Posts

Showing posts from August, 2006

வலைப்பதிவர் சுற்றுலா - 7

Image
ரிலே பதிவின் முந்தய பதிவுகள்: பாகம் 1: வீரமணி பாகம் 2: பிரியன் பாகம் 3: பால பாரதி பாகம் 4: மா.சிவக்குமார் பாகம் 5: சிங்.ஜெயக்குமார் பாகம் 6: அருள் குமார் வானம் மழைகான ஆயத்த பணிகளை செய்து கொண்டிருக்க கடற்கரை கோவிலை சென்று அடைந்தோம். ஒரு வழியா சுற்றுலாவின் கடைசி கட்டத்தை அடைந்தோம். Parkingயில் பார்க் செய்துவிட்டு பார்த்தால் பாலாபாரதி & மா.சிவகுமார் கோஷ்டியை காணவில்லை. அவர்கள் 10 நிமிடம் தமதமாக வந்தடைந்தனர். ஒருவழியா அனைவரும் வந்து சேர உள்ளே செல்ல தயாராக, அருள் நுழைவு டிக்கெட் எடுக்க முயற்சி செய்ய, அப்ப சிவகுமாரும், நானும் 5 ரதம் பார்க்க எடுத்த நுழைவாயில் சீட்டு இந்த கடற்கரை கோவிலையும் பார்க்க உபயோகபடுத்தலாம் என்ற மேட்டரை அருளுக்கு சொல்ல, அவரும் டிக்கெடை பார்த்துவிட்டு கரெக்ட் என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல போகும் வழியில் குப்புசாமி, கவிஞர் பாலபாரதியிடம் சுற்றுலா பற்றி ஒரு விவாதம் நடக்க... சுற்று என்றாலும் உலா என்றாலும் ஒரே அர்த்தம் தானே ஏன் அதை சுற்றுலா என்று சொல்லனும் என்று சர்ச்சை கெலப்பினாரு குப்ஸ். பாலா ஏதோ சப்பை கட்டு கட்டிகிட்டு இருந்தாரு... நாங்க உள்ளே சென்று பார்த்தால் திரு...

நாளை சோனியா Chairman of NAC??!!

இதனால் சகலருக்கு அறிவிப்பது என்ன வென்றால் நம் ரப்பர் ஸ்டாம்ப், ஸாரி பிரதமர் ஜனாதிபதியை சந்தித்து பிச்சை கேட்டு இரட்டை பதவி மசோதாவுக்கு கையெழுத்து வாங்கிட்டு வந்திட்டாருபா!!! நான் என்னமோ நாட்டு பிரச்சனைக்காக ஜனாதிபதியை சந்தித்து இருப்பரோன்னு தப்பா நெனச்சுட்டேன். பாவம் தல கொடச்சல் தாங்க முடியாம கையெழுத்து போட்டுட்டாரு போல... So, மிக விரைவில் சோனியா தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராக பதிவியை ஏற்கபோகிறார் என்று மட்டும் நன்றாக புரியுது. எங்க ஊருல ஒரு பழமொழி சொல்லுவாங்க அது தான் எனக்கு நினைவுக்கு வருது. "சொந்தம் காரியம் ஜிந்தாபாத்"

MPகளிடம் சுதந்திரதின Quiz

நேற்று இரவு தற்செயலா NDTV காண்டபோது. நம்ம MPகளிடம் சுதந்திரதின Quiz கேள்விகளை கேட்டு கொண்டிருந்தார்கள். மொத்தம் ஒரு 5 கேள்விகள் தான். 1. தேசிய கீதம் (National Anthem) யார் எழுதியது? 2. தேசிய பாடல் (National Song) யார் எழுதியது? 3. நம் தேசிய கொடியில் மேலே உள்ள நிறம் என்ன? 4. தேசிய கொடியின் நடுவில் உள்ள சக்கரம் எங்கிருந்து எடுத்தது? 5. காந்தியின் முழு பெயர் என்ன? அதில் கொடுமை என்ன வென்றால் ஒரு 10 - 15 MPக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது, ஒரு MP கூட சரியான பதில் சொல்லவில்லை. அந்த லிஸ்டில் நம் மூத்த பாராளமன்ற உறுப்பினர் நஜ்மா ஹெப்துல்லாவும் அடங்கும். 1. தேசிய கீதம் (National Anthem) யார் எழுதியது? இந்த கேள்விக்கு கிடைத்த பதில்களில் சில: பதில்கள்: தெரியாது, எந்த தேசிய கீதத்தை கேக்கறீங்க (என்னமோ சொன்ன பதில் சொல்லிடுவாரு போல), அதெல்லாம் எனக்கு தேவை இல்லை, எனக்கு ஜன் கன மன தெரியும் அவ்ளோதான், ஒருதர் மட்டும் ரொம்ப ட்ரை பண்ணி பாதி பேரு கண்டுபிடிச்சாரு ரபிந்தரூ.... என்று ஒரே இழுப்பு... சூப்பரோ சூப்பர் .... 2. தேசிய பாடல் (National Song) யார் எழுதியது? இந்த கேள்விக்கு கிட்ட தட்ட ஒரே மாதிரி பதில்கள் தா...

உறவுகள் பகைகளே!!! - தேன்கூடு போட்டி

கோவையில் எங்கள் வீட்டு முதல் மாடியில் புதியதாக குடி வந்தார் பாலாஜி, இவர்தான் குடும்ப தலைவர். ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜர். அவர், மனைவி வனஜா மற்றும் பாலாஜியின் பத்து வயது மகள் பூவிதா என சின்ன குடும்பம் தான். அன்று ஞாயிறு காலை 8 மணி வழக்கம் போல் என்.டி.டி.வி யில் செய்தியை பார்த்துக்கொண்டிருந்தேன், முதல் மாடியில் வீட்டிலிருந்து பலர் புதிதாய் வந்திருந்தனர், பெரிய தகராறு நடத்து கொண்டிருந்தது, ஒரே கூச்சலும் குழப்பம். எதோ விவகாரம் என்று மட்டும் தெரிந்தது. அவர்கள் குடிவந்து 6 மாதம் இருக்கும் இதுவரை அவர்களின் சப்தம் கூட வெளியே கேட்டதில்லை, இன்று என்னவாயிற்று என்று எனக்குள் ஒரு ஆவல். மெல்ல அவர்களின் வீட்டிலிருந்து வரும் போச்சுக்களை கேட்க துவங்கினேன். நான் செய்வது தவறு என்று தெரிந்தும் ஏனோ அதை கேட்க தூண்டியது என் உள் மனசு. யாரையோ இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள், அவரை யார் பார்த்துக்கொள்வது என்பது தான் பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. ஒரு 2 மணி நேர கூச்சலுக்கு பின் சப்தம் அடங்கியது. என்னவானாலும் நமக்கு நியூஸ் வரும் என்று தேத்திக்கிட்டேன். மதியம் நண்பன் மணி வீட்டுக்கு புறப்பட்டு வெளியே வந்தேன்...