Posts

Showing posts from July, 2006

இது தான்டா உள்குத்து!

Image
வழக்கமாக இவர் கொடுப்பார் உள்குத்து மக்களுக்கு! இவருக்கும் வெள்ளிக்கிழமை ஒரு சூப்பர் உள்குத்து கிடைத்தது. பாராளமன்றத்தில் வெள்ளிக்கிழமை விலைவாசி உயர்வு பற்றி விவாதம் வந்த போது பா.ஜா.க வும், இடதுசாரிகளும் நிதியமைச்சரின் மெத்தன போக்கே இந்த விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று சொல்லி முதலில் பா.ஜா.க பாராளமன்றத்திலிருந்து வெளியேறியது, அடுத்து அதே காரணத்தை சொல்லி இடதுசாரிகளும் வெளியேறியது, இதை தொடர்ந்து விவாதத்தில் பங்கு கொண்ட பகுஜன் சாமாஜ், ராஷ்டிரிய ஜனதாதள் என எல்ல கட்சிகளும் வெளியேறியது. ஸ்ப்பா தப்பிச்சோமுடா என்று, மீண்டும் ஏன் விலைவாசி உயர்ந்தது என்று Statistical points (cost-push and demand-pull inflation ) அள்ளிவீச தொடங்கினா? யாரோ எதிர்த்து பேசராங்களே என்று அண்ணன் பார்க்கிறார், அட அத்தனை காங்கிரஸ் உறுப்பினர்களும் தலைவரை பிச்சு ஒதரியிருக்காங்க! "நங்க பொது மக்களை நேர்ல சந்திக்கனும்(அடுத்த தேர்தலுக்கு!!) இப்படி விலைவாசி உயர்ந்துக்கிட்டே போனா எங்களைத்தான் மக்கள் கேள்வி கேட்ப்பார்கள், சாதாரண மக்கள் பிரச்னைக்கு உள்ளாகராங்க, நீங்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எடுத்த முயற்சி எல்லாம் வேஸ்ட்...

நாடகம்.காம்

நண்பர் Mejoritypeople என்னிடம் பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும் இந்த பதிவில் ஒரு கேள்வி எழுப்பினார், அதற்கு நான் தந்த பதில் அதை தனி பதிவாக கொஞ்சம் விரிவாக போட்டால் அனைவருக்கும் அறிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் என்று தான் இந்த பதிவு. Mejoritypeople கேள்வி: இந்த அரசு பற்றிய உங்க்ள் நிலையும் CPI and CPM நிலையும்ஒன்று என எடுத்து கொள்ளலாமா ? என் பதில்: CPI and CPM முழு நேர வியாபாரிகளாகிவிட்டதாக தான் எனக்கு தோண்றுகிறது??!! எந்த முதாலாளித்துவ கொள்கையை எதிர்த்தார்களோ அதை இன்று ஆதரிப்பது போல் பெங்காலில் வேலைகள் நடக்கிறது! அன்னிய முதலீடு வாங்க கூடாது என கூறும் இடதுசாரிகளின் அரசு பெங்காலில் அன்னிய முதலீட்டுக்கு காத்திருக்கிறது! அவர்களை மக்களுக்கு நன்மை செய்ய நாம் பாராளமன்றத்துக்கு அனுப்பினால் அவர்கள் காங்கிரஸுடன் கை கோர்த்து 6 முறை பெட்ரோல் விலை ஏற்றிய போது வாயளவில் போராட்டம் செய்து! மக்களின் நண்மையை கருத்தில் கொள்ளாமல் வாய்ப்பேச்சில் வீரர்கள் ஆனதில் எனக்கு பெரும் வருத்தம். ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏற்றத்தின் போது இவர்கள் போராட்டம் செய்வதும், உடனே காங்கிரஸ் நவரத்தின நிறுவ...

ஒரு பாசிடிவ் அப்ரோச்!

Image
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு பதிவு! எழுத பல விசயங்கள் சிந்தையில் வந்தது ஆனால் ஏனோ அதை எழுத முடியவில்லை, சில பாதியில் கைவிடப்பட்டது (நீங்க தப்பிச்சிட்டீங்க!!!) :) இன்னும் சில எழுத்தில் உள்ளது... உங்களை சும்ம விடுவனா?! நன்பர்கள் வெகுவாரியா என் பிளாக் பத்தி சொன்ன ஒரு குறை, பாசிடிவ் அப்ரோச்(Positive Approach) இல்லை என்பது! சரி என்றே எனக்கும் தோன்றியது! அதனால் இந்த பதிவு சில நல்ல விசயங்களை பற்றி எழுத நினைத்தேன். இங்கு குறை பல இருந்தாலும் சில நல்ல விசயங்கள் நடக்க தான் செய்கிறது! சில நல்ல விசயங்கள் கேட்க தான் செய்கிறது! அதில் ஒன்று சில நட்களுக்கு முன் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையத்தின் பழைய படங்களையும் மற்றும் சிறு குறிப்புக்களையும்! இதை நான் உங்களுடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். தும்பா ராக்கெட் ஏவுதளம் உருவான கதை: மேற்கத்திய நாடுகள் நிலவுக்கு பயணிக்க துடங்கிய 1960களில், இந்தியா தன் விண்வெளி ஆராய்ச்சியில் பாதம் பதிக்க எடுத்த கன்னி முயற்சிகள் மற்றும் அதற்க்காக நம் விண்ஞானிகள் பட்ட பாடுகள்! அப்பொழுது எடுக்கப்பட்ட சில படங்கள் பார்க்க பிரம்மிப்பாய் இருந்தது! முதல் ப...

கழுதை கைது ;)

Image
இது காஞ்சிபுரம் - சூன் 29, 2006 நடந்த காமெடி: ஒரு கழுதையை கைது செய்தது காஞ்சிபுரம் காவல்துறை. எதுக்குன்னு பார்க்கறீங்களா? பேப்பர்(மனு) தின்னதுக்கு தான்! 29 ஆம் தேதி ஏதோ திராவிட மக்கள் மன்றம் பெயரில கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம் (மாவட்ட நிர்வாகிகள் மனு கொடுத்தா, கண்டுக்காம இருக்கறதயும், அட்லீஸ்டு கழுதைக்கு கொடுத்த அதுக்கு ஒரு வேளை உணவாகும் என்ற உயரிய நோக்கதுக்காக)ஒரு நூதன போராட்டம் நடந்தது காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகளை கண்டிச்சு! அங்க தான் இந்த கழுதைக்கு எழரை புடிச்சிருக்கு போல, ஓசில பேப்பர் நிறையா கிடைக்கும் இந்த கழுதையின் முதலாளி இந்த திராவிட மக்கள் மன்றம் கோஷ்டிகளோட அனுப்பியிருக்காரு! இந்த மன்றமும் அறபோர்தான் பண்ணாங்க போல அது தருமவான்களான காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு புடிக்கல போல. உடனே ஒரு புகார் காஞ்சிபுரம் காவல்துறைக்கு கொடுக்கப்பட்டது! உடனடி நடவடிக்கையில் காவல்துறை இறங்கி தூள் பண்ணீட்டங்க!!! அங்கு போராட்டம் செய்த மன்றத்தார் + கழுதை + மனுக்கள் + கூடாரம் + கட் அவுட் என்று எல்லத்தையும் அள்ளிக்கிட்டு போக முடிவு எடுத்துட்டு பார்த்த கழுதை மன்றத்தாருடன் வேனில் எற மறுத்தது எவ்வ...