Posts

Showing posts from April, 2009

கண்ணிருந்தும் குருடராயிருப்பவர்களுக்கு!

ஈழம் - வன்னி போர்முனையிலிருந்து நேற்றைய வீடியோக்கள்! இதுவா கொத்துகுண்டுகள், ரசாயன ஆயுதங்கள் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என்று சொன்னதுக்கு அர்த்தம்??!! பி.கு: இத்தகைய ஒரு வாக்குறுதியை இலங்கை அரசிடம் இருந்து பெருவதே குதிரைக்கொம்பாக இருந்தது. இனி வாக்குறுதியை மீறும் பட்சத்தில் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதே ராணுவநடவடிக்கையை கோரமுடியும் என்று யாரோ ஒருத்தர் சொன்னாருபா நேற்று!

பிரணாப் முகர்ஜி ஒத்துக்கிட்ட்ராருடே!

Image
பிரணாப் முகர்ஜி இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதாக ஒத்துக்கிட்டாரு டே!! இப்ப என்ன செய்யலாம் நம்ம... உங்க கருத்து என்ன? வீடியோ தெரியவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து பார்க்கவும்... பி.கு: இலங்கை எல்லாம் உங்களுக்கு நட்பு நாடா தெரியுது! ஈழத்தமிழன் மட்டும் தான் உங்களுக்கு நட்பா தெரியலையா...

ஈழத்திலிருந்து வீடியோகள்!

இதையும் பார்த்துவிடுங்கள்! இவர்களா ராஜப்க்ஷே தேடும் புலிகள்??!!! வீடியோக்களை தந்த அண்ணன் பாலபாரதிக்கு நன்றி

கண்களில் ரத்தம் வருதடா!!

இளகிய மனம் உள்ளவர்கள் இதை பார்க்கவேண்டாம்: இந்த சிறுபிள்ளைகள் காயப்பட்டு கிடப்பவரை காப்பாற்ற தவிப்பதிலிருந்து தெரியுது, அவர் தான் இந்த பிள்ளைகளில் கடைசி உறவாக இருக்குமென்று !! வீடியோவுக்கு நன்றி - பாலபாரதி

நான் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டேன்!

Image
தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான திரு.கருணாநிதியின் அறிக்கை: இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து 23-4-2009 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். *********************** ஐயா, தெரியாமா தான் கேட்கிறேன், இதை யாருடைய கண் துடைக்க நடக்கிறது? எதற்காக இந்த நாடகம். இது மத்திய அரசை எதிர்த்தானால், அந்த மத்திய அரசில் நீங்கள் யார்? அதே மத்திய மந்திரிசபையில் பங்கு கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன தார்மீக பொறுப்பு இருக்கிறது இந்த பந்த் நடத்த?? தாயநிதி மாறனுக்கு ஐ.டி துறை மந்திரி பதவியும், டி.ஆர்.பாலுவுக்கு கப்பல் போக்குவரத்து துறையும் தரும் வரை நான் இந...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!

நேற்றைய பல்டிக்கு பின் தானே கேள்வி தானே பதில் பேட்டி ஒன்றை தந்தார் முதல்வர் திரு.கருணாநிதி அவர்கள், அதில் இப்படி ஒரு கேள்வியும் பதிலும் இருந்தது! //கே: பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதா? ப: இது ஜெயலலிதாவை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. அவர்தான் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து அவரை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர். அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிலர் ஜெயலலிதாவின் அடிவருடி களாக மாறி அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளார்கள். // சரி ஏன் அந்த கேள்வியை ஜெவிடம் மட்டும் கேட்க வேண்டும், நேற்று அப்ஷேக் மானு சிங்வி - காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் ஜெ சொன்னதையே தான் சொல்கிறார் இங்கே சொடுக்கவும் , வீடியோ இங்கே ... இன்னும் சொல்லப்போனால் ஜெ சொல்வதை கூட பெரிய விசயமாக எடுக்கத் தேவை இல்லை! ஏன் என்றால் அவர் தேசிய ஆட்சி பொறுப்புக்கு வர போவதில்லை! காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி , இந்தியாவின் ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய கட்சி என்னும் போது அது சொல்வதே முக்கிய விவாதமாக எடுத்திருக்க வேண்டும் திரு. கருணாநிதி!! // அவர்தான் பிரபாகரனை கைது செய்து இந்திய...