நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்த தமிழ் வலைப்பதிவர் பட்டறையில் என்னை கவர்ந்த விசயங்களை இங்கே பட்டியலிட விரும்புகிறேன்... வினையூக்கியும் மற்றும் ஜெயாவும் பட்டறைக்கு ஏற்பாடுகள் நடந்த முதல் நாள் மாலையும் சரி பட்டறை தினத்தன்றும் சரி அயராத உழைப்பை தங்கள் பங்கிற்கு கொடுத்தார்கள், துடிப்புடன் காலை முதல் மாலை வரை ஆர்வமாக கற்றுக்கொள்ள வந்த பார்வையாளர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்த விசயம் என்னை அசர வைத்தது!!! என்ன எனர்ஜி அவருக்குக்கு! ஒரு நிமிடம் கூட சலிக்காம ஆர்வமா எல்லோருடைய சந்தேகங்களையும் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவருக்கு என் முதல் சபாஷ்! அடுத்தது விக்கி, மா.சி & பொன்ஸ்: இது தான் முதல் பட்டறை, அனுபவம் இல்லாத காரணத்தால் ஒரு குறையும் வந்துவிடக்கூடாது என்று இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் சிறப்பான பலனை தந்தது என்பது 100% உண்மை. பல பட்டறைகள் நடந்த்திய அனுபவம் வாய்ந்தவர்கள் நடத்தியது போல சிறப்பாக கலை கட்டியது பட்டறை. இவர்கள் முயற்சியும் உழைப்பையும் பாராட்டியே ஆகவேண்டும்! பாலாபாய் பம்பரமா சுழன்று கொண்டேயிருந்தார், CD வாங்கிவருவது முதல் உணவு ஏற்பாடுக...
புதிய வலை கலைஞர்கள் இந்த பா.க.ச என்ன வென்று தெரியாமல் தவிப்பதால். அதை பற்றி சொல்லி, உறுப்பினர் ஆவது எப்படி என்ற விளக்கமும் தர தான் இந்த பதிவு. முதலில் அறிமுகம்: பா.க.ச - பாலபாய் என்று அன்போடு அழைக்க்ப்படும் பாலாபாரதியை சின்னதும் பெருசுமாக கலாய்க்க ஆரம்பித்து அது ஒரு பெரிய இயக்கமா மாறி இப்ப அது பாலபாரதியை கலாப்போர் சங்கமாக உருவெடுத்துல்லது. இதில் பல உறுப்பினர்கள் இருந்தாலும் பொன்ஸ், நான், அருள், ப்ரியன், என எல்லா சென்னபட்டிண வாசிகளின் பங்கு தான் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம். இன்று இது கோவை, திருநல்வேலி, பங்களூரூ, அமெரிக்கா, ஜப்பான் என உலகெங்கும் பல கிளைகள் உருவாகிவருகிறது. 2007ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி கிடைத்த புது போட்டோ, மேலே உள்ளது, இப்ப எங்க தல புது அவதாரம் எடுத்து இருக்காரு!! அது தான் யாகவா பாரதி முனிவர் அவதாரம். உலகிலேயே இவ்வளவு சுலபமாக ஒரு உறுப்பினர்களை சேர்க்கும் சங்கம் பா.க.ச மட்டுமே. அது தான் இந்த வளர்ச்சிக்கு ஒரு சிறந்த காரணம். உறுப்பினர் ஆவது எப்படி? மேலே உள்ள தல பாலாபாய் படத்தை இரண்டு நிமிடம் பார்த்தாலே உங்களுக்கும் இந்த சங்கத்தில் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசை வரும்...
இதை நான் சொல்லவில்லை JKLF என்று அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்ணனியின் தலைவர் சொல்லியிருக்காரு: "Afzal must be given another chance. I sure that he will get complete support from all quarters and will be pardoned." எதுக்கு இன்னொரு chance இன்னும் வெயிட்டா வெடி வைக்க ஒரு chance கேட்கிறாரோ? அடப்பாவிகளா? அந்த complete support எதுக்கு? இப்படி பப்ளிக்கா பிரஸ் மீட்டிங் போட்டு கேக்கற அளவுக்கு இந்தியாவில சுதந்திரம் இருக்குடா சாமி. இந்த கேடு கெட்ட திவிரவாதிகளை காப்பாற்ற வரும் மனித உரிமை காப்பாளர் என்ற பெயரில் வரும் ___ களை என்ன சொல்லறது. இந்த அஃப்சல் நாட்டின் தலை நகரில் அதுவும் நம்ம பாராளமன்றத்தில் தாக்குதல் நடத்தி பலரை கொல்ல சதி செய்தவன் என்று நிரூபிக்கப்பட்டுள்ளவனை ஆதரிக்கும் இந்த ம.உ.கா!!! இந்த அப்சலின் உயிரை எவ்வளவு முக்கியமோ அது போல தானே இவன் கொன்ற நம் பாதுகாப்பு படை நன்பர்களின் உயிரும். அப்பொழுது எங்க போனாங்க இந்த மனித உரிமை காப்பாளர்கள். இந்தியாவின் இறையாண்மையை தொட்டு விளையாடினால் தூக்கு தான் கெதி என்று நாம் உரக்க சொல்லவேண்டிய நேரத்தில் தீவிரவாதிக்கு ஆதரித்து அவர்களுக்...
Comments
http://www.youtube.com/watch?v=Benod38M9hk
this
is AlJazeera news video..