Posts

Showing posts from September, 2006

மக்கள் கேட்கிறோம் - இவை என்ன ஆச்சு?

நம்ம அரசு போடற ஒவ்வொரு விசாரணை கமிஷன்களும் எங்க போகுது? என்ன ஆகுது என்று எனக்கு ரொம்ப நாள் சந்தேகம். கடந்த இரண்டு ஆண்டுகள் அரசு ஆனையிட்ட பல கமிஷன்கள் புஸ்வானமானதா? அல்ல கமிஷன் வாங்கிட்டு செட்டில் ஆயிடுச்சான்னு ஒரே சந்தேகம். அப்படி காணாமல் போன சில விசாரணை கமிஷன்கள்: "ஆப்ரேஷன் துரியோதனா" விசாரணை கமிஷன்: பாராளமன்றத்தில் கேள்விகள் கேட்க சுமார் 11 MPகள் பணம் பெற்றுக்கொள்ள அதை ஒரு தனியார் தொலைகாட்சி நிறுவனம் அதை வீடியோவில் பதிவு செய்து மக்களுக்கு காட்டியது. அரசும், பாராளமன்றமும் உடனடியாக என்ன என்னவோ வித்தை காட்டி அதை மழுப்பி, அதற்கு ஒர் விசாரணை கமிஷன் போட்டாங்க. மாட்டிக்கொண்டவர்கள் காங்கிரஸ், பி.ஜே.பி, ஆர்.ஜே.டி என எல்லா கட்சியிலும் சமபங்கு இருந்தமையால் பெரிய எதிர்ப்பு இல்லாமல் விசாரணை கமிஷன் காணாமல் போனது. யாராவது தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ். "ஆப்ரேஷன் சக்ரவியூக்" விசாரணை கமிஷன்: Member of Parliament’s Local Area Development Scheme (MPLADS) எனபடும் தொகுதி மேன்பாட்டு நிதியை சுமார் முப்பது சதவீதம் MPக்களுக்கு தந்தால் தங்கள் தொகுதி மேன்பாட்டு நிதியை தாரை வார்க்க ரெடியா உள்ள...

ஓணம் ஒரு தேசிய பண்டிகை ஆக்கலாம்...

Image
மத நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக சாதி, மத, இன பேதமின்றி இன்று ஓணம் பண்டிகை வெகு விமர்சியாக கேரளாவில் கொண்டாட படுகிறது. கேரளாவில் பிறந்த ஒவ்வெறு மலையாளிக்கும் கடந்த பத்து நாட்களாக அத்தபூ கோலமுடன் தூள் கிளப்பறாங்க. ஓணம் ஒரு பார்வை: இது ஒரு அறுவடை பண்டிகை என்ற போதும் பொதுவாக இது தங்களை வருடத்துக்கு ஒரு முறை காணவரும் புராண இதிகாச ராக்ஷ்ச ராஜாவான மஹாபலியை வரவேற்க்கவே இந்த பத்து நாள் விசேஷம். ஊரெங்கும் பூக்கள் கோலமாக பரவிகிடக்கும், புலி வேசம் போட்டு நடனம், வெள்ளம்களி (boat Race), யானை ஊர்வலம் என ஒரு வசந்தகாலத்து எபெக்ட் கொடுக்கும் பண்டிகை இது. ஓண பண்டிகையில் எனக்கு பிடித்த விசயம் முஸ்லிம், கிருத்துவர்கள், ஹிந்து என எந்த மத பாகுபாடு இல்லாமல் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதே!!! என்னை ஆச்சர்ய படுத்தும் பண்டிகையும் இது. ஏன் ஓணம்? ராக்ஷ்ச ராஜாவான மஹாபலி ஊழல், திருட்டு, பசி, பட்டினிசாவு என எந்த ஒரு கஷ்டங்களும் இல்லாமல் கேரளாவை ஆண்டுவந்த ராஜா, அவரை சோதனை செய்ய வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்னு மூன்று அடி மண் கேட்க, கொடை வள்ளலான மஹாபலி சரியென்று சொல்ல, விஷ்வரூபம் எடுத்த வாமனன் ஒரு அடிக்...