இது தான்டா உள்குத்து!
வழக்கமாக இவர் கொடுப்பார் உள்குத்து மக்களுக்கு! இவருக்கும் வெள்ளிக்கிழமை ஒரு சூப்பர் உள்குத்து கிடைத்தது. பாராளமன்றத்தில் வெள்ளிக்கிழமை விலைவாசி உயர்வு பற்றி விவாதம் வந்த போது பா.ஜா.க வும், இடதுசாரிகளும் நிதியமைச்சரின் மெத்தன போக்கே இந்த விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று சொல்லி முதலில் பா.ஜா.க பாராளமன்றத்திலிருந்து வெளியேறியது, அடுத்து அதே காரணத்தை சொல்லி இடதுசாரிகளும் வெளியேறியது, இதை தொடர்ந்து விவாதத்தில் பங்கு கொண்ட பகுஜன் சாமாஜ், ராஷ்டிரிய ஜனதாதள் என எல்ல கட்சிகளும் வெளியேறியது. ஸ்ப்பா தப்பிச்சோமுடா என்று, மீண்டும் ஏன் விலைவாசி உயர்ந்தது என்று Statistical points (cost-push and demand-pull inflation ) அள்ளிவீச தொடங்கினா? யாரோ எதிர்த்து பேசராங்களே என்று அண்ணன் பார்க்கிறார், அட அத்தனை காங்கிரஸ் உறுப்பினர்களும் தலைவரை பிச்சு ஒதரியிருக்காங்க! "நங்க பொது மக்களை நேர்ல சந்திக்கனும்(அடுத்த தேர்தலுக்கு!!) இப்படி விலைவாசி உயர்ந்துக்கிட்டே போனா எங்களைத்தான் மக்கள் கேள்வி கேட்ப்பார்கள், சாதாரண மக்கள் பிரச்னைக்கு உள்ளாகராங்க, நீங்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எடுத்த முயற்சி எல்லாம் வேஸ்ட்...