Posts

Showing posts from June, 2007

எட்டு(ம்) இடத்தில் ஜெய்

வாங்க எட்டு போட்டு விளையாடலாம்ன்னு முதல்ல சர்வேசன் போட்டாரு ஒரு கமெண்ட், ஓ.கே ரெடி பண்ணுவோம்ன்னு நினைத்துக்கொண்டுயிருக்கையில் நம்ம வெங்கட்ராமன் வேற கெளபிட்டாரு... இப்படியே விட்டா பல எட்டு போட வேண்டியிருக்கும் பயமாயிட்டதால முதலில் நம்ம பதிவை போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்ப்போம்ன்னு எறங்கிட்டோமில்ல... என்னைப்பற்றி ஏற்கனவே பல தடவை மொக்கை போட்டதால ... உங்களுக்கு தெரியாத சில (எட்டு) விசயத்தை சொல்லாம்ன்னு நினைக்கிறேன்... இந்த எட்டு என்னை ரொம்பவே பாடா படுத்தியும் இருக்கு, உதவியும் இருக்கு பல விசயங்களில், அதில் சில எட்டுக்களை மட்டும் எடுத்து போடுவோம்ன்னு ஒரு முயற்சி... ஓவரா இருந்த அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... ஹீ! ஹீ!! 1. நான் ஏழாவது பாஸ் பண்ணதும், எங்க வீட்டை கோவை-பீளமேடு பகுதியிலிருந்து கோவை-ராமநாதபுரம் பகுதிக்கு மாற்றிப்போனோம்! அதனால இங்க இருந்து முன்பு படித்த GRG Matriculation பள்ளிக்கு செல்வது சுலபம் அல்ல என்ற காரணத்தால் என்னை CSI Union Higher Secondary தள்ளிவிட்டுட்டாங்க, முதலில் ரொம்ப நொந்து நூலா போனேன்! புது நண்பர்கள், புது ஏரியா, புது மக்கள்... நம்ம சென்னை 600028 மாதிரி கிரிக்கெட் விளை...

முதல்வர் அடக்கி வைத்த பெண்குலம்?!

" ஆறுவது சினம் - படித்து அடங்கிவிடுமா பெண்குலம்? " என்று பொங்கி ஏழுதியிருக்கும் நம் முதல்வர், என்ன சொல்லவறாருன்னு கொஞ்சம் சொல்லுங்க, என்னவோ ஜனாதிபதி பதிவுக்கு முதல் முறையா பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பது போல ஒரு மாயை க்ரீயேட் செய்யறாரு! ரொம்ப ஓவர் தான் முதல்வரே! இதற்கு முந்தய ஜனாதிபதி தேர்தலில் கேப்டன் லட்சுமி நின்ற போது முதல்வருக்கு இந்த கவிதை ஏன் வரவில்லை!! அப்ப மட்டும் "ஆறுவது சினம் - படித்து அடங்கிவிடட்டும் பெண்குலம் என்று இருந்து விட்டுவிட்டாரா?? கேப்டன் லட்சுமி கட்சி சார்ந்த ஒரு வேட்பாளராக கருதமுடியாது! அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்! பல முறை இந்திய சுதந்திரத்துக்காக சுபாஷ் சந்திர போஸோடு இணைந்து போராடியவர்! சுந்திர போராட்டத்தில் பல வருடங்கள் சிறை சென்றவர். இப்படி பட்ட ஒரு பெண்குலத்தை ஏன் அன்று திரு.கருணாநிதி ஆதரிக்கவில்லை?? இன்று நம் முதல்வர் ஆதரிக்கும் பிரதீபா பாட்டீல் வெறும் ஒரு காங்கிரஸ் பிரமுகர், காங்கிரஸில் இணைந்தால 1962 காங்கிரஸ் எம்.எல்.ஏவாக அரசியலுக்கு வந்தவர்; பெரிய சாதனைகள் ஒன்று இல்லை சொல்வதற்கு! காங்கிரஸ் கட்சியால் கவர்னர் பதிவி கிடைத்து ராஜஸ்...

விவாதகளத்தில் அநாகரீக பின்னூட்டம்!

இந்த தமிழ்மணம் விவாதகளம் பக்கமே போகாமல் இருப்போம் என்றால் மனம் கேட்கமாட்டீங்குது! அட பொது மேடை தானே நம் கருத்தும் சொல்லிவைப்போமே என்று அங்கு நாம், நம்முடைய கருத்தை பின்னூட்டமா போட்டா!! அங்க உடன்பிறப்பு லக்கி செய்யும் அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லை என்று தோன்றுகிறது! அது தமிழ்மணம் விவாதகளமா? அல்லது லக்கிலுக்கின் அரட்டை அரங்கமா?? லக்கிலுக்குக்கு தேவையான, அவர் தலைவனை போற்றும் பின்னூட்டங்கள் மட்டும் ஜல்லியடிக்கும் களமா?? கடந்த வாரம் ஹெல்மெட்! குறிந்தான ஒரு விவாதம் அங்கு துவக்கப்பட்டது! அதில் திருவாளர் லக்கிலுக் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்? இந்த கட்டாய ஹெல்மெட் வற்புறுத்தலை பற்றி உங்கள் கருத்து என்ன? நான் பின்னூட்டத்தில் என் கருத்தான //இந்த கட்டாய ஹெல்மெட் வற்புறுத்தலை பற்றி உங்கள் கருத்து என்ன?// தலைவருக்கு நல்ல கட்டிங் கரெட்டா கிடைத்திருக்கும். அவ்வளவு தான் அவர் தலைவர் மேல் ஒரு புகார் சொன்னேன். அந்த பின்னூட்டம் பிரசுரிக்கபடவில்லை என்பதோடு அல்லாமல்.... நா. ஜெயசங்கர் அவர்களின் அநாகரிகமான பின்னூட்டத்தினை தவிர்த்து மீதி பின்னூட்டங்கள் வெளியிடப்படுகின்றன. நான் ஏற்கனவே கூறியபடி இது தமிழ்மணம் நி...

ஜெ. வை ஆதரிக்கும் உடன்பிறப்புக்கள்!!!

என்ன ஆச்சர்யம் லக்கி போன்ற உடன்பிறப்புக்கள் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்களாமாம் சாமியோ! இன்று போலீஸ் எரிக்கப்பட்ட விவகாரத்தில் ஜெ.வை கைது செய்ய மாட்டாஙகளாம்! சாரி கைது செய்யசொல்லமாட்டாங்களாம்!!!! நாங்கள் கொஞ்சமாவது சிந்திக்க கூடியவர்கள். எவனோ ஒரு பைத்தியக்கார ஜெ. அபிமானி செய்த காரியத்துக்காக ஜெயலலிதாவை கைது செய்ய கோரமாட்டோம். - லக்கிலுக் ;) அப்ப அன்று தர்மபுரி கேஸ்ல ஏன் ஜெ.வை கோத்துவிட்டீங்க? தினகரனில் 3 கொலைகள் நடக்கவில்லை என்றால் இந்த உடன்பிறப்பு இப்படித்தான் சிந்திப்பாரா?? இந்த அழகிரியால பாவம் உடன்பிறப்புக்கள் ஜெ.வை ஆதரித்து பதிவு போட வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டிருக்காங்க! உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு! (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்!!!) இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் தன் பலத்தை காட்ட அப்பாவி மக்களை கொலை செய்யறாங்க! பி.கு: பைத்தியகாரனுகளை எல்லாம் கட்சியில் சேர்த்த தலைவருக்கு ஒரு பங்கு இந்த கொலைகளில் உண்டு! அதுவும் எம்.எல்.ஏ பதவி வரை கொடுத்த தலைவருக்கு நிச்சயம் இந்த கொலைக்கு பங்கு உண்டு என்பது என் வாதம்!

திருத்தமுடியாதுடா உங்களை!!!

ஜெயலலிதா மது அருந்தியதாக இரட்டை அர்த்தத்தில் முதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டது, கொட நாடு எஸ்டேட்டில் சோதனை நடந்தது ஆகியவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று காலை முதல் பேராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய அதிமுக எம்எல்ஏ கைது! ஆடுங்கடா ஆடுங்க... ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை. அரசியல்வாதிகள் கையில் பணமும், அதிகாரமும் இருக்கு என்றால் எத்தனை பேரை வேண்டுமானாலும் கொளுத்திப்போட்டு என்ஜாய் பண்ணலாம்! அன்று அவர்கள் தினகரன் கருத்துக்கணிப்பு போட்டப்போ, அழகிரி & கோ கலாநிதி மாறனையோ! தயாநிதி மாறனையோ அடிக்கவில்லை, கொல்லவில்லை! இன்று இவர்கள் சொன்னவரை ஒன்னும் செய்யவில்லை! எந்த நாயாவது சொன்னவனையோ அல்லது செய்தவனையோ கொல்லறீங்களாடா? பாவம் உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களையும், காவல் காக்கும் காவலர்களும் தான் கிடச்சாங்களாடா? திரும்ப அடிக்கமாட்டாங்க என்ற தைரியம்! மக்களை விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை காலம் வேண்டிவரும் ?? இந்த பாவமலைகள் இந்தியாவை விட்டொழிக்க!!

கட்டாய ஹெல்மெட் சட்டம் வாபஸ்?

ஜூன் 1ஆம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடுப்பேத்தின அரசு, இன்று நைசா கை நழுவுதுங்க!!! 99% பேர் வாங்கி போட்டுக்கிட்டாங்க, நல்ல கலெக்ஷன் ஆயிடுச்சு என்றது, இன்று மாலை அறிக்கை விடுறாங்க, போக்குவரத்து காவல் அதிகாரிங்க ஹெல்மெட் அணிவதை கட்டாய படுத்த மாட்டாங்களாம், சும்மா ... அன்பா அட்வைஸ் பண்ணுவாங்களாம்... பல தரப்பட்ட மக்கள் கிட்ட இருந்து வந்த கோரிக்கை ஏற்று நைசா எஸ்கேப் ஆகுதாம் அரசு??? அடப்பாவிகளா இதை ரெண்டு நாள் முன்னாடி சொன்னா என்ன உங்களுக்கு !!! நல்லா இருங்கடா ! பி.கு: ஹெல்மெட் போட்டா உங்க உயிருக்கு தான் நல்லதுன்னு அரசுக்கு பின்னாடி ஜல்லியடிக்க சென்ற உடன்பிறப்புக்களே, உங்களுக்கெல்லா என் பதில் என் உயிரை இவ்வளவு நாள் அரசு காப்பாத்தல, இனிமேலும் இந்த மாதிரி அரசு காப்பாத்தாதுன்னு தெரியும், அதனால க்லோஸ் த டோர்!!! பி.கு: அரசே இந்த கட்டாய ஹெல்மெட் மாதிரி, எங்க கையில் உள்ள காசை கரெக்ட் பண்ண வேற ஏதாவது நல்ல ஐடியா இருக்கா??