தீவிரவாதிக்கு இன்று பிறந்தநாள்!

இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரவாதியாக காங்கிரஸால் சித்தரிக்கப்பட்ட பகத்தின் பிறந்தநாள் இன்று!

இந்திய அரசு இன்று பகத்சிங்கின் தேச பக்தியை மறைக்க நினைக்கிறது! அவன் வரலாறை அழிக்க நினைக்கிறதோ என்று கூட தோண்றுகிறது!

ராகுல் காந்திக்கு பிறந்தநாள் கொண்டாட தெரிந்தவர்களுக்கு எப்படி பகத்சிங்கின் பிறந்தநாள் மறந்து போகிறது என்று தெரியவில்லை!! ஒரு சிறு குறிப்பு கூட அரசு தரப்பிலிருந்து வெளிவரவில்லை!!

இந்தியா சுத்ந்திரம் பெற முக்கிய காரணங்களாக இருந்தவர்களில் பகத்சிங்கும் ஒருவர். அரசு மறந்தாலும் நாம் அவர் பிறந்தநாளில் அவரை நன்றியுடன் நினைப்போமாக....


அவர் சிறையில் துக்கு தண்டனைக்கு காத்திருந்த வேலையில் எழுதிய பல குறிப்புக்களில் ஒன்று!!

Aim of Live

"The aim of life is no more to control mind, but to develop it harmoniously, not to achieve salvation here after, but to make the best use of it here below, and not to realise truth, beauty and good only in contemplation, but also in-the actual experience of daily life; social progress depends not upon the ennoblement of the few but on the enrichment democracy or universal brotherhod can be achieved only when there is an equality of opportunity of opportunity in the social, political and individual life."
(Page 124 of Jail notebook)

Comments

நாம் - இந்திய மக்கள் அய்யா!

பகத்சிங்கின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு அரசுவிழாவாக கொண்டாடுகிறது அய்யா. இதுகுறித்த வண்ண அரைபக்க விளம்பரங்களை நீங்கள் செய்தித்தாள்களில் காணலாம் அய்யா..
ராகுல் காந்திக்கு பிறந்தநாள் கொண்டாட தெரிந்தவர்களுக்கு எப்படி பகத்சிங்கின் பிறந்தநாள் மறந்து போகிறது என்று தெரியவில்லை!!

ராகுல் காந்தி பிறந்த நாளை கொண்டாடினா கட்சி தலமையிடம் செல்வாக்கும் பதவியும் கிடைக்கம், பகத்சிங் பிறந்த நாள கொண்டாடுனா என்ன கிடைக்கும். . . . .?
//இந்திய அரசு இன்று பகத்சிங்கின் தேச பக்தியை மறைக்க நினைக்கிறது! அவன் வரலாறை அழிக்க நினைக்கிறதோ என்று கூட தோண்றுகிறது!//

காரணம் 1. அவர் நாத்திகர்
2. அவர் உயர்வகுப்பினர் அல்ல
//ராகுல் காந்தி பிறந்த நாளை கொண்டாடினா கட்சி தலமையிடம் செல்வாக்கும் பதவியும் கிடைக்கம், பகத்சிங் பிறந்த நாள கொண்டாடுனா என்ன கிடைக்கும். . . . .?//

வீரம் கிடைக்கும் மற்றும் போர் குணம் கிடைக்கும். இதெல்லாத்தையும் விட நாட்டுப்பற்று கிடைக்கும்!

வீரன் பகதிசிங்கின் நினைவு கூர்தலுக்கு மிக்க நன்றி.
We The People said…
//காரணம் 1. அவர் நாத்திகர்
2. அவர் உயர்வகுப்பினர் அல்ல//

கோவி.கண்ணன் இதெல்லாம் ரெம்ப ஓவருங்க... இவ்வளவு யோசிக்காதிங்க, தலை வெடிச்சிட போவுது!
We The People said…
//பகத்சிங்கின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு அரசுவிழாவாக கொண்டாடுகிறது அய்யா.//

என் ஆதங்கள் நடுவன் அரசை எதிர்த்தே! நூற்றாண்டு விழாவுக்கு பஞ்சாப் அரசு அழைத்தும் செல்லாத பிரதமரை எதிர்த்தே! பகத் சிங் பிறந்த நாளை தமிழக அரசாவது நடத்தியதே என்று சந்தோஷப்படும் நிலையில் உள்ளோம் :(