Posts

Showing posts from June, 2006

தினமலரில் We The People பதிவு!!!

இன்றைய தினமலர் நாளிதலில் நம்ம பதிவான பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும் ஒரு வரி விடாம "இது உங்கள் இடம்"ன்னு ஒரு பகுதியில் அச்சு ஆயிருக்கு. முதலில் நன்றியை சொல்லுவோம் தினமலர்க்கு. இது பலரை சென்று அடையும் என்று சந்தோஷப்படுவோம். என் 3 மாத பெட்ரோல் விலை பற்றிய ஆராய்ச்சி (ofcourse in my spare time) மக்களுக்கு சென்று அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி! மற்றும் அரசின் முகமூடியும் கிழிக்கப்பட ஒரு முயற்சி வெற்றி பெற்றதில் ஒரு பெருமிதம்!!! Link to the dinamalar page: நேரடி மின்முகவரி: www.dinamalar.com/2006june29/ithu.asp தினமலரின் மின்முகவரி: http://www.dinamalar.com அதில் "இது உங்கள் இடம்" என்ற ஒரு Link உள்ளது. அதில் வந்துள்ளது. பி.கு: என் பெயர் மாற்றப்பட்டுள்ளது (எம்.ஜெயகுமார் என்று) இது சின்ன அச்சு பிழையா? அல்லது தினமலர் என் நலம் விரும்பி மாற்றி பதித்தா என்று தெரியவில்லை (ஆட்டோ நன்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்ற!) . மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் பதில் வந்தால் பார்ப்போம்!!!

ஒரு இந்திய கனவு

Image
என் நீண்ட நாள் கனவு... அனேகமாக ஒவ்வொறு தமிழனுக்கும் ஏன் ஒவ்வொறு இந்தியனுக்கும் இந்த கனவு இருக்கும்... இந்த கனவுக்கு base ஷங்கரின் "முதல்வன்" .... நம்மை ஆள்வதற்கு ஒரு புகழேந்தி வரமாட்டானா? நான் சொல்ல வந்தது முதல்வனில் வரும் நாயகன் புகழேந்தி ... தப்பா நினைத்துகொள்ள வேண்டாம் ... யாரையும் மனதில் புகழேந்தியாக வைத்திருக்கவில்லை... இங்கு இருக்கும் யாரும் அந்த அளவுக்கு மக்களை நினைப்பவர்களில்லை... இது என் மனதில் தோன்றியது... அவன் வருவானா? ஊழல் இல்லாதவன், ஊழல் பிடிக்காத தலைவன், ஊழல் கறைபடியாதவன், ஒரு நல்ல முதல்வன் ... ஒரு நல்ல பிரதமர் .... ஒரு மக்கள் தலைவன்... என்று தனியும் இந்த தேடல்!!!! நாம் ஏமாந்துவிட்டோம் !!! நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம்!!! இவர்களை தெரிந்துகொள்ள தவறிவிட்டோம்.. தன்னிகர் அற்ற தலைவர்களை விட்டுவிட்டு .... இப்போது தலைமகனை தேடி அலைகிறோம்... கக்கன் - மந்திரியாக இருந்தும் ... ஓலை குடிசையில் வாழ்ந்து... ஓலை குடிசையில் இறந்தார்... இந்த வரலாறு தெரிந்தவர்கள் சிலரே... அவரை போல் ... காமராஜர் ... பக்தவச்சலம் ... என்று பலர்... அவர்களை அரசியலிருந்து... மக்கள் சேவைலிருந்து வெளியேற்...

இது எப்படி இருக்கு!

ஆனாலும் ரொம்ப குசும்புங்க இந்த லாலு பிரசாத் மச்சானுகளுக்கு. சூன் 19, 2006: ஒரு மச்சான் (சுபாஷ் யாதவ், MP) பாட்னா ரெயில் நிலையத்தின் பிளாட்பாரம் #1 இருந்துகினு மூன்றாவது பிளாட்பாரதில் வந்த ரெயில் வண்டிய ஓட்டிகினு வா இங்கன்னு கட்டளை வுட்டிருக்காரு! உடனே ரெயில்வே அமைச்சரின் மச்சானாச்சே உடனே ரெயில்வே அதிகாரிகளும் பறந்து அடிச்சுகினு பிளாட்பாரம் #1 வண்டிய ஓட்டி வந்திருக்காங்க. சூன் 20, 2006: விடுவார அடுத்த மச்சான் (சாது யாதவ், MP) (யாரு வெயிட்டுனு காட்ட வேண்டாம்!!!) அதே பாட்னா ரெயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரம் போயி நின்னுகினு, இரண்டாவது பிளாட்பாரதில் வர வேண்டிய ரெயில் வண்டிய முதல் பிளாட்பாரத்துக்கு ஓட்டிக்கின்னு வா சொல்லியிருக்காரு தலிவரு, எதோ ஒரு லொல்லு புடிச்ச ரெயில்வே அதிகாரி அதெல்லாம் முடியாதுன்னு சொன்னாரு போல, சாதுவின் சூப்பர் டயலாக் " அந்த மச்சானுக்கு வரும் வண்டி, ஏன் எனக்கும் வர கூடாது " நியாயமான கேள்விதான? சுமார் ஒரு மணி நேரம் ரெயில் நிலையத்தை உண்டு இல்லைன்னு பண்ணியிருக்காரு நம்ம சாது! (யாதவ்!) இதில் ஒரு தொண்டர்கள் தர்ணாவும் அடங்கும்போல! அய்யோ பாவம் ரெயில்வே அதிகாரி தண்ண...

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி

அரசியல் ஒரு வியாபாரமா? இன்றைய முதலீடு, நாளைய லாபம் என்கிற "ரேஞ்சில்" வளருது இந்திய அரசியல். இந்த பரிநாம வளர்ச்சி எப்படி தோன்றியது! யார் இதை வியாபாரம் ஆக்கியது? சமீபத்தில் என் நண்பன் கார்த்திக்கின் திருமணத்துக்கு போனபோது ஒரு கலந்துரையாடலில் கிடைத்த மேட்டர் இது. நான், நண்பன் அருள், அருளின் தந்தை, வீரமணி, ராம், etc., ஹோட்டல் அறையிலிருந்து திருமண மண்டபத்துக்கு போகும் வழியில் Time Passக்கு பேச துவங்கினோம், மெதுவா அரசியல் பக்கம் திரும்பியது அப்போது வழக்கம் போல என் அதங்கமான வாரிசு அரசியல் பத்தி டாப்பிக்கு எடுத்து விட்டேன், அருளோட அப்பா ஒரு கேள்வியால் அடித்தருங்க ஒரு அடி நான் வாயடச்சு போயிட்டேன்!!! என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்? உங்க பிஸினசிலே உங்க மகன கொண்டுவர நெனைப்பீங்கல்ல? அது மாதிரிதான் இது என்றார். நான் வாயடச்சதுக்கு Reason அவர் தந்த அரசியலும், வியாபாரமும் ஒன்று என்ற விசயம், அறியாமை படித்தவர்கள் மத்தியுலுமா? என்ற ஷாக்கில் தான். நான் அறிந்த அரசியல், மக்கள் சேவை ஒன்றே கொள்கையாக கொண்டு, மக்களுக்கு நன்மைக்காக வாழ்வதே அரசியல்??!! கரெக்ட்டா? இது வியாபாராமா மாறி வருது... மக்களும், அரசி...

நட்புக்கும் உண்டு அடைக்கும் தாள்

இந்த பதிவு நேற்று என்னை ரொம்பவே பாதிச்ச ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள தோன்றியதன் விழைவுதான். 13 வருடங்களுக்கு முன்! கல்லூரி நாட்களில் நட்பு ரீதியா நிறைய பேரிடம் பழகினாலும் ஒரு 6 பேரு ஒரு Groupபா தான் அலையுவோம்! நான், சிவஞானம், சிவ அமுதன், டானி, அசோக் & Iyer என்று அன்போடு அழைக்கப்படும் ஷிரிக்ஸ். தினம் ஒரு லொள்ளு, கலாட்ட, கல்லூரி முன் உள்ள டீ கடை அரட்டைகள் என பல கூத்துகள் Daily. நினைத்தால் திருப்பதி ட்ரிப், திடீர் கோனை நீர்விழ்ச்சி பயணம் என சுத்தி சுத்தி நாங்க உயிர் நன்பர்களா மாறிவிட்டோம்! இப்ப என்ன அச்சு? எதுக்கு இந்த Build upன்னு தான நினைக்கறீங்க? நீங்க நெனைக்கறது சரிதான்! அதை பத்திதான் இப்ப சொல்லப்போறேன். நேற்று! அமுதன் என் கைப்பேசிக்கு அழைத்து, டேய் ஒரு மேட்டர் தெரியுமா, நம்ம அசோக்கு ஆண் குழந்தை பொறந்திருக்குன்னு சொன்னான், ரொம்ப சந்தோஷம் டா!!! பரவால்ல மச்சி 10 வருஷம் குழந்தையில்லன்னு கஷ்டப்பட்டாலும் அதுக்கு ஒரு முடிவு வந்திருச்சு, Very good சொன்னேன். அடுத்து அமுதன் சொன்ன மேட்டர் "மச்சி அவனுக்கு கொழந்த பொறந்து ஒரு மாசம் ஆச்சாம!!!" அப்ப தான் எனக்கு பயங்கர ஷாக்!!! ஒரு மாசமா...

பிச்சை பாத்திரத்தில் கையிட்ட அரசு!

ஒரு நல்லரசு எதை செய்யக்கூடாதோ அதை செய்வதை தொழிலாக ஆக்கி கொண்டுள்ளது நம் இந்திய அரசு! நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை மிகவும் பாதிக்கும் பனிகளை செவ்வனே செய்து மார்தட்டி கொள்ளும் "Middle Class Budget " அரசு!!! காமெடிக்கு ஒரு அளவே இல்லையா?? மிக சிறந்த உதாரணத்துக்கு பெட்ரோல் விலையேற்றத்தை கூறலாம். நேற்று முன் தினம் சுமார் ரூ4 விலையேற்றி ஒரு லிட்டர்க்கு ரூ 52 என்று ஏற்றியாது. அன்று இரவு 12 மணி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது, உடனே எடு வண்டியை என்று படை எடுத்தேன் பெட்ரோல் நிலையத்துக்கு. அங்கு சென்றதும் மக்கள் வெள்ளம் தங்கள் இருசக்கர வகணங்களுடன. அய்யோ பாவம், இந்த 4 ரூபாயை மிச்ச படுத்த வரிசையில் காத்திருக்கிறார்கள் நம் மக்களின் வாழ்க்கை நிலை எந்த அளவுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளது என்று நினைக்கும் போது மிகவும் வருத்தப்பட்டேன், நானும் அந்த 4 X 5 = 20 ரூபாயை மிச்சப்படுத்த தான் வரிசையில் காத்திருந்தேன்!!! நாம் கஷ்டப்பட்டு உண்டாக்கும் பணத்தை எவ்வளவு எளிதாக தட்டி செல்கிறது இந்த அரசு! இதைத்தான் பிச்சை பாத்திரத்தில் கையிடுவது என்பார்களோ! வேறு வழி இல்லை, விதி என்று நினைப்பதை விட்டு...

பெட்ரோல் இடி விழுந்தது!!!

நன்பா! அரசு நமக்கு பெட்ரோல் வெடி இல்லை இடியை நம் தலையில் போட்டது வெற்றிகரமாக. இன்று இரவுமுதல் பெட்ரோல் விலை ரூ 4 கும் , டீசல் விலை சுமார் ரூ 2 ஏற்றபடுகிறது. இனி அனைத்து அத்தியாவச பொருட்களில் விலையேற்றம் தவிற்க்க முடியாத ஒன்றாகிவிடும். நான் வாழ இந்தியாவில் இடமில்லயா? மக்களே சிந்திப்பீர்! போராட துடங்குவோம்!! ஆசியாவிலேயே நாம் தான் மிக அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்குகிறோம்!!! ஏன்னென்று அறிவதற்கும், என் முந்தைய பதிப்பான " பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும் " படிக்கவும்

பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும்

Image
ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டிய, பெட்ரோல் விலை பற்றிய விஷயங்களை இங்கே பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். அப்படி தெரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியமும் ஆகிவருகிற நேரமிது. ஏனெனில், ஆசியாவிலேயே நாம் தான் மிக அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்குகிறோம். உலக அளவில் இதில் நாம் இரண்டாம் இடம்! இந்த எரிபொருள் விலை உயர்வு எங்கெல்லாம் நடுத்தர மக்களை பாதிக்கும் : 1. காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அன்றாட தேவையான பொருட்களில் விலையும் இந்த எரிபொருள் விலைப் பொருத்தே அமைகிறது. ஏனெனில், இந்த சரக்குகளின் போக்குவரத்துக்கு எரிபொருள் இன்றியமைதாத தேவையாகிவிட்டது. 2. நடுத்தர மக்களின் போக்குவரத்து தேவைகளான ரெயில், பேருந்து, ஆட்டோ என அனைத்தின் சேவை கட்டணங்களும் இந்த எரிபொருள் விலைப் பொருத்தே அமைகிறது. ஏன் இந்த நிலை? என்ன தான் உண்மை? இந்த பெட்ரோல் விலையின் சூட்சமம் தான் என்ன? சில இனைய வலையில் இருந்து கிடைத்த சில புள்ளி விவரங்களை இங்கு பார்ப்போம்... நமது அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் எண்ணை கிணறுகள் மூலம் 35 முதல் 40 சதவிகிதம் வரை பெட்ரோலிய வளத்தில் தன்னிறைவு பெறுகிற நாடு நம்முடையது! உங்களால்...