இது தான்டா உள்குத்து!

வழக்கமாக இவர் கொடுப்பார் உள்குத்து மக்களுக்கு! இவருக்கும் வெள்ளிக்கிழமை ஒரு சூப்பர் உள்குத்து கிடைத்தது.

பாராளமன்றத்தில் வெள்ளிக்கிழமை விலைவாசி உயர்வு பற்றி விவாதம் வந்த போது பா.ஜா.க வும், இடதுசாரிகளும் நிதியமைச்சரின் மெத்தன போக்கே இந்த விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று சொல்லி முதலில் பா.ஜா.க பாராளமன்றத்திலிருந்து வெளியேறியது, அடுத்து அதே காரணத்தை சொல்லி இடதுசாரிகளும் வெளியேறியது, இதை தொடர்ந்து விவாதத்தில் பங்கு கொண்ட பகுஜன் சாமாஜ், ராஷ்டிரிய ஜனதாதள் என எல்ல கட்சிகளும் வெளியேறியது.

ஸ்ப்பா தப்பிச்சோமுடா என்று, மீண்டும் ஏன் விலைவாசி உயர்ந்தது என்று Statistical points (cost-push and demand-pull inflation ) அள்ளிவீச தொடங்கினா? யாரோ எதிர்த்து பேசராங்களே என்று அண்ணன் பார்க்கிறார், அட அத்தனை காங்கிரஸ் உறுப்பினர்களும் தலைவரை பிச்சு ஒதரியிருக்காங்க! "நங்க பொது மக்களை நேர்ல சந்திக்கனும்(அடுத்த தேர்தலுக்கு!!) இப்படி விலைவாசி உயர்ந்துக்கிட்டே போனா எங்களைத்தான் மக்கள் கேள்வி கேட்ப்பார்கள், சாதாரண மக்கள் பிரச்னைக்கு உள்ளாகராங்க, நீங்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எடுத்த முயற்சி எல்லாம் வேஸ்ட் " என்ன சரமாரியா திட்டி தீர்த்து இருக்கிறார்கள் காங்கிரஸ் MPக்கள் ... தல ரொம்பவே வெக்ஸ் ஆயிருக்காரு! மக்களுக்கே தண்ணி காட்டுற தலைக்கே தண்ணிய தேடிவேண்டிய நெலமை! ஐயோ நான் குடிதண்ணிய சொன்னேன்!

இப்படியெல்லாம் நம்ம அமைச்சரை நாமே திட்ட கூடாதுன்னு Parliamentary Affairs மந்திரி B K Handique சொல்ல, செளதான்னு ஒரு காங்கிரஸ் உறுப்பினர் செம கடுப்பாயி "கட்சிக்குள்ளயும் பேச விட மாட்டேன்னு சொல்லரீங்க, பாராளமன்றத்திலும் பேசக்கூடாதுன்னு சொல்லரீங்க, அப்ப நாங்க பேசாம ராஜினாமா செஞ்சிட்டு போறோம்ன்னு" காட்டமா பதில் கொடுத்திருக்காரு! இதுல வேற வெளிநடப்பு வேற செஞ்சிருக்காங்க நம்ம காங்கிரஸ் MPகளும்.

கடைசியா பாராளமன்றத்தில் மொத்தம் 40 பேரு தான் மிச்சம் இருந்திருக்காங்க! அவங்க யாருன்னு கேக்கறீங்களா!! அட வேற யாரு மந்திரீங்க மட்டும் தான்! அவர்கள் தான் வெளியேற முடியாதே!

இந்தியாவில் ஜனநாயகம் ரொம்ப கொளுந்து விட்டு வளரது! இல்லன்ன காங்கிரஸ் அரசை எதிர்த்து காங்கிரஸ் MPகளே பாராளமன்ற வெளிநடப்பு போராட்டம் பண்ணுவாங்களா!

பன்ச் டயலாக்:

RJD MP ஒருவர் விஜய் கிருஷ்ணான்னு பேரு, அவர் ஒரு சூப்பர் டயலாக் சொல்லியிருக்காரு பாராளமன்றத்தில:

"He has completely failed to check the prices. Why don't you remove this minister,"


வாழ்க சனநாயகம்!!

செய்திக்கு நன்றி - www.ibnlive.com

Comments

Sivabalan said…
Sir,

விலைவாசி மேட்டர் ..Ok

ஆனால் ஆறு மாதத்திற்கு முன்னர் ஊடகங்களுக்கு செல்லப் பிள்ளையாக இருந்த சிதம்பரம் இடஒதுக்கீடு பிரச்சனைக்கு பின்னர் ஏன் கசந்து போனார்?

எனக்கு தெரியாமல் கேட்கிறேன்...
We The People said…
Sivabalan சார் கசந்து போனது காங்கிரஸ் காரங்களுக்குகா? மீடியாவுக்கா? மீடியா நடந்த செய்தியைத்தான் தந்திருக்கு! ஏங்க எதுக்கெடுத்தாலும் இடஒதுக்கீடு பிரச்சனையை வெச்சு ரவுண்டு கட்டுரீங்க! அவர் தவறை அவர் கட்சிக்காரங்க திட்டி தீர்த்திருக்காங்க! அதுக்கும் மீடியாவுக்கு என்ன சம்மந்தம்! குலாம்காதர்க்கா கோகுலாஷ்டமின்னு சொல்லுவாங்களே அது போல...சம்மந்தம் இல்லாமா லிங்க் விடுரீங்க!!!
Anonymous said…
சிவபாலன் சங்கத்தில் சேர்ந்து விட்டார்.இனி மேல் அப்படித்தான் பேசுவார்.:-)

வெளிநடப்பு செய்த அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் பார்ப்பனர்கள் என இனி யாராவது சொல்வார்கள்.
We The People said…
சிவபாலன் சார் நீங்களுமா??
Nakkiran said…
சூப்பர் அப்பு

:-)
Machi said…
பாராட்ட வேண்டிய சங்கதி தான். இதே போல மற்ற அமைச்சர்களையும் கேள்வி கேட்டாங்கன்னா நாடு உருப்படும். அது நடக்குமா?
We The People said…
நன்றி அணானி, நக்கீரன் & குறும்பன். குறும்பன் அவர்களே நானும் அதைத்தான் எதிர்ப்பார்க்கிறேன். ஆனால் இப்படி கேள்வி கேட்கும் போது வக்காலத்து வாங்கி வந்து! சம்மந்தம் இல்லாமல் பேசி இவர்களை காப்பாற்ற எத்தனைப்பேர் வருகிறார்கள்! என்னைக்கு அரசியல்வாதிகள் மக்களை மதிக்கிறார்களோ, மக்களின் கஷ்டங்களை புரிந்து அது தீர்க்க முயற்சி எடுக்கிறார்களோ அன்று தான் நாடு உருப்படும். என் கடமை தவறை சுட்டிக்காட்டுவது! அவர்கள் திருந்துவதும், திருந்தாது இருப்பதும் மக்கள் விதி போலமையும்!
Sivabalan said…
சார்

நிச்சயமாக நான் பார்பன மக்களுக்கு எதிரானவன் கிடையாது. என்னுடைய நிலையைப் பற்றி திரு.ஜெயராமன் அவர்களின் பதிவில் கூறியுள்ளேன். தயவு செய்து அதைப் படித்துவிட்டு பிறகு எனக்கு முத்திரை குத்துங்கள்.

சார், ஊடங்கள் திரிப்பு வேலையே செய்யவில்லை என நீங்கள் சொன்னால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

பதிவை திசை திருப்புவது போல் இருப்பதாக உணர்ந்தால் இதை இத்தோடு நிறுத்திவிடலாம்.
We The People said…
சிவபாலன் சார் பார்பனன் அல்ல யார் தவறு செய்தாலும் எதிர்த்து குரல் கொடுக்கலாம் தவறில்லை. இந்த பதிவில் மீடியா ரிப்போர்டிங் தான் செய்தது! இந்த செய்தில் திரிப்பு இல்லை என்பது என் வாதம். இந்த செய்தியில் ப.சிதம்பரத்தின் பொருளாதார கொள்கையால் தான் இன்று இரண்டு மாதங்களுக்கு முன் ரூ18-20 வரை விற்று வந்த கோதுமை மாவு இன்று ரூ28 அளவுக்கு, ரூ 16- 20 கிடைத்து வந்த சக்கரை இன்று ரூ 24-26 அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. இப்படி எல்ல அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தால் சாதாரண நடுத்தர, ஏழை மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள் என்பதே என் கருத்து.

மற்ற சில, பல இடங்களில் எல்லா ஊடங்களும் திரிப்பு வேலையை சூப்பரா செய்யராங்க! அதில் சன் டிவியும் அடங்கும்!!!
Anonymous said…
This is because of the improper use of virtual commodity trading where essencial commodities are used for this Forward Trader. These paper trade is creating the price rise.
Sivabalan said…
சார்

நீங்கள் சொலவதை நான் ஏற்றுக் கொள்கிறேன்..

சன் டிவி செய்யும் பல கேவல மான விசயங்கள் எனக்கும் பிடிக்காதுதான்...
Sivabalan said…
சார்

எனது பதிவில் நீங்கள் இட்ட பின்னூடத்திற்கு நான் ஒரு விளக்கம் சொல்லியிருக்கிறேன். அதில் ஒரு கட்டுரை பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்..

அதைப் பற்றி உங்கள் கருத்து தேவை...
We The People said…
நன்றி அனானி. என் கருத்தை ஏற்றமைக்கு நன்றி சிவபாலன் சார். நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையை பற்றி ஒரு தெளிவான சிந்தனை செய்து, அதற்க்கு பதில் எழுதுவேன். மீண்டும் நன்றி சிவபாலன்.
We The People said…
அனானி, நீங்க கிளப்பிய Forward Trade மேட்டரை ஆராய்ச்சி பண்ணேன், நீங்கள் சொல்லுவது சரி போல் தான் தெரிகிறது. P.C Forward Trade என்ற அத்தியவசிய பொருட்களின் Virtual Trading லைசென்ஸ் கொடுத்து அதை ஒரு புறம் ஊக்கிவித்து விட்டு இன்னொருபுறம் விலைவாசியை கட்டுப்படுத்த முயற்சிப்பது போல் பாவ்லா காட்டுகிறாரோ!! முதலில் Forward Trade மேட்டரை நிறுத்தவேண்டும், அதை நிறுத்தாமல் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாது என்றே தோண்றுகிறது. இதைப்போல தான் தங்கத்தின் விலையேற்றத்துக்கு காரணமும் Virtual Trading செய்வதால் தான் போல. பாங்க் வட்டி விகிதத்தை உயர்த்தினால் விலைவாசி குறையாது என்று வெளிநாட்டில் பொருளாதாரம் படித்த சிதம்பரம் அவர்களுக்கு தெரியாதா என்ன?? எதற்காக இந்த வெளிவேஷம்!!!???
Anonymous said…
Virtual Trading என்றால் என்ன? என்னமோ ஒன்னும் புரியல. தெளிவா சொல்ல முடியுமா
Unknown said…
//நிறுவனங்கள் + முதலீடு + முதலாளி கள் நலனையே முன்னெடுக்கும் இக்களவானிகளுக்கு மக்கள் என்பதெல்லம் தேர்தல் கால விதயம் மட்டுமே. //

உலக வங்கியின் வழிகாட்டுதல்படி பட்ஜெட் போட சிறப்பு மூளையெல்லாம் தேவை இல்லை.சொல்லப்போனால் அதற்கு மூளையே தேவை இல்லை.சொல்வதைக் கேட்டால் போதும்.அப்படி இருந்து விட்டால் நிறுவனங்கள் + முதலீடு + முதலாளிகள அதனை ஆஹா..ஓஹோ என்று புகழ்வார்கள்.

இவரால் அடைந்த நன்மைகளில் ஒன்று இந்தியாவின் கோதுமை இறக்குமதி.ஒரு தொலை நோக்குத் திட்டத்துடன்தான் இவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

கோக்கிற்கும் பெப்ஸிக்கும் நற்சான்றிதழ் தருவது அப்புறம் ஆதாயம் தரும் பதவிகளில் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவது போன்ற செயல்களுக்குத்தான் இவர்களுக்கு நேரம் இருக்கும்.
We The People said…
நன்றி senthil, கல்வெட்டு & வணக்கத்துடன். நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கீங்க... யாரு கேக்கறது?

//உலக வங்கியின் வழிகாட்டுதல்படி பட்ஜெட் போட சிறப்பு மூளையெல்லாம் தேவை இல்லை.சொல்லப்போனால் அதற்கு மூளையே தேவை இல்லை.சொல்வதைக் கேட்டால் போதும்.அப்படி இருந்து விட்டால் நிறுவனங்கள் + முதலீடு + முதலாளிகள அதனை ஆஹா..ஓஹோ என்று புகழ்வார்கள்.// ஆமாங்க அவங்களுக்கு சதகமா பா.சி சொல்லறாரு அப்பறம் ஆஹா..ஓஹோ புகழாமா என்ன செய்வார்கள். இப்படி போச்சுன்னா வறுமை கோட்டுக்குகீழ உள்ள எல்லாரும் மாண்டுவிடுவர், அப்பறம் பாருங்க நம்ம நாட்டுல வறுமை கோட்டுக்குகீழ ஆளே இல்லைன்னு பெருமை பேசுவாங்க... அதுதாங்க ஏழைகளுக்கு கிடைக்கும் பரிசு.