Posts

Showing posts from 2009

வீடியோ - உயிர் போவதை பார்த்ததுண்டா!!!

நீங்க யாராவது வீடியோவில் ஒருவர் இறப்பதை பார்த்ததுண்டா? இங்கே பாருங்க இந்த இந்த வீடியோவில்! நொடிப்பொழுதில் அனைவரின் கண்முன்னே ... ஒரு மன்நிலை சரியில்லாதவன் புகைவண்டியின் மேலேறி அதன் மேல் உள்ள மின்கம்பியை பிடித்த கொடுமை :( ஒரு நண்பர் எனக்கு அனுப்பியது ...

ஓ.சியில் சிங்கப்பூர் செல்ல வழி!

Image
சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி இன்றைக்கு பதிவுலகுக்கு வெளியே பதிவுலகைப் பற்றி இருக்கும் ஒரு மறைமுக அறைகூவல், பதிவர்கள் எனப்படும் இணைய எழுத்தாளர்களால் ஆக்கப்பூர்வமாக எதுவும் எழுத முடியுமா என்பதே. முன்னோடி எழுத்தாளர்கள் முதல் பொதுத்தள ஊடகங்கள் வரை இந்தக் கேள்வியை மறைமுகமாக கேட்டுவருகின்றனர் மேலும் பதிவர்களின் எழுத்துத் திறன் பற்றி பொதுமக்களிடம் பேசத் தயங்குகின்றனர்.அது தவிர பொதுமக்களிடையே பதிவுலகம் பற்றிய அறிமுகங்கள் இல்லாததற்கு முதன்மைக் காரணி கணினி மற்றும் இணைய இணைப்பு அனைவரிடம் இல்லை என்பதே. இவை வெளிப்படையான காரணங்கள் என்றாலும், இணையத்தில் எழுதுகிறேன், இணைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று பிறரிடம் சொன்னால் அவர்கள் உடனடியாக ஐஆர்சி எனப்படும் இணைய உரையாடியில் வெட்டிப் பேச்சு பேசுவரோ என்றே நினைக்கிறார்கள். இணையத்தில் மிகப் பெரிய அளவிலான கருத்தாய்வுகள், விவாதங்கள் நடந்து வருவதும் வெளியில் பலருக்கும் தெரியவில்லை. இணையத்தில் வெளியிடப் பட்டக் கட்டுரைகள் இவை என்று பொதுமக்கள் முன்பு அத்தகைய ஆக்கங்களைக் கொண்டு செல்லும் முயற்சி பெரிய அளவில் மேற்கொள...

யாரு கிட்டா டுபாக்கூர் விடறீங்க??

Image
இலங்கை ராணுவம் புலிகள் எல்லோரையும் கொண்ணுப்புட்டோம் என்று சொல்லிட்டு... காலையில் வெளியிட்ட போட்டோக்களை பார்த்தா பயங்கர டவுட் வருது!!! முதல் படம் சார்ல்ஸ் ஆண்டனியுடையது : இவங்க எல்லாம் யாரு??? மரணப்பட்டு கிடக்கும் அநத நபர் போட்டிருக்கும் சொக்காவும் இவர் சொக்காவும் ஒன்று... போட்டோ எடுத்துட்டு போட்டு தள்ளிட்டாங்களா?? நான் பார்த்த வரை சில வித்தியாசங்கள் தெரியுது: 1. இறந்து கிடக்கும் மனிதரின் மீசை மிகவும் அடர்த்தியாக இருக்கு... ஆனால் சார்ல்ஸ்க்கு அப்படி இல்லை... 24 வயதுக்கான இள மீசை மட்டுமே!!! 2. புருவம் வில்லு மாதிரி பெருசா கடைசிவரை இருக்கு ஆனா முதல் போட்டோவில் அப்படி இல்லை!! 3. சார்ல்ஸ்க்கு காது விரிந்த காதுகளா இருக்கு, இறந்தவருக்கு அப்படி இல்லை என்றே தோன்றுகிறது... இப்படி பல வித்தியாசங்கள் இருக்கு... ஒரு வேளை இலங்கை ராணுவம் நம்ம கிட்ட 10 வித்தியாசம் கண்டுபிடிக்க போட்டி நடத்தறாங்களா?? பின் சேர்ப்பு: என் சந்தேகத்திற்கான முக்கிய காரணம், இதோடு குறைந்தபட்சம் 100 முறையாவது பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது... காலையில் சார்ல்ஸ் பிணம் அனாதையா கிடந்தது என்று ஆர்மி சொன்னது, பின்னர் நட...

நடிகர் விஜய் புது கட்சி :(

Image
நம்ம தமிழ்நாட்டுக்கு இன்னொரு வருங்கால முதல்வரும் கிடைச்சுட்டாருடே!!! நடிகர் விஜய் கட்சி துவங்க போகிறாராம் :( வருகிற ஜூன் 22ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் இதற்கான அறிவிப்பு வருமாம்... இந்த கொடுமைய எங்க போய் சொல்ல???!!! இருக்கறது ஒரு முதல்வர் சீட்டு அதுக்கு எத்தினி ஆளுங்க கெளம்பிட்டாங்க!!! 1. விஜயகாந்த் 2. சரத்குமார் 3. விஜய் Where to go and tell this story :))))) (டமில்லா மாத்திக்கங்கப்பா!!) நன்றி : தெனாலி.காம் விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும் .

கண்ணிருந்தும் குருடராயிருப்பவர்களுக்கு!

ஈழம் - வன்னி போர்முனையிலிருந்து நேற்றைய வீடியோக்கள்! இதுவா கொத்துகுண்டுகள், ரசாயன ஆயுதங்கள் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என்று சொன்னதுக்கு அர்த்தம்??!! பி.கு: இத்தகைய ஒரு வாக்குறுதியை இலங்கை அரசிடம் இருந்து பெருவதே குதிரைக்கொம்பாக இருந்தது. இனி வாக்குறுதியை மீறும் பட்சத்தில் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதே ராணுவநடவடிக்கையை கோரமுடியும் என்று யாரோ ஒருத்தர் சொன்னாருபா நேற்று!

பிரணாப் முகர்ஜி ஒத்துக்கிட்ட்ராருடே!

Image
பிரணாப் முகர்ஜி இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதாக ஒத்துக்கிட்டாரு டே!! இப்ப என்ன செய்யலாம் நம்ம... உங்க கருத்து என்ன? வீடியோ தெரியவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து பார்க்கவும்... பி.கு: இலங்கை எல்லாம் உங்களுக்கு நட்பு நாடா தெரியுது! ஈழத்தமிழன் மட்டும் தான் உங்களுக்கு நட்பா தெரியலையா...

ஈழத்திலிருந்து வீடியோகள்!

இதையும் பார்த்துவிடுங்கள்! இவர்களா ராஜப்க்ஷே தேடும் புலிகள்??!!! வீடியோக்களை தந்த அண்ணன் பாலபாரதிக்கு நன்றி

கண்களில் ரத்தம் வருதடா!!

இளகிய மனம் உள்ளவர்கள் இதை பார்க்கவேண்டாம்: இந்த சிறுபிள்ளைகள் காயப்பட்டு கிடப்பவரை காப்பாற்ற தவிப்பதிலிருந்து தெரியுது, அவர் தான் இந்த பிள்ளைகளில் கடைசி உறவாக இருக்குமென்று !! வீடியோவுக்கு நன்றி - பாலபாரதி

நான் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டேன்!

Image
தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான திரு.கருணாநிதியின் அறிக்கை: இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து 23-4-2009 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். *********************** ஐயா, தெரியாமா தான் கேட்கிறேன், இதை யாருடைய கண் துடைக்க நடக்கிறது? எதற்காக இந்த நாடகம். இது மத்திய அரசை எதிர்த்தானால், அந்த மத்திய அரசில் நீங்கள் யார்? அதே மத்திய மந்திரிசபையில் பங்கு கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன தார்மீக பொறுப்பு இருக்கிறது இந்த பந்த் நடத்த?? தாயநிதி மாறனுக்கு ஐ.டி துறை மந்திரி பதவியும், டி.ஆர்.பாலுவுக்கு கப்பல் போக்குவரத்து துறையும் தரும் வரை நான் இந...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!

நேற்றைய பல்டிக்கு பின் தானே கேள்வி தானே பதில் பேட்டி ஒன்றை தந்தார் முதல்வர் திரு.கருணாநிதி அவர்கள், அதில் இப்படி ஒரு கேள்வியும் பதிலும் இருந்தது! //கே: பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதா? ப: இது ஜெயலலிதாவை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. அவர்தான் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து அவரை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர். அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிலர் ஜெயலலிதாவின் அடிவருடி களாக மாறி அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளார்கள். // சரி ஏன் அந்த கேள்வியை ஜெவிடம் மட்டும் கேட்க வேண்டும், நேற்று அப்ஷேக் மானு சிங்வி - காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் ஜெ சொன்னதையே தான் சொல்கிறார் இங்கே சொடுக்கவும் , வீடியோ இங்கே ... இன்னும் சொல்லப்போனால் ஜெ சொல்வதை கூட பெரிய விசயமாக எடுக்கத் தேவை இல்லை! ஏன் என்றால் அவர் தேசிய ஆட்சி பொறுப்புக்கு வர போவதில்லை! காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி , இந்தியாவின் ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய கட்சி என்னும் போது அது சொல்வதே முக்கிய விவாதமாக எடுத்திருக்க வேண்டும் திரு. கருணாநிதி!! // அவர்தான் பிரபாகரனை கைது செய்து இந்திய...

திருமங்கலம் லேட்டஸ்ட் முடிவுகள்! தி.மு.க 41,341 முன்னிலை!!

திருமங்கலம் லேட்டஸ்ட் முடிவுகள்! நேற்று நாம் சொன்னதில் ஒன்று அனேகமாக நடந்துவிட்டது! தி.மு.க - 78,106 அ.தி.மு.க - 36,765 வித்தியாசம் - 41,341 அடுத்த விசயங்கள் விரைவில் தொடரும்... மேலும் விவரங்களுக்கு என் நேற்றைய பதிவை பார்க்கவும். மறக்காமல் வலது பக்கம் உள்ள வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் :)

திருமங்கலம் முடிவும் மாறும் கூட்டணிகளும்

Image
நாளைய திருமங்கலம் தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் என்ன நடக்கலாம் என்ற சிறு அலசலே இந்த பதிவு. திருமங்கலம் தொகுதி வர இருக்கு பாராளமன்ற தேர்தலுக்கு ஒரு வெள்ளோட்டமாக கருதப்படுகிறது! இங்கு விழும் ஓட்டுக்களை வைத்து மக்கள் யாரிடம் இருக்கிறார்கள் என்ற ஒரு மாயாயை உருவாக்க முடியும், அதனால் ஜெயிக்கும் கட்சிக்கு கண்டிப்பாக சில சதவீத ஆதரவு பெருகும் என்பது ஒரு கருத்து! அதனால் எப்படியும் ஜெயிப்பது என்று இரண்டு கழகங்களும் கச்சை கட்டி இறங்கி இருக்கிறது! எனக்கு தெரிந்தவர்களிடமிருந்து தகவல் படி இறக்கப்பட்ட காசுக்கு கண்டிப்பா தி.மு.க தான் ஜெயிக்கும், அது நிச்சயம்! ஒரு ஆளுக்கு 5 - 6 ஆயிரம் வரை காசு கொடுத்திருக்கிறார்கள் ஓட்டுக்காக என்ற நிலையில் கண்டிப்பா அதிகம் கொடுத்தவருக்கே ஓட்டு என்ற லாஜிக்ல் பார்த்தால் நிச்சயம் அது தி.மு.கவுக்கு தான் அதிக ஓட்டு கிடைக்க வழி உள்ளது! இத்துணை கோடி செலவு செய்து எதற்காக இந்த ஓட்டு பிச்சை என்றது எனக்கு தோன்று சில விசயங்கள். பாவம் அ.தி.மு.க குறைவான காசு + தி.மு.க ஆட்சிக்கு எதிர்ப்பு ஓட்டுக்களை மட்டும் வைத்து ஜெயித்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டது என்றே தோன்றுகிற...