட்டைச் சேர்ந்தவன் என்று பாசிஸ்டு போல பேசுகிறீர்கள்(I din't mean to say that you are facist. But your way of expression reminds me so...)


அசுரன்
Anonymous said…
http://wethepeopleindia.blogspot.com/2006/07/blog-post_27.html

இங்க கடைசி இரண்டு(தலைவரு போட்ட பின்னூட்டம் மொத்தமே இரண்டுதான்).

அதுக்கப்பறம் வரவேயில்ல.
Anonymous said…
காஷ்மீரில் காங்கிரஸ் அரசு தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதால் மட்டுமே காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைந்து இருப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று கருதுவது தவறு.

இணைந்து இருப்பதைப் பற்றி பகிரங்க கருத்து கணிப்பு நடத்தினால் காஷ்மீர் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுமே பிரிந்து போவதைத் தான் விரும்பும்.
Anonymous said…
அசுரனைத் தாக்கி அனானி பின்னூட்டம் வந்ததைப் போல் உங்களைத் தாக்கி அனானி பின்னூட்டங்கள் வரவில்லையா?
We The People said…
jaallyjumper.blogspot.com,

//காஷ்மீரில் காங்கிரஸ் அரசு தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதால் மட்டுமே காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைந்து இருப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று கருதுவது தவறு.//

அங்கு பிரிவினைவாதிகள் ஓட்டுப்போடக்கூடாது என்று விடுத்த எச்சரிக்கையை எதிர்த்து போடப்பட்ட ஓட்டுக்களாக தான் நான் அந்த ஓட்டுக்களை நான் பார்க்கிறேன்.

//இணைந்து இருப்பதைப் பற்றி பகிரங்க கருத்து கணிப்பு நடத்தினால் காஷ்மீர் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுமே பிரிந்து போவதைத் தான் விரும்பும். //

இன்று இந்தியா தயாராக உள்ளது. As per UN Treaty between India and pakisthan, பாகிஸ்தானிடம் உள்ள 40% ஜம்மு & காஷ்மீரையும் சேர்த்து வாக்கு எடுக்கப்படுமானால் ஓட்டுக்கு தயார் என்று இந்தியா என்றோ சொல்லிவிட்டது ஐக்கிய நாடுகளின் சபையில். அது உங்களுக்கு தெரியாதா?

//மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுமே பிரிந்து போவதைத் தான் விரும்பும்.//

ஒரு சில அரசியல்வாதிகள் சுயநலத்தோடு நினைப்பது தான் மக்கள் நினைக்கிறார்கள் என்றால் அது உங்கள் அறியாமையை தான் வெளிப்படுத்துகிறது மிஸ்டர் ஜல்லி.

//அசுரனைத் தாக்கி அனானி பின்னூட்டம் வந்ததைப் போல் உங்களைத் தாக்கி அனானி பின்னூட்டங்கள் வரவில்லையா? //

வந்திருக்கிறது இந்த பதிவில் உள்ள பின்னூட்டங்களில் பார்க்கவும்:
http://wethepeopleindia.blogspot.com/2006/12/blog-post_21.html
Anonymous said…
\\As per UN Treaty between India and pakisthan, பாகிஸ்தானிடம் உள்ள 40% ஜம்மு & காஷ்மீரையும் சேர்த்து வாக்கு எடுக்கப்படுமானால் ஓட்டுக்கு தயார் என்று இந்தியா என்றோ சொல்லிவிட்டது ஐக்கிய நாடுகளின் சபையில். அது உங்களுக்கு தெரியாதா?//
சாதாரண பொதுஜனத்துக்கு இதை தெரிந்து வைத்திருக்க தேவையில்லை.இந்தியா சொல்லியிருந்தால் அது நிச்சயமாக மெச்சத் தகுந்த விசயம் தான்.

இதற்கு ஆதாரம் ஏதும் இருந்தால் தயவு செய்து வெளியிடுங்கள்.
Anonymous said…
\\As per UN Treaty between India and pakisthan, பாகிஸ்தானிடம் உள்ள 40% ஜம்மு & காஷ்மீரையும் சேர்த்து வாக்கு எடுக்கப்படுமானால் ஓட்டுக்கு தயார் என்று இந்தியா என்றோ சொல்லிவிட்டது ஐக்கிய நாடுகளின் சபையில். அது உங்களுக்கு தெரியாதா?//
சாதாரண பொதுஜனத்துக்கு இதை தெரிந்து வைத்திருக்க தேவையில்லை.இந்தியா சொல்லியிருந்தால் அது நிச்சயமாக மெச்சத் தகுந்த விசயம் தான்.

இதற்கு ஆதாரம் ஏதும் இருந்தால் தயவு செய்து வெளியிடுங்கள்.
We The People said…
This comment has been removed by a blog administrator.
Anonymous said…
//Government of India made it clear that once the soil of the State had been cleared of the invader and normal conditions restored, its people would be free to decide their future by the recognized democratic methods of a plebiscite or referendum which, in order to ensure complete impartiality, might be held under international auspices. //

இது 1948ல் இந்திய அரசு ஐ.நா சபைக்கு எழுதிய கடிதம்.கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாத இந்திய அரசின் நிலையை கையாலாகத்தன்மை என்பதா கயமைத்தனம் என்பதா?.

பாகிஸ்தானிடம் உள்ள 40% காஷ்மீரை கைப்பற்ற இந்தியா என்ன செய்தது?இந்தியாவுடன் இணைந்த காஷ்மீரிலாவது அமைதியை கொண்டுவந்ததா?.

கொண்டு வராது.1948 ஒப்பந்தத்தில் உள்ள வாக்குறுதியின் படி வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர் மக்களின் மனநிலையை புரிந்து நடக்க வேண்டியது இந்தியாவின் கடமை.

அதுவரை பலியாவது அப்பாவி மக்களும் இந்தியாவின் பொருளாதாரமும் தான்.
We The People said…
ஜாலிஜம்பர்!

உங்கள் கேள்விக்கான விடையை பல முறை இதே பதிவில் சொல்லிவிட்டதான், தாங்களை மேலே போய் பதில்களை படுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!