Posts

Showing posts from October, 2006

இந்த கொலைக்கு யார் காரணம்?

Image
இன்றய இந்தியா இவருக்கு கொடுத்த பரிசு - பசி (தற்)கொலை. இன்று இந்த செய்தி IBNல பார்த்து, நொந்து போனேன். பாட்னா தொடர் வண்டி நிலையத்தில் ஒரு ரெயில் வண்டியில் இவர் பசியின் கொடுமை தாங்க முடியாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவர் எழுதிய இங்கு(பாட்னா ரெயில் நிலையத்தில்) தற்கொலை கடிதத்தில் கடந்த பதிமூன்று நாட்களாக உண்ண உணவின்றி அலைந்து, தண்ணீர் மட்டும் பருகி வாழ்ததாகவும், தன்னை யாரும் பார்க்கவில்லை, யார் என்றும், எங்கிறுந்து வந்தாய் என்று கேட்க ஆள் இல்லை! யாரும் உணவு கேட்டும் தரவில்லை என்று எழுதி இருக்கிறார். இவர் யார்? எங்கிருந்து வந்தார்? எனற தகவல் இல்லை. இதை பார்த்த போது, இதை தடுக்க வழியே இல்லையா? இந்தியாவை வல்லரசாக முயற்சிப்பதாக சொல்லும் இந்த அரசியல்வாதிகள், இந்த பசி தற்கொலைகளை ஒழிக்காமல் அங்கு அடைய முடியாது என்று தெரியவில்லையா?? பதிமூன்று நாட்களாய் தனி ஒரு மனிதன் உண்ண உணவின்றி தற்கொலை செய்யும் போது பல்லாயிரம் கோடி வெளிநாட்டு டாலர்கள் சேமித்து வைத்து என்ன செய்ய போகிறார்கள்?? டாலர் சேர்த்து வைத்து, மக்களையும், விவசாயிகளை தற்கொலைக்கு வழிநடத்தி செல்வது தான் வல்லரசின் வேலையா...

ஒரு இந்தியனின் தீபாவளி வாழ்த்துக்கள்

Image
அனைத்து தமிழ்மணம், தேன்கூடு வாசகர்கள்/பதிவர்கள் மற்றும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!! இந்த தீபாவளி உங்கள் இல்லங்களில் வளத்தை பெருக்கட்டும். நன்றி! நா. ஜெயசங்கர் We The People

லக்கிலுக்கும் - நீதிமன்ற அவமதிப்பும்

Image
நம்ம பகுத்தறிவு ஜீவி லக்கிலுக் இவ்வளவு சூப்பரா திரைகதை அமைப்பார்ன்னு நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. சுவனப்பிரியன் என்னும் ம.உ.கண்மணி கொடுத்த ஒரு ஒன் லைன்னை (One Line) கதையை செம அசத்தலா திரைகதை அமைத்து. பாக்கியராஜ், மணிரத்னம் ஆகியவரை விட ஒரு சிறந்த திரைகதையாளனா அசத்தியிருக்காரு . ராம் கோபால் வர்மா ரேஞ்சுக்கு ஒரு சிறந்த திவிரவாத சினிமா எடுக்கலாம். அவர் சொல்லாராரு அப்சலை தூக்குல போடுன்னு சொன்னா தேசபக்தி ஜல்லியாம். தூக்குல போடாதன்னு சொன்னா பகுத்தறிவாமா!!! இது! இவருக்கு தேசபக்தி ஜல்லியா தெரியுது!! லக்கிலுகின் கண்டுபிடிப்புகள்: பாராளமன்றம் தாக்க இந்தியாவே சதி செய்தது! அதற்கு அப்சலை அவருக்கே தெரியாம உபயோகிச்சிடாங்களாம். இந்தியா நீதிமன்றங்கள்(Sessions Courts, High Court, Supreme Court வரை) பொய்வழக்குன்னு தெரிஞ்சும் அப்சலுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்காம்! அப்சல் ஒரு பாவம் இந்திய குடிமகனாம்! கதையின் கரு: அப்சல் குரு நல்லவனா இருந்தா எப்படி இருக்கும் என்று எண்ணியதன் விழைவு. கதைக்கு Referrence : அப்சலின் மனைவி எழுதியதாக சொல்லப்படும் கடிதம் என்று சுவனப்ரியன் எழுதிய பதிவு (லக்கிலுக் Googleல த...

அப்சலுக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க ப்ளீஸ்!

Image
இதை நான் சொல்லவில்லை JKLF என்று அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்ணனியின் தலைவர் சொல்லியிருக்காரு: "Afzal must be given another chance. I sure that he will get complete support from all quarters and will be pardoned." எதுக்கு இன்னொரு chance இன்னும் வெயிட்டா வெடி வைக்க ஒரு chance கேட்கிறாரோ? அடப்பாவிகளா? அந்த complete support எதுக்கு? இப்படி பப்ளிக்கா பிரஸ் மீட்டிங் போட்டு கேக்கற அளவுக்கு இந்தியாவில சுதந்திரம் இருக்குடா சாமி. இந்த கேடு கெட்ட திவிரவாதிகளை காப்பாற்ற வரும் மனித உரிமை காப்பாளர் என்ற பெயரில் வரும் ___ களை என்ன சொல்லறது. இந்த அஃப்சல் நாட்டின் தலை நகரில் அதுவும் நம்ம பாராளமன்றத்தில் தாக்குதல் நடத்தி பலரை கொல்ல சதி செய்தவன் என்று நிரூபிக்கப்பட்டுள்ளவனை ஆதரிக்கும் இந்த ம.உ.கா!!! இந்த அப்சலின் உயிரை எவ்வளவு முக்கியமோ அது போல தானே இவன் கொன்ற நம் பாதுகாப்பு படை நன்பர்களின் உயிரும். அப்பொழுது எங்க போனாங்க இந்த மனித உரிமை காப்பாளர்கள். இந்தியாவின் இறையாண்மையை தொட்டு விளையாடினால் தூக்கு தான் கெதி என்று நாம் உரக்க சொல்லவேண்டிய நேரத்தில் தீவிரவாதிக்கு ஆதரித்து அவர்களுக்...