Posts

Showing posts from 2008

We the people supports Eelam

இன்று தான் முத்து தமிழினி யின் இந்த பதிவை படித்தேன். என் நிலை விளக்கம் கேட்டிருந்தார், வேறு யார் கேட்டாலும் பதில் தந்திருப்பேனா என்று தெரியவில்லை! நம்ம முத்து கேட்கும் போது என் நிலையை விளக்க வேண்டும் என்று தோன்றியது! விளக்கம் நம்ம உண்மை தமிழன் மாதிரி ரெம்ப பெருசா போனதாலே தனி பதிவா போட வேண்டியதாயிற்று :) முதலில் என் ஈழம் பற்றிய கருத்துக்கள் என் முந்தய பதிவி இருக்கிறது ! அதை சொடுக்கி பார்க்கவும். நான் ஏழாவது படிக்கும் போதே ஈழ மக்களுக்கும், விடுதலை புலிகளுகும் ஆதரவாக போராட்டங்களில் விடுதலை புலிகளின் கொடி ஏந்தி உங்க தலைவரின் தலைமையில் கலந்து கொண்டவன் தான்! ஆனால் இன்று (ராஜீவ் படுகொலைக்கு பின்பு) நிச்சயம் எனக்கு சில கசப்பு உணர்வுகள் புலிகள் மேல் உண்டு, ஈழ மக்கள் மேல் அல்ல! ஈழ மக்கள் துயர் துடைக்கபட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் யாருக்கு இருக்க முடியாது என்னையும் சேர்த்து தான்! இதற்கு இந்தியா மூலமாக தான் ஒரு முடிவு வர முடியும் என்ற என்னாலும் மறுக்கமுடியாது! ஈழ மக்கள் நிம்மதியாக/அமைதியா வாழ ஒரு இடம் நிச்சயம் தேவை என்பதும், அதற்கு பேச்சுவார்த்தையே தீர்வு என்பதே என் கருத்து! இப்ப உங்...

ஏன் இப்ப உங்க கல்லூரியின் பெயர் முழுசா சொல்லறாங்களா??

Image
சட்டம் என் கையில் என்று மாணவர்கள் த்தூ! அதுங்களை மாணவர்கள் என்று சொல்லக்கூட மனம் வரவில்லை, மிருகங்களை போல ஒரு சக மாணவனை வேட்டைய அந்த வீடியோ காட்சிகளை பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் இன்னும் என் இதய படபடப்பு அடங்கவில்லை! ஒரு மனிதனை, சக மனிதன் அதுவும் அடிவாங்கி மரணித்து கிடக்கும் ஒருவனை இப்படி அடிக்க எப்படி மனம் வருகிறது என்று புரியவே இல்லை! இத்தனைக்கு காரணம் முத்துராமலிங்கதேவர் பிறந்தநாள் விழாவுக்கு போஸ்டர் அடிக்கும் போது வெறும் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று அச்சிட்டதே காரணம், இதில் உள்ள நுண்ணரசியல் அம்பேத்கார் பெயர் வேண்டுமென்றே விடப்பட்டதானால் என்று கேட்க்கும் போது வெட்கபட வேண்டியுள்ளது நம் இளைஞன் இது போன்ற வெட்டி சித்தாந்தக்கு, சாதி வெறி தூண்டும் வண்மைக்கு அழைத்து செல்லப்படுவது வருத்த அளிக்கிறது! அரசு கல்லூரிகளில் மட்டுமே சாதிவாரியாகவும், இனவாரியாகவும் சண்டை நடைபெறுவது என்ற ஒரு முக்கிய விசயம் வெளிவருகிறது! இந்த சாதிய விஷத்தை இவர்கள் மேல் தினிப்பது யார்? எனக்கு தெரிந்த மட்டும், நம் தமிழக அரசியல்வாதிகளின் தங்கள் பிரச்சனைகள்/அடி தடி அழிக்கும் தேவைகளுக்கு இந்த அரசு சார்ந்...

ஈழம் என்ன தான் தீர்வு உங்கள் கருத்துக்கள் தேவை!

நண்பர்களே என் முந்தய பதிவில் இந்தியா ஈழப்பிரச்சனையில் என்ன செய்யலாம் என சில கருத்துக்களை முன் வைத்திருந்த்தேன். இது போல வெட்டியா உண்ணாவிரதம், மனித சங்கிலி, மேடை போட்டு பேசுவது என்று இல்லாமல் ஆக்க பூர்வமாக எதை செய்தால் ஈழப்பிரச்சனையில் நல்ல தீர்வு வரும் என்ற கருத்தை சொல்லுங்களேன்! என் கருத்துக்கள் இதோ! இந்த ஈழதமிழர்களுக்கு இன்று உணவு காசும் முக்கியமல்ல.... நிம்மதியா வாழ்க்கையும், வாழ்விடமுமே. அதை இந்தய அரசால் தான் பெற்றுத் தரமுடியும். நீங்க கொடுக்கும் 700 டன் உணவு பொருள் உப தேவைகளே தான் முக்கிய தேவைகள் அல்ல... 1. இந்தியா இந்த விசயத்தை ஐ.நா சபைக்கு கொண்டு செல்ல வேண்டும், அங்கே வைத்து இலங்கை அரசு, விடுதலை புலிகள், ஏனைய போராட்ட குழுக்கள் என அனைவரையும் ஒரு ஒருமித்த கருத்துக்கு கொண்டுவர வேண்டும். அந்த முடிவுகளை பாதுகாக்க ஒரு ஐ.நா படை அங்கே அமர்ந்த பட வேண்டும். 2. பாதுகாப்புக்கு இந்தியா ராணுவம் அனுப்பக்கூடாது! ஐக்கிய நாடுகளின் படை மட்டுமே அங்கே செல்ல வேண்டும். இந்திய அரசு மேற்பார்வைக்கு மட்டுமே உதவ வேண்டும். பதவியில் உள்ளவர்களே!!! இவை எவையும் முடியாதெனில் குறைந்த பட்சம் ஈழத்தில் இருந்து தப்ப...

ஈழம் போதும் அரசியல் நாடகம்

கடந்த சில வாரங்களா எங்க பார்த்தாலும் ஈழ தமிழர் பிரச்சனை குறித்து பேச்சு, பல வருடங்களாக தூங்கி கொண்டிருந்த பலரும் ஏதோ நேற்று முதல் தான் இலங்கை ராணுவம் தமிழ் மக்கள் மேல் குண்டு மழை பொழிவது போல பேசி தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இன்று இது பூதாகரமாக பேச நிச்சயமாக கம்யூனிஸ்டுகளும், ஜெயலலிதாவுமே காரணம்! என்னடா இது ஜெயலலிதா வெல்லாம் ஈழ மக்களின் பிரச்சனையை பற்றி பேசும் போது நாம் பேசவில்லை என்றால் பின் நம் தமிழின தலைவர் பட்டம் காணாமல் போய்விடுமோ என்ற பயமே நம்ம முதல்வர் இந்த மேட்டரை கையிலெடுக்க காரணம். சில மாதங்களுக்கு முன் கோயம்பேட்டில் ஒரு ஓரமா நெடுமாறன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது என்ன நடந்தது என்று ஊர் அறியும்! இன்று அதே உதவிகள் மட்டுமே கிடைக்க போகிறது ஆனால் பெரிய சாதனை நடந்துவிட்டது போல கூவி கூவி விலை போக பொருளை விற்கிறார்கள் அரசியலிலும் வலைப்பதிவிலும். அறிவிழி என்று ஒருவர் தோழர் தமிழச்சியின் ஈழ பதிவுக்கு பதில் தருவதாக நினைத்து கிட்ட தட்ட ஜெ. அறிக்கை மாதிரி ஒரு சப்பை கட்டு கதை எழுதியிருந்தார் , நான் வினாகளை எழுப்பினே இதுவரை வெளியிடவும் இல்லை, பதில் சொல்லவும் இல்லை. அதனால் அந்த வினாகளை ப...

உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா!!!

நாட்டில ஏழை மற்றும் மிடில் கிலாஸ் மக்கள் விலைவாசி, பெட்ரோல்/டீசல் விலை ஏற்றம், பணவிக்கத்தால திண்டாடிக்கிட்டு இருக்காங்க, அதுக்குகாக ஒரு எழவும் செய்யாம, வெட்டியா 2030 ஆண்டு கரெண்ட் பிரச்சனையை சமாளிக்க போறேன்னு, அணு சக்தி பின்னாடி சுத்திக்கிட்டு இருக்காரே நம்ம பிரதமர்!! ரெம்ப நல்ல பிரதமர் தான் நமக்கு கிடைத்து இருக்காருடே !! நேற்று அதைவிட முக்கியமான வேலையா, முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கு இடையில் கோடிகள் பிரச்சனையாம், பாவம் வேலை வெட்டியில்லாம இருக்காரு பிரதமர், உடனே கிளம்பிட்டாரு அவங்க பிரச்சனையை சரி செய்யறதுக்கு!! நல்லா வெளங்கும்டா நாடு!!! பாவம் அவரும் ஏதாவது உருப்படியா வேலை இல்லையே! இதையாவது பார்த்தா ஏதாவது கட்டிங் தேருமான்னு யோசிக்கறாரோ??

எம்.பி வாங்களையோ! எம்.பி :(((

நேற்று நடந்த கம்யூனிட்ஸ்டுக்ளின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் காங்கிரஸை பற்றி பரவலா சொன்ன குற்றச்சாட்டு, பெருமளவு குதிரை பேரம் நடப்பதாகவும், கோடிக்கணக்கில் பணம் கைமாறுவதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர் கம்யூனிஸ்டுகள்! இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகள் காங்கிரஸுக்கு ஆதரவு தர எவ்வளவு தந்தார்கள் என்று சொல்லவில்லை இதுவரை.... :))) ஒரு எம்.பிக்கு 25 கோடி ரூபாயும், ஒரு மந்திரி பதவி வரை வாக்குறுதி தரப்படுகிறதாம், காலையில் விண் டி.வி செய்திவிமர்சனத்தில் சொன்னார். எனக்கு இருக்கும் ஒரே டவுட், இவ்வளவு காசு கொடுத்து ஒரு வருடம் ஆட்சியில் இருந்தால், ஆட்சியை தக்கவைக்க 60 எம்.பிகளுக்கு கொடுத்த காசுக்கு (1500 கோடி) மேல இவர்களுக்கு தேறுமா?? இல்லை மக்கள் நலனை முன்னிட்டே தங்கள் கட்சி பணத்தை இப்படி விலைக்கு வாங்க உபயோகிக்கிறார்களோ?? இந்தியாவில் நிலவும் ஜனநாயத்தின் கொடிய நிலையை நினைத்து மணம் நொந்து கொள்வதை தவிர வேறென்ன செய்யமுடியும் நம்மால்...

கலைஞர் கடிதமும் விலைவாசி உயர்வும்

முரசொலியில் முதல்வரின் நேற்றைய சேதி பயங்கரமா சிரிப்பை தான் வரவைத்தது! வெங்காயம் விலையும், தக்காளி விலையும் கடுமையாக குறைந்துவிட்டதாம், மக்கள் சந்தோஷ கடலில் தத்தளிக்கிறார்களாம் :))))) அது கொடநாடு எஸ்டேட்டில் இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லைன்னு சொல்லியிருக்காரு! (அங்க அந்த அம்மா என்ன தான் செய்யறாங்களோ! ஒன்னியும் பிரியில! எதிர்கட்சி தலைவருக்கு ரெஸ்டு தவிர வேற வேலையே இருக்காதோ! அது வேற விசயம்!) மற்ற எல்லா காய்கறிகளில் விலையும் பன்மடங்கு உயர்ந்துவிட்டது! அது நம் முதல்வருக்கு தெரியவில்லை!! என்ன சொல்லவரார் குறைந்த விலையில் கிடைக்கும் வெங்காயம் + தக்காளியை மட்டும் வைத்து ஜாலியா இருங்க! மற்ற காய்கறிகள் எங்களை மாதிரி காசு இருக்கிறவங்க சாப்பிடுவது என்பதை தெரிந்து கொள்ளுங்க என்றா??

மரண அரசியல் - செல்வி.ஜெயலலிதா!

கடந்த வாரம் தடுப்பூசி இட்ட நான்கு குழந்தைகள் மரணத்தை தழுவின, அந்த மரணங்கள் தவிர்கப்பட்டிருக்களாமோ இல்லையோ! தெரியவில்லை, அதற்கு என்ன காரணம், மருந்தா? குளிரூட்டு பெட்டியில் பாதுக்காக்காததா? என்ற காரணங்களே வெளிவராத நிலையில், தமிழக அரசு தான் தரகுறைவான மருந்துகளை வாங்கி குழந்தைகளை கொண்றது போன்று ஒரு கேவலமான அரசியல் செய்வது என்ற கொடூர வேலையை செய்யும் செல்வி. ஜெயலலிதா, அதை தினமும் சொல்லிக்கொண்டிருக்கும் ஜெயா டி.வி மற்றும் மக்கள் டி.விக்கு என் கண்டனங்கள்! இது தொடர்பான சில விசயங்கள்: 1. இந்த மருந்து தமிழக அரசு வாங்கி வினியோபிப்பதல்ல! மந்திய அரசு மொத்தமாக வாங்கி, இந்தியாவில் உள்ள அத்துனை மாநிலங்களுக்கும் வினியோக்கிறது! 2. மத்திய அரசு தான் சோதனை அடிப்படையில் Human Biologicals Institute ( HBI ) நிறுவனத்தின மிருந்து இந்த மருந்துகளை வாங்கியுள்ளது! வழக்கமாக வாங்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடூடிடமும் ( Serum Institute of India) வாங்கியுள்ளது! 3. இதில் HBIயிடம் வாங்கிய மருந்துகள் ஒரு டோஸ்க்கு ரூ 7/- விலை அதாவது ரூபாய் ஒன்று சீரம் இன்ஸ்டிடூடின் தடுப்பு மருந்து(ரூபாய் 8/-) விலையைவிட குறைவானவை! 4. இறந...

40 ஆயிரம் குடும்பத்தை வாழவைக்கும் மத்திய அமைச்சர்!

Image
நேற்று அந்த செய்தியை டி.வியில் பார்த்தபோது இப்படியும் ஒரு அமைச்சர் இருப்பாரான்னு எனக்கு ஆச்சர்யமா போச்சு!!! நல்லா பண்ணுங்க சாமிங்களா! ரெம்ப நல்லா இருப்பீங்க!!! "என் குடும்பம் நடத்தும் நிறுவனங்களின் 40 ஆயிரம் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோலிய அமைச்சரிடம் எறிவாவு தரச்சொல்லி கோரிக்கையை வைத்தேன்" - டி.ஆர்.பாலு. பாராளமன்றத்தில் தைரியமா இந்த விசயத்தை சொல்லறாரு??!! நம் பின்பலத்தில் வாழும் மைனாரிட்டி அரசு நம்மை ஒன்னும் செய்யமுடியாது என்ற தைரியம் தானே?? எப்பதான் நீங்க 100 கோடி மக்களின் நலன்களை நினைப்பீர்கள்??

முகமது பின் துக்ளக் - வெர்ஷன் 2.0

சமீபத்திய ஹொகனேகல் பிரச்சனையை நம் முதல்வர் கையாண்ட விதத்தை பார்த்தால் எனக்கு இந்த பதிவு தான் நியாபகம் வருது!!!??? முகமது பின் துக்ளக் - வெர்ஷன் 2.0 ஏங்க இப்படியாயிட்டாரு இவரு??

நோ கமெண்ட்ஸ்!

என்ன தான் நடக்குது நம்ம நாட்டில... ஒரு அதிகாரி தன் வேலையை சரியா செய்தால், அவர் உயிருக்கு உத்தரவாதமில்லா நிலை தலை தூக்கிவிட்டதே! ஆற்றில் மண்ல் அள்ளுபவர்களை தடுத்தால் கொலை செய்ய நினைக்கிறார்கள், நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புக்களை அகற்ற நினைத்தால் கொலை செய்ய ஏவுகிறார்கள்! இதுக்கு என்ன தான் முடிவு??? விடியோ தெரியவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.