கல்யாண் மறைவிற்கு என் அஞ்சலி!

தமிழ் வலைதிரட்டிகளில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்த தேன்கூடுவின் நிறுவனரான திரு.கல்யாண் அவர்களின் மரண செய்தி பெரும் அதிர்ச்சி :( இவரை நடேசன் பூங்காவில் வலைப்பதிவர் சந்தித்த போது இப்படி சாந்தமானவரா தேன்கூடின் நிறுவனர் என்று ஆச்சர்யபடுத்தினார். தமிழ் எழுத்துக்கள் வளர்ச்சிக்கு பல விடயங்கள் முயர்ச்சிப்பதாகவும், அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் சொன்ன போது, இந்த சிறுவயதில் இவ்வளவு தமிழ் பற்றா என்று வியக்கவைத்தார்! ஒரு 20 நிமிடம் தான் அவரிடம் நானும், தமிழியும் பேசியிருப்போம்! தேன்கூடு சேவைகள், அதில் உள்ள பிரச்சனைகள் என அனைத்தையும் கூறினார், அத்துனை பிரச்சனைகளுக்கு இடையேயும் அவர் அயராமல் செய்துவரும் தமிழ் சேவை நினைத்து வியந்தோம்! அதற்கு பின் சில மின்னஞ்சல் மூலம் தேன்கூடில் வரும் மேலான்மை சேவைகளை பற்றி செய்திகளை அனுப்பிவைப்பார். அவரை அன்று சந்தித்தது தான் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை! 29 வயது மரணத்தை தழுவும் வயதா?? வந்தார்! தன் கடமையாக நினைத்து தமிழ் வலையுலக்குக்கு தன்னால் இயன்ற சேவை செய்தார்! இன்று அவர் இல்லை என்றாலும் அவர் சேவைகள் நம்மை நினைவு கூறவைக்க...