Posts

Showing posts from 2007

நீயா? நானா? - டாக்டர் அன்புமணி

Image
நேற்று இரவு 9 மணிக்கு விஜய் டி.வியில் நீயா ? நானா? என்ற ஒரு டாக் ஷோவில், மருத்துவ மாணவர்கள் ஒரு வருட கட்டாய கிராமபுற சேவையை எதிர்த்து பலமாக குரல் எழுப்பினர், ஆனால் அந்த பலம் டாக்டர் அன்புமணி அவர்கள் வந்த பிறகு காற்றில் பறந்தது! நிகழ்ச்சியை பார்த்த பிறகு டாக்டர் அன்புமணியை பாராட்டவே தோண்றியது. அந்த நிகழ்ச்சியை பார்த்தில் எனக்கு கிடைத்த தகவல்கள்! அரசு கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருடம் வெறும் 4000 முதல் 6000 வரையே செலவு செய்கிறார்கள்! அதே மருத்துவ படிப்புக்கு தனியார் கல்லூரிகள் 4 முதல் 6 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது! அரசு பெரும் செலவு செய்து (சுமார் 10 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு மாணவருக்கும் செலவு!) அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு ஒரே ஒரு வருடமாவது சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது! நிரந்தர வேலையை கொடுத்தால் கிராமப்புர சேவை செய்வதாக கூறிய இவர்களின் வாதம் ஒரு சப்பை கட்டாகவே எனக்கு தோண்றியது! இவர்களை எதிர்த்து சில புள்ளிவிவரங்களுடன் வந்த சில டாக்டர்கள், தாங்கள் ஏன் கிராமப்புறங்களில் வேலை செய்யவில்லை/ முன்வரவில்லை என்று சொல்ல முடியா...

உலக I.T துறையில் சென்னை முதலிடம்!

Image
சென்னைவாசிகளுக்கு இதோ ஒரு குஷியான செய்தி! சமீத்தில் Tholons and Global Service Magazine என்னும் ஒரு மூதலீட்டு ஆலோசனை கழகம் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியில் (T op 10 emerging destinations worldwide for outsourcing of IT and business processes) முன்ணனிக்கு வரும் நகரங்கள் பற்றி உலகளாவிய கருத்தாய்வு செய்தது. இதில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது என்ற மகிழ்ச்சியான தகவலை இங்கே பதிவு செய்கிறேன். இன்னொரு மகிழ்ச்சியா செய்தி முதல் பத்து இடங்களில் ஐந்து இடங்களை இந்தியாவில் உள்ளன என்பதே! தகவல் தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்ணனிக்கு வரும் இந்திய நகங்களின் பட்டியல்: முதலிடம் : சென்னை இரண்டாவது இடம்: ஹைத்தராபாத் மூண்றாவது இடம்: பூனே ஐந்தாவது இடம்: கொல்கொத்தா ஒன்பதாவது இடம்: சண்டிகர் தகவல் தொழில்நுட்ப இந்த வளர்ச்சிக்கு தமிழக அரசுவின் ஊக்குவிப்பு முக்கிய காரணமாகும் என்றே நினைக்கிறேன். இதை தக்கவைக்க சென்னையின் உள்கட்டமைப்பு வசதிகளான சாலை, போக்குவரத்துக்கு வசதி, போக்குவரத்து நெரிசல் குறைக்க முயற்சிகள் எடுத்தால் இதை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். சீனா வின் தலைநகரமான பீஜிங் பத்தாவது ...

தீவிரவாதிக்கு இன்று பிறந்தநாள்!

Image
இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரவாதியாக காங்கிரஸால் சித்தரிக்கப்பட்ட பகத்தின் பிறந்தநாள் இன்று! இந்திய அரசு இன்று பகத்சிங்கின் தேச பக்தியை மறைக்க நினைக்கிறது! அவன் வரலாறை அழிக்க நினைக்கிறதோ என்று கூட தோண்றுகிறது! ராகுல் காந்திக்கு பிறந்தநாள் கொண்டாட தெரிந்தவர்களுக்கு எப்படி பகத்சிங்கின் பிறந்தநாள் மறந்து போகிறது என்று தெரியவில்லை!! ஒரு சிறு குறிப்பு கூட அரசு தரப்பிலிருந்து வெளிவரவில்லை!! இந்தியா சுத்ந்திரம் பெற முக்கிய காரணங்களாக இருந்தவர்களில் பகத்சிங்கும் ஒருவர். அரசு மறந்தாலும் நாம் அவர் பிறந்தநாளில் அவரை நன்றியுடன் நினைப்போமாக.... அவர் சிறையில் துக்கு தண்டனைக்கு காத்திருந்த வேலையில் எழுதிய பல குறிப்புக்களில் ஒன்று!! Aim of Live "The aim of life is no more to control mind, but to develop it harmoniously, not to achieve salvation here after, but to make the best use of it here below, and not to realise truth, beauty and good only in contemplation, but also in-the actual experience of daily life; social progress depends not upon the ennoblement of the few but on the enr...

அரசுக்கு இது அழகா??

Image
ஐயா சாமிகளா, உங்களுக்கு ஓட்டு போட்டு எல்லா எம்.பி பதவியும் உங்களுக்கு தானே வாங்கி கொடுத்திருக்கு இல்லையா?.... இன்னும் ஏன்யா எங்களை போட்டு ரவுண்ட் கட்டறீங்க!! ராமர் பாலம் இடிக்கனுமா போயி திருமதி.சோனியா கிட்டயோ! திருவாளர்.மன்மோகன்சிங்கிடமோ ஆட்சியை காலி பண்ணிடுவோம்ன்னு சொல்லி அல்லது என்னத்தையாவது செய்யவேண்டியதுதானே! ஏன்யா பந்துன்னு சொல்லி எங்க தாலியை அறுக்கறீங்க... உங்களுக்கு ஓட்டுப்போட்ட பாவத்துக்கு, எங்களுக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும்!!! ஒரு நாள் வேலை நிறுத்தம், கோடிக்கணக்கா சேர்த்துவைத்த உங்களுக்கு ஒன்னும் ஆவப்போறது இல்லை... ஆனா.. ஒவ்வொரு தின கூலிக்காரனிலிருந்து நடுத்தர வர்கம் வரை உள்ள அனைவருக்கும் சாப்பாட்டுல மண் விழும்! நீங்க சொல்லும் சேது சமுத்திரம் அவனுக்கு ஒரு மண்ணும் கிடையாது! அது வந்தாலும், வராவிட்டாலும் அவனுக்கு ஒரு பைசா லாபம் கிடையாது! தினக்கூலி முதல் சாதாரண குடிமகன் வரை அனைவருக்கு எத்தனை சிரமம் உங்களால் பண்ண முடியோ அவ்வளவு செய்யும் முடிவோட தான் ஆட்சிக்கு வந்தீங்களா??... யாருக்காக, என்ன நிரூபிக்க பாக்கறீங்க... ஒரு ஆளும் அரசின் கூட்டணியில் இருக்கும் உங்களால் ஒன்னும் பண்...

பா.க.ச போட்டி முடிவுகள்!

Image
டி.வி புகழ் பாலாபாரதியை கலாய்க்க ஆரம்பித்து ஒரு வருடம் முடிவடைந்ததை கொண்டாடும் வகையில் போட்டி ஒன்று போன மாதம் பா.க.ச தலிம கலகத்திலிருந்து அறிவிக்கப்பட்டது! அதன் முடிவுகளை அறிவிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது, ஏன்ன பல பேர் பல விதமா தலய கலாய்த்தார்கள்! எதை தேர்ந்தெடுப்பது என்று கொஞ்சம் சிரமப்பட்டுவிட்டோம் என்றே சொல்லவேண்டும்! பலரும் ரூம் போட்டு யோசித்து அருமையாக எழுதியிருந்தார்கள்! குறிப்பாக ப்ரேம்குமார் , குசும்பன் , அருட்பெருங்கோ , ஹாய் கோபி , வெங்கட்ராமன் , ராமசந்திரன் உஷா என அனைவரும் பின்னிப்பெடலெடுத்திருந்தார்கள்! அட நம்ம நடுவர் ஆசிப் கூட விடாம நானும் கலாப்பேன்னு தூள் கிளப்பியிருந்தாரு! இது போதானுன்னு நம்ம தல பாலா பாய் கூட ஒரு பதிவு போட்டிருந்தாரு! இந்த பா.க.ச முதலாம் ஆண்டுவிழா போட்டி பரிசு அருட்பெருங்கோவுக்கு அளிக்க நடுவர்கள் முடிவு எடுத்ததை இங்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவருக்கு தல ரத்தால் கையெழுத்திட்ட ஒரு புகைப்படமும், ஒரு புத்தகமும் பரிசாக அளிக்கப்படுகிறது! விழா குழுவினர் விரைவில் அவரை தொடர் கொள்வார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறோம். பி.கு: தல ரத்தத்தால் கையெழுத்து ப...

நோ கமெண்ட்ஸ்!!!

டிஸ்கி: இங்கே தமிழ்மணத்தில் நடக்கும் விசயத்துக்கும், இந்த விடியோவுக்கும் சம்பந்தம் இருக்கு!! அவங்க அவங்களுக்கு புரியரமாதிரி இந்த விடியோவின் நீதியை புரிஞ்சுங்கோங்கோ!!!! சிங்கங்கள் யாரு! முதலைங்க யாரு! காட்டெருமை யாரு! எருதுவின் கன்று யாருன்னு... நீங்களே ஊகித்துக்கொள்ளுங்க :) சோ,(சத்தியமா துக்ளக் சோ இல்லைங்கோ!)நோ கமெண்ட்ஸ்!!!

இந்திய குடிமகனானுமா?

நீங்க எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் பரவாயில்லை, தீவிரவாதியா இருந்தாலும் பரவாயில்லை!!!! உங்களுக்கு எங்க மண்ணின் மைந்தர்களும், அரசு இயந்திரங்களும் இந்திய குடியுரிமை வாங்கி தராங்கோ!!! அதுவும் வெறும் ரூ. 32,500/- இருந்தா போதும்!!!! குடியுரிமைன்னா சும்மா இல்லைங்க! 1. ரேஷன் கார்டு 2. பிறப்பு சான்றிதழ் 3. PAN Card 4. Pass Port Rs 7,500/- 5. படிப்பு சான்றிதழ் 6. Voter ID Card - Rs 1,800/- என்று எல்லா மேட்டரும் உண்டு... அடுத்த மாசம் முதல் வேணும்னா ரேஷன் கூட வாங்கிக்கலாம்!!! ஆள் வரவேண்டிய தேவையில்லை! சும்மா யார்கிட்டயாவது 32,500 ரூபாயை கொடுத்து அனுப்பினா போதும்! எல்லா மேட்டரும் ரெடி செய்து தர ஆள் இருக்கு! பாஸ்போர்ட்க்கு Verification கூட இல்லாம ஈஸியா வாங்கித்தராங்க! ஜாலி பண்ணுங்க! IBN Live முயற்சியால் வெளிவரும் இந்த கொடுமையை பாருங்க! லஞ்சம் எப்படி எல்லாம் கொழுத்து போயிருக்குன்னு பாருங்க! அட இதெல்லமாம் மாமூலான விசயம்ன்னு நம்ம முதல்வர் மாதிரி ஸ்டேட்மென்ட் தந்திடாதீங்க ப்ளீஸ் :) இது அரசுகளுக்கு தெரியுமா? அரசுகள் ஏன் இது போன்ற வழியை அடிக்க வழிவகை செய்யவில்லை!! அரசுகளின் அலட்சிய போக்கு நாளை தீவிரவா...

சுதந்திரம் யாருக்காக?

கடந்த 15ஆம் தேதி நாம் நம்முடைய சுதந்திரத்தின் 60 வருடங்கள் கடந்ததை கொண்டாடினோம்! அறுபது ஆண்டுகளில் நாம் எவ்வளவு சுதந்திரம் அடைந்திருக்கிறோம் என்று எனக்கு புரியவில்லை! ஆங்கிலேயர் ஆட்சிக்கும், இன்றைய அரசியல்வாதிகள் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றே ஒன்று அன்று ஊழல் குறைவு, இன்று இவர்களால் பெருக்கெடுத்து ஓடுது ஊழல்!! இவருடைய ஆட்சியிலும் சர்வாதிகாரம் இருந்தது, இருக்கிறது!!! இன்று இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் இருக்குன்னு பார்த்தா, என்ன கொடுமை சார் இதுன்னு தான் சொல்லத்தோனுது! பீஹாரின் அரசு இயந்திரங்கள் எங்கள் கண்காணிப்பில் தான் இருக்கிறது! விரைவில் அவை எங்கள் கட்டுப்பாடுக்குள் வரும் என்று சில தினங்களுக்கு முன் Maoist Commander அறிவிக்கிறார்! அதுவும் ஒரு Times Now போன்ற ஒரு தொலைக்காட்சியில்!!! மாவோஸ்டுகளுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் இருக்குன்னு பார்த்துங்க!!! மனிப்பூரில் 3 ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வீட்டிலேயே 12 தீவிரவாதிகளை பதுங்க வைத்து பிரிவினைவாதத்தை வளர்க்கவும், பாவப்பட்ட மக்களை கொல்லவும், அரசு இயந்திரங்களை அழிக்கவும் உதவி செய்யறாங்க! அப்ப தீவிரவாதிகளுக்கும், ஆளும...

வலைப்பதிவர் பட்டறை - வீடியோ காட்சிகள்!!!

தமிழ் வலைப்பதிவர் பட்டறை வீடியோ காட்சிகள். பொன்ஸ்க்கு நல்ல கவரேஜ் கிடைச்சிருக்கு!!! நன்றி:IBNLive.com

பா.க.ச உலகுக்கு அறிவித்த வினை :)

Image
இன்றைய் இந்தியன் எக்ஸ்பிரஸின் முதல் பக்கத்திலேயே "டாப்"ல நம்ம பா.க.சவின் பெயரை வெளியிட செய்த தம்பி வினையூக்கியை வாழ்த்தியும் நன்றி தெரிவிக்கவும் இந்த பதிவு!!! பா.க.சன்னு மட்டும் சொல்லாம அதன் விரிவாக்கமான பாலபாரதியை கலாய்ப்போர் சங்கம் என்று தெளிவா அச்சிட்டு வந்திருக்கு!!! இன்னமா வேல செய்யறாங்க நம்ம சங்கத்து சிங்கங்கள்!!! நெனச்சாலே புல்லரிக்குதுபா!! இந்த செய்தி வெளியானதும் நம்ம பா.க.சவின் தல ஓடிவந்து வினையூக்கியை பாராட்டி சென்றார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்! உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம்ன்னு களக கண்மனிகளுக்கு சொல்லிக்கிறோம்பா!!! நன்றி நா ஜெயசங்கர், பா.க.ச தலிம களகம், சென்னை!!!! களத்தில் பிரச்சனை வருவதை தவிர்க்க பின்னாடி சேர்த்தது :D :: இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு சொன்னதில் முக்கிய பங்கு நம்ம களக கண்மனிகள் பொன்ஸ்க்கும் நம்ம சிவஞானம்ஜியுக்கும் பெரும் பங்குள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கிறது சங்கம், அதனால் பொன்ஸையும், சிவஜீயையும் சிறப்ப ஒரு பாராட்டு விழா வைத்து கொண்டாடும் முயற்சியை பொதுகுழுவும், செயற்குழுவும் சேர்ந்து முடிவு செய்யும்.

வலைப்பதிவர் பட்டறை என் பார்வையில்...

Image
நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்த தமிழ் வலைப்பதிவர் பட்டறையில் என்னை கவர்ந்த விசயங்களை இங்கே பட்டியலிட விரும்புகிறேன்... வினையூக்கியும் மற்றும் ஜெயாவும் பட்டறைக்கு ஏற்பாடுகள் நடந்த முதல் நாள் மாலையும் சரி பட்டறை தினத்தன்றும் சரி அயராத உழைப்பை தங்கள் பங்கிற்கு கொடுத்தார்கள், துடிப்புடன் காலை முதல் மாலை வரை ஆர்வமாக கற்றுக்கொள்ள வந்த பார்வையாளர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்த விசயம் என்னை அசர வைத்தது!!! என்ன எனர்ஜி அவருக்குக்கு! ஒரு நிமிடம் கூட சலிக்காம ஆர்வமா எல்லோருடைய சந்தேகங்களையும் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவருக்கு என் முதல் சபாஷ்! அடுத்தது விக்கி, மா.சி & பொன்ஸ்: இது தான் முதல் பட்டறை, அனுபவம் இல்லாத காரணத்தால் ஒரு குறையும் வந்துவிடக்கூடாது என்று இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் சிறப்பான பலனை தந்தது என்பது 100% உண்மை. பல பட்டறைகள் நடந்த்திய அனுபவம் வாய்ந்தவர்கள் நடத்தியது போல சிறப்பாக கலை கட்டியது பட்டறை. இவர்கள் முயற்சியும் உழைப்பையும் பாராட்டியே ஆகவேண்டும்! பாலாபாய் பம்பரமா சுழன்று கொண்டேயிருந்தார், CD வாங்கிவருவது முதல் உணவு ஏற்பாடுக...

எட்டு(ம்) இடத்தில் ஜெய்

வாங்க எட்டு போட்டு விளையாடலாம்ன்னு முதல்ல சர்வேசன் போட்டாரு ஒரு கமெண்ட், ஓ.கே ரெடி பண்ணுவோம்ன்னு நினைத்துக்கொண்டுயிருக்கையில் நம்ம வெங்கட்ராமன் வேற கெளபிட்டாரு... இப்படியே விட்டா பல எட்டு போட வேண்டியிருக்கும் பயமாயிட்டதால முதலில் நம்ம பதிவை போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்ப்போம்ன்னு எறங்கிட்டோமில்ல... என்னைப்பற்றி ஏற்கனவே பல தடவை மொக்கை போட்டதால ... உங்களுக்கு தெரியாத சில (எட்டு) விசயத்தை சொல்லாம்ன்னு நினைக்கிறேன்... இந்த எட்டு என்னை ரொம்பவே பாடா படுத்தியும் இருக்கு, உதவியும் இருக்கு பல விசயங்களில், அதில் சில எட்டுக்களை மட்டும் எடுத்து போடுவோம்ன்னு ஒரு முயற்சி... ஓவரா இருந்த அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... ஹீ! ஹீ!! 1. நான் ஏழாவது பாஸ் பண்ணதும், எங்க வீட்டை கோவை-பீளமேடு பகுதியிலிருந்து கோவை-ராமநாதபுரம் பகுதிக்கு மாற்றிப்போனோம்! அதனால இங்க இருந்து முன்பு படித்த GRG Matriculation பள்ளிக்கு செல்வது சுலபம் அல்ல என்ற காரணத்தால் என்னை CSI Union Higher Secondary தள்ளிவிட்டுட்டாங்க, முதலில் ரொம்ப நொந்து நூலா போனேன்! புது நண்பர்கள், புது ஏரியா, புது மக்கள்... நம்ம சென்னை 600028 மாதிரி கிரிக்கெட் விளை...

முதல்வர் அடக்கி வைத்த பெண்குலம்?!

" ஆறுவது சினம் - படித்து அடங்கிவிடுமா பெண்குலம்? " என்று பொங்கி ஏழுதியிருக்கும் நம் முதல்வர், என்ன சொல்லவறாருன்னு கொஞ்சம் சொல்லுங்க, என்னவோ ஜனாதிபதி பதிவுக்கு முதல் முறையா பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பது போல ஒரு மாயை க்ரீயேட் செய்யறாரு! ரொம்ப ஓவர் தான் முதல்வரே! இதற்கு முந்தய ஜனாதிபதி தேர்தலில் கேப்டன் லட்சுமி நின்ற போது முதல்வருக்கு இந்த கவிதை ஏன் வரவில்லை!! அப்ப மட்டும் "ஆறுவது சினம் - படித்து அடங்கிவிடட்டும் பெண்குலம் என்று இருந்து விட்டுவிட்டாரா?? கேப்டன் லட்சுமி கட்சி சார்ந்த ஒரு வேட்பாளராக கருதமுடியாது! அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்! பல முறை இந்திய சுதந்திரத்துக்காக சுபாஷ் சந்திர போஸோடு இணைந்து போராடியவர்! சுந்திர போராட்டத்தில் பல வருடங்கள் சிறை சென்றவர். இப்படி பட்ட ஒரு பெண்குலத்தை ஏன் அன்று திரு.கருணாநிதி ஆதரிக்கவில்லை?? இன்று நம் முதல்வர் ஆதரிக்கும் பிரதீபா பாட்டீல் வெறும் ஒரு காங்கிரஸ் பிரமுகர், காங்கிரஸில் இணைந்தால 1962 காங்கிரஸ் எம்.எல்.ஏவாக அரசியலுக்கு வந்தவர்; பெரிய சாதனைகள் ஒன்று இல்லை சொல்வதற்கு! காங்கிரஸ் கட்சியால் கவர்னர் பதிவி கிடைத்து ராஜஸ்...

விவாதகளத்தில் அநாகரீக பின்னூட்டம்!

இந்த தமிழ்மணம் விவாதகளம் பக்கமே போகாமல் இருப்போம் என்றால் மனம் கேட்கமாட்டீங்குது! அட பொது மேடை தானே நம் கருத்தும் சொல்லிவைப்போமே என்று அங்கு நாம், நம்முடைய கருத்தை பின்னூட்டமா போட்டா!! அங்க உடன்பிறப்பு லக்கி செய்யும் அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லை என்று தோன்றுகிறது! அது தமிழ்மணம் விவாதகளமா? அல்லது லக்கிலுக்கின் அரட்டை அரங்கமா?? லக்கிலுக்குக்கு தேவையான, அவர் தலைவனை போற்றும் பின்னூட்டங்கள் மட்டும் ஜல்லியடிக்கும் களமா?? கடந்த வாரம் ஹெல்மெட்! குறிந்தான ஒரு விவாதம் அங்கு துவக்கப்பட்டது! அதில் திருவாளர் லக்கிலுக் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்? இந்த கட்டாய ஹெல்மெட் வற்புறுத்தலை பற்றி உங்கள் கருத்து என்ன? நான் பின்னூட்டத்தில் என் கருத்தான //இந்த கட்டாய ஹெல்மெட் வற்புறுத்தலை பற்றி உங்கள் கருத்து என்ன?// தலைவருக்கு நல்ல கட்டிங் கரெட்டா கிடைத்திருக்கும். அவ்வளவு தான் அவர் தலைவர் மேல் ஒரு புகார் சொன்னேன். அந்த பின்னூட்டம் பிரசுரிக்கபடவில்லை என்பதோடு அல்லாமல்.... நா. ஜெயசங்கர் அவர்களின் அநாகரிகமான பின்னூட்டத்தினை தவிர்த்து மீதி பின்னூட்டங்கள் வெளியிடப்படுகின்றன. நான் ஏற்கனவே கூறியபடி இது தமிழ்மணம் நி...

ஜெ. வை ஆதரிக்கும் உடன்பிறப்புக்கள்!!!

என்ன ஆச்சர்யம் லக்கி போன்ற உடன்பிறப்புக்கள் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்களாமாம் சாமியோ! இன்று போலீஸ் எரிக்கப்பட்ட விவகாரத்தில் ஜெ.வை கைது செய்ய மாட்டாஙகளாம்! சாரி கைது செய்யசொல்லமாட்டாங்களாம்!!!! நாங்கள் கொஞ்சமாவது சிந்திக்க கூடியவர்கள். எவனோ ஒரு பைத்தியக்கார ஜெ. அபிமானி செய்த காரியத்துக்காக ஜெயலலிதாவை கைது செய்ய கோரமாட்டோம். - லக்கிலுக் ;) அப்ப அன்று தர்மபுரி கேஸ்ல ஏன் ஜெ.வை கோத்துவிட்டீங்க? தினகரனில் 3 கொலைகள் நடக்கவில்லை என்றால் இந்த உடன்பிறப்பு இப்படித்தான் சிந்திப்பாரா?? இந்த அழகிரியால பாவம் உடன்பிறப்புக்கள் ஜெ.வை ஆதரித்து பதிவு போட வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டிருக்காங்க! உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு! (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்!!!) இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் தன் பலத்தை காட்ட அப்பாவி மக்களை கொலை செய்யறாங்க! பி.கு: பைத்தியகாரனுகளை எல்லாம் கட்சியில் சேர்த்த தலைவருக்கு ஒரு பங்கு இந்த கொலைகளில் உண்டு! அதுவும் எம்.எல்.ஏ பதவி வரை கொடுத்த தலைவருக்கு நிச்சயம் இந்த கொலைக்கு பங்கு உண்டு என்பது என் வாதம்!

திருத்தமுடியாதுடா உங்களை!!!

ஜெயலலிதா மது அருந்தியதாக இரட்டை அர்த்தத்தில் முதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டது, கொட நாடு எஸ்டேட்டில் சோதனை நடந்தது ஆகியவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று காலை முதல் பேராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய அதிமுக எம்எல்ஏ கைது! ஆடுங்கடா ஆடுங்க... ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை. அரசியல்வாதிகள் கையில் பணமும், அதிகாரமும் இருக்கு என்றால் எத்தனை பேரை வேண்டுமானாலும் கொளுத்திப்போட்டு என்ஜாய் பண்ணலாம்! அன்று அவர்கள் தினகரன் கருத்துக்கணிப்பு போட்டப்போ, அழகிரி & கோ கலாநிதி மாறனையோ! தயாநிதி மாறனையோ அடிக்கவில்லை, கொல்லவில்லை! இன்று இவர்கள் சொன்னவரை ஒன்னும் செய்யவில்லை! எந்த நாயாவது சொன்னவனையோ அல்லது செய்தவனையோ கொல்லறீங்களாடா? பாவம் உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களையும், காவல் காக்கும் காவலர்களும் தான் கிடச்சாங்களாடா? திரும்ப அடிக்கமாட்டாங்க என்ற தைரியம்! மக்களை விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை காலம் வேண்டிவரும் ?? இந்த பாவமலைகள் இந்தியாவை விட்டொழிக்க!!

கட்டாய ஹெல்மெட் சட்டம் வாபஸ்?

ஜூன் 1ஆம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடுப்பேத்தின அரசு, இன்று நைசா கை நழுவுதுங்க!!! 99% பேர் வாங்கி போட்டுக்கிட்டாங்க, நல்ல கலெக்ஷன் ஆயிடுச்சு என்றது, இன்று மாலை அறிக்கை விடுறாங்க, போக்குவரத்து காவல் அதிகாரிங்க ஹெல்மெட் அணிவதை கட்டாய படுத்த மாட்டாங்களாம், சும்மா ... அன்பா அட்வைஸ் பண்ணுவாங்களாம்... பல தரப்பட்ட மக்கள் கிட்ட இருந்து வந்த கோரிக்கை ஏற்று நைசா எஸ்கேப் ஆகுதாம் அரசு??? அடப்பாவிகளா இதை ரெண்டு நாள் முன்னாடி சொன்னா என்ன உங்களுக்கு !!! நல்லா இருங்கடா ! பி.கு: ஹெல்மெட் போட்டா உங்க உயிருக்கு தான் நல்லதுன்னு அரசுக்கு பின்னாடி ஜல்லியடிக்க சென்ற உடன்பிறப்புக்களே, உங்களுக்கெல்லா என் பதில் என் உயிரை இவ்வளவு நாள் அரசு காப்பாத்தல, இனிமேலும் இந்த மாதிரி அரசு காப்பாத்தாதுன்னு தெரியும், அதனால க்லோஸ் த டோர்!!! பி.கு: அரசே இந்த கட்டாய ஹெல்மெட் மாதிரி, எங்க கையில் உள்ள காசை கரெக்ட் பண்ண வேற ஏதாவது நல்ல ஐடியா இருக்கா??

குலக்கல்வி - என்ன கொடுமை சார் இது!!!

இது என்ன கொடுமைன்னு புரியல... குழந்தைக்கு நாக பாம்பிடம் ட்ரெயினிங் கொடுக்கறாங்களாம்??!!! ஒரு சின்னக் குழந்தையை இப்படி செய்து தான் குலத்தொழில் கற்றுக்கொடுக்க வேண்டுமா?? சிறுபிள்ளையை பாம்புடன் விளையாட விட்டு வீடியோ பிடிக்கும் கேடு கெட்ட ஜென்மங்கள்!!! என்ன தான் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருந்தாலும்!!?? இந்த அறியாமை இருளில் இருக்கும் மக்களுக்கு என்று தான் விடிவு காலமோ!!!

MPக்களே ரொம்ப சந்தோஷம் சாமீ!!!

கடந்த மே 5ஆம் தேதி பாராளமன்றத்தில் வருமை ஒழிப்பு பற்றி ஆலோசனை செய்ய பாராளமன்றம் கூட்டப்பட்டது! அதில் ஜனநாயத்தின் தூண்களான நம் அருமை MPக்கள் அசத்திட்டாங்கன்னா பாருங்களேன்!! கேட்டதும் ஆடிப்போயிட்டேன்!!!! வருமை ஒழிக்க அலோசனை சொல்லி அசத்திட்டாங்கன்னு, நீங்க பாட்டுக்கு ரொம்ப ஓவரா சிந்திச்சுபுடாதிங்க சார்!!! 545 பேர் கொண்ட பாராளமன்றத்தில் அன்றைய அலோசனைகள் துவங்கும் நேரத்தில் வெறும் ஆறு MPக்கள் மட்டும் ஆஜர், பின்னர் வந்து சேர்ந்தவர்கள் மற்றொரு ஆறு பேர்!!! எப்படி!!!! அசத்தப்போவது யாரு??!! வந்த அந்த பனிரெண்டு பேர் யாருன்னு கேட்பீங்கன்னு தெரியும்:(வந்த வரிசையில்) 1. டாக்டர். சித்ரா மோகன் (காங், திருப்பதி) 2. பத்ருஹரி மஹதாப் (பீ.ஜே.டி, கட்டக்) 3. பேராசிரியர்.ராசா சிங் ராவத் (பி.ஜெ.பி, அஜ்மீர்) 4. ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் (காங், கான்பூர்) 5. நவீன் ஜின்டால் (காங், குருஷேத்ரம்) 6. ப்ரான்சிஸ் ஃபாந்தோம் (காங், நியமன உருப்பினர்) 7. சி.எஸ்.சுஜாதா (சி.பி.எம், மாவேலிக்கரா) 8. சி.கே.சந்திரப்பன் (சி.பி.ஐ, திருசூர்) 9. கே.எறான் நாயுடு (தெ.தேசம், ஸ்ரீகாகுலம்) 10. பி.கே. ஹன்டிக் (காங், ஜோர்ஹத்) 11. பா.சிதம்பரம் ...

நாளைய தீர்ப்பு - தினகரன் ;)

தினகரன் நாளிதழும் ஏசி நீல்சனும் இணைந்து நடத்தும் கருத்து கணிப்பில் நாளை கருணாநிதியின் அரசியல் அடுத்த வாரிசு யார் ? என்று வெளியிடப் படும் என்று நம்ம கோவி கண்ணன் பதிவு போட்டிருக்காரு! என் ஆருடம் (ஆருடம் எனக்கு தெரியாவிட்டாலும்!) முடிவு இப்படித்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்! 1. ஸ்டாலின் - 46.4 % 2. தயாநிதி மாறன் - 46% 3. ஆற்காடு வீராசாமி - 4% 4. மற்றவர்கள் - 3.6% இதில் 5% ஏற்றமோ இறக்கமோ இருக்கக்கூடும் ;) உங்க கருத்தை சொல்லுங்க ப்ளீஸ் ;)

நாளை வலைப்பதிவர் சந்திப்பு - மறந்திடாதீங்க மக்களே!

நன்பர்களே! நாளை மதியம் 3:30 மணிக்கு வலைப்பதிவர் "சந்திப்பு". மறக்காம வந்திடுங்க! வலைப்பதிவின் அடுத்த கட்டத்தை தொட இந்த சந்திப்பு ஒரு அஸ்திவாரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எல்லோரும் வாங்க! சாதி, மத, இன பாகுபாடுகளை தாண்டி மனிதராக ஒன்றினைவோம்! சமூகத்துக்கு நம்மால் இயன்ற நன்மைகளை செய்ய துவங்குவோம்! இடம்: நடேசன் பார்க், தி.நகர். நேரம்: சரியாக மதியம் 3.30 முதல் மாலை: 7.30 வரை. நாள்: ஏப்ரல்.22'2007, ஞாயிற்றுக்கிழமை. வருகையை உறுதி செய்ய நண்பர்கள் பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாம். என் கைபேசி 0- 99400 45507 எண்ணுக்கும் அழைக்கலாம். மேல் விவரங்களுக்கு இங்கே செல்லவும்.

காஞ்சி சேவை மையம் உண்மையில் நடப்பது என்ன?

என் இட ஒதுக்கீடு பதிவில் திரு.ஹரி எழுதிய விளக்கங்களில் உண்மை நிலை என் அறிவுக்கு எட்டிய வரை: என் கேள்வி: ////பல ஆயிரம் பிராமணசாதியினர் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் கல்வி , மருத்துவம் எனப் பல நல்ல விஷயங்கள் செய்துவருவதை, நல்ல முன்னுதாரணத்தை முன்னெடுத்துச்செல்வதை பிராமணீயம் என்று குறிப்பிடலாமே?// இது எங்கே நடக்குது ஹரி??!! ஆச்சரியமா இருக்கே?? கொஞ்சம் எடுத்து சொல்லுங்க?? ஒன்னும் புரியலை?? யார் செய்யறாங்க? எங்க செய்யறாங்க?? (கலாய்க்க இல்லைங்க சீரியசா கேட்கிறேன்)// என்ற என் கேள்விக்கு விளக்கம் அளித்த பதிவில் ஹரி கூறிய சில விசயங்கள் சரி இல்லை என்று தோண்றுவதால் இந்த பதிவு. இந்த வாதம் அந்த பதிவில் வைத்துக்கொண்டால் அந்த பதிவின் நோக்கம் திசை மாறும் என்ற எண்ணத்தால் தனி பதிவாக வைக்கிறேன். ஆனால் அவர் சொன்ன லிஸ்டில் இருக்கும் பல மையங்களுக்கு நான் நேரடியா போயிருக்கேன், இவை எதுவும் சேவை அடிப்படையில் நடப்பவை அல்ல என்றே தோண்றுகின்றன, எல்லாம் காசுக்கு வேலை செய்கிறது என்று, அந்த ட்ரஸ்ட் நடத்தும் நிறுவங்களுக்கு போய் பார்த்தாலே தெரியும். சில உதாரணங்கள்: 1. சின்மயா மிஷன் ...

இட ஒதுக்கீடும் செந்தழல் ரவியின் பதிவும்....

செந்தழல் ரவியின் பதிவை பார்த்த பிறகு அதன் தொடர்ச்சியா, இதே விசயம் குறித்து பல முறை குழலியுடன் வாதிட்டபோதும் அவர் ரவியின் பதிவில் சொன்ன அதே மாதிரியான வாதங்களை தான் சொன்னார். இங்கு என் பங்கிற்கு என் எண்ணங்களை முன்வைக்கிறேன். என்னை பொருத்த வரை கல்வி+ பொருளாதார நிலை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த விசயம் தான். இட ஒதுக்கீட்டு என்ற பிரச்சனை வந்த உடன் நம்ம மக்கள் எப்பவும் பிராமணர்களை சாடுவது தப்புன்னு தோனுது! கிரீமி லேயர் ஒதுக்கப்பட்டால், அந்த மிச்ச இடங்களில் உள்ளே வரப்போரவங்க ஐயர் இல்லை சாமி! நம் சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ள மக்கள் தான், அதாவது டி-கிரேடு அரசு பணியாளரை விட கீழ் மட்டத்தில் உள்ளவன், அவனும் தாழ்த்தப்பட்டவன் தான். நம்மால் நம்ம ஆட்கள் மேலே வருவதே பிடிக்கவில்லை என்பது கசப்பான உண்மை! அதற்கு வாதங்கள் பல வைத்து எல்லாவராலும் முடியும். குழலி சொல்லற மாதிரி ஒரு தலைமுறை தான் முன்னுக்கு வந்திருக்கு என்றால், இன்னும் அந்த பகுதி பக்கம் கூட வர முடியாம, கூலி வேலை செய்து, இட ஒதுக்கீட்டின் டேஸ்ட் கூட பார்க்காதா எத்தனை பெரிய சமுதாயம் காத்திருக்கு!!!?? குடிசை பகுதியிலிருந்து ஒரே ஒரு மாணவன் மருத்து...

அன்புடன் ஆண்டு விழா 2 - பரிசுப் போட்டி!

Image
இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்! "இதயம் மீறும் எண்ணங்களால் நாம் எழுந்து பறப்போமே இதய நிழலில் இதயம் கிடத்தி இன்னல் துறப்போமே" எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது... உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது. போட்டி விபரம்: கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது. 1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 'அன்புடன்' உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com ) 2. இசைக்கவிதை* - பாடச்சுவை சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். ...

கல்யாண் மறைவிற்கு என் அஞ்சலி!

Image
தமிழ் வலைதிரட்டிகளில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்த தேன்கூடுவின் நிறுவனரான திரு.கல்யாண் அவர்களின் மரண செய்தி பெரும் அதிர்ச்சி :( இவரை நடேசன் பூங்காவில் வலைப்பதிவர் சந்தித்த போது இப்படி சாந்தமானவரா தேன்கூடின் நிறுவனர் என்று ஆச்சர்யபடுத்தினார். தமிழ் எழுத்துக்கள் வளர்ச்சிக்கு பல விடயங்கள் முயர்ச்சிப்பதாகவும், அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் சொன்ன போது, இந்த சிறுவயதில் இவ்வளவு தமிழ் பற்றா என்று வியக்கவைத்தார்! ஒரு 20 நிமிடம் தான் அவரிடம் நானும், தமிழியும் பேசியிருப்போம்! தேன்கூடு சேவைகள், அதில் உள்ள பிரச்சனைகள் என அனைத்தையும் கூறினார், அத்துனை பிரச்சனைகளுக்கு இடையேயும் அவர் அயராமல் செய்துவரும் தமிழ் சேவை நினைத்து வியந்தோம்! அதற்கு பின் சில மின்னஞ்சல் மூலம் தேன்கூடில் வரும் மேலான்மை சேவைகளை பற்றி செய்திகளை அனுப்பிவைப்பார். அவரை அன்று சந்தித்தது தான் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை! 29 வயது மரணத்தை தழுவும் வயதா?? வந்தார்! தன் கடமையாக நினைத்து தமிழ் வலையுலக்குக்கு தன்னால் இயன்ற சேவை செய்தார்! இன்று அவர் இல்லை என்றாலும் அவர் சேவைகள் நம்மை நினைவு கூறவைக்க...

நன்றி நன்பர்களே!

என்னை நட்சத்திரமாக ஒரு வாரம் வலம் வர செய்த தமிழ்மணத்துக்கு என் முதல் நன்றி! என்னை நட்சத்திரமானதற்கு வாழ்த்திய அனைத்து வலைப்பதிவர்களுக்கும் நன்றி! இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தமுடியவில்லை என்ற ஆதங்கம் இன்று எனக்கு உண்டு! நேரமின்மை காரணமாக எழுதிய பதிவுகளை கூட சரி செய்து வெளியிட முடியவில்லை! சரி விடுங்க விரைவில் எல்லா பதிவையும் வெளியிடுவோம்! பதிவு வெளியிட நட்சத்திரமாக வேண்டிய அவசியம் இல்லையே! நன்றி மக்களே! இந்த நன்றியை சொல்லும் வேளையில் என் ஆசை மீண்டும்: சாதி, மதம், ஏற்றத்தாழ்வுகள் இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்க நம் பாடுபட வேண்டும்! கீழ் சாதி என்று மேல்சாதியும், மேல் சாதி என்றும் கீழ் சாதி ஒருவரை ஒருவர் சொல்வதை நிறுத்தி அனைவரும் இணைந்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்க திட்டமிடுவோம்! என் மதம் சிறந்தது! உன் மதம் தாழ்ந்தது என்று வெட்டியாக மதச்சண்டையிடுவதை நிறுத்து அனைவரும் இணைந்து ஒரு ஒப்பற்ற இந்தியாவை உருவாக்குவோம்!

டிஜிட்டல் அவதாரம் - ஒரு பா.க.ச பதிவு

Image
புது அவதாரம் எடுத்த எங்க தல பாலாபாய்க்கு ஒரு வாழ்த்து சொல்லத்தான் இந்த பா.க.ச பதிவு! சங்கத்துக்கு அப்ப அப்ப வேலை தந்து! ஏதாவது ஐடியா கொடுத்து எங்களை ஊக்கிவிக்கும் தல பாலாபாய்க்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு தொடங்குவோம்!!! அவதார புருஷனாக வாழ்ந்து வரும் எங்க பாலாபாய் இதுவரை பல அவதாரம் எடுத்துவிட்டார், நம்ம திருமால் பகவான் மேக்ஸிமம் 9 அவதாரம் எடுத்துயிருக்காரு! பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் இந்த கலியுகத்தில் எடுக்கப்போறதா சொல்லறாங்க! ஆனான எங்க தல, கலியுக கிஷ்ணன் பாலாபாய்ஆயிரம் அவதாரம் எடுப்பாரு டெய்லி! எங்க தலையோட லேட்டஸ்ட் அவதாரம் புலியாவதாரம்! அந்த வதாரத்தின் போட்டோ அருகே உள்ளது! இந்த அவதாரம் எதுக்கு என்று கேட்பவர்களுக்கு எங்க தலையின் பதில் "இணைய உலகத்திற்கும், கணினி நாட்டிற்கும்(!) ஏதாவது செய்யனும்னு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாக ஆசை! " அதை இந்த புது அவதாரத்தில் தான் செய்யனும் என்று ஆசைப்படறாரு!!! இதெல்லாம் உங்களுக்கு பெரிய ஆச்சர்யத்தை தரலாம், ஆனா எங்க பா.க.ச மக்களுக்கு ஒரு ஆச்சர்யமும் இல்லை, ஏன்னா, இதுக்கு முன்னாடி இவர் பல வித்தைகளை கணினி மற்றும் இணைய உலகத்துக்கு காட்டியிருக்காரு,...

VA(A)Tட்டும் சேவைவரியும்

Image
பலர் பல விதமாக இந்த மதிப்புக்கூட்டு வரியை பற்றி கருத்து கூறிவந்தாலும், உண்மையில் இந்த வரி நமக்கு லாபமா? கஷ்டமா? நஷ்டமா? என்ற கேள்விக்கு யாராலும் பதில் தெளிவாக சொல்ல முடியவில்லை என்பதே உண்மை. வியாபாரிகள் சங்கம் இதனால் பொருட்களின் விலை கூடுகிறது என்று கூறிவருகிறார்கள், ஆனாலும் அவர்களால் சரியான புள்ளி விவரங்கள் தரமுடியவில்லை, ஏன்னெனில் விலைவாசியும் உயர காரணங்கள் பல காரணங்கள், அதில் முக்கியமானது ஆன்லைன் ட்ரேடிங், பின்னர் டீசல் விலை, சேவை கட்டணங்கள், வரி என பல. இந்த ஆன்லைன் ட்ரேடிங் எனப்படும் இணையவழி வர்த்தகத்தால் நடக்கும் அராஜகங்கள் பல, இதனால் அரசுக்கு நல்ல வருமானம் என்ற ஒரே காரணத்துக்காக அதை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கு என்பதே கொடுமை! இன்றைய நிலையில், அனைத்து வித அத்தியாவசிய பொருட்களின் விலையும் 5 - 20 ரூபாய் வரை உயர்ந்து இருப்பது உண்மை! அரிசி, கோதுமை, பருப்பு முதல் காய்கறி வரை எல்லா பொருட்களும் விலையேற்றம், இந்த வரியால் மட்டும் அல்ல! சும்மா நம்ம முதல்வர், ஜெயலலிதா ஆட்சியில் 50 ரூபாய் இருந்த உழுத்தம்பருப்பு இப்ப 31 ரூபாய் தான் என்று, என்னதான் சப்பை கட்டு கட்டினாலும், மார்கெட்டில் கிடைக்கும...

மீள்பதிவு: பாக்கெட் உணவு பொருட்கள் உஷார்!

Image
சில நாட்களுக்கு முன் பலசரக்கு அங்காடிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க போயிருந்தோம், என் மகன் ஒரு பெட்டி Lay's Stax எடுத்துவந்து, அப்பா, இதில் Hydrogenated Trans Fat இருக்கான்னு பார்த்து சொல்லு? Zero Added Hydrogenated Trans Fat இருந்தா நான் வாங்கனும் என்று பெரிய ஆள் மாதிரி ஒரு மேட்டரை கேட்டான்!!! போன மாதம், என் மகனுக்கு காய்ச்சல் இருந்தபோது மருத்தவர் சொன்ன அட்வைஸ் அது!!! நான் மறந்துவிட்டேன், என் மகன் ஞாபகம் வைத்து கேட்டான்!!! ஆச்சர்யமாக இருந்தது!!! இந்த தகவல் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கும் உபயோகமா இருக்கும் என்று தோன்றியதால் இந்த பதிவு. Hydrogenated Trans Fat & Partially hydrogenated oils : Trans Fat இயற்கையாகவே பசுவின் பாலில் 2 - 5% சதவீதம் இருக்கும். ஆனால் Hydrogenated Trans Fat என்பது செயற்கையாக செய்யப்படும் Trans Fat. இது பசு, எறுது, பன்றி, காட்டுஎருமை என பல மிருகங்களின் கொழுப்பிலிருந்தும், சில வகை காய்கறிகளிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது!!! இது உடலுக்கு தேவையற்ற ஒரு கொழுப்பு சத்து!! இந்த கொழுப்பு சத்து உடலில் உள்ள நல்ல கொழுப்பு (High-density li...

கோலாக்கலும், பூச்சிமருந்தும் அரசியல்வாதிகளும்!

Image
இதுவரைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கோக் மற்றும் பெப்சியின் மீது பூச்சி மருந்து படிமம் இருப்பதாக புகார் வந்தது! முதலில் 2003 ஆகஸ்டில் அறிவியல் மற்றும் சுற்றுப்புறசூழல் மையம், இந்தியாவில் தயாராகும் கோக், பெப்சி போன்ற 12 வகை குளிர்பாணங்களில் பூச்சிமருந்து படிமம் உள்ளதாக அறிக்கை வெளியிட்டு ஒரு கலக்கு கலக்குச்சு! பெப்சியின் குளிர்பாணங்கள் அனுமதிக்கப்பட்ட( 0.0005 mg/l ) பூச்சிமருந்து அளவுகளைவிட 36 மடங்கு அதிகமாக ( 0.0180 mg/litre ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது! கோக் நிறுவன குளிர்பாணங்களில் சுமார் முப்பது மடங்கு அதிகமாக ( 0.0150 mg/litre ) இருந்தது! அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாங்கிய அதே நிறுவனங்களின் குளிர்பாணங்களில் ஒரு மில்லிகிராம் கூட பூச்சிமருந்து படிமம் இல்லை என்ற உபரி தகவலும் அந்த அறிக்கையிலிருந்தது. உடனே நம்ம அரசியல்வாதிகள் என்னவோ மக்கள் நலம் காப்பவர்கள் போல தினமும் ஒவ்வொறு கட்சியிலிருந்தும் ஒரு ஆள் மினிமம் இந்த நிறுவனங்களை திட்டி அறிக்கை விட்டார்கள்! முக்கியமா நம்ம கம்யூனிஸ்டுகள்! அரசு அதை தடை செய்ய வேண்டும் என்று கூப்பாடுயிட்டார்கள்! அந்த நிறுவனங்கள் முன் தர்னா செய்தார்கள்! அற...